Contact us at: sooddram@gmail.com

 

மாவீரர் தினம்

இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன்

(கோசலன்)

பெருந்தேசிய ஒடுக்குமுறை இலங்கையில் இராணுவ ஒடுக்கு முறையாகத் தீவிரமடைந்த 80 களில் அலையலையாக இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். தமது வாழ்வு, எதிர்காலம், நிகழ் காலம் அனைத்துமே சிங்கள பேரினவாத்திலிருந்தும் பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலையடைவதே என ஒவ்வொருவரும் எண்ணினார்கள்.

ஒவ்வொடு காலையும் அழகாக விடிந்த நாட்கள் இருண்டு போயின. இராணுவச் சிப்பாய்களின் காலடி ஓசையில் விழித்தெழும் குழந்தைகள் கூட அவர்களை எதிரிகளின் ஏவல்கள் என அறிந்து வைத்திருந்ததனர்.
இந்த வேளையில் சரி ஏது தவறு ஏது என்று சரியாகத் தெரிந்துகொள்ளாதவர்கள் இராணுவத்திற்கு எதிராகப் போராட என்று தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இயக்கங்களில் முழு நேர உறுப்பினர்களாக இணைந்து கொண்டார்கள்.

இந்த வேளையில் இயக்கங்களை அழித்து இளைஞர்களின் போராட்ட உணர்வை அழித்து வெற்று இராணுவ யுத்தமாக மாற்றுவதற்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்திற்று.

மிகவும் கோரமான சித்திரவதை உக்திகளை கற்றுக்கொடுத்த இந்திய இராணுவப் பயிற்சி ரெல(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), ஈ.பி.ஆர்.எல்.எப்(EPRLF) ஈரோஸ்(EROS) ஆகிய இயக்கங்களுக்கு வழங்கப்பட்டன.

சமூக உணர்வும், மக்கள் பற்றும், மனிதாபிமானமும், போர்க்குணமும் மிக்க போராட்டக் குழுக்கள் வெறித்தனமும், மிருக உணர்வும், கோரமும் கொடூரமும் உடைய ஆயுதக் குழுக்களாக மாற்றம் பெற்றன. இந்திய அரசு தனது ஒவ்வொரு நகர்வுகளையும் கவனமாக மேற்கொண்டது.

பயிற்சி முடிந்து இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே கோரமான ஆயுத மோதல்கள் இயக்கங்களிடையே தோன்றின. புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது போன்றே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் கொல்லப்படுகிறோம் என்றுதெரியாமலேயே கொல்லப்பட்டனர்.

தியாகிகளான போராளிகள்

இங்கு புலிகளாகட்டும், புலிகளால் அழிக்கப்பட்ட ஏனைய இயக்கங்கள் ஆகட்டும் இவர்களின் தமது இளமைப் பருவத்தின் அத்தனை ஆசாபாசங்களையும் இழந்து தெருவிற்கு வந்து போராடிதெல்லாம் தமது சொந்த நலன்களுக்காக அல்ல.

எவ்வளவு ஊதியம் தருவார்கள் என்று எண்ணியா இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்துகொண்டார்கள்? தம்மைச் சூழவர உள்ள சமூகம் ஒடுக்கப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே இணைந்துகொண்டார்கள்.

கடந்த அரை நூற்றாண்டில் மிகக் குறுகிய காலப்பகுதியில் எந்த வகையான பிரதிபலனையும் எதிர்பார்காமல் முழுநேர அரசியலில் இவ்வளவு தொகையில் இணைந்து கொண்டவர்கள் வடகிழக்கு இளஞர்கள் மட்டும்தான். உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இதனைக் காணமுடியாது.

எமது சமுகம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை சமூகத்திற்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.

வாழ்ந்திருக்க வேண்டிய இவர்களில் எவரும் துரோகிகள் என்று யாராவது கூற முனைந்தால் அவர்கள் மனிதகுல விரோதிகள். எமது சமூகத்தின் சாபக்கேடுகள்.

இவர்களில் யாரையாவது தவிர்த்து மாவீரர் தினம் என்ற ஒரு நிகழ்வு நிகழுமானால் அதுவே சமூகத்தைத் திட்டமிட்டுக் கூறுபோடும் நிகழ்வாகும். ஒற்றுமை ஒற்றுமை என்ற வரிக்கு வரி எதையோ சொல்கிறார்கள், ஒற்றுமைக்கு சாவுமணி அடிப்பதற்கு என்றே, முப்பது வருட அழிவுகளின் பின்னரும் பிரிவினையைத் தூண்டுவது என்பதே குறித்த சிலருக்கான மாவீரர்தினம்.

மாவீரர்தினம் இரண்டாகப் பிளவுற்று நடைபெறுகிறது என அங்காய்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். போராளிகளைப் பிளவுபடுத்துவதிலிருந்தே அது கருவுற்றது என்பதே அது. வெறுமனே குறித்த அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது.

மக்களுக்கான போராட்டம் என்பது மனிதாபிமானத்தின் அடிப்படையிலிருந்தே ஆரம்பமாக முடியும். மனிதர்களை மனிதர் நேசிப்பது அதன் முதற்படியாக அமையும் போது ஒரு சமூகத்தை ஒத்துக்கிவைத்துவிட்டு சடங்கு செய்து சம்பாதிக்க முயலும் குழுக்கள் இலங்கை அரச ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள அல்ல.

போராளிகளை இழந்த குடும்பத்தினர் ஏனைய போராளிகளின் வலியை உணர்ந்தவர்கள் அவர்கள் ஏனைய இயக்கப் போராளிகளையும் அங்கீகரிக்கக் கோருவது தாம் இழந்தவர்களுக்கு செய்யும் மனிதாபிமானக் கடமையாகும். மாவீரர் தினத்தை ஏற்பாடுசெய்து பணம் திரட்டிக்கொள்ளும் ஏற்பாட்டாளர்களைப் போன்று அவர்கள் கோரமான உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் அவர்களிடமிருந்தே முளைவிடும்.

அழிக்கப்படும் தமிழ் மக்களும் மாவீரர் பணச்சடங்கும்

இலங்கை ராஜபக்ச பாசிச அரசு, எந்த அரசால் பிரதியிடப்பட்டாலும் இனப்படுகொலையைத் தொடராமல் இலங்கை அரசியல் நகராது. தமிழ் மக்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் மக்கள் கூட்டத்தின் அங்கம் என்பதே முதலாவது தற்பெருமை. அதற்காக அவர்கள் ஆயிரம் தடவை பெருமைப்பட்டுக்கொள்ளல்லாம். போராடுவதற்கான வாய்ப்பு உலகமக்கள் எல்லோருக்கும் உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. அந்த ஒடுக்குமுறையின் கோரத்தால் அது ஏற்படுத்திய அனர்தங்களால் புலம் பெயர்ந்தவர்கள், இறந்து போன தியாகிகளை முன்வைத்து அவர்களின் நினைவு நாளை எழுச்சியாக மாற்றாமல் சாவு வீடாகக் கொண்டாடுவதும், அவர்களைக் கடவுள்கள் ஆக்கிவிடுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

இலங்கையில் இனப்படுகொலையின் பின்னர் இனச்சுத்திகரிப்பு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பெண்களை இராணுவ ஆட்சியின் பாலியல் கருவிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது.

நிலப்பறிப்பு, பாலியல் வன்கொடுமை, பௌத்த மத ஆதிக்கம் போன்ற பல நடவடிக்கைகளுக்கு ஊடாக தமிழ்ப் பேசும் மக்களின் தனித் தன்மை துவம்சம் செய்யப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் மக்கள் மீதான போர் இன்று வேறு வடிவங்களில் பேரினவாத அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது அதன் ஏற்பாட்டாளர்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

குர்தீஷ் மக்களின் தியாகிகள் தினம் புரட்சிகரமாக உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தினமாக பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலும் நிகழ்த்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் குரூரமான ஒடுக்கு முறை பிரயோக்கிக்கும் நிலையிலும் அவர்களின் போராட்டம் வெற்றியடைந்ததன் அடிப்படை இதுவே.

மாவீரர் சடங்கு அனைத்துப் போராளிகளதும் இழப்பாக, புரட்சிகர நிகழ்வாக உலகின் மனிதாபிமானிகளுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் அறிவிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். பணம்படைத்த பல்தேசிய நிறுவனங்களும், ஏகாதிபத்திய நாடுகளும் கூட்டம்போட்டு கூத்தடிக்கும் விலையுயர்ந்த மண்டபங்களிலிருந்து அது வெளியேற்றப்பட்டு தெருவிற்கு வர வேண்டும்.

போராளிகளை விதைத்த குடும்பங்களைச் சார்ந்தோர் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

பிரபாகரன்

ஒரு மனிதனை அதிலும் போராளியை நேசித்தோமானால், நாம் செய்ய வேண்டிய முதலாவது கடமை அந்தப் போராளியிடமிருந்து கற்றுக்கொள்வதும் அதனை எதிர்கால சந்ததிக்கு கற்பிப்பதும் தான். ஒரு மனிதன் விமர்சிக்கப்படுவதனூடாகவே தூய்மையடைகிறான். நாம் எம்மைச் சார்ந்தவர்களை விமர்சிக்க மறுத்தால் அதனை எதிரிகள் குற்றச்சாட்டாக முன்வைப்பார்கள். ஒரு போராளியை விமர்சிக்க மறுத்து அவனைக் கடவுகளாக மாற்றுதல் என்பது அப் போராளிக்குச் இழைக்கும் துரோகமாகும்.

பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்தான பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும் சிலர் பிரபாகரன் வந்ததாலே பணத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே இறந்துபோன பிரபாகரனை இன்னும் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

சரி தவறு என்பதற்கு அப்பால் தனது வாழ் நாள் முழுவதையும் போராட்டத்திற்கே அர்பணித்த பிரபாகரனை அனாதைப் பிணமாய் அஞ்சலி கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். நான்கு வருடங்களை தொலைத்த பின்னரும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாத மாவீரர் தினம் எவ்வளவு நயவஞ்சகத் தனமானது! மாவீரர் தினத்திம் உச்சபட்ச அருவருப்பு இதில் தான் தங்கியுள்ளது!!

தமது குடும்பத்தின் இளம் சந்ததியைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களின் திருட்டுத்தனத்தைப் புரிந்துகொள்வார்கள்.

யார் துரோகிகள்

குண்டுச் சன்னங்களைச் சுமந்துகொண்டு வளரும் இளம் சிறார்கள் வன்னியிலிருந்து வளர்ந்து வருகிறார்கள். நாளை போராட்டத்தின் முன்னோடிகளில் இவர்கள் நிச்சயமாக கோடிட்டுக் காட்டப்படுவார்கள். இவர்களுக்கு தவறான பாதையையும் வியாபார அரசியலையும் நாம் முன் உதாரணமாக விட்டுச் செல்ல முடியாது.

எதையாவது விமர்சித்தால் இலங்கை அரச கைக்கூலி, துரோகி என்றெல்லம் கூறுகின்ற கேவலமான அரசியல் இன்னும் தொடர்கிறது. மாவீரர் தினத்தை விமர்சித்தால் கூடதுரோகத்தைப் பரிசாகத் தருவதற்கு அதனை முன்வைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் காத்திருப்பார்கள்.

மாவீரர் தினத்திற்குத் தயாராகும் புலம் பெயர் மக்கள் இந்தக் கேள்விகளையும் சுமந்து செல்வார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com