Contact us at: sooddram@gmail.com

 

வால்மார்ட்

வாய் பிளந்து வரும் ஓநாய்

(கே. வரதராசன்)

ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் எப்படி யாவது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உல கில் எந்த ஜனநாயக நாட்டிலும் இத்தகைய கொள்கை அந்த நாட்டு மக்களுக்கு நலம் பயத்ததாகச் சொல்ல முடியாது. எனவேதான், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மட்டு மல்ல, ஐ.மு.கூட்டணி-2 அரசின் அங்கமாக வுள்ள கட்சிகளில் சிலவும் கூட அவற்றை எதிர்க்க முன்வந்துள்ளன.

வால்மார்ட் நாட்டிற்குள் நுழைவதால் விவ சாயிகளின் வருமானம் பெருகும் என்றெல் லாம் ஆட்சியாளர்கள் அளந்துகொண்டிருக் கிறார்கள். அவை உண்மை அல்ல என்பதை வால்மார்ட் புகுந்துள்ள நாடுகளின் அனுபவங் களைச் சற்றே உன்னிப்பாகப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். மெக்சிகோவில் சமீ பத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், விவசாயத்தொழிலாளர்களின் கூலியை வால்மார்ட் குறைத்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். சில்லரை வர்த்தகத்துறை யில் எங்கெங்கெல்லாம் கார்ப்பரேட்டுகள் புகுந்துள்ளார்களோ, அங்கெல்லாம் வேலை களும் குறைந்திருக்கிறது, கூலியும் குறைந் திருக்கிறது. இவற்றின் விளைவு, மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வால்மார்ட்டுகள் புகுந்த இடங்களில் எல்லாம் குடும்ப வறுமை அதிகரித்திருக்கிறது என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங் கள் நுழைவதால் நாட்டிலுள்ள சில்லரை வர்த் தகர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு வந்து விடாது என்றும், அவர்களும் இணைந்தே செல்ல முடியும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வக்காலத்து வாங்கும் பொருளாதாரவாதிகள் வாதிடுகிறார்கள். இது உண்மையல்ல என் பதை அமெரிக்கப் பல்கலைக்கழகமான அயாவா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் (ஐடிறய ளுவயவந ருniஎநசளவைல) பேராசிரியர் கென்னத்ஸ்டோன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந் துள்ளார். ‘‘கிராமப்புற மக்களுக்கு வால்மார்ட் அளித்துள்ளவை’’ என்ற அவருடைய ஆய் வுக்குறிப்பானது, வால்மார்ட் புகுந்த சிறிய நகரங்களில் பத்தாண்டு காலத்தில் 47 விழுக்காடு அளவிற்கு சில்லரை வர்த்தகர்கள் காணாமல் போய்விட்டனர் என்பதை வெளிப் படுத்தியிருக்கிறது.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங் கள் சில்லரை வர்த்தகர்களை ஒழித்துக்கட்டு வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, தாங் கள் நுழைந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர் களையும் வெற்றிகரமாகத் தங்களின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். இதற்கு இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக இருந்திட முடியும்? நிச்சயமாக முடியாது.

‘‘உலகமய சக்திகள்’’ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிரும் என்பது அனை வரும் அறிந்த உண்மையேயாகும்.

இந்தியாவை இவ்வாறு வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற் பதற்கான முடிவினை காங்கிரசார் மட்டும் எடுத்திடவில்லை. இவர்களுக்கு உற்ற துணையாய் இருப்பது அதிகார வர்க்கமாகும். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சில்லரை ஆதாயங்களுக்காக, நாட்டையே விற்கக் கூடிய விதத்தில், தங்களின் அலுவலகக் குறிப்புகளைத் தயார்செய்து தந்து கொண் டிருக்கின்றனர்.

நாட்டின் 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 24.5 லட்சம் கோடி ரூபாய்) சில்லரை வர்த்தக சந்தையை வால்மார்ட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடுவதால் நமக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன? எது வுமே கிடையாது.

வால்மார்ட் நிறுவனம் தாங்கள் நுழையக் கூடிய நாட்டில் உள்ள ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கிடும் வல்லமை படைத்தவர் கள். பல நாடுகளில் அதுபோல் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தேவையானவற் றைப்பெற்றுக் கொண்டவர்கள்.

நம் நாட்டின் பட்ஜெட் மதிப்பீடு சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இதைப்போல 600 மடங்கு மதிப்புள்ள தொகையை வால் மார்ட் நிறுவனம் வைத்திருக்கிறது. அவர் களால் விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைக்கிற எந்த நாட்டின் ஆட்சியாளர்க ளையும் மிக எளிதாக விலைக்கு வாங்க முடியும்.

அமெரிக்க இதழானதி நியூயார்க் டைம்ஸ்நாளேடு, வால்மார்ட் நிறுவனம் பல லட்சம் டாலர்கள் லஞ்சம் அளிப்பது தொடர் பாக புலனாய்வு மூலம் செய்திகள் வெளியிட்டிருக்கிறது. 2011இல் மெக்சி கோவில் மட்டும் 18.1 மில்லியன் டாலர்கள் (சுமார் நூறு கோடி ரூபாய்) அளவிற்கு லஞ்சம் அளித்திருக்கிறது. இதுபற்றி தொடர் ஆய்வில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் லஞ்சம் கொடுப்பதற்கென்றே பல லட்சம் கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது என்றுதி நியூயார்க் டைம்ஸ் நாளேடுதெரிவிக்கிறது.

அதுமட்டுமல்ல, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை விதைப்பது என் பது, விஷ உணவை அறுவடை செய்வது போன்றது என்று பல வேளாண் அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியிருக்கிறார்கள்.

அந்நிய நேரடி முதலீட்டுடன் அவர்கள் உருவாக்குகின்ற உணவுப்பொருள்களும் வரும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அவர் களது உணவுப்பொருள்கள் சமுதாயத்தில் பல் வேறு சுகாதாரக் கேடுகளை விளைவித்திடும்.

மான்சாண்டோ நிறுவனம் விற்பனை செய்திடும் இரசாயன உரங்களைப் பயன் படுத்தி அந்நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை எலிகளுக்கு உண வாகக் கொடுத்து சோதனை செய்து பார்த் ததில், அவை கழலை நோய்க்கு ஆளான தையும், அவை ஈரல் நோய்க்கு ஆளான தையும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது. ஆண் எலிகளில் 50 விழுக் காடும், பெண் எலிகளில் 70 விழுக்காடும் விரைவில் இறந்தும் போய்விட்டன. சில எலி களால் அவற்றிற்கு ஏற்பட்ட கழலை நோய் களின் காரணமாக அவை மூச்சுவிட முடி யாமல் திணறின.

உலகின் பல பகுதிகளிலும் ஆய்வு செய்த பல்வேறு வல்லுநர்களும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மனிதர்கள் உட்கொள் வதற்குத் தீங்கானது என்று தங்கள் ஆய்வறிக் கையில் தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை உலகில் உள்ள எந்த அரசாங் கமும் தங்கள் இஷ்டம்போல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய் திடும் பன்னாட்டு நிறுவனங்களை, அவற்றை விற்பதற்கு எதிராக எவ்விதத்திலும் கட்டுப் படுத்தியதாகத் தெரியவில்லை.

பாரம்பரியமாக விவசாயிகள் பண்ணை களில் உற்பத்தி செய்து வந்த விதைகளே மர பணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைவிட ஆரோக்கியமானவை.

உலக வங்கியின் நிர்ப்பந்தத்தின் காரண மாக இந்திய அரசு 1998லேயே விதைத் துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் விதை ஏகபோகம், உடனடியாக நம் நாட்டில் விளைவித்து வந்த உயிர்தொழில்நுட்பத்திற்கு (biடி-னiஎநசளவைல) இழப்பினை ஏற்படுத்தியது.

மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பல் வேறு வகைகளிலும் மாறுபட்டிருப்பதால், அவை முழுமையாக வளர்ச்சிபெறாமல் வீணாகியுள்ளன. பல இடங்களில் விவசாயி கள் தற்கொலைகளுக்கு இதுவே முக்கிய காரணமாகும்.

எல்லாவற்றையும்விட மோசமான விஷ யம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் இயற்கையாக விளையும் பயிர்களின் இயற் கையான
வளர்ச்சியையும் அழித்துவிடு கின்றன.

அதனால்தான் இந்தியாவில் பி.ட்டி. கத்தரிக்காய் அறிமுகப்படுத்தப்பட்டபோது நாட்டின் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அது தடுத்து நிறுத்தப் பட்டது.

ஆனால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டால், இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் மிக எளிதாக நம் நாட் டிற்குள் இவர்களின் கடைகளின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டு மக்களின் வாழ்வில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய் யப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்ட மக்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப் பட்டு அவதிப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டு களில் இவர்களின் எண்ணிக்கை இரட்டிப் பாகியுள்ளன.

ரஷ்யாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் குறித்து பல்வேறு ஆய் வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு, மூன் றாண்டு காலத்தில் அவை மூன்று தலை முறைக்குள்ளாகவே அவற்றை உட்கொள்ளும் விலங்குகள் உற்பத்திப் பெருக்கத்தை உண் டாக்கும் ஆற்றலை இழந்துவிடுகின்றன என் பதைக் கண்டனர். எனவேதான், ரஷ்யா, மர பணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை இறக்கு மதி செய்வதையும், விற்பதையும் தடை செய் திருக்கிறது. ரஷ்ய விஞ்ஞானிகள், மரபணு உணவுப் பொருள்களை எதிர்த்து வரு கின்றனர்.

எனவே எந்த கோணத்தில் பார்த்தாலும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பதென்பது நாட்டின் நலன் களுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் விரோதமானது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com