Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தேசிய மாவீரர் தினத்தை பக்தியுடனும் பயனுடனும் அனுட்டிப்போம்

(பணியாளன் எஸ். ஜே. இம்மானுவேல் ஜேர்மனி )

அன்பான ஈழத்தின் உடன்பிறப்புக்களே சகோதர சகோதரிகளே

ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் ஒன்றாக ஒருங்கிணைந்து உலகளாவிய ரீதியில் அனுசரிக்கும் ஓர் தேசிய தினமாக மாவீரர் நாள் வளர்ந்து விட்டது. அன்றைய தினத்தை ஓர் புனித நாளாகக் கணித்து முதலில் ஆண்டவனை வழிபடுவோம். அவனின்றி அணுவும் அசையாது. எம்மை ஈழத்தமிழராக அந்த இடத்தில் இனாமான கொடைகள் - மொழி கலை கலாச்சாரம் - கொடுத்து இருத்தியவர் அவரே. கடந்த ஆறு தசாப்தங்களாக அனுபவித்த சகலத்தையும் முழுமையாக அறிந்தவரும் அவரே. ஆகையினால் எமது தாகத்தையும் சோகத்தையும் எமது இன்றைய முயற்சிகளையும் அவன் பாதத்திலே வைப்போம்.

இத்தினத்தின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் மனித பெலவீனத்தினால் சில பொறுப்பற்ற அல்லது சுயநல நோக்கங்களுக்காக இவற்றை ஒழுங்கு செய்யாதும் எமக்குள் போட்டி பொறாமைகள் நிறைந்த போக்கினால் மாசு படுத்தாமலும் காப்பாற்றுவது எல்லோரினதும் தலையான கடமையாகும்.

தாயகத்தில் மறைந்த மாவீரர்களின் கல்லறைகளையும் நினைவுச் சின்னங்களையும் மண்ணோடு மண்ணாய் அழித்து அதன் மேல் படையின் அரக்கத்தன அதிகாரக் கட்டடங்களையும் வெற்றிச்சின்னங்களையும் பதித்து எம் மாவீரர்களையும் தமிழ் மண்ணையும் மக்களையும் சிங்கள அரசு வேரோடு அழிக்க முயல்கின்றது. ஆனால் எமது விடுதலைத் தாகத்தையோ சோகத்தையோ ஒருவராலும் அழித்து விட முடியாது.

இருந்தும் புலத்தில் எமது விடுதலைப் போராட்டத்தை இங்கு செயற்படும் தீய சக்திகள் இலேசாகச் சிதைக்கலாம். விழிப்பாயிருப்பதும் போராட்டத்தை விறுவிறுப்பாகத் துரிதப்படுத்துவதும் எம்மில் தான் தங்கியிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் இத்தினத்தையிட்டு மூன்று விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென நாம் விரும்புகிறோம்.

உகந்த தகுந்த முறையில் இப் புனித நாளை அனுட்டிப்பது. இதன் பயனாக மக்கள் சக்தியைப் பெருக்கி சர்வதேசத்தின் கவன ஈர்ப்பை சம்பாதிக்க வேண்டும். தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கும் சர்வதேசத்துடனான போராட்டத்தில் எமது பங்கு எனது பங்கு என்ன என்பதை உணர்ந்து செயற்பட முன் வர வேண்டும்.

உகந்த தகுந்த முறையில் மாவீரர் தினத்தை அனுட்டிப்பதெப்படி?

மக்கள் சக்தியைப் பெருக்குவதெப்படி? சர்வ தேசத்தின் கவன ஈர்ப்பை பெறுவதெப்படி? சர்வதேச ரீதியில் முன் எடுக்கவேண்டிய முயற்சிகளுக்கு எமது அல்லது எனது பங்கென்ன?

இந்த மூன்று முக்கிய கேள்விகளையும் அன்பார்ந்த மக்களே உங்கள் மனச்சாட்சி முன் நிறுத்த விரும்புகின்றேன். உங்கள் நேர்மையான பதில்களை வைத்து நீங்களே உங்களை மதிப்பிடுங்கள் உங்கள் மனதை மாற்றுங்கள் உரிய செயலில் ஈடுபட முன் வாருங்கள்.

எமது சுய விமர்சனத்திற்கு ஏதுவாக சில கருத்துகளை நான் சகோதர உரிமையுடன் இங்கே தருகிறேன்:

தமிழ் தேசிய நினைவு தினங்களை புதிய வடிவத்திலே நடாத்த தேவையிருப்பின் அவைகளைப் பற்றி பண்புடன் உரையாடித் தீர்த்துக் கொள்ளுவோம். ஒரு பரந்த நாட்டில் எப்போதும் ஒரே இடத்தில் தான் நினைவு நாட்கள் வைக்க வேண்டிய கடமை இல்லை. மக்கள் தொகையாக வாழும் இடத்தையும் தூரங்களையும் கணக்கிலெடுத்து புரிந்துணர்வுடனும் தாராள மனப்பான்மையுடனும் தீர்மானிப்போம்.

மக்கள் சக்தியையும் சர்வ தேச கவன ஈர்ப்பையும் திரட்டுவதெப்படி? மக்களே எமது இலட்சிய தாகத்தின் ஊற்று மக்கள் சக்தியே போராட்டத்தின் அடித்தளம். இவ்வடித்தளம் தொகையிலும் வகையிலும் பெருகவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் பகைக்காதீர் 'துரோகி' போன்ற பட்டங்களை அள்ளி வீசாதீர். எல்லோரையும் அரவணைக்க தயாராகுங்கள். இயலாவிட்டால் மௌனம்

எமது சர்வதேச போராட்டம் விரிவடைய தமிழரல்லாத உங்கள் சினேகிதனுக்கும் அயலவனுக்கும் இத் தினத்தைப் பற்றி கூறுங்கள். எங்கள் போராட்ட சரித்திரத்தையும் உங்கள் தாக சோகங்களையும் கூறி அவர்களையும் நாள் நிகழ்வுக்கு வரவழையுங்கள்.

சர்வ தேச முயற்சிகளில் எமது அல்லது எனது பங்கென்ன? மக்கள் சக்தியுடன் உரிய மட்டத்திலும் இடங்களிலும் நம்பிக்கைக்குரிய தமிழ் பிரதிநிதிகள் தான் செயற்பட முடியும். எல்லோரும் இப் பணிகளை செய்ய முடியாது. சிலருக்குத்தான் உரிமையும் தகுதியும் இருக்கின்றது.

ஆகையினால் மக்களுக்கிடையிலும் அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்க்கு மிடையில் பரஸ்பர நம்பிக்கையும் பொறுப்பும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாது பொறுப்பான அளவிற்கும் இரகசியம் காப்பாற்றி உரிய முறையில் நடப்பவையிட்டு தகவல்கள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

இதில் என்னுடைய இடமெங்கே பொறுப்பென்ன? ஏதாவது தமிழ் அமைப்பில் இணைந்திருக்கிறேனா? பொறுப்பிருக்கா? எனது நேரத்திலும் திறமைகளிலும் பணத்திலும் என்ன விதமாகப் பங்களிக்கின்றேன்? இவ் வினாக்களுக்கு விடை தேடுங்கள். ஆண்டி மடம் கட்டியது போல அமர்ந்திருந்து எல்லாவற்றையும் விமர்சிக்காது எழுந்து செயற்படுங்கள்.

அன்பார்ந்த மக்களே எனது உடன் பிறப்புக்களே! நினைவு தினங்கள் திரும்பத் திரும்ப வந்து போகும். அவற்றை நாம் அனுட்டிப்பதும் தொடரும் போராட்டத்திற்கு இன்றைய நிலையில் சக்தி திரட்டி எம் மத்தியில் இயங்கும் அமைப்புகளின் தலைவர்களை ஊக்குவித்து உதவுவதும் உங்கள் கடமை. மேற் கூறிய சிந்தனைகளை சகோதர உரிமையுடன் உங்கள் முன் வைத்து மாவீரரின் தாகமும் தற் பருத்தியாகமும் நம்மிலும் வளர்க வாழ்த்துகிறேன்.

பணியாளன் எஸ். ஜே. இம்மானுவேல் ஜேர்மனி

ஆ.......சாமி ஒழிச்சு மறைச்சு, மெண்டுவிழுங்கி என்ன சொல்ல விளைகிறார் என்பது புரிகிறதா? அட புலிப் பொடியளே!, உங்களுக்குள்ள சண்டை வேணாம். ஒருத்தனை ஒருத்தன் காட்டிக்கொடுக்க வேணாம். சம்பாதிக்கிறவன் சம்பாதித்திட்டுப் போகட்டும். காசு அடிக்கிறவன் அடித்துக்கொண்டு போகட்டும். போறாமைப்பட வேண்டாம். வசதி வாய்த்தால் நீங்களும் அடியுங்கோ. நினைவு தினங்கள் மீண்டும் மீண்டும் வரும். அப்போது மற்றவர்களுக்கும் பணம் பண்ணுவதற்கு சந்தர்ப்பம் வரும். இப்போதைக்கு எம்மத்தியில் இருக்கும் நெடியவன் குழு, விநாயகம் குழு, எல்லாளன் குழு, பாம்புக் குழு ஆகிய எல்லாக் குழுத் தலைவர்களையும் ஊக்குவிக்க உங்கள் பணங்களைக் கொடுத்து உதவுங்கள். எல்லாத்துக்கும் மேல, செத்த புலிப் பொடியளைப் போல, நீங்களும் கொலைகள், தற்கொலை செய்ய வாழ்த்துகிறேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com