Contact us at: sooddram@gmail.com

 

சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் யாரென்பதை கண்டுபிடிப்பதில் இன்னுமே தெளிவற்ற நிலைமை

சிந்துவெளி நாகரிகம் எகிப்து, மொசப்பெத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழை த்தோங்கியிருந்த உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன் மையான ஒரு நாகரிகமாகும். இன் றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத் தில் செல்வாக்குச் செலுத்தி வந்தது. கி. மு. 3000 க்கும் கி. மு. 2500 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம் இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்துபோய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ அவர் கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக் கையிலான முத்திரைகள் காணப்படு கின்றன. அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடிய வில்லை.

சிந்துவெளிப் பகுதியில் கி. மு. 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங் களும் சிறிய நகரங்களும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி ஹரப்பாவின் அடி யிலுள்ள படைகள் என்பன இக்கூற் றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும் சுதந்திர மான நிர்வாகம் மற்றும் தன்னிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவும் இருந்தன.

தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் முன்னெப்பொழு தும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோ மீற்றர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும் 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள் குடியேற் றங்களுடைய ஒரு தன்மையான அமை ப்பு இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கி ணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்தின் கீழ் அமைந்திருந்தமை யைக் காட்டுகின்றது.

முறையான ஹரப்பா பண்பாடு கி. மு. 2600 இலிருந்து 1900 வரை நிலவியது. இதன் முன் நிலவிய மற்றும் பின் நிலவிய பண்பாடுகளான முந்திய மற்றும் பிரந்திய ஹரப்பாப் பண்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது இது கி. மு. 33 – 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதலாம்.

சிந்து வெளிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள் வதற்கான சான்றுகள் இன்னும் கிடை க்கவில்லை. ஆனாலும் ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படு கின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும் இல்லை ஆரியரே என்ற இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பல விதமான கலப்பினக் கொள்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

சமயச் சடங்குகளோடு தொடர்புடை யவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டடப் பகுதிகள் எதுவும் தொல்பொருள் ஆய் வில் அகப்பட வில்லை. அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும் சிறிய உருவச்சிலைகள் மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும் அவற்றிலே உருவகப் படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத் துருக்களையும் ஆய்வாளர்கள் அடை யாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடி ப்படைகளுக்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இவற்றை வைத்து தற்கால இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்து வெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படு கின்றது.

சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக் களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய் வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையா ளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும் இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ- ஐரோப்பிய மொழிகளாகும் எனினும் இம்மொழி பேசுவோர் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப் படுவதால் இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருது கிறார்கள். சிறப்பாக இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரி டையே ஆதரவு உண்டு. இது முண்டாமொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அன் மைக் காலத்தில் வட இந்திய ஆய் வாளர்கள் பலர் சிந்துவெளி மொழி யானது இந்தோ- ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால் இதுதொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பின்னணி கொண்டவையா கவும் உணர்வு சார்ந்தவையாகவும் மாறி வருகின்றன.

சிந்துவெளி நாகரீகத்தில் சிக்கல் தன்மை வாய்ந்த உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அமைப்பு மற்றும் நக ரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந்நாகரீக மக்களிடையே நிலவிய மையைக் காட்டுகின்றது. மொஹெஞ் சதாரோ ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள் முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப் பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர், தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரப்பா மொஹெஞ்சதாரோ மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்ப ட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காண ப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள் உகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறை மைகளாகும். நகரங்களில் வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீரு பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டி ருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர் வீடுகளில் இருந்து தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப் பட்டது. வீடுகளின் வாயில்கள் உள் முற்றங்களிலோ சிறிய தெருக்களிலோ தான் அமைக்கப்பட்டன.

பண்டைக்காலச் சிந்துவெளியில் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றுல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள் சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவை யாகவும் காணப்பட்டன.

சிந்துவெளி நாகரீகக் காலக் கட்டடக் கலையின் தரம் பற்றி அங்கே காணப்படுகுன்ற இறங்கு தளங்கள் தானிய சேமிப்புத் கிடங்குகள் களஞ்சியத் தோகுதிகள் செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாது காப்புச் சுவர்கள் போன்ற இன்னோ ரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான கோட்டைகள் கட்டப் பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் எதுவும் காண ப்படவில்லை. இங்கே அரண்மனை களோ கோயில்களே இருந்ததற்கான முடிவான சான்றுகளோ அரசர் படைகள் சமயக் குருமார் போன்ற வர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில் பொதுக் குளியல் இடம் எனக் கரு தப்படுகின்ற சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும் கஇவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட் புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவை யாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான நகரவாசிகள் வணிகராகவும் கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது முத்திரைகள் மணிக்கன் மற்றும் பலவகைப் பொரு ட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டுவரப் பட்ட மூலப்பொருட்கள் பயன்படுத் தப்பட்டன.

சில வீடுகள் ஏயைவற்றிலும் பெரி யவையாகக் காணப்பட்ட போதிலும் பொதுவாக இவற்றின் அமைப்பு சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமள வுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமை ப்பைக்கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின் போது பத்துக்கும் மேற்பட்ட முது மக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காண ப்பட்ட சில குறியீடுகள் ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடஙக்ளில் கண்டெடுக்க்பபட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடகளைப் போன்றே இருப்பதாக பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தெரிவித் திருக்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com