Contact us at: sooddram@gmail.com

 

டாலி... டாலி!

(டி.அருள் எழிலன்)

'''ன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்தராத்திரி  ொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா...

- எனக்கு நல்லா நினைவிருக்கு. அப்போ  ேடியோவுல அடிக்கடி இந்தப் பாட்டு போடுவாங்க. நான் அடிக்கடி என் டாலிக்கு இந்தப் பாட்டைப் பாடினதெல்லாம் இப்பவும் நல்லா நினைவிருக்கு!'' - அழகாகப் பாடி உருகுகிறார் சாந்தி. ஓவியர் வீர சந்தானத்தின் காதல் மனைவி, இப்போது... மனதளவில் அவர் ஒரு குழந்தை!  

''என் மூத்த அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்குத் தெரியாம என் டாலிக்கு நான் பாத்ரூம்ல இருந்து லவ் லெட்டர் எழுதுவேன். அவனும் எழுதுவான். இவன் எழுதின லெட்டர்லாம் வெச்சிருந்தேன். அப்பப்போ டாலியோட சண்டை வந்துச்சுன்னா,  ஒவ்வொரு லெட்டரா எடுத்து கிழிச்சுப் போட்ருவேன்!'' -  சிரிக்கிறார் சாந்தி. தொடர்பறுந்து வந்து விழும் வார்த்தைகளை எடுத்துக் கோத்தால், வீர சந்தானம் - சாந்தி வாழ்வில் ஒளிந்திருக்கும் ஓர் அற்புதமான காதல் தெரியும்!

நவீன ஓவியராக, சமூகப் போராளியாக அறியப்பட்ட வீர சந்தானத்தின் வாழ்வில் யாரும் அறியாத இன்னொரு பகுதி இது. வீடு முழுக்க இறைந்துகிடக்கின்றன ஓவியங்கள். முகம் மறைத்துப் புரளும் மீசை, தாடியை நீவியபடியே தன் கதை சொல்கிறார்...

''கும்பகோணம் பக்கம் உப்பிலியப்பன் கோவில்தான் என் சொந்த ஊர். வீட்டில் நானும் தங்கச்சியும்தான். அப்போ அது ஒரு பஞ்ச காலம். ஒரு நாளைக்கு ஒருவேளை போஜனம்தான்.    18 வருஷம் கோயில் சோறு சாப்பிட்டு வளர்ந்தவன். கும்பகோணம்னா கோயில் ஊர் என்பதால், சிற்பமும் இசையும் அதோட ஆன்மாவா இருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போனப்போ, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கிட்டேன். 'சாகும்போது தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’னு எப்பவும் எழுச்சியோட திரிஞ்சாலும், பள்ளிப் பாடத்தில் என்னால் தேற முடியல. 'தொழிலாளிபடத்தில் எம்.ஜி.ஆர். பஸ் கண்டக்டராக இருந்து, செக்கர் ரேஞ்சுக்கு உயர்வார். அதைப் பார்த்துட்டு எனக்கும் செக்கர் வேலைதான் சரிவரும்னு தோணுச்சு. ஆனா, செக்கர் ஆக முடியாதுங்கிற உண்மை தெரிஞ்சப்போ, நான் எம்.ஜி.ஆர். இல்லைங்கிற உண்மையும் புரிஞ்சது.

அப்புறம்  ும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். பணம் இல்லாம, படிக்க முடியாம, ஓடிவந்துட்டேன். அப்புறம் அப்படி இப்படினு அலைபாய்ஞ்ச வாழ்க்கை, ராஜஸ்தானுக்கு அனுப்பி பிரஸ்கோ ஓவியத்தைக் கத்துக்கவெச்சது. அதுக்குக் காரணம் தனபால் சாரும் அவங்க துணைவியாரும்தான். ஒரு தேவதூதன் மாதிரி ஆதிமூலம் அண்ணனும் என் வாழ்வில் வந்தார்!'' என்கிற வீர சந்தானம், 'மியுரல்ஸ்எனப்படும் புடைப்பு ஓவியங்களின் பிரம்மன். 1990-ல் இந்திய அரசின் தேசிய விருது பெற்றவர்.

''ஓவியர் ஆதிமூலம் அண்ணன் வழிகாட்ட, மத்திய நெசவாளர் சேவை மையத்தின் சென்னைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். 1973-ல் எனக்கு 850 ருபாய் சம்பளம். அவ்வளவு பணத்தை மொத்தமா பார்த்தப்போ, நிஜமாவே கதறி அழுதிட்டேன். பட்டினியா அலைஞ்ச காலம் மாறி வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பிச்சது. அங்கே வேலை பார்த்துட்டு இருக்கும்போதுதான் கவிஞர் அறிவுமதி மூலமா, பாலுமகேந்திரா நட்பு கிடைச்சது. 'சந்தியாராகம்படத்தில் என்னை நடிக்க வெச்சார். சினிமா நடிகன் ஆனது அப்படித்தான். 80-களில் ஈழம் தொடர்பான போராட்டங்கள்ல ரொம்ப உணர்வாளனா பங்கெடுத்துக்கிட்டேன். அப்போ என்னை மும்பை அலுவலக சகாக்கள் 'டைகர் ஆயா’னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. 'புலி வருது’னு அர்த்தம். காதல், ஈழம்னு பூவும் போர்க்களமுமா வாழ்ந்த நாட்கள் அவை!  

நான் வேலைபார்த்த  ென்னை சேமியர்ஸ் சாலை அலுவலகத்தின் ஜன்னலோரம் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தா. அதுக்கு முன்னாடி பல காதல்களைக் கடந்து வந்ததுபோல இதுவும் ஒரு காதலா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இந்தக் காதல் வேறு மாதிரி இருந்தது. அந்தப் பெண்ணின் முகம் ஜன்னலில் இருந்து என் இதயத்தில் வந்து அமர்ந்துகொண்டது. வசீகரமான ஒரு வாழ்வையும் கனவையும் பரிசளித்தது அந்தக் காதல். காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்து பார்வைகளால்  ாதல் வளர்த்தோம்.

அவங்க வட இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்தில் குடியேறின குடும்பம். சாந்தியோட தாத்தா, வெள்ளையர் காலத்தில் செங்கல்பட்டு          சப்-கலெக்டர். அப்பா, ஒரு பைலட். கூடப் பிறந்தவங்க ஏழு பேர். இவதான் கடைசி. அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்கனு தெரிஞ்சதும், நான் அவளைத் திருமணம் செஞ்சுக்க முடிவெடுத்தேன்.

எங்க காதல் வாழ்வுக்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றோம். சாதாரணமான ஆளாப் பிறந்து, கோயில் மாடு மாதிரி வளர்ந்து, வேப்பங்குச்சியில் பல் துலக்கிய என்னை, முதன்முதலா பேஸ்ட் பிரஷ்ல பல் துலக்கவெச்சதே சாந்திதான். கரடு முரடா வளர்ந்துகிடந்த என் தலை மயிரை செதுக்கி சீராக்கி, டை கட்டி, பேன்ட், ஷூ போடக் கத்துக்கொடுத்தவ சாந்தி. என்னை மனுஷனாக்கியது சாந்தியோட காதலும் அன்பும்தான். இரண்டு குழந்தைகளையும் தனி மனுஷியா வளர்த்து ஆளாக்கினா. பிள்ளைகளுக்கு சாமி தெரியும். ஆனா, சாதி, மதம் தெரியாது. ரெண்டு பெண் குழந்தைகளுக்கும் விருப்பத் திருமணம் பண்ணிக் கொடுத்தோம். எல்லாமே என் சாந்தி முடிவுதான். அவ சொன்னா, அது சரியா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை. நான் வேலையில் இருந்தப்போ 15 வருஷம் இந்தியா முழுக்க டிரான்ஸ்ஃபர்ல சுத்திட்டே இருந்தேன்.  அதனால என் சாந்திகூடவே இருக்க முடியாமப்போச்சு. அப்பா அம்மா இல்லாம  இருந்த சாந்திக்கு அது ரொம்பக் கஷ்டம் கொடுத்திருக்கும்னு இப்போ ஃபீல் பண்றேன்.   உடன் பிறந்த ஆறு பேர்ல அஞ்சு பேர்  அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அதுவும் ஒரு பெரிய பாதிப்பை சாந்திக்கு உருவாக்கி,  தூக்கமே இல்லாமப்போயிருச்சு. அது மன ரீதியிலான பாதிப்பை உருவாக்கி என் சாந்திக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிருச்சு. நினைவுகள்  ிதைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு குழந்தையாகிட்டா!'' என வேதனையை, புன்னகையோடு பகிர்கிறார் வீர சந்தானம்.

''சுடுமண்ணில் செய்த ஒரு யானை சிற்பத்தை வாங்கி தன்கூடவே வெச்சிருக்கா சாந்தி. எப்பவும் அதைத் தூக்கிட்டே நடக்கிறா, திரியிறா, கொஞ்சுறா, தூங்குறா. யாராவது, 'அந்த யானையைக் கொஞ்சம் கீழே வையேன்’னு சொன்னா, 'ம்ம்... இது என் டாலி... என் டாலி’னு மறுத்துடுறா. அவ மனசுல நான்தான் அந்த யானை.

சாந்தி எனக்கு இப்போ ஒரு குட்டிப் பாப்பா. சாந்திக்கு நான் ஒரு குட்டி யானை. இது துயரமாத் தெரிஞ்சாலும், பிரியம் எவ்வளவு பெருசு பாருங்க!'' என்பவரைப் பிரிய மனசு வருமா?

அழகழகிது!

(ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட 1984ம் ஆண்டு கால கட்டங்களில் இவரை இவரது இல்லத்தில்  தேனாம்பேட்டையில்(அண்ணாசாலைக்கு அருகில்) பல தடவை சந்தித்து ஈழ விடுதலை பற்றி பேசிய அனுபவங்கள் நிறையவே உண்டு. அன்றைய காலகட்டத்தில் ஓர் இடதுசாரி சிந்தனையாளராக ஈழவிடுதலை அமைப்புக்களில் இடசாரி சித்தாங்களை ஏற்று செயற்பட்டுவந்த எங்களுடன் நல்ல உறவில் இருந்தார். ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் பின்பு சிறப்பாக இந்தியப்படையுடன் புலிகளின் சண்டை காலத்தில் இந்திய அரசை எதிர்கின்றனர் என்ற காரணத்திற்காக புலிகளை ஆய்வுகள் இன்றி ஆதரிக்க தொடங்கினார், இவரும் இவரைப்போன்ற பெரியார் கொள்ளைகளை பின்பற்றிய பலர். இதில் புலிகள் ஏனையவிடுதலை அமைப்புக்களை அராஜகமாக சுட்டு பொசுக்கியது எல்லாம் இவர்களின் கண்களில் பெரிதாக தெரியவில்லை. ஆனாலும் இவருடன் பழகிய அந்த நினைவுகளின் அடிப்படையில் இவர் மிகவும் நல்ல மனிதர். ஏன் பிற்காலத்தில் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்க தொடங்கினார் என்பதற்கான சரியான புரிதல், விளக்கம் இவர்களிடம் இல்லை என்பதே என்கருத்து. திறமையான உலகப் புகழ் பெற்ற ஓவியர். இவரின் குடுமபத்தினர் என்னைவரவேற்று உபசரித்ததை அவர்கள் மறந்து இருப்பார்களோ தெரியாது நான் இன்னும் மறக்கவில்லை. - சாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com