Contact us at: sooddram@gmail.com

 

இசைப்பிரியாவும் சனல் -4 வின் ‘~மணி மேக்' கலையும்

காலநேரம் பார்த்து வீடியோ வெளியிட்டு தமது வருமானத்தில் குறியாயிருக்கிறார்களா சனல் 4 போன்ற மேல்நாட்டு நிறுவனங்கள்? சனல் - 4 போன்ற மேலைநாட்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தனது முயற்சியில் தளராத வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல சனல் 4 இம்முறையும் அது இசைப்பிரியாவின் உடலோடு முருங்கைமரத்தில் ஏற புறப்பட்டுள்ளது. இசைப்பிரியாவின் கைதும் கொலையும் ஏற்கனவே வெளிவந்த தகவல்கள்தான். எனினும் இம்முறை அவர் உயிருடன் பிடிபடும் காட்சி மேலதிமாக இணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே சனல் 4 போன்ற மேல்நாட்டு நிறுவனங்களின் உள்நோக்கங்களை நாம் அடையாளம் காணலாம். ஒவ்வொரு வருடமும் முதல் பத்து மாதங்களிலும் இந்த சனல் நிறுவனத்துக்கு இதுபோன்ற ஆதாரங்கள் எதுவும் கிடைப்பதில்லையா? அது என்ன? ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சரியாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர்தான் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் பற்றிய மனித உரிமைமீறல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவா? அல்லது கிடைக்கின்ற தகவல்களை கால நேரம் பார்த்து வெளியிட்டு தமது வருமானத்தில் குறியாயிருக்கிறார்களா? என்பது பற்றியெல்லாம் நாம் கவலைப்படுவது கிடையாது.

சனல் 4 போன்ற மேலைநாட்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சரியான ஊடகங்களாக இருந்தால் கிடைக்கின்ற தகவல்களை தங்களுக்கான காலநேரம் வரும் வரை மக்களுக்கு தெரிவிக்காது மறைத்து வைத்திருப்பது கூடாது. அவ்வாறு மறைப்பதுவும் மக்களது செய்தி அறியும் சுதந்திரத்தின்மீதான மனித உரிமை மீறலேயாகும். சனல் 4 வெளியிடுகின்ற இந்த செய்திகளில் இலங்கையரை பழிவாங்கும் எண்ணமும் ஐரோப்பியரின் காலடிக்கு இலங்கையரை கொண்டு வருகின்ற சாணக்கியமும் நிரம்பிவழிகின்றதே ஒழிய அந்த படுகொலை பற்றிய பச்சாதாபம் எதுவுமில்லைஎன்பதை நாம் உணரவேண்டும்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரம் பற்றி புகலிட இலக்கியத்தில் முன்னோடிகளில் ஒருவரான திருமதி இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ஒரு ஆவணப்படம் தயாரித்தார். இலங்கை தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேசம் அறிந்திராத அந்தகாலத்தில் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டு உதவுமாறு அவர் கேட்டபோது சனல் 4 அதற்கு மறுப்பு தெரிவித்தது. அப்போது இலங்கையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என்பதே அதற்கு காரணமாகும். மேலைத்தேய எசமானர்களின் விசுவாசியான ஜெயவர்த்தனாவை காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதில் இந்த சனல் 4 உறுதியாக இருந்தது. ஆனால் அந்த சனல் 4 தான் இன்று தமிழருக்காக நீலிக்கண்ணீர்வடிக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் இருந்து இயக்குனர் மணிமேகலை எடுத்திருக்கும் வெள்ளைவேன் ஆவணப்படத்தையும் இந்த சனல் 4 வாங்கி வெளியிடவுள்ளது. எனும் செய்திகளும் வருகின்றன. வெள்ளை வேன் கலாசாரத்தை ஈழப்போராட்ட வரலாற்றில் தொடக்கி வைத்தவர்கள் தமி ழீழ விடுதலைப்புலிகள்தான் என்பது முக்கியமானது. 1990ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபை புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. புலிகளிடமிருந்து உயிர்தப்பும் போராட்டத்தில் சிதறியோடிய மாற்று இயக்க குறிப்பாக ஈ. பி. ஆர். எல். எப், ஈ. என். டி. எல். எப் உறுப்பினர்கள் காடுகண்ணி என்று நாட்டின் நாலாபுறமும் சிதறியோடினர். இறுதியில் சிலர் வெளிநாடு செல்லும் முடிவில் கொழும்புக்கு தப்பிவந்தனர்.

அப்போது பிரேமதாசவுடன் புலிகள் கொழும்பில் தேன் நிலவு கொண்டாடிய காலங்கள் அவை. அப்போதுதான் அந்த மாற்று இயக்க உறுப்பினர்களை கடத்திச்சென்று கொன்றுவீச பிரேமதாசாவின் உளவுப்படை புலிகளுடன் இணைந்து இந்த வெள்ளை வேன் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது. அதில் இந்த மாகாணசபை முறைக்கு உயிர்கொடுத்த பல நூறு இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.

இவையெல்லாம் நடந்துமுடிந்த கதைகள். இந்த வரலாறுகளில் கைசுத்தமான எந்த ஒரு இயக்கமும் இல்லை என்பதும் வெட்ககரமான உண்மை. இப்போது நாம் இவைபற்றி நினைவூட்டிகொண்டிருப்பதைவிட எதிர்காலம் குறித்தே கூடிய அக்கறை கொள்ள வேண்டும்.

கை இழந்து கால் இழந்து ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் அனாதைகளாக அலைகின்றார்கள் குறிப்பாக பெண்போராளிகள் தம் உடல்களையே விற்றுப்பிழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்வாதாரமின்றி தனித்துவிடப்பட்டிருக்கின்றனர். இவர்களின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் பதிய செய்வதற்கே இன்று ஆவண படங்கள் தேவை.... கலை என்பது சுதந்திர சிந்தனையின் வெளிப்பாடு அதை யாரும் கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ கூடாதென்பது ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கலாம். ஆனால் கலைகள் மக்களின் வாழ்வுக்கானது என்பதே அதிலும் அவசியமானது. எனவே இழந்துபோன இரத்தத்தையும் சோகத்தையும் பழிவாங்கலுக்கும் பணம்பண்ணுவதற்கும் பயன்படுத்த முனைவது வியாபாரத்தனமானது.

(மட்டுநகர் எழுகதிரோன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com