Contact us at: sooddram@gmail.com

 

இந்திய அரசியலில் மிகப் பலம்வாய்ந்த ‘சவுத் புளொக்’ டாக்டர் மன்மோகன் சிங் கொழும்பு வருவதை ஆதரிக்கிறது

இலங்கைக்கு எதிரான எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒரு சிலரும், டொலர்களுக்காக வால் பிடிக்கும் சில அரசசார்பற்ற அமைப்புகளும், எங்கள் நாட்டில் இருக்கும் சில தேசத்துரோக சக்திகளும் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்ற போதிலும் இம்மகாநாடு மிகவும் வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்து அடுத்த ஈராண்டுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பொதுநலவாய நாடுகளுக்கு தலைமை தாங்குவார் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

இலங்கைக்கு எதிரான இத்தீய சக்திகள் எங்கள் நாடு தொடர்பான ஏதாவது சர்வதேச நிகழ்வு நடைபெறும் போது திடீரென்று கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தது போன்று ஏதாவது ஒரு ஜோடிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை எங்கள் நாட்டுக்கு எதிராக சர்வதேச அரங்கில் சுமத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளை கேட்டு, கேட்டு அழுத்துப் போன சர்வதேச சமூகமும் இலங்கையுடன் நெருக்கமான நாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி இப்போது பொருட்படுத்துவதே இல்லை. தங்களுடைய குட்டு சர்வதேச அரங்கில் அம்பலமாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட இந்த தீய சக்திகள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இலங்கை அரசாங்கத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் சமீபத்தில் இசைப்பிரியா என்ற பெண்ணின் காணொலியை சனல் 4 பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேவையின் மூலம் காண்பித்து அதனை இணையத்தளங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் காணொலி ஆதாரமற்றதென்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லையென்று அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ள போதிலும் நாலாண்டு காலம் இசைப்பிரியாவைப் பற்றியோ இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களின் போது மரணித்ததாக கூறப்படும் மக்களுக்காகவோ கவலைப் படாமல் இருந்த தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் குறிப்பாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் கருணாநிதியும் இது தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பென்று மனமகிழ்ந்து இந்தக் காணொலியை மையமாக வைத்து அரசியல் இலாபம் திரட்ட இப்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தியப் பிரதமமந்திரி டாக்டர் மன்மோகன் சிங் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பது இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை தயாரிக்கும் சவுத் பிளொக் என்றழைக்கப்படும் வெளிவிவகார அமைச்சும் இந்தியாவின் சிரேஷ்ட நிர்வாகிகளும் தங்கள் பிரதமமந்திரி கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் மதிப்பையும் நற்பெயரையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் தங்கள் பிரதம மந்திரி கொழும்பில் நடைபெறும் இம்மகாநாட்டில் கலந்து கொள்வது அவசியம் என்று புதுடில்லியில் உள்ள சவுத் பிளொக் நிர்வாக அமைப்பு மறைமுகமான கண்டிப்பான உத்தரவை அந்நாட்டின் அரசாங்கத் தலைவர்களுக்கு விடுத்திருப்பதாக இந்தியாவின் செல்வாக்குமிக்க அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவை போன்ற பதவிகள் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பையும் நிர்வாகத்திற்குரிய கொள்கைகளையும் சட்டங்களையும் இயற்றும் பொறுப்பையும் கொண்டுள்ள போதிலும் சர்வதேச ரீதியில் தேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முடிவையும் இந்திய ஆட்சியாளர்கள் குறிப்பாக பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் எடுப்பதற்கு முன்னர் அவர்கள் சவுத் பிளொக்கில் உள்ள சிரேஷ்ட இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெற வேண்டுமென்ற சட்டபூர்வமற்ற நியதியை கடைப்பிடிக்கிறார்கள்.

இதனால், இந்தியப் பிரதமமந்திரி சர்வதேச அரங்குகளில் நிகழ்த்தவிருக்கும் உரைகளை மாற்றியமைத்து அதில் புதிய கருத்துக்களை புகுத்தும் அதிகாரமும் இந்தியாவின் சவுத் பிளொக் நிர்வாக பீடத்திற்கு இருக்கிறது.

இந்திய பிரதம மந்திரி இலங்கைக்கு செல்வது தங்கள் நாட்டுக்கு நன்மையாக அமையுமென்ற அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் யோசனைப்படி பிரதம மந்திரி மன்மோகன் சிங் நிச்சயம் கொழும்புக்கு வருவார் என்ற நம்பிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது.

இதேவேளையில் தமிழ்நாட்டில் இருந்து மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை சமநிலைப்படுத்தி அவர்களை திருப்திபடுத்தக்கூடிய வகையில் ஒரு நடைமுறையை சவுத் பிளொக் நிர்வாகிகள் இப்போது தயாரித்திருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இதன்படி இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங், மகாநாட்டில் கலந்து கொண்டு, எவரும் எதிர்பாராத வகையில் யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ்நாட்டிலும் தனது கட்சியான காங்கிரஸ் கட்சியிலும் எழுந்துள்ள எதிர்ப்பை சாந்தப்படுத்தக் கூடிய வகையில் தனது விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

தீங்கிழைத்தவனையும் மன்னிப்பது அவசியம் என்ற உன்னதமான கருத்தை ஜனாதிபதி அவர்கள் இந்த உச்சிமாநாடு தொடர்பான நிகழ்வுகளை தயாரிக்கும் போது வலியுறுத்தி இருக்கிறார். லண்டனின் சனல் 4 தொலைக்காட்சி எந்நேரமும் இலங்கைக்கு எதிரான ஜோடிக்கப்பட்ட ஆதாரமற்ற காணொலிகளை வெளியிட்டு, எங்கள் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, சனல் 4 தொலைக்காட்சி சேவையின் செய்திக் குழுவினருக்கு இலங்கைக்கு வந்து பொதுநலவாய உச்சிமாநாட்டின் செய்திகளை திரட்டுவதற்கு அனுமதி மறுக்கு முகமாக அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான வீசாவை அரசாங்கம் கொடுக்கக்கூடாதென்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக வாதாடியதாகவும் அந்த நேரத்தில் குறுக்கீடு செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்தவர்களையும் மன்னித்து அவர்களுக்கு வீசா வழங்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டு தமிழர் பிரச்சினை குறித்து உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த “சனல் 4” ஊடகவியலாளர் கெலம் மக்கரேவுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதாக ஊடக, தகவல்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இறுதியாகக் கிடைத்த தகவலின் பிரகாரம் டாக்டர் மன்மோகன் சிங்கின் வருகை சாத்தியமில்லையென்று தெரியவருகிறது.

(எஸ். தில்லைநாதன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com