Contact us at: sooddram@gmail.com

 

பொது நலவாய மாநாடும் சனல்-4 இன் நாடகமும்

எமது நாடு தொடர்பாக போலியான விமர்சனங்களை செய்வது என்றால் சனல் -4 போன்ற சில பிரசாரம் தேடும் தொலைக்காட்சி சேவையினருக்கும் சில புலி ஆதரவு வெளிநாட்டுச் செய்திச் சேவையினருக்கும் ஒரு அலாதிப் பிரியம். புலம்பெயர் புலி ஆதரவாளர்களால் வழங்கப்படும் சன்மானத்திற்காக ஒன்றுமே இல்லாத விடயங்களைப் பெரிதுபடுத்தியும், கற்பனையில் செய்திகளைப் புனைந் தும் காண்பிப்பதில் இவர்கள் காட்டும் ஆர்வம் அருவருக்கத்தக்கது. டொலர் களில் தாம் வாங்கும் வெகுமதிக்காக உலகெங்கும் போற்றப்படும் ஊடகத் துறையை இவர்கள் மலினப்படுத்துகிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன் அவர் களது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த இசைப்பிரியா என்பவரை எமது இராணுவத்தினர் கைது செய்து அழைத்து வருவதைப் போன்றதொரு காட்சியை கடந்த வாரம் இந்த சனல் -4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. இதனை உண்மையென நம்பி சிலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆரவாரம் செய்தனர். ஆனால் இராணுவம் இதனை உடனடியாகவே மறுத்திருந்தது.

உண்மையில் இக்காட்சி சோடிக்கப்பட்டதொரு படத் தொகுப்பு. தற்கால நவீன தொழில்நுட்பங்களை வைத்து இதுவல்ல இதனைப் போன்ற இன்னும் பலவற்றைத் தயாரிக்கலாம் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இந்த ஒளிப்படம் தெளிவற்றதொரு காட்சியாகவே உள்ளது. பார்ப்போரை உண் மையென நம்பவைக்கும் விதத்தில் தத்ரூபமாக இதனைத் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். அந்தளவிற்கு புலி ஆதரவாளர்களது பணம் விளையா டியுள்ளது.

இறுதி யுத்தம் நடைபெற்று நான்கு வருடங்களாகியுள்ள நிலையில் இதுபோன்ற காட்சிகள் இன்று வெளியிடப்படுவதன் உள்நோக்கத்தை மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றும் மாநாடு நடைபெற உள்ள இவ்வேளையில் இந்த ஒளிநாடா வேண்டுமென்றே வெளியிடப்பட்டமையானது இது போலியான தயாரிப்புத்தான் என்ற பலரது சந்தேகத்தையும் உண்மையாக்கியுள்ளது.

இத்தகையதொரு ஒளிநாடா உண்மையிலேயே கிடைத்திருந்தால் அதனை முன்னரேயே வெளியிட்டிருக்கலாம், வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இது உண்மையிலேயே இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதைத் தடுக்க அல்லது அபகீர்த்தியை ஏற்படுத்தவெனத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதொரு நாடகமே என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆனால் அனைத்துமே புஸ் வாணமாகிவிட்டது. இதனை உண்மையென நம்பி அதற்காகக் குரல் கொடுத்த ஏனைய ஊடகங் களையும், அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் நாம் என்னவென்று சொல்வது?

உண்மையில் தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் தெரிவித்தது போன்று இவ்விடயம் தொடர்பாக நாம் சிறிதளவில்கூட அலட்டிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இதனைப் பெரிதுபடுத்தினால் அவர்கள் அடுத்தடுத்து இதுபோன்ற தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட முனைவர். இலங்கை இராணுவம் தெரிவித்தது போன்று அடுத்த மார்ச்சில் இவர்கள் இதுபோன்றதொரு வேறு ஓர் ஒளிநாடாவை நிச்சயம் வெளியிடுவர். ஏனெனில் மார்ச்சில் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளது.

சனல்-4 இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாக இதற்கு முன்னரும் வெளியிட்ட பல வீடியோ ஒளி நாடாக்கள் போலியானவை என்பதை சர்வதேச ஒளிப்பட நிபுணர்கள் குழு நிரூபித்துள்ளது. அப்படியிருந்தும் அவர்களது முயற்சி ஓயவில்லை. வாங்கும் பணத்திற்கு விசுவாசமாக ஒன்றிலாவது வெற்றி கண்டு புலி ஆதரவாளர்களிடம் பாராட்டைப் பெற அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தகையதொரு முயற்சியே இதுவுமாகும். ஆனால் தொடர் தோல்விகளையே இவர்களால் சந்திக்க முடிகிறது. அரசாங்கத்திற்கு எதிராகவும், தமது தாய் நாட்டிற்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதிலும் குறியாகச் செயற்படும் உள்நாட்டு அரசியல்கட்சிகள் சிலவற்றின் அரசியல்வாதிகளுக்கும், புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களினால் தமது நாட்டில் அரசியல் நடத்தும் சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் சனல்-4 வெளியிட்டுள்ள இதுபோன்ற போலி ஒளி நாடாக்கள் மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் நாட்டில் வாழும் மக்களுக்கும் இதில் துளியளவும் உண்மை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த விடயம். நமது நாட்டிற்கு வீண் பழியைச் சுமத்துவதற்காக மேற்கொள் ளப்படும் நாடகம் இதுவென்று நன்கு தெரியும். இதனை வெளியிடுபவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுவதன் மூலமாக தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொள்வதுடன் ஊடகத்துறையையும் அவமதிக்கிறார்கள்.

இறுதி யுத்தத்தை மையமாக வைத்து சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டதொரு திரைப்படத்தைப் பார்த்தால் அது நிஜமாகவே யுத்தம் நடைபெற்றபோது நேரடியாக எடுத்தது போலத் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தளவிற்கு எமது நாட்டிலேயே தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒளிநாடாவைத் தயாரித்த பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் அதிகம் விளக்கத் தேவையில்லை.

யுத்தம் நிறைவடைந்து படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்த சுமார் பன்னிரண்டாயிரம் புலி உறுப்பினர்களில் இசைப்பிரியா இருக்கவில்லை என்பதை இராணுவத் தரப்பு தெளிவாகக் கூறியுள்ளது. இசைப்பிரியாவை விடவும் புலிகளின் இராணுவப்பிரிவில் இருந்த பல முக்கியஸ்தர்களையே படையினர் கைது செய்து காப்பாற்றிப் புனர்வாழ்வளித்து இன்று விடுதலையும் செய்துள்ளனர். இவ்வாறு இசைப்பிரியா கைது செய்யப்பட்டிருப்பின் நிச்சயம் அவரும் விடுவிக்கப்பட்டிருப்பார்.

எனவே சனல் - 4 அல்லது இதுபோன்ற ஏனைய ஊடகங்கள், ஊடக தர்மத் திற்கு இசைவாக உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். வெறு மனே எவரோ தரும் பணத்திற்கும், சலுகைகளுக்குமாக இதுபோன்ற பொய்யான செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. நாட்டிற்குச் சவாலாக இருந்த பயங்கரவாதத்தையே அரசாங்கம் யுத்தம் நடத்தி இல்லாதொழித்தது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் இருந்த காலத்தில் எத்தனையோ பொதுமக்கள், படைவீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பட்டோர் அப்புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் வதை முகாம்களில் பலர் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். சிறு சிறு குற்றங்களைப் புரிந்த பலர் ஈவிரக்கமின்றிச் சுடப்பட்டு மின்சாரக் கம்பங்களில் கட்டிவிடப்பட்டனர். கல்வி கற்கக் கூடிய சிறார்கள் பலர் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனைக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர்.

எனவே சனல் - 4 உண்மையான ஊடகம் என்றால் புலிகளில் இந்த உண்மையான அராஜகங்களையே முதலில் வெளிக்கொணர வேண்டும். இவற்றிற்கு தமிழ் மக்களிடையே உண்மையான சாட்சியங்கள் உள்ளன. இதைவிடுத்து நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அமைதியும், சமாதானமும் திரும்பியுள்ள நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனையக் கூடாது என்பதே எமது கருத்தாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com