Contact us at: sooddram@gmail.com

 

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் பொன்விழா

1959 ஆம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி டி. பி. ஜயா அவர்களால் ஒஸ்மானியா கல்லூரியின் அத்திவாரக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்கள். அந்தக்காலத்தில் பெரிய தனவந்தரான வி. எம். எம். எஸ்.அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் பணங்கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் இக்குழுவிற்கு தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் யாழ் மாநகர மேயர், வழக்கறிஞர் குவாஸி, ஏ. எம் சுல்தான், கிராம விதானையார் எஸ். ஏ. றஸீன் ஆகியோரும் அயராது பாடுபட்டனர்.1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி யாழ். முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்னாள். அந்த நாள் அன்றுதான் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் எமது கல்லூரியயை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

அத்திறப்புவிழாவின் போது டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரலி) அவர்களை நினைவுபடுத்தி 'ஒஸ்மானியாக் கல்லூரி'என்ற நாமத்தை சூட்டினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை எமது கல்லூரி 'ஒஸ்மானியாக் கல்லூரி' என்ற பெயருடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது.

ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தும் முதன் முதலில் ஜனாப் சீ. எம். எ. ஜிப்ரி அவர்கள் அதிபர் பதவி வகித்தார் கள். அதிபர் உட்பட ஏழு ஆசிரியர்களும் நியமனம் பெற்றனர். திரு. ஆசாரியஸ் பெர்னாந்து, திரு. பொ. சிவஞானசுந்தரம், திரு. எஸ் ஸ்ரீ தர்மநாதன், ஜனாப் எம். யூ. ஏ. கை யூம், ஜனாப் எம். ஐ. எம்.சாபி, ஜனாப் எம். ஸீ. சலீம் ஆகியோர் ஆசிரி யர்களாக நியமனம் பெற்றனர். சில மாதங்கள் சென்றபின் கல்லூரிக் கீதமும் தயாராகிவிட்டது. கவித்துவபுலமைமிக்க ஆசிரியர் திரு. 'ஆசாரியஸ் பெர்னாந்து 'அவர்கள் கல்லூரி கீதத்தை இதமாக இயற்றிக் கொடுத்தார்கள். இந்தியாவின் தேசிய கீத மெட்டிற்கு அமைவாக 'வளர்கலை மாமதி யோடிளந் தாரகை வானக மேலொளி மல்க'என்று அமைக்கப்பட்டிருந்தது.

01-02-1964 முதல் ஜனாப் எம்.எம். யூ. ஸுப் அவர்கள் புதிய அதிபராக நியமனம் பெற்றார்கள். இவரின் பதவிக்காலத்தில் பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றன.

முதன் முதலாக இவரின் பதவிக்காலத்திலேயே பச்சையும் வெள்ளையும் கலந்த கல்லூரிக்கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் கல்லூரியின் இலச்சினையும் ஒ. எஸ். எம். ஏ. கபூர் ஆசிரியரால் வரைவாக்கம் செய்யப்பட்டது. எதிர்கால விளையாட்டு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இக்பால், ரபி, அலி ஆகிய இல்லங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிற்பாடு கஸ்ஸாலி இல்லமும் இணைத்துக்கொள்ளப்பட்டது. 01-02-1967 முதல் ஜனாப் எம்.எம். அப்துல் குத்தூஸ் அவர்கள் அதிபர் பதவி வகித்தார்கள்.

30-06-1974இல் ஜனாப் ஏ. எச். ஹாமீம் அவர்கள் அதிபர் பதவியை ஏற்றார்கள்.

03-04-1980ல் ஜனாப் எம். ஏ. ஆர். ஏ. றஹீம் அதிபர் பதவியேற்றார். 30-06-1982ல் மீண்டும் ஜனாப் ஏ. எச். ஹாமீம் அவர்கள் அதிபர் பதவியேற்று கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார்.1990 முதல் 2003ஆம் ஆண்டுவரை நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக ஓஸ்மானியாக் கல்லூரி மூடப்பட்டிருந்தது. இது கவலைக்குரிய விடயமாகும்.

22-09-2003ஆம் ஆண்டில் எம்.எஸ்.ஏ.எம். முபாரக் மௌலவி அவர்கள் அதிபர் பதவி யேற்றார்கள்ஓஸ்மானியா கல்லூரியானது பொன் விழா காணும் இச் சந்தர்ப்பத்தில் அதிபர் எம்.எஸ்.ஏ.எம். முபாரக்கின் ஆலோசனையின் பேரிலும் யாழ் மாநகர சபை பிரதிமேயர் சட்டத்தரணி எம்.எம். ரமீஸின் முயற்சியாலும் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் சரித்திரத்தில் முதன் முதலாக விடியலாக பெண்களுக்கான அரபுக் கல்லூரியான அல்-ஹம்திய்யா மகளிர் அரபிக் கல்லூரி'' கடந்த 25-10-2013 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதனையும் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாலை நேர வகுப்பும், ஏணையவர்களுக்கு பகல் நேர வகுப்பும் நடைபெறுகிறது.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பொன் விழா நிகழ்வு அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கல்விக் கண்காட்சி,பொன்விழா மலர் வெளியீடு, கௌரவிப்பு நிகழ்வு, பழைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வசிக்கும் பழைய மாணவர்களும் வரவழைக்கப் படவுள்ளனர். கல்விக் கண்காட்சியின் ஓர் அங்கமாக யாழ். முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு, மூதாதையர்களின் புகைப்படங்கள், சரித்திர குறிப்புகள், கல்வெட்டுக்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பொன்விழா காணும் எமது ஒஸ்மானி யாக் கல்லூரி மென்மேலும் வளர்ந்து முஸ்லிம் சமுதாயத்தில் தலைசிறந்த கல்லூரியாகத் திகழ்ந்து வைரவிழா, நூற்றாண்டு விழா போன்ற பல விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.

எப். எம். இக்பால்

யாழ்ப்பாணம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com