Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் நல்லிணக்கத்துக்கான வடக்குப் பாதை

மக்களின் மரபுக்கு வடபகுதி மக்களின் பணிவு

ஆரவார மசiளாயெ மக்களின் மரபை காட்டும் சுய அறிவிப்புக்கான வாசலைக் காட்டியதற்காக வட மாகாண மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன், இந்நாட்டில் அப்படிச் செய்த ஒரே மாகாணம் இதுதான், அது நாட்டில் ஜனநாயகத்தை மீள நிறுவுவதற்கான ஒரு மெல்லிய நம்பிக்கை ஒளிக்கீற்று. நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) ஒரு விசிறி இல்லை என்றாலும், வட மாகாணசபை தேர்தலில் அது பெற்ற நாடளாவிய வெற்றியை நான் முழமனதுடன் வரவேற்கிறேன்,

வெற்றியின் மமதையை தவிர்த்தல்

எனினும் அது ஒரு நீண்ட நெடுஞ்சாலையின் ஆரம்பம் மட்டுமே. ரி.என்.ஏ இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி எல்.ரீ.ரீ.ஈ செய்ததைபோல, சந்திரனையும் சு+ரியனையும் கேட்டு அதை விரயமாக்கி விடக்கூடாது, 1985 (திம்பு பேச்சு வார்த்தை) முதல் 2009 (உள்நாட்டு யுத்த முடிவு) வரையான 25வருட காலத்துக்குள் எல்.ரீ.ரீ.ஈக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு ஒற்றைச் சந்தர்ப்பத் தையும் அது இப்படித்தான் வீணாக்கியது. தமிழ் சமூகமானது விடுதலையில் மறைமுக நாட்டம் கொண்டிருக்கையில், ரி.என்.ஏ யும்கூட கடந்த காலத்தை ஒதுக்கிவிடக்கூடாது, மற்றும் வடமா காண மக்களிடமிருந்து முன்னெப்போதும் இல்லா தவாறு மிகப்பெரிய ஆணை கிடைத்துவிட்டது என்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. 2013ல் ரி.என்.ஏ பெற்றுள்ள ஆணை அதன் முன் னோடியான த.தே.கூ 1977 பாராளுமன்றத் தேர் தல்களில் பெற்றதைக் காட்டிலும் அதிகம். (இந்த எழுத்தாளரின் ‘’சிறுபான்மை இனத்தவர்கள் இனி இல்லை’’ என்கிற கற்பனைக் கதையை வாசிக்கவும்).

உண்மையான அரசியல் தலைவர்கள் வெற்றி யில் பெருந்தன்மையுடனேயே இருக்கவேண்டும், இந்த எழுத்தாளர் இந்த பெருந்தன்மையைத்தான் வடக்கு மாகாணத்தின் முதலாவது முதல மைச்சராக ஆகியிருப்பவரிடம் தற்போது எதிர் பார்க்கிறார். இத்தகைய வரலாற்று வெற்றியின் பின்பும் அத்தகைய பெருந்தன்மையை வெளிக் காட்டுவது தமிழ் சிறுபான்மை சமூகத்தினரது நேருக்கு நேரான அரசியல் அபிலாசைகளையின் நெறிமுறைகளை உயர்த்திக்காட்ட உதவும்.

வடக்கின் உண்மை மற்றும் நல்லெண்ண ஆணைக்குழு

சுயாட்சி உரிமைகளைப்போலவே பொறுப்புக ளும் வந்து சேரும். முதலாவதாக வடக்கு மாகா ணசபை, வடமாகாணத்தில் உள்ள சிறுபான்மை யினரான முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தி னருடன் ‘’விடுதலைப் போராட்டம்’’ என்றழைக் கப்படும் விடயத்தின்போது அவர்களுக்கு இழைக் கப்பட்ட அநீதிகளுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் சமூகம் தேசிய அள வில் சம அந்தஸ்தை கோருகிறதென்றால், வடக் கில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் சமூகம், முன்னுதாரணமாக வடக்கிலுள்ள ஏனைய சிறுபா ன்மை சமூகங்களுக்கும் சம அந்தஸ்ு வழங்க வேண்டும். தமிழ் சிறுபான்மை சமூகம், இனக்கல வரம் மற்றும் உள்நாட்டு யுத்தங்களின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு தேசிய அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கோருமானால், வட மாகா ணத்தில் உள்ள தமிழ் பெரும்பான்மை சமூகம், வடக்கில் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், விசேடமாக முஸ்லிம் சமூகத்துக்கு.

வடக்கில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாணசபைக்கு வடக்கில் நடந்தவைகளைப் பற்றி விசாரணை செய்ய வடக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றுக்கான அரசியல் யாப்பு நிறுவ வேண்டியது அவசியம். உதாரண மாக 1985ல் அனுராதபுரத்தில் பொதுமக்களை கொன்றது, உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த பொது மக்களின் கொலைகள், 1991இல் வட மாகா ணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை திரளாக வெளியேற்றியதுடன் அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் மற்றும் உடமைகளையும் கையகப்படுத்தியது, 1985ல் சென். ஜோன்ஸ்; கல்லூரி அதிபர் திரு. ஆனந்தராஜவில் ஆரம்பித்து 1989ல் யாழ்ப்பாண பல்கலைக்க ழகத்தை சேர்ந்த கலாநிதி ரஜனி திரணகம, 1999ல் கலாநிதி நீலன் திருச்செல்வம், 2006ல் திரு. கேதீஸ்வரன் லோகநாதன் வரையான அறிவாளிகள் கொல்லப்பட்டது போன்ற அனைத்தையும் விசாரிக்க வேண்டும். மேலே கூறப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே அதை இன்னும் விரி வாக்கலாம்.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் இழப்புக்காக தமிழ் சமூகம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணையை கோருமானால், அதே தமிழ் சமூகம், உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் அந்தப் பிராந்திய சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் மீதான தேவையற்ற கொலைகளையும் மற்றும் தனது சொந்த சமூகத்தை சேர்ந்த அறிவஜீவிகளின் தேவையற்ற கொலைகளைப் பற்றியும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வடமாகாண சபை மூலம் விசாரணை நடத்தவேண்டியது இன்றிய மையாததாக உள்ளது. சம வாய்ப்புள்ள சட்டம்

தகுதி அடிப்படையிலான பொது நிர்வாக ஆட்சி, பொதுமக்கள் மற்றும் தனியார் முடிவெடுக்கும்; திறன், மகாணத்தில் பெருநிறுவன ஆட்சி போன்றவற்றை உருவாக்குவதற்காக, வட மாகாணத்தில் ஒரு சம வாய்ப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். உத்தேச சம வாய்ப்புகள் சட்டம், சாதி , மாற்றுத்திறன், இனம், பாலினம், பிராந்திய தோற்றம், மற்றும் மதம் போன்றவை காரணமாக உருவாகும் பாகுபாடுகளை இல்லாமல் செய்துவிடும்.

இந்த பின்பற்றத்தக்க சட்டமூலம் ஏனைய மாகாண அரசாங்கங்களுக்கும் மற்றும் நாட்டி லுள்ள தேசிய அரசாங்கத்துக்கும் வேற்றுமை கரு தாது பின்பற்றத்தக்க மதிப்புள்ள ஒரு முன்மாதிரி யாக இருக்கும்.

மொழிச் சமத்துவம்

தமிழ்மொழியானது நாட்டின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்படவேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ் சமூகம் தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து கோரி வருகிறது. இப்போது வட மாகாணத்துக்கும் அதன் சொந்த சிறுபான்மை சமூ கமான சிங்கள சமூகத்துக்கும், வடக்கில் சிங்கள மொழியை பயன்படுத்துவது தொடர்பாக சம அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு வந் துள்ளது.

உதாரணமாக, ரி.என்.ஏ யின் நிருவாகத்திலுள்ள பருத்தித்துறை நகரசபை பகுதியிலுள்ள வீதிப் பெயர் பலகைகள் ஆங்கிலம், சிங்களம்,மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலுமுள்ளன, இது வரவேற்கத்தக்கது. எனினும் ரி.என்.ஏ யின் நிருவாகத்திலுள்ள வல்வெட்டித்துறை நகரசபை பகுதியிலுள்ள வீதிப் பெயர்பலகைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளன. பிராந்தியத்திலுள்ள சிறுபான்மையினரது மொழியை பயன்படுத்துவதில் ஏன் இந்தப் பாகுபாடு? இத்தகைய விடயங்களில் ரி.என்.ஏ பொதுவான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும், எனவேதான் ரி.என்.ஏ யின் நிருவாகத்திலுள்ள சகல உள்ளுராட்சி அமைப்புகளும் அதே பொதுவான கொள்கைகளைப் பின்பற்றும்.

தனியார் சொத்துக்களுக்கு சட்டவிரோதமான ஒதுக்கீடு

இலங்னை இராணுவம் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் (1996ல் இராணுவம் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ இடமிருந்து மீள நிலையாட்டியது முதல்) மற்றும் வன்னி பிரதான நிலப்பரப்பு ஆகியவற்றில் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள தனியார் வீடுகள், சொத்துக்கள், மற்றும் காணிகள் என்பனவற்றை காலி செய்யும்படி ரி.என்.ஏ கோரி வருகிறது. ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக வஞ்சகமான முறையில் ரி.என்.ஏ யின் அரசியல் கூட்டு கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பன வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தனியார் வீடுகளையும் நிலங்களையும் கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதுடன் இன்றுவரை அதை தொடர்ந்து செய்து வருகின்றன. ரி.என்.ஏ தான் போதிப்பதையே பின்பற்றவேண்டும், எனவே இராணுவத்துக்கு ஒரு தார்மீக முன்மாதிரியாக ரி.என்.ஏயின் கூட்டு அரசியற் கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் வீடுகள் நிலங்கள் என்பனவற்றை காலி செய்து உடனடியாக அதை சட்டபூர்வ உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் (இப்போது அவர்கள் வெளிநாட்டிலிருந்தாலும் கூட)

அபிவிருத்தி மற்றும் முதலீட்டு முன்னுரிமைகள்

வடக்கின் அபிவிருத்தியில் விசேடமாக வன்னிப்பகுதியின் அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பான முன்னுரிமைகள் ஒருதலைபட்சமாக தவறாக கையாளப்படவில்லை, அபிவிருத்தி விடயத்தில் தமிழ் சமூகம் கூடத்தான் தவறான முன்னுரிமைகளைக் கொண்டுள்ளது. வறுமையான வன்னிப் பெருநிலப்பரப்பு உட்பட வடக்கு முழுவதும், மத வழிபாட்டுத் தலங்கள், விசேடமாக இந்து ஆலயங்கள் யாவும்,தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் நிதி அனுசரணையுடன் ஆடம்பரமான முறையில் பெரும் பொருட்செலவில் புனரமைக்கப்பட்டு, மீளக்கட்டப்பட்டு, அல்லது மீள அலங்கரிக்கப்பட்டு வருகின்றன, அதே வேளை வன்னியில் வாழும் மக்கள், குப்பை கூளங்களுக்கு இடையில், கழிவறை, சுத்தமானதும் மற்றும் பாதுகாப்பானதுமான நீர், மின்சார வினியோகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமற்ற, தகரத்தால் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட குடிசைகளில் வாழ்கிறார்கள்.

மிருகத் தன்மையான குணம் கொண்ட மக்கள் மத வழிபாட்டுத் தலங்களில் தெய்வீக ஆறுதலை பெறுவதை என்னால் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடிகிறது. இருந்தபோதிலும் அடிப்படை மனிதத் தேவைகள், கவனிக்கப்படாமலும் மற்றும் பூர்த்தி செய்யப்படாமலும் உள்ளபோது, வழிபாட்டு இடங்களுக்கு ஊதாரித்தனமாக செலவழிப்பதில் உள்ள தவிர்க்க முடியாத தார்மீக மற்றும் ஒழுக்க கட்டாயம் என்ன?

வடக்கிலுள்ள மக்களுக்கு விசேடமாக வன்னியில் உள்ளவர்களுக்கு அவசரமாக தேவைப்படுவது வேலை யற்று இருக்கும் இளைஞர்கள் மற்றும் வெகுஜனங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய தொழிற் சாலைகள், மற்றும் பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யக்கூடிய இடங்கள் என்பனவே.

எங்களுடைய மதிப்பீடுகளின்படி, வேலை செய்வதற்கு தகுதியான வயதுடையவர்களில் (15 – 59 வயதானவர்கள்) 27.4 விகிதமானவர்கள் வடக்கில் தானாக விரும்பியோ அல்லது வலுக் கட்டாயமாகவோ வேலையற்று இருக்கி றார்கள், இது நாட்டில் அதியுயர்ந்த வேலையற்றவர்கள் விகிதாச்சாரமாகும் (2012ல் மேற்கொள்ளப்பட்ட தொமிலாளர்கள் சக்தி ஆய்வின்படி, மாகாணத்தில் உள்ள வேலை யற்றவர்கள் தொகையான 123,209 ஐ – 2012 குடிசன மதிப்பீட்டின்படி பெறப்பட்ட - மாகாணத்தில் உள்ள வேலை செய்ய தகுதியான வயதுடையவர்களின் எண்ணிக் கையான 450,000 ல் வகுத்து 100 ல் பெருக்கி இந்த விகி தாச்சாரம் பெறப்பட்டது).

மேலும், நிதி தேவைப்படும்போது, வடக்கிலுள்ள பல்வேறு விசுவாசத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள் குவித்து வைத்திருக்கும் பாரிய நிதி வளங்கள் மற்றும் பௌதீக சொத்துக்களை வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு திறந்துவிடும் விடயம் பற்றி நான் கடுமையாக விவாதிக்க விரும்புகிறேன். முதலமைச்சர் ஒரு பக்தியுள்ள இந்துவாகவும் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களுடன் பரஸ்பர ஒத்துணர்வையும் கொண்டவராக இருப்பதால், பணக்கார இந்துக் கோவில்கள் வடமாகாணசபையின் அபிருத்தி உந்துதலுக்கு ஆடம்பரமான பங்களிப்பை வழங்கும்படி வற்புறுத்த வேண்டும்.

சாதிக் கணக்கெடுப்பு

வரலாற்று ரீதியாக பெருந்தொகையான வடபகுதி மக்கள் சமூகத்திலுள்ள சாதிப் பிரிவினையின் அடிப்ப டையில் பாகுபாடு, உடமை பறிக்கப்படல், மற்றும் விலக் கப்படல் போன்றவற்றை எதிர்கொள்வது, தமிழ் சமூகத்தை பலவீனமடையச் செய்கிறது. எனவே சமூக வரையறை யிலிருந்து கணிசமானளவு விகிதமான தமிழ் மக்களை உயர்த்துவதற்கு எற்ற உடன்பாட்டு கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்காக வட மாகாணத்தில் முதன்முறையாக சாதிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டியது அவசியம். நாட்டிலுள்ள மற்று இன சமூகங்களை ஒத்த அரசியல் சமத்துவத்தை தமிழ் சமூகம் மேம்படுத்த விரும்பி னால்,வடக்கிலுள்ள அதன் சொந்த சமூக மற்றும் பொருளாதார சமூகத்துக்கும் அதே சமத்துவத்தை வழங்க வேண்டும்.

பெண்கள் அதிகாரம்

வட மாகாணத்தில் பெண்கள்தான் பெரும்பான்மையான பாலினம். நாட்டிலுள்ள 25 மாவட்டங்களின் சனத்தொகை யிடையே யாழ்ப்பாண மாவட்டம்தான் தனது சனத்தொகை யில் அதிகளவு பங்காக பெண்களை கொண்டிருக்கிறது. எனவே வட மாகாணப் பெண்களுக்கு மாகாணத்தின் பொருளாதாரம், அரசியல், மற்றும்சமூக இடைவெளிகளில் அவர்களுக்கு உரிய பங்கினை வழங்க வேண்டும். வறுமை மற்றும் வேலையின்மை விகிதங்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பக்கம் பலமடங்கு அதிகமாக இருக்கிறது. தவிரவும் வட மாகாணத்தில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதுடன் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் சமுதாயத்திலி ருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

பாரம்பரிய மரபுவழியான சட்டங்களின் குறிப்பிடத்தக்க சில விதிகள் வட மாகாணத்தில் ஆட்சி செலுத்துகிறது. அதாவது தேசவழமைச் சட்டம் சமூகத்தில் பெண்களின் சமத்துவத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. தேசவழமை சட்டத்துக்கான ஒரு மறுசீரமைப்பு மேற்கொள்வது நீண்ட காலமாக தாமதமாகியே வருகிறது. புதிதாக தெரிவான முதலமைச்சர் ஒரு முன்னாள் ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்ற நீதியரசராக உள்ளதால் அவரைத்தவிர வேறு எவராலும் பாரம்பரிய சம்பிரதாயங்களை மறுசீரமைப்பு செய்வதில் சிறப்பாக கடமையாற்ற முடியாது.

புலம்பெயர் பத்திரங்கள்

அரை மில்லியனுக்கும் மேற்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் புலம் பெயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா தேசங்களில் பரந்து வாழ்கிறார்கள், வடக்கு மாகாணசபை இவர்களிடமிருந்து மனிதவள மற்றும் நிதி முதலீடுகளை கவருவதற்கு முயற்சி செய்யவேண்டும்.

புலம் பெயர்ந்தவர்களின் பத்திரங்கள், இறையாண்மை மிக்க பத்திரங்கள் அவர்கள் புலம் பெயர்ந்துள்ள நாடுகளின் அரசாங்கங்களால் அவர்களின் சொத்துக்களை புரவலர் நாடுகளிடம் செல்லும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டவை. இந்தியா, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து பெரும்பாலான மக்கள் புலம் பெயர்ந்து சென்று பணக்கார நாடுகளில் வசிக்கிறார்கள் அத்தகைய அநேக நாடுகளின் இறையாண்மை உள்ள அரசாங்கங்கள் இந்த புலம் பெயர் பத்திரங்களை நீண்டகால வரி சேகரிக்கும் பொறிமுறை யாக பயன்படுத்தி வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய அரசாங்கம் அதன் முதல் புலம்பெயர் பத்திரங்களை 1951ல் அறிமுகப்படுத்தியது ஒருவேளை இதைத்தான் அவ்வகை யான முதல் முயற்சி என லாம்.

இலங்கை அபிவிருத்திச் சபையும்கூட கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கியினூடாக புலம் பெயர் ஸ்ரீலங்கா வாசிகளை முதன்மைப்ப டுத்தி (முற்றாக அல்ல) இத்தகைய பத்திரங் களை மிதக்கவிட்டுள்ள போதி லும் பல்வேறுவிதமான காரண ங்களினால் குறிப்பிடத் தக்க அளவுக்கு அதன் திறன் பயன்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்தின் வரி அறவீட்டை அதிகரிக்கும் பொறிமுறைகளில் ஒன்றான இலங்கை அபிவிருத்திச் சபையின் பத்திரங்களின் வரையறைகளில் ஒன்று அது விசேடமாக இலங்கையின் திட்டங்களுக்கோ அல்லது குறிப்பிடத்தக்க பிரதேசங்களுக்கோ கட்டுப்பட்டது அல்ல.

வடக்கு மாகாணசபை, நிதியமைச்சின் வெளி வள திணைக்களத்தின் ஒத்துழைப்போடு, தனித்துவமான திட்டங்களுக்கோ அல்லது தனித்துவமான புவியல் பகுதி யின் அபிவிருத்திக்கு வேண்டியோ புதுமையான புலம்பெயர் பத்திரங்களை வெளியிடவேண்டும், இந்த குறிப்பிட்ட திட்டங்களுடன் புலம்பெயர் குழுக்கள் உணர்வுபூர்வமான ஒரு பிணைப்பை கொண்டிருக்குமானால் அது இன்னமும் சிறப்பான வரவேற்பை பெறும். உதாரணமாக ஒரு விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை அல்லது உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றிற்கு அத்தகைய புலம்பெயர் பத்திரங்கள் வழியாக நிதி பெறுவதை இலக்கு வைப்பதாக இருந்தால், குறிப்பிடத்தக்க அந்த புலம்பெயர் மக்கள் குறிப்பிட்ட அந்தத் திட்டத்துடனோ அல்லது புவியல் சார்ந்த அந்தப் பிரதேசத்துடனோ ஒருவித மானசிக பிணைப்பை கொண்டவர்களாக இருந்தால் அது சுலபத்தில் நிறைவேறும்.

எதிர்பார்ப்புகள்

கடந்த காலத்திலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு எதிர்காலத்தை பற்றி கற்பனை செய்வதை எதிர்நோக்கும் தருணம் இது. எதிர்காலத்தை பற்றி முக்கிய சுயவிமர்ச னங்கள் மற்றும் சுயபரிசோதனைகள் செய்துகொள்ளவது அதன் பங்களிப்புக்கு இன்றியமையாதாக உள்ளது. வடக்கு மாகாணசபை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான நியாயமான பாதையை காட்டுவதுடன் மற்றும் நிச்சயமாக அபிவிருத்தியை எமது தேசிய அரசாங்கத்துக்கும் செய்து காட்டவேண்டும், அதுதான் இந்த எழுத்தாளனின் சிரத்தையுள்ள நம்பிக்கையும் விருப்பமும் ஆகும்.

(முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்(பி.எச்.டி வேல்ஸ்,எம். எஸ்.சி பிறிஸ்டல்,எம்.எஸ்.சி சல்போர்ட், பீ.ஏ.ஹானர்ஸ் டெல்லி) பருத்தித்துறையை சேர்ந்தவர், தொழில் ரீதியாக அபிவிருத்தி பொருளியலாளராக உள்ளார்,

மற்றும் வடமாகாண பருத்தித்துறையில் உள்ள பருத்தித்துறை அபிவிருத்தி நிலையத்தின் பிரதான ஆய்வாளராக உள்ளார்.)

முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன்

(பி.எச்.டி வேல்ஸ்,எம்.எஸ்.சி பிறிஸ்டல்,எம்.எஸ்.சி சல்போர்ட், பீ.ஏ.ஹானர்ஸ் டெல்லி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com