Contact us at: sooddram@gmail.com

 

நீரிழிவு அலட்சியப்படுத்தும் வியாதியல்ல

உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்கள் மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வருடாந்தம் பல மில்லியன் பேர் இந்நோய்களால் மரணமடைகின்றனர். தொற்றா நோய்களில் ஒன்றான நீரிழிவு நோயானது இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இருதய நோய், புற்று நோய் போன்றவைக்கு அடுத்ததாக ஆபத்தான மூன்றாவது நோயாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் 170 மில்லியன் பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். முன்பு நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கிய இந்நோய் தற்போது பத்து வயது சிறார்களைக் கூடத் தாக்க ஆரம்பித்துள்ளது. நீரிழிவு நோய் என்பது ஒரு நோயே அல்ல. கணையச் சுரப்பி ஒழுங்காகச் செயற்பட்டுப் போதிய அளவு இன்சுலினை சுரக்காமை, சுரக்கப்பட்ட இன்சுலினை உடல் ஏற்று முறையாக இரத்தத்திலுள்ள சீனியை எரித்துச் சக்தியாக மாற்றாமை காரணமாக இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்கும் நிலையே நீரிழிவு எனப்படுகிறது.

இலங்கை சனத்தொகையின் பத்துப் பேரில் ஒருவர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளார். சுமார் 50 சதவீதமான நீரிழிவு நோயாளர்கள் இந்நோய் ஏற்பட்டு முற்றிய நிலையிலேயே தம்மிடம் நோய் இருப்பது பற்றித் தெரிய வருகின்றனர். எவ்வித அறிகுறிகளுமின்றி மெதுவாகத் தாக்கும் இந்நோயை மெளனமான கொலையாளி என்று அழைக்கின்றனர். 10 சதவீதமான நீரிழிவு நோயாளிகள் கிராமப்புறங்களிலும் 15 சதவீதமானோர் நகரப்புறங்களிலும் காணப்படுகின்றனர். இந்நோய் தடுக்கக்கூடியதொன்றாகும். ஆரம்ப கட்ட எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே உரிய சிகிச்சை அளித்தால் நோய் ஏற்படாது தடுக்க முடியும்.

ஒரு இயந்திரம் இயங்கத் தேவைப்படும் சக்தி எரிபொருள் மூலம் பெறப்படுகிறது. மனித இயந்திரம் இயங்க சக்தி உணவு மற்றும் காற்று மூலம் கிடைக்கிறது.

நாம் உட்கொள்ளும் உணவு முக்கியமாக மாச்சத்து சமிபாடு அடைந்து கடைசியாக சீனியாக மாற்றம் பெறுகிறது. கனையச் சுரப்பியால் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹோர்மோன் இச்சீனியை எரித்துச் சக்தியாக மாற்ற உதவுகிறது. சீனி எரிக்கப்படாமல் இரத்தத்தில் தேங்கி விடும் நிலையே நீரிழிவு என்பதாகும். இன்சுலின் சீனி கலன்களைச் சென்றடையவும் இரத்தத்தில் சீனியின் அளவைச் சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.

அதிக அளவு சீனியை வைத்திருக்க சிறுநீரகத்தால் முடியாததால், சீனி வடிகட்டப்பட்டுச் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சீனியிலிருந்து சக்தியைப் பெற முடியாத நிலையில் உடல் சேமிப்பிலுள்ள கொழுப்பிலிருந்து சக்தியைப் பெற முயற்சிக்கும். இவ்வாறு செய்யும் போது உடலுக்குத் தீங்கிழைக்கும் அசிடோன் போன்ற வாயுக்கள் உருவாகின்றன. இவை அதிகரிக்கும் போதுதான் மயக்க நிலை ஏற்படுகிறது.

பல்வேறு காரணங்களால் சீனி எரிக்கப்படாத போது, அது இரத்தத்தில் தேங்கி நிற்கும். இவ்வாறு நீண்டகாலம் தேங்கியிருந்தால் உடலிலுள்ள பெரும்பாலான உறுப்புகள் பாதிக்கப்பட்டு பல நோய்கள் ஏற்படுகின்றன.

இரத்தக் குழாய்கள் தடிப்பது காரணமாக இரத்தோட்டத்தில் தடை ஏற்பட்டு இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம் மற்றும் கண்களிலுள்ள மிகவும் மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் முறையே சிறுநீரகச் செயலிழப்பு, கண்பார்வை இழப்பு ஏற்படுகின்றன.

நரம்புகள் பாதிக்கப்படுவதால் கண்பார்வை நரம்பு பாதிப்பு, ஆண்மைக் குறைபாடு, கை, கால்களை இழுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் நீரிழிவு நோய்க்கும் அதன் காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க அரசினால் கோடிக்கணக்கான ரூபா பணம் செலவிடப்படுகிறது.

இது ஒரு தொற்று நோயல்ல. இந்நோயை ஏற்படுத்தும் துல்லியமான காரணி என்னவென்று மருத்துவத் துறையால் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் மரபுவழி வயது, மன அழுத்தம், அதிகரித்த உடற் பருமன், அதிகரித்த எடை, உடற் பயிற்சியின்மை, சன நெரிசல் நிறைந்த சூழலில் வாழ்தல், நகர வாழ்க்கை, வைரஸ் கிருமி தொற்று, அதிக அல்லது குறைவான உறக்கம், பயம், மித மிஞ்சிய தாம்பத்ய உறவு, பரபரப்பு, அதிக இனிப்பு, இளம் வயதில் ஆரோக்கியமற்ற துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளல், அதிகரித்த கொலொஸ்ரோல், புகைத்தல், அதிக மதுபாவனை, உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை, வேலைச்சுமை, சொகுசு வாழ்க்கை போன்றவை நீரிழிவு நோய் ஏற்படுத்தலை ஊக்குவிக்கும். இவற்றில் ஏதாவது மூன்று நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள ஏனையோரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தகப்பன் அல்லது தாய்க்கு மட்டும் இந்நோய் இருந்தால் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் சற்றுக் குறைவு. இருவருக்குமிருந்தால் இந்நோய் ஏற்படும் அபாயம் மிக மிக அதிகம்.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் முதுமையும் ஒன்றாகும். வயது போகப் போக இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும்.

80 சதவீதமான நீரிழிவு நோயாளர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள். முதுமையின் போது உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடு மந்த கதியில் நடைபெறல், உடல் உழைப்பின்மை சூரிய ஒளிபடாமை போன்றவை காரணமாக உடற்பருமன் அதிகரிக்கும். அதிகரித்த உடற்பருமனால் கணையச் சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடைப்பட்டு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் மனவெழுச்சியால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவை கூட நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளாகும். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை கணையச் சுரப்பியைப் பாதிப்பதால் போதிய அளவு இன்சுலின் சுரக்கப்படாததால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பரபரப்பு, கடுந்துயர், மன உளைச்சல், கவலை போன்றவை இரத்தத்தில் சீனியின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் முதன்மைக் காரணிகளுள் உணவு முறையும் ஒன்றாகும். உடல் சீராக இயங்கத் தேவையான சக்தியைக் கொடுக்க சரியான அளவு நிறை உணவு மிகவும் அவசியம். ஆரோக்கியமற்ற உணவு அல்லது போதிய உணவின்மை இந்நோயை ஏற்படுத்தும். மாச்சத்து, புரதம், கொழுப்பு, இனிப்பு அடங்கிய உணவுகளை அதிகமாக உட்கொண்டால் கணையச் சுரப்பியால் இன்சுலின் சுரக்கப்படுவது தடைப்படும். இதனால் இந்நோய் ஏற்படும். துரித உணவு கழிக்கப்பட்ட உணவு, பாண், கேக், சொக்கலேட், விஸ்கோத்து, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகமாகவும் நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவும் உட்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

அதிகரித்த உடற்பருமனும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாகும். அதிகரித்த உடல் எடை உடலில் அதிகளவு கொழுப்புச் சேர உதவுகிறது. இது இன்சுலினின் செயல்திறனைப் பாதிக்கும். அதிகரித்த கொழுப்பு இன்சுலின் சீனியை எரித்துச் சக்தியை ஏற்படுத்தும் திறனைத் தடுக்கும். இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் மற்றுமொரு காரணி போதிய உடற் பயிற்சியின்மையாகும். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை நீண்ட நேரம் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கணனி முன் உட்கார்ந்து இருத்தல், தொடர்ந்து உட்கார்ந்து இருந்து கொண்டு தொழில் புரிதல் போன்றவை அதிகரித்த உடற்பருமனை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும்.

வைரஸ் கிருமிகளின் தொற்றினாலும் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது எனச் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் கிருமிகள் கணையச் சுரப்பியில் தொற்றை ஏற்படுத்தி அதனினுள் உள்ள இன்சுலினைச் சுரக்கும் பீட்டா கலன்களை அழித்து விடுகின்றன. இதனால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்பட்டு இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பம், சில வீரியமிக்க மருந்துகள், கணையச் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் போன்றவையும் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் அரிதான காரணிகளாகும்.

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரத்தப் பரிசோதனை மூலம் சீனியின் அளவை அறிந்து கொண்டால் ஆரம்பகட்ட நீரிழிவை உணவு மற்றும் உடற் பயிற்சி யோகா மூலம் குணப்படுத்தி ஊர்ஜிதம் செய்யப்பட்ட நீரிழிவு ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இரத்தத்தில் மற்றும் சிறு நீரகத்தில் சீனியின் அளவு அதிகரித்துக் காணப்படும் போது அடிக்கடி சிறுநீர் கழித்தல்,

அதிக பசி, தாகம், கண் வலி, கண்பார்வை மங்குதல், ஜனநேந்திர உறுப்புகளில் அரிப்பு, பலவீனம், சோர்வு, வியர்வை, இதயப்படபடப்பு, உடல் எடை குறைதல் போன்ற நீரிழிவு நோயின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் தென்படும். எனினும், நோய் முற்றிய நிலையில் தலைவலி, குமட்டல், வாந்தி, கண் நோய்கள், நடுக்கம், தலைச் சுற்று, தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மிகவும் முற்றிய நிலையில் மயக்க நிலை ஏற்படும் அபாயமும் உண்டு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com