Contact us at: sooddram@gmail.com

 

ஹரீன் – செந்தில் தொண்டமான் - உள்ளாடை விவகாரம்

நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. ஹரீன் பெர்னாண்டோ தனது வாதத்தின்போது, “இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கடந்த ஐந்து வருட காலமாக எந்த அபிவிருத்தி வேலையும் செய்யவில்லை. ஐ.தே.கட்சியே எதிர்க்கட்சியிலிருந்து அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது” என தெரிவித்திருக்கிறார்.

இதனை இடைமறித்து பேசிய இ.தொ.கா. உறுப்பினர்கள், 5 வருடகாலமாக தங்களால் தங்களின் தேர்தல் இலக்கத்தைப் பொறித்த ஜெக்கெட்டுக்களை மட்டுமே தோட்ட மக்களுக்கு கொடுக்க முடிந்துள்ளது எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு ஹரீன், ஜெக்கெட் மட்டுமல்ல உள்ளாடைகளையும் கொடுப்பேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார். இதனையடுத்து கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய இ.தொ.காவினர் ஹரீனின் பேச்சை பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். வெளியேறுவதற்கு முன்னர், “தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க தோட்டங்களுக்கு சென்றபோது உள்ளாடை வாங்கிக் கொடுப்பேன் என்றா வாக்கு கேட்டீர்கள். இவரது பேச்சு எமது சமூகத்தினை கேவலப்படுத்தியுள்ளது. ஊவா மாகாணத்தின் தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களான நாங்கள் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஏழை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை. ஆனால், நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை.” – இவ்வாறு தன்மானத்துடன் பேசிவிட்டுதான் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
சரி, ஹரீன் மலையக மக்களை இழிவுசெய்யும் வகையில் பேசினாரா? இல்லையா என்பதை ஆய்வு செய்வதை விடுத்து, இது பற்றி பேசுவதற்கு இ.தொ.காவினருக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது கட்சி பாராமல் தேர்தல் சட்டவிதிகளை மீறி லஞ்சமாக பல்வேறு வகையான பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. மின்சாரப் பாவனைப் பொருட்கள், வீட்டு கூரைக்கான தகரம், பணம், பாடாசாலைப் பொருட்கள், மருந்து வகைகள், உடைகள், மதுபானம் என வாரி வாரி வழங்கப்பட்டன. அரச தரப்பே அதிகமாக தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தெரிவித்திருந்தன.
இதில், முக்கியமாக அப்போது முதலமைச்சர் வேட்பாளராக இருந்த சஷீந்திர ராஜபக்ஷ அரச சொத்துக்களைப் பயன்படுத்தி அப்பட்டமாக விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தார்.
“சொல்வதைச் செய்யும் இல. 15; சஷீந்திர ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு” என பொறிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் அடங்கிய பையொன்றும் சஷீந்திர ராஜபக்ஷவால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துப் பொருட்களோடு பெண்களின் உள்ளாடை ஒன்றும் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது. ஊவா மாகாணத்திலுள்ள விகாரை ஒன்றுக்கு சென்றிருந்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கு விகாரையின் பிரதான பிக்கு, சஷீந்திர ராஜபக்ஷ வழங்கிய பையைக் கொடுத்து தனக்கும் பெண்களின் மார்புக் கச்சை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆக, “உள்ளாடையும் கொடுப்பேன்” என தெரிவித்தமைக்கே மலையக மக்கள் மீது அக்கறைக் கொண்டவர்களாக வீர வசனம் பேசிவிட்டு வெளிநடப்பு செய்த உங்களால், ஏன் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை. ஏன்? அவர் கொடுப்பதால் மலையக மக்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்களோ? அவர் வழங்கியது விலை உயர்ந்த உள்ளாடையோ?

மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது – கேவலப்படுத்துவது வேறு யாருமல்லர். அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போராடுகிறோம் எனகட கூச்சலிடும் நீங்கள்தான் அவர்களை மரியாதையாக நடத்துவதில்லை.
பண்டாரவளையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற இ.தொ.காவின் மேதினக் கூட்டத்தின்போது மலையக மக்களின் பிரதிநிதி எனக்கூறிக் கொள்ளும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடந்துகொண்ட விதத்தை யாவரும் அறிந்திருப்பார்கள்.
அன்று மேதின மேடையில் இருந்த ஊடகவியலாளர் கொழும்பில் இருந்து வந்தவர் அல்ல. அவர் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே. அவர் தனது ஊடகத் தொழிலை செய்யவிடாது அமைச்சர் தள்ளி வீழ்த்தியதை எவ்வாறு கூறுவது? “மலையக சமூகத்தை வழி நடத்த இ.தொ.காவிற்குத் தெரியும்” எனத் தெரிவிக்கும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளர் செய்த இந்த நடவடிக்கைக்கு என்ன சொல்லப் போகிறார்? இதுவா மரியாதையாக நடத்துவதென்பது?

மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?

அண்மையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க பூணாகலை தமிழ் பாடசாலைக்குச் சென்றிருந்த இ.தொ.கவினர், அங்கும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தாங்கள் பெரியவர்கள் என்றவாறு செயற்பட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது. மண்சரிவில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக சேர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக, அரவணைப்பாக தனிப்பட்ட வகையிலும் பேசி, அவர்களை இயல்பு வாழ்க்கைக்குள் கொண்டுவருதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். (அரசியல் மேடை என்று நினைத்தார்களோ?) தாங்கள் மேலானவர்கள் என்ற மமதையுடன் சிறு மக்கள் கூட்டம் நிறைந்திருந்த மைதானத்தின் ஒரு ஓரப்பகுதியில் இருந்த உயரமான இடத்தில் (மக்களிலும் பார்க்க) வரிசையாக ஆணை வழங்குபவர்களாக உட்கார்ந்திருக்க, மண்சரிவில் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த மக்கள் அவர்களுக்குக் கீழ் கையைக் கட்டியவாறு நின்றுகொண்டிருக்கின்றனர். நவீன அடிமைத்தனம் மலையகத்தில் இல்லை என பிபிசிக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தாலும் நடைமுறையில்…?

ஏன் இந்த நடைமுறை? உறவுகளை இழந்த அவர்களை அணைத்து ஆறுதல் அளிக்கவேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு செய்ய மறுக்கிறீர்கள்? இதுவா மரியாதையாக நடத்துவதென்பது?
மலையக மக்களை இழிவுபடுத்துவது யார்?
(நன்றி: மாற்றம்)

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com