Contact us at: sooddram@gmail.com

 

மலையக மக்கள் மீது தமிழ் கூட்டமைப்பு திடீரென கரிசனைகாட்டுவது ஏன்?

ஒரு மனிதன் இறந்துவிடுதல் என்பது அவனின் உறவினர் அயலவர் என்று, பலருக்கும் துன்பகரமான ஒரு சம்பவமாகும். ஆனால், எத்தனை மனிதர்கள் இறந்தாலும் ஒருவனுக்கு மட்டும் கவலைபேற்படாது மாறாக மகிழ்ச்சியே ஏற்படும். ஏனென்றால் அவன் ஒரு சவப்பெட்டி கடைக்காரன். மனிதர்களது மரணம் அதிகரித்தால் அவனுக்கோ நல்ல வியாபாரம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலும் கிட்டத்தட்ட ஒரு சவப்பெட்டிக்கு கடைக்கு ஒப்பானதுதான். அண்மையில் கொஸ்லாந்தை மீரியபெத்த மண் சரிவினால் பலர் இறக்க நேர்ந்தது. எங்காவது எவராவது சாகமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூட்டமைப்பினரே, இதுதான் சந்தர்ப்பமென்று, மண்சரிவினால் இறந்தவர்களை தங்களின் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டனர். மண்சரிவு இடம்பெற்றதைத் தொடர்ந்து. அப்பகுதிக்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதமைச்சர் விக்னேஸ்வரன், பேரனர்த்தம் ஏற்பட்டு துயரம் நிலவிவரும் இந்த தருணத்திலும், மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு விடயமாக வடக்கு மலையக மக்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதை குறிப்பிட முடியுமென்று தெரிவித்திருக்கின்றார்.

அதாவது மண்சரிவினால் மக்கள் இறந்ததால்தான் வடக்கு மலையக மக்களுக்கிடையில் உறவு வலுவடைந்திருக்கிறது. மலையக வடக்கு உறவு மேலும் வலுவடைய வேண்டுமாயின் இன்னும் அதிகமான மலைய மக்கள் சாக வேண்டும். இதுதான் நான் குறிப்பிட்ட சவப்பெட்டிக் கடை அரசியல். மேலும் அங்கு கருத்துத் தெரிவித்திருந்த விக்னேஸ்வரன், வாக்கு சேகரிக்க சென்றிருந்த அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில்கொள்ளாது, மக்களின் நலனினும் அக்கறை கொண்டிந்தால், உயிர் பலிகளை தடுத்திருக்கலாமென்று மலையக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
இதனை வடக்கிலிருந்து சென்றிருந்த விக்னேஸ்வரன் கூறியிருப்பதுதான் இதிலுள்ள வேடிக்கையாகும். புலிகளால் முன்னெடுக்கப்பட்ட அழிவுகரமான யுத்தத்தை நியாயப்படுத்தி பேசிவரும் விக்னேஸ்வரன், உயிர்பலி குறித்து மலையக அரசியல் வாதிகளுக்கு வகுப்பெடுத்திருப்பதை என்னவென்பது? மேலும் அங்கு விக்னேஸ்வரன் அனைவரும் மூக்கில் விரல்வைக்குமளவிற்கும் ஒரு அறிவித்தலை செய்திருக்கின்றார்.

அதாவது, கொஸ்லாந்தை மீரியபெத்தவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்குவதற்கு வடக்கு மாகாணசபை தயராக உள்ளதாகவும், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கல்வி மேற்பாட்டிற்காக உதவவும் தயராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறான பிள்ளைகளை தத்தெடுத்து பராமரிக்க தான் விரும்புவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

பின்னர் இது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் பெற்றோரை இழந்திருக்கும் 75 பிள்ளைகளையும் புலம்பெயர் தமிழ் சமூகம் பொறுப்பெடுக்க தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றார். யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் முடிவடைந்துவிட்ட போதும், இன்றுவரை வடக்கு மக்களின் நன்மைக்காக புலம்பெயர் சமூகம் எந்தவொரு உருப்படியான உதவியையும் செய்ய முன்வரவில்லை. இப்படியானவர்களா மலையக மக்களுக்கு உதவப் போகின்றனர்?

கூட்டமைப்பினர் இவ்வாறு திடீரென்று மலையக மக்களின்பால் கரிசனை காட்டுவதற்கு பின்னால் பிறிதொரு காரணமும் உண்டு. அண்மையில் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த சந்திப்பின் போது மோடி, ஏனைய சிறுபான்மை மக்களுடன் நீங்கள் நல்லுறவை பேண வேண்டும். அப்போதுதான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வை காண முடியும் என்றவாறு ஆலோசனை கூறியிருந்தார்.

இதன் பின்னர்தான் கூட்டமைப்பின் தலைவர்கள் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றவாறான பிரச்சாரங்களை செய்யத் தொடங்கினர். இந்த பின்னணியில் தான் மண்சரிவினால் மலையக மக்கள் இறந்தபோது, அதனை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

இது உண்மையில் மலையக மக்களின் மீதான கரிசனையல்ல, தங்களின் எதிர்ப்பு அரசியலுக்காக மலையக அப்பாவி மக்களை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு திட்டம். இதனை இன்னொரு வகையில் சொல்வதனால் 60 ஆண்டுகளாக எதிர்பரசியல் பேசி தமிழ் மக்களை நாசமாக்கியது போன்று மலையக மக்களையும் நாசமாகுமாறு கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com