Contact us at: sooddram@gmail.com

 

அகிம்சையால் எதையும் சாதிக்கலாம்!

இன்று மகாத்மாகாந்தியின் 141 ஆவது ஜனனதினம்

(அருணா தருமலிங்கம்)

உலகம் போற்றுகின்ற உத்தமர் மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தரில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி அவதரித்தார். இன்று அவரது ஜனன தினம் ஆகும்.கத்தியின்றி இரத்தமின்றிஅகிம்சை மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்து இந்தி யாவிற்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் நாள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏலவே மகாத்மா காந் தியின் சுயசரிதையில் அவர் வாழ்நாள் முழுக்க முன் னெடுத்துச் சென்ற அகிம் சையின் தாற்பரியங்கள் பற்றி என்ன கூறுகின்றார் என்பதை விரிவாக ஆரா ய்வது இங்கு உசிதமாகும். அகிம்சையும் சத்தியமும் காந்தியடிகளின் வாழ்க் கைக்கு அடிப்படையாக இருந்தன. இவ்விரண்டு குணங்களையும் அவர் வேறாகக் கருதவில்லை.

மகாத்மா காந்தி மக்கள் சேவையிலும் நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அல்லும் பகலும் ஈடுபட்டார். அகிம் சைத்துவம் மிகப்புனிதமா னது. ஆண்டவரைப்போல் எட்டுவதற்கு அரிது. பலவீ னம் நிறைந்து ஊன் வாழ் க்கையில் ஆழ்ந்திருக்கும் மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.

மகாத்மாவின் உள்ளம் உலகத்தின் புனிதர்களின் உள்ளம் போல் ஆழ்ந்து பண்பட்டது. அவர் வாழ் க்கை அகிம்சையையும் சத்தியத் தையும் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது. எனவே அகிம் சையின் பல அம்சங்களையும், அவற்றை எப்படிப் பின்பற்றுவது என்பது பற்றியும் நோக்குவோம்.

சரியாகச் சொன்னால் கொல்லாமையே அகிம்சை ஆகும். நமக்கு எதிரி என்று எண்ணிக்கொள்பவர் மீதுங்கூட கெட்ட எண்ணத்தை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.

இதுவும் அகிம்சை என்பதற்கு உண்மையான பொருள் என்று கூறலாம். விரோதி என்பவரிடம் உங்கள் அன்பை அகிம்சையை அவர் மனிதனுள் ஆழப்பதியுமாறு நீங்கள் காட்டுவீர்களேயானால் அதே அன்பை அவரும் உங்களுக்குக் காட்டியே தீருவார்.

உண்மை யாகவே அகிம்சை யைப் பூரணமாக அனுபவிப் பவருக்கு உலகமே அடிபணிந்து கிடக்கும் என்று சாஸ்திரங்கள் போதிக்கின்றன. இவரைச் சூழ இருப்பவருக்கும் இந்தத்தன்மை பற்றுகின்றது. விஷப்பாம்புகள் போன்றவை களாலும் எதுவிதமான தீங்களும் இவருக்கு நேராது என்கின்றன.

மெய்யாலும் மனதாலும் எந்த உயிருக்கும் தீமை செய்தல் ஆகாது. இதுவே மகாத்மா காந்தியின் வேண்டுகோளாகும். தீமை செய்பவரின் உடலுக்கும் எந் தத்துன்பத்தையும் அகிம்சை உண் டாக்காது. தீமை செய்பவரிடமிருந்து அவரால் சித்திரவதைக்கு உள்ளா கவிருக்கும் குழந்தையை அப்புறப் படுத்துவது அகிம்சையை சரியான முறையில் அனுசரிப்பதைக் குறிக்கும்.

அகிம்சையைக் கடைப்பிடிப்பதற்கு மிக அதிகமான வீரம் வேண்டும் வீரனுக்கு உரிய பண்புகளில் மிகச் சிறந்த பண்பு இது எனலாம்.

பிரெஞ்சுப் பீரங்கிகள் கொடூரமாக குண்டுகளைப் பொழிந்தபடி முன்னேறிய வேளையில் பெருந்திர ளானோர் ஆண்டவரின் திருநாமத்தை உரத்த குரலில் உச்சரித்தவண்ணம் பீரங்கிக்கு முன்னால் சென்றனர். சிலர் மடிந்த அதேவேளை எஞ் சியோரின் அகிம்சைத் தன்மையை உணர்ந்து கொண்ட பீரங்கிக்காரர் பரபரப் புற்று தங்கள் தொப்பிகளை எடுத்து சமிக்ஞை காட்டியதோடு சுடுவதையும் சிறுத்திக் கொண்டனர்.

அதுவரையில் தங்களுக்கு பகை வர்களாக இருந்தவர்களை தோழர்களே என்று அன்போடு அழைத்தனர். அவ்வாறே தென்னா பிரிக்க இந்தியர்கள் சாத்வீத எதிர்ப்பை மேற்கொள்ளும் வேளை தங்களுடைய சொந்த வசதிக்காக மானத்தை விற்பதைவிட உயி ரைவிடவும் ஆயிரக்கணக்கில் தயாராக இருந்தார்கள். நடை முறையில் இதுதான் அகிம்சை. எந்தவிதமான கெளரவத்தையும் அது இழந்து விடுவதில்லை.

இன்று நாம் வீரம் இழந்த வர்களாக இருக்கிறோம் என்றால் நாம்சாக அஞ்சுவதனா லேயே யன்றி வேறு கார ணங்கள் குறிப்பிட இய லாது. இறப்பதற்கு அஞ் சுபவன் ஆபத்துக்களுக் கெல்லாம் பயந்து ஓடு கிறவன் எனலாம். இடை யூறுகளுக்கு மத்தியில் பசுக்களைப் பாதுகாத்து அவற்றை இரக்கமின்றி கசாப்பு காரனிடம் (கிஸிஹிவிசிரிஞி) கொடுப்பவன் எந்த விதத்திலும் அகிம் சாவாதியாக இருக்க முடியாது.

அகிம்சை பலர் நினைப் பது போல் ஓர் கரடுமுர டான விஷமல்ல. உயிரு ள்ள எதற்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது அகிம்சையின் ஒரு பகுதி என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு கெட்ட எண் ணத்தினாலும், அநாவசி யமான அவசரத்தினாலும், பொய் சொல்லுவதினாலும் பிறகுக்கு தீமை நினைப் பதினாலும் அகிம்சாதர்மம் பாதிக்கப்படுகிறது. உலகத்திற்கு தேவையாக இருப்பதை விடாமல் நாம் வசப்படுத்திக் கொண்டிருப்பதும் அத்தருமத்திற்கு விரோதம். நாம் தினந்தோறும் உண்டுவருவதும் அத்தருமத்திற்கு விரோதமாகலாம்.

விலங்குகளிலும் உயர்ந்தவன் மனிதன் என்பதை மனதில் கொள் ளுவோமாயின் அந்த இயக்கைக்கு உயர்ந்தவனே மனிதன் எனவும் கொள்ளலாம். மனிதன் நிறை வேற்றியாக வேண்டிய தெய்வீகக் கடமை ஒன்று இருக்குமானால் அகிம்சையைப் பற்றிய யதார்த்தத்தை புரிந்து கொள்வதே ஆகும்.

அகிம்சை குறைவற்ற தோர்நிலை. தம்மையும் அறியாமலேயே எல்லா மனிதவர்க்கமும் இயக்கையாகவே அந்த லட்சியத்தை நாடிப்போய்க் கொண்டிருக்கின்றன. தான் குற்றமே இல்லாதவன் என்று மனிதன் தன்னுள்ளேயே பாவித்துக் கொள்ளும் போது அவன் தெய் வீகமாகிறான். அப்பொழுது தான் அவன் உண்மையில் மனிதன் ஆகிறான்.

நாம் இன்றைய நிலையில் பாதி மனிதராகவும் பாதி மிருகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயர்ந்த வகையில் அடக்கத்தை அனுச ரிக்காமல் புனிதமான தத்துவத்தை அடைந்து விடமுடியாது. லட்சியம் நமக்கு எப்பொழுதும் தொலைவில் சென்று கொண்டிருக்கின்றது.

முயற்சியில்தான் திருப்தி இருக்கிறதே யன்றி அதை அடைவதில் அல்ல. முழுமுயற்சியே முழு வெற்றி. எதுவும் அகிம் சையின்றி வெற்றி காண்பது சிரமம் எனலாம்.

நீங்கள் நினைக்கிறபடி அகிம் சையை அவ்வளவு எளிதில் தள்ளிவிட முடியாது. நாம் அறிந்துள்ள சக்திகளிலெல்லாம் மிகப்பலமானது அகிம்சை. ஆனால் மிகப் பலம்வாய்ந்த இதை எல்லோருமே சுலபமாக உப யோகித்து விடலாம்.

கருணை அகிம்சை, அன்பு சத்தியம் ஆகிய நற்பண்புகள் ஒருவரிடம் இருக்கின்றனவா? என்பதை உண்மையாகச் சோதிக்க வேண்டுமானால் கொடூரம், இம்சை, பொய்மை ஆகியவற்றிற்கு எதிராக இவற்றை நிறுத்திப் பதனாலேயே சோதிக்க முடியும்.

மகாத்மா காந்தியுடன் பழகும் உரிமை பெற்ற நண்பர் ஒருவர் அவருடன் ஒருநாள் மாலை வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போதுகாந்திஜி நீங்கள் எங்களைச் சுதந்திரத்தின் வாசலுக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்.

நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்களோ இதெல்லாம் அகிம் சையால்தான் என்பீர்கள் ஏனெனில் அது உங்கள் அருமைக் குழந்தை. ஆனால் அகிம்சையை விட சத்தியத்திலிருந்தே அதிக பலம் கிடைத்ததாக நாங்கள் கருதுகிறோம்என்றார்.

அதற்கு காந்திஜிஎனக்கு அகிம்சையில் பற்றுதல் அதிகம் என்பதினால் சத்தியத்திற்கு இரண்டாவது இடத்தையே நான்தருவதாக நீங்கள் நினைப்பது தவறு. அதேபோல் அகிம்சையைவிடச் சத்தியத்திடமிருந்தே நாட்டிற்கு அதிக பலம் கிடைத்தது என்று நீங்கள் எண்ணுவதும் தவறு.

ஆனால் அதற்கு மாறாக நாடு ஏதாவது அபிவிருத்தியை அடைந்திருக்குமாயின் அகிம்சையைத் தன்னுடைய போராட்ட முறையாக நாடு மேற்கொண்டது தான் அதற்குகக் காரணம் என்று நான் திடமாக நம்புகிறேன். மேலும் அகிம்சை மனப்பான்மையை அடைவதற்குக் கஷ்டமான பயிற்சி முறையே அவசியமாகிறது என்பதும் பொருந்தும்.

அகிம்சையே என் கடவுள், சத்தியமே என் கடவள், அகிம்சையை நான் நாடும் போதுஎன் மூலம் அதை அறிஎன்று சத்தியம் எனக்குக் கூறுகின்றது. சத்தியத்தை நான் நாடும் போது அகிம்சைஎன்னைக் கொண்டு அதைக் காண்என்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com