Contact us at: sooddram@gmail.com

 

எங்கும் நிறைந்திருக்கும் மகாசக்தி

முழு முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது.

அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது. பிரபஞ்ச சக்திகளில் நான் நான்கு வித சக்திகள் இணைந்து இவ் வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான்.

ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன், சக்தி உள்ளிட்டோர் நான்கு மகா சக்திகளாயினர். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம்.

இச்சக்திகளையே அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளனர்.

பராசக்தி - காபனீரொட்சைட்டு

மகாவிஷ்ணு- ஒட்சிசன்

பிரத்மதேவன் - நைதரசன்

மகேஸ்வரன் - ஐதரசன்

வான் பெளதிகவியல் என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளையும் அறிந்து கொள்ளலாம். திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் இலத்திரன், நியூத்திரன், நியூட்ரோன், புரோட்டன் என்ற மூன்றுசக்தி களுக்குட்பட்டவையே எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட கரு ஆகிறார்.

புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகா விஷ்ணு காக்கும் கடளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகினர் என்றார்கள்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட் டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகவே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக இலத்திரனான பிரம்மதேவனும், நியூத்திரனான விஷ்ணுவாகவும், புரேத்திரனான மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சிக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகின்றாள்.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். காபன்’தான் உலகில் சக்தி பெற்ற உலோகம், இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகை ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால் மற்ற கிரகங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.

சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று, முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும், மலரும் அதன் மணமும் போலவும், தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு இயைந்து நிற்பது.

இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும், நீலச் செம்மேனி (கிருஷ்ணனின் நீல நிறம்) உடையதாகவும் மறைகளிற் கூறப்படும். அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு ஆகும்.

அருள் ஒளி அல்லது அருளாற்றல் என பல வகை ஆற்றல்களையும் கொண்டு வழிபடுவது பண்டைய மரபாயிற்று. இயற்கையின் ஆற்றல்களுள் மழை பெய்தல் உலகம் உய்ய, வாழ இன்றி யமையாதது. நீர் இல்லாது உலகமில்லை. திருவள்ளுவர் கூட வான் சிறப்பை கூறியுள்ளார்.

இத்தகைய மழைக்கு அதி தெய்வமுள்ள அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகம். (மாரி- மழை) உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கிய துணைக்கரணமாகும்.

இவ்வருட் சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக, நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்களை அமைத்தனர் என்று உணரும் போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்கு புலப்படுகிறது. தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்கள், ‘அம்மை அப்பர்எனவும்

தாயிற் சிறந்த தயாவானதத்துவனே

எனவும்,

தாயாயெனக்குத் தானெழுந்தருளி

எனவும்,

பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்துஎனவும் அழைக்கலாயினர்.

தாயுமான அடிகள்,

பொல்லாத சேயெனில் தாய்

தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது

முண்டோஎனவும்,

அகிலாண்ட கோடி ஈன்ற

அன்னையே பின்னையும்,

கன்னியென் மறை பேசும் ஆனந்த

ரூபமயிலேஎனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகிய லறிவால் உணர்ந்த நமது முன் னோர்கள, இறைவனின் அரு ளாற்றலை உலக நாயகியபாக அகி லாண்ட கோடி என்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர்.

பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப்படுத்தி, இறைவனின் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்பது சித்தாந்த சாத்திரம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த நிலையைத் திருமூலர் தமது திருமந்திரத்தில்

வாயும் மனமுங் கடந்த

மனோன்மணி

பேயுங் கணமும் பெரிதுடைப்

பெண்பிள்ளை

ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்

தாயும் மகளுத் தாரமும் மாமே...”

-என்கின்றார்.

அதாவது, அளவிலா ஆற்றலும், அருளுமுடைய ஆதிசக்தியின் வரப் பிரசாதத்தால் வந்த திரிசக்திகளாகிய பராசக்தி, மனோன்மணி, திரிபுரசுந்தரி, ஆகியோர் பரமசிவத்தோடிணைவதால் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நிறைவேறுகின்றன. எனவே அந்த ஆதிபராசக்தியே எல்லாமாய் இருக்கிறாள்.

அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில் காசியிலிருந்து கன்னியாகுமரி வரை சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை, அதனையும் தாண்டி, தென்கிழக்கு ஆசிய வரை, ஏன் இன்று ஆபிரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும் மக்கள் துயர் தீர்க்கம் புற்றாய் மாமருந்தாய், மகேஸ்வரியாய் விளங்குகிறாள். ஏழாவது கர்ப்பமாக பிறக்க வேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்தால் கருமாரியாக பெயர் பெற்றாள்.

சூரியன் மறைந்தாலும், பிரித்தான்ய சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட வெள்ளையர்கள், மாரியம்மனுக்கு மட்டும் மிகவும், அஞ்சி நடுங்கினார்கள். அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இரு நூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.

பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி, தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பிலையால் நீக்கி வருவது கண்கூடு. இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் விரும்புவார் விரும்புவதை எல்லாம் நல்கும் பரதேவதையாகிய தம் நிமித்தம் தனது மெய்யன்பர்கள் விரும்புவதையும் நிறைவுசெய்கிறாள்.

சிலந்திப் பூச்சியானது தன்னிலிருந்தே தமக்கு வீடு அமைத்துக் கொள்வது போலவே அம்மன் தமது அன்பர்கள், அடியார்கள் ஆகியோரை உறுதிமிக்க மனதகத்தே இருந்து அருள் பாலிக்கிறாள்.

அன்னை மனத்தகத்தே இருந்து நல்ல எண்ணங்களை நல்ல உண ர்வுகளை தன்மைகளை எழுப்புகிறாள் அவர்கள் அதைச் சூழ்ந்து ஆழச் சிந்திக்கின்றனர். அப்பொழுது அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள். அப்பொழுது தாமும் அவர்களின் மனதோடு இருந்து அருட் பிரசாதமாய் பொழிந்து மகிழ்கின்றாள்.

அன்னை அஞ்சொல் மொழியாள்,

அருந்தவப் பெண்பிள்ளை,

செஞ்சொல் மட மொழி சீருடையச்

சேயிழை,

தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி

போற்றுவார்க்கு

இன்சொல் அளிக்கும் இறவி

யென்றாரே,

இயங்குதற்கு சக்தி தேவை, உலகம் இயங்குவதற்கு இறைவனது ஒரு பங்கிலுறைந்து இருக்கிறாள்.

ஆதி சக்தியான அம்மை. இவள்கடவுளார் யாவர்க்கும் மேலை யிறைவிஆவாள்.

புவனம் கடந்து நின்ற ஒருவன்.

திருவுள்ளத்தில் அழகு ஒழுக

எழுதிப் பார்த்திருக்கும் உயிர்

ஓவியம்

சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்குபவள்

இவள் எல்லா உலகங்களுக்கும் நாயகி

நான் முகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை, மாதங்கி,” என்றெல்லாம் துதிக்கப்படுபவள். இவளுடையதாமம் கடம்பு; படை பஞ்சபாணம், தனு- கரும்பு

இவளை அடியார்கள்பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, சண்டி, காளி, வயிரவி, மண்டலி, சூலி, வாராகி என்று வழிபடுவர்.

காரணம், உலக வேதம் உலக மொழிகள் அனைத்திற்கும் அனா தியாயும , ஆதியாயும் அமைந் திருக்கின்ற ஓங்கார வடிவத்தோடுங் கூடிய எல்லாப் பிரபஞ்சங்களையும் ஈர்த்துக் கொண்டு அசைவற்றுக் கிடப்பது சிவத்துவம் என்னும் அற் புதம் அந்த அற்புதத்தினும் அதியற் புதமாக ஹரீங்கார வடிவத்தோடுங் கூடிய காந்த சக்தியாய் எல்லா வற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.

இந்த ஆதிசக்தி வடிவம் பரபிரம்மாகிய சிவனின்று பிரிக்க முடியாததாய் அக்கினியிற் சூடு போலும், வெளியாகவும் மறைவாக வும் அதனோடு ஒடுங்கி உறைந்து நிற்பது. திரிபற்ற நிலையை இரண்டற்ற நிலை, அர்த்தநாரீச்சுர நிலை சிவசக்தி என்பார்கள் சான்றோர்கள்.

நன்றி: இணையம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com