Contact us at: sooddram@gmail.com

 

உலக அஞ்சல் தினம் இன்று

ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் வளர்ச்சிபெற்ற அஞ்சல் துறை

(நெளஸாத் காரியப்பர்) (அஞ்சல் அதிபர், சாய்ந்தமருது)

‘....... உலகின் பல்வேறு நாடுகளுக் குரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்கே உரிய பிரத்தி யேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந் ததுமான தகவல்களையும், பொருட்க ளையும் எம்மிடம் ஒப்படைப்பது அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாக வும், மிகக் கவனத்துடனும், அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார் கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பி க்கை என்பதை நாம் அறிந்துள்ள தோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையு டனும் நேர்மையுடனும், பாதுகாப் போம்...’

(உலக தபால்தின பிரதிக்ஞை)

ஆதிமனிதன் இடம்பெயராமல் இருந்ததால் அவனுக்குச் செய்திப் பரிமாற்றம் அவசியப்படவில்லை. பின்னர் ஏற்பட்ட பல்வகையான காரணிகளின் நிமித்தம் மனிதன் இடம்பெயர ஆரம்பித்தான். அச்சமயம்தான் முதல் முதலாக செய்திப் பரிமாற்றத்தின் அவசியம் உணரப்பட்டது. செய்தியைத் தூர இடங்களுக்கு எடுத்துச் (சொ)ல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது.

இதற்காக ஆதிமனிதன் முதலில் தன் குரலையே அதி வேகத்துடன் ஒலிபரப்பினான். பின்வந்த காலத்தில் பல்வகையான பொருட்களினால் விதவிதமான ஒலிகளை எழுப்பி தன் வேறுபட்ட செய்திகளை அறிவித்தான். அம்பு, வில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அம்பில் தனது செய்தியை அனுப்பி வைத்தான். அதேசமயம் இரகசியமான செய்திகளை அடிமைகள் வாயிலாகச் சொல்லியனுப்ப ஆரம்பித்தான்.

எழுதப்படிக்க ஆரம்பித்த காலங்களில் செய்தி அனுப்பும் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் புறாக்களும் வல்லூறுகளும் மற்றும் மிருகங்களும் கூட செய்தியை எடுத்துச் செல்லப் பயன்பட்டன. நீர் நிலைகள், கானகங்கள் கடந்து செல்வதற்குப் புறாக்கள் மிகவும் உதவியாக இருந்தன. பின்னர் போக்குவரத்திற்கான பாதைகள் ஏற்பட்ட காலத்தில் மனிதனே செய்தியை எடுத்துச்செல்ல ஆரம்பித்தான்.

ஒரு அடிமையின் தலையை மொட்டையடித்து தலையில் செய்தியை எழுதி மயிர் வளர்ந்த பின் அவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி அங்கு மீண்டும் மொட்டையடிக்கப்பட்டு செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு தூதுவனிடம் கொடுத்தனுப்பப்பட்டது.

கிரேக்கர்களின் இராச்சியத்தில் வாழ்ந்த மரத்தான் எனும் செய்திப் பிரிவு வீரன் ஒருத்தன் அவசரமான ஒரு யுத்தச் செய்தியை அறிவிப்பதற்காக இடைவிடாது 26 மைல்கள் தூரம் ஓடிச் சென்று செய்தியை அறிவித்த பின் மூச்சிரைத்து இறந்து போனான். இவனது தியாகம் காரணமாகவே சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இன்றும்மரதன் ஓட்டம்நடத்தப்படுகிறது.

தொடர்ந்து ஒரு மனிதனை ஓடச் செய்யாமல் குறிப்பிட்ட தூரத்திற்கொரு வீரனை நிறுத்தி செய்திகள் எழுதப்பட்ட குழலைப் பரிமாறும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் தகவல் பரிமாற்றம் எளிதாயிற்று. அஞ்சல் ஓட்டத்தின்வரலாறு இதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இந்த அஞ்சல் வீரர்கள் காடு, மலை, நீர்நிலைகள் கடந்து ஓடியே அஞ்சல் பரிமாற்றம் செய்தனர். பின்னர் தூர இடங்களுக்கு குதிரை வீரர்கள் அஞ்சல் செய்தனர். பொதுவாக உலக அஞ்சல் வரலாறு மேற்கண்டவாறு ஆரம்பித்தது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1500 களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1600 களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும், அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700 களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல் துறையில் துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன.

குறிப்பாக இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின்னர் 1804 தொடக்கம் 1817ம் ஆண்டு வரை அஞ்சல் துறையின் மைப் பொறுப்பிலிருந்த திரு. ஈ. பிளாட்டமன் அவர்கள் 1815ல் நமது நாட்டில் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார். 1832ல் ஆசியாவிலேயே முதல் தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரை வண்டித் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1838ல் இச்சேவை கொழும்புக்கும் காலிக்குமிடையில் விஸ்தரிக்கப்பட்டது. 1850ல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால் சேவை பழக்கப்பட்ட தபால் புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டது. 1857 ஏப்ரல் முதலாம் திகதி 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட்டது. (உலகின் முதல் முத்திரை இங்கிலாந்தில் 1840ல் ஒரு பென்ஸ் பெறுமதியில் வெளியானது)

இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல் தடவையாக 1865ல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸ வுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது. 1867ல் தனியாருக்கான தபால் பை, தபால் பெட்டி, சேவைகள் கொழும் பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன. 1872 ஓகஸ்ட் 22ல் தான் முதன் முறையாக தபால் அட்டை வெளியானது.

1873ல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக் கட்டளை சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1877ல் உள்நாட்டு காசுக் கட்டளைச் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தும், 1877 ஏப்ரல் 1ம் திகதி இலங்கை அகிலதேச அஞ்சல் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும், தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது.

1880ல் இலங்கை இந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது. 1885 மே 1ல் அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது. 1893ல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது. 1895 ஓகஸ்ட் 19ம் திகதி கொழும்பு பிரதம அஞ்சல் அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் 1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் அஞ்சலதிபதியாக இருந்த திரு. எப். ஜே. ஸ்மித் அவர்கள் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமன, திவுலப்பிட்டிய, ஆனமடுவ, கிரியெல்ல, மூதூர், சிலாபத்துறை ஆகிய ஆறு இடங்களில் அமைத்தார். 1928ல் இலங்கையின் முதலாவது வான்கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானத் தபால் வாயிலாகப் பறந்தது. 1936ல் அஞ்சல் அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டதும், இங்கிலாந்திலிருந்து தபால்கள் விமானம் மூலம் இல ங்கையை அடைந்ததும் குறிப் பிடத்தக்கன.

1947 இலேயே இலங்கை நாட்டவர் ஒருவர் (திரு. ஏ. இ. பெரேரா) அஞ்சல் அதிபதியாக நியமனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1949ல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் தபால் சேவை ஆரம்பித்தது. 1958ல் இலங்கை போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து தபால் பஸ்சேவை தினமும் ஓடத் தொடங்கின. இதனால் இலங்கை மக்கள் அனைவருக்கும் தபால் சேவை தங்குதடையின்றிக் கிடைத்தன.

1967 ஜனவரி 1ல் இலங்கை முத்திரைப் பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது. செப்டெம்பர் மாதம் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. 1972ல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது.

1975ல் அஞ்சல் அதிபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக வெள்ளவத்தையில் அஞ்சல் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1979ல் பிராந்தியங்கள் ரீதியாக தபால்தரம் பிரிக்கும் நிலையம் இரத்தினபுரியில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டதும் தபால்கள் விரைவாக மக்களைச் சென்றடைந்தன.

இதுவரை காலமும் ஒன்றாகவே கையாளப்பட்டு வந்த தபால் துறையானது 1980 ஓகஸ்ட் 15ம் திகதி தபால் மற்றும் தந்திச் சேவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தந்திக்கு துரித வசதிகள் செய்யப்பட்டன. 1981ல் அஞ்சல் முகவர் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், 1989 ஒக்டோபர் 1ல் ஈ. எம். எஸ். என்னும் விரைவுத் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1990 ஜுலை 2ல் ஸ்பீற் போஸ்ற் எனப்படும் அதிவிரைவுத் தபாற் சேவை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. 1992ல் தபால் திணைக்களத்தில் மாகாண ரீதியிலாக நிர்வாகப் பரவலாக்கம் ஏற்படுத்தப்பட்டதும் பிராந்திய ரீதியில் அஞ்சல் அறிமுக அட்டை வழங்கப்பட்டது. மேலும், இதே ஆண்டு, தொலைநகல் சேவைப் பரிமாற்றமும் தொடங்கியது.

1992ல் இதுவரை காலமும் அஞ்சலதிபர்களாக ஆண்கள் மட்டுமே கடமையாற்றிய நிலையிலிருந்து மாறி பெண்களும் அஞ்சல் அதிபர் சேவையில் நியமிக்கப்பட்டனர். 1994ல் கொழும்புக்கு வெளியே அஞ்சல் பொதி ஒப்படைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1996ல் தபால் தரம் பிரிப்பை மேலும் இலகுவாக்கும் பொருட்டு ஒவ்வோர் ஊருக்கும் தபால் குறியீட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (உதாரணம : சாய்ந்தமருது அஞ்சல் குறியீடு இலக்கம் 32280) 1999ல் தபால் திணைக்களம் கணனி மயமாகத் தொடங்கியது.

2000ம் ஆண்டில் இலங்கையின் பல பாகங்களிலும் தபால்துறை கணனியைப் பயன்படுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து 2001ல் இணையத்தளம், மின்னஞ்சல், ஒன்லைன் சேவை என தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் அதிநவீன மின்னியல் உலகத்தினுள் பிரவேசித்தன. தற்போது அநேகமாக அனைத்து தபால் நிலை யங்களிலும் ஒன்லைன் வாயிலாக மின் பட்டியல் கொடுப்பனவு, வெளிநாட்டுக் கடிதங்களுக்கான ஒப்படைப்பு அறிவிப்பு, இலத்திரனியல் காசுக்கட் டடளைச் சேவை (இ-மணிஓடர்) தபால் பணப்பரிமாற்றச் சேவை (பீ.எம்.ரீ) என்பன புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துரிதகதியில் சேவையாற்றப்பட்டு வருகின்றன. ரெலிகொம் நிறுவனத்தின் முற்கொடுப்பனவு அட்டைகளும் விற்பனைக்குள்ளன.

அத்துடன் தற்போது இலங்கை முழுவதும், 609 அஞ்சல் அலுவலகங்களும், 3440 உப தபால் நிலையங்களும், 536 முகவர் தபால் நிலையங்களும், 46 தபால் கடைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் திணைக்களத்தின் வழமையான சேவைகளான அஞ்சல் முத்திரை, முத்திரையிடப்பட்ட பொருட்கள், எழுதுகருவிகள், தொலைபேசி அழைப்புக்கள், பிரித்தானிய தபாற் கட்டளை, தொகை அஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல், சமூக சேவைக் கொடுப்பனவுகள், (சயரோகம், தொழுநோய், புற்றுநோய், வறியவர்களுக்கான ஆதாரப் பணக் கொடுப்பனவுகள்), விவசாய மீன்பிடியாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, பரீட்சைக் கட்டணம் மற்றும் வாகனத் தண்டப் பணம் செலுத்துதல், விரைவுத் தபாற் சேவை, தபால் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள், தபால் பெட்டி மற்றும் தபால் பை சேவைகள் தந்திச் சேவைகள், தொலைநகல், போட்டோ பிரதிகள், பதிவஞ்சல் மற்றும் சாதாரண கடிதச் சேவைகள், உள்நாட்டு வெளிநாட்டு பொதிச் சேவைகள், காப்புறுதிக் கடித சேவைகள், அஞ்சல் அறிமுக அட்டை, புதினப் பத்திரிகைகள் பதிவு செய்தல் என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன.

புராதன காலத்திலிருந்து அதிநவீன காலம் வரை அனைத்துலக மக்களுக்கும் தனது ஈடினையற்றதும், அர்ப்பணிப் புமிக்கதுமான புனித சேவையை எவ்விதப் பாகுபாடுமின்றி ஆற்றிவரும் தபால் துறையினருக்காகஉலக தபால் தினம்பிரதி வருடமும் ஒக் டோபர் 9ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com