Contact us at: sooddram@gmail.com

 

ஒரு நேரடி ரிப்போட்

"பிரச்சினைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம்''

வன்னியில் நடந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு

(விசு கருணாநிதி)

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடுகளை உள் வாங்கியவராகப் புலிகளின் விமான ஓடுபாதையில் நடந்து வருகிறார் ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா. இரணங்களை ஆற்றும் இரணைமடு குளத்தையும் பார்வையிடுகிறார். இந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துவிட்டால்.... எதிர்கால வன்னிப் பெரு நிலப்பரப்பு அவரின் மனத்திரையில் ஓடுகிறது. உடன் வந்துள்ள சக உறுப் பினர்களுடன் தமது எண் ணங்களைப் பகிர்ந்துகொள் கிறார்.

பச்சிலைப்பள்ளிக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கிய வருகிறது. என்றாலும் திரும்பி வரும் வழியிலும் மக் களின் குறை நிறைகளைக் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆணைக் குழுவினர் வந்து சேரட்டும் என்று நாம் சற்று முன்கூடியே பளைக்குச் செல்கிறோம்.

கிளிநொச்சி நகரம் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பிவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது. கனகபுரம் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சந்தைப் பகுதி விரைவாக எழுந்து நிற்கப் பார்க்கிறது. வாழ்வாதாரத்தைத் தொலைத்த இளைஞர்கள் அங்குப் புதிய முயற்களில் ஈடுபட்டிருக் கிறார்கள். தற்காலிகக் கொட்டகைக் கடைகள் என்றாலும் வியாபாரம் திருப்தியாக நடக்கிறது என்கிறார் சாந்தகுமார்.

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் வரை சென்று குடும்பத்துடன் மீண்டு வந்தவர்.ஐயோ நாங்கள் பெரும்பாடு பட்டிட்டம், குழந்தை இருந்ததால் புலிகளிடமிருந்து இராணுவப் பகுதிக்குப் போகக் கேட்டம், அவையள் விடேல்ல. பிள்ளைக் காகத்தானே போகவேணும் எண் டிட்டு, என் கையில் இருந்த பிள் ளையின் தலையில் ஓங்கி அடித்தார் ஒருவர். நான் டக்கெண்டு பிள்ளைய கைவிட்டிட்டன். அதால பிள்ள தப்பிச்சுது. இந்தக் கஷ்டம் இனியும் வேண்டாம். இது தற்காலிகக் கடைதான். புதிதாகக் கட்டப் போறாங்கள். அப்ப இதுக்குப் பதிலா வேறு கட தருவினம்என்கிறார் நம்பிக்கை நிறைந்தவராக.

சாந்தகுமாரின் அனுபவத்தோடு பச்சிளைப்பள்ளியில் போய் நிற்கிறோம். இன்னும் ஆணைக் குழுவினர் வந்து சேரவில்லை. அறிவித்த நேரத்தையும் விட மேலதிகமாகக் காத்திருந்துவிட்டுப் பலர் திரும்பிச் சென்றுவிட்டதால் குமுறிக்கொண்டிருக்கிறார் இராஜரத்தினம். வயது 70 இற்கும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.

இன்னும் நல்ல மிடுக்கான தோற்றம். இளைஞர்கள் இவரிடம் தோற்றுத் தான் போவார்கள். பேச்சு, நடை, உடை, ஆளுமை என்று சகலமும் நிறைந்தவர் அவர். பிரதேச செயலகத்தில் கூடியிருக்கும் மக்களை வழி நடத்திக்கொண் டிருக்கிறார். ஆணைக்குழுவினர் தாமதமாகுவது அவருக்குக் கோபத்தை ஏற்றிக்கொண்டிருக்கிறது என்பது அவரின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இஞ்ச இரண்டு முப்பதுக் கெண்டுதான் சொன்னவை. இப்ப நேரம் என்ன? கனபேர் திரும்பிப் போட்டினம். நான் விசாரணையை ஒத்திவைக்கச் சொல்லிக் கேட் கப்போறன். டி. எஸ்ஸுக்கும் சொல்லிப் போட்டன்என்று ஆத்திரப்பட்டவர். ஆணைக்குழு வின் வாகனம் வந்து நிற்கவும் சற்று ஆசுவாசமடைகிறார்.

ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, தாமதத்திற்கான காரணத் தைச் சொல்ல, உறுப்பினர் திருமதி மனோ இராமநாதன் விசாரணையை ஆரம்பித்து வைக்கிறார். முதலில் சாட்சியமளிக்கிறார் இராஜரட்ணம். மொழிபெயர்ப்பு வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அவர் ஆரம்பிக்க ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஆர்வம் மேலிடுகிறது.

இது மிகவும் வறிய பிரதேசம் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இந்தப் பகுதியில் எந்த அபி விருத்தியும் ஏற்படவில்லை. இங்கு வீடுகள் கிடையாது. மக்கள் இன்னமும் கூடாரங்களிலும் மரங்களுக்குக் கீழும் வாழ்கிறார்கள். மழை காலத்திற்கு முன்னர் நிவாரணம் வேண்டும். உலர் உணவை எதிர்பார்க்கிறோம்.

இங்குள்ள மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் இருட்டறைகளில் கல்வி பயில்கிறார்கள். இது மிகவும் பரிதாபகரமான நிலையாகும். இளையவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் வேறு சக்திகளுடன் இணைந்துவிடுவார்கள்.

இங்கு விதவைகள் தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சாட்சியம் அளிக்க வந்திருக்கிறார் கள். யுத்தத்தின் அடிப்பகுதி பச் சிளைப்பள்ளி. இங்குதான் கடுமை யான சண்டை நடந்தது. கண வனை, பிள்ளைகளை இழந்து வருமானத்திற்கு எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே இவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவைக் கேட்டுக்காள் கிறேன்.

இல்லாவிட்டால் அவர்கள் தவறான சக்திகளுடன் இணை யக்கூடும். தென்னந்தோட்டங்களில் மக்கள் தம் வருமானத்துற்காக அடிமைகள் போல் பணியாற்றுகி றார்கள். சிறுவர்கள் காணாமற்போ வது இன்னமும் நிகழ்ந்து வருகி றது. பெற்றோர்கள் தம் பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என எதிர் பார்க்கிறார்கள்.

நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள், நாம் பிரிவினைவாதிகள் அல்லர். பிரச்சினைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். நாம் ஆணைக்குழுவை நம்புகிறோம். குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா எமது பிரச் சினைகளைத் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறையும் அவ்வாறுதான். இங்குள்ள வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வேறு தேவைக்காகப் பயன் படுத்தப்படுகிறது. இங்கு தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லை. ஏன் தமிழ் உத்தி யோகத்தர்களை நியமிக்க முடி யாது”.

தமது ஆதங்கங்களைப் பொரிந்து தள்ளுகிறார் இராஜரட்ணம். அவரின் தெளிவான பேச்சும், உறுதியும் அங்கிருந்தவர்களின் ஒட்டுமொத்த குரலாகவே காணப்படுகிறது. பிரதேச செயலாளர் முகுந்தன் வந்திருந்தவர்களின் சாட்சியங்களை அவதானித் துக்கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக சீ. குணரட்னம். ஓய்வுபெற்ற ஓர் அரச உத்தியோகத்தர். தீர்வு கொண்டுவந்தபோதெல்லாம் எமது தமிழ்த் தலைவர்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். அதனால்தான் பிரச்சினை நீடித்தது. பதவியில் உள்ள ஓர் அரசாங்கம் தீர்வொன்றைக் கொண்டுவந்தால், அதனை எதிர்க்கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆளும் தரப்பு தீர்வு கண்டுவிட்டால், நமக்கு எதிர்காலம் இல்லாமல்போய்விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அதனால் எமது இளைஞர்கள் பிரச்சினைகளைத் தமது கையில் எடுத்துத் தீர்க்க முயற்சித்தார்கள். படித்த பிள்ளைகளுக்குப் பொரு த்தமான தொழில் வழங்கியிருந்தால், இப்படி நடந்திருக்காது. பல்கலைக்கழக தரப்படுத்தலும் பிரச்சினைக்குக் காணரமாகியதுஎன்று சாட்சியத்தை நிறைவுசெய்ய சின்னதம்பி சிவராசா சாட்சியம் அளிக்கிறார்.

“2008 மார்ச் மாதம் 28 ஆம் திகதி நாம் இராணுவப் பகுதிக்கு வந்தபோது எனது பிள்ளையைப் புலிகள் பிடித்தார்கள். அதன் பின் மனித உரிமைகள் ஆணை க்குழுவிடம் முறையிட்டேன். உயிருடன் உள்ளதாகத் தெரிவித் தார்கள். நான் பார்க்கவில்லை. எப்படியாவது எனது பிள்ளையைத் தேடித்தாருங்கள்என்றதும், உறுப்பினர் திருமதி மனோ இராமநாதன் ஓர் உருக்கமான பதிலை அளிக்கிறார்.

நாங்களும் மனிதாபிமானம் உள்ளவர்கள். எம்மால் இயன்றவரை உங்களுக்குச் செய்வோம். காணாமற்போனவர்களின் விபரங் களை ஆணைக்குழுவுக்கு வழங் குங்கள்என்றதும் அங்கிருந்த பல பெண்கள் தமது உறவுகளின் விப ரங்களைக் கொடுப்பதில் ஆர்வ மடைகிறார்கள். அப்போது ராஜ ரத்தினத்தார் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

இங்கு பலர் சாட்சியம் அளிக்கவோ, விபரங்களைக் கொடுக்கவோ இல்லை. பலர் திரும்பிப் போய்விட்டார்கள். அதற்கு என்ன செய்வது?”

பரவாயில்லை. அவர்களை எமது முகவரிக்கு விபரங்களை அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்என்று திருமதி இராமநாதன் பதில் அளித்தார். அவ்வாறே செய்கிறோம் என்ற இராஜரத்தினம், வந்தி ருப்பவர்களின் விபரங்களைக் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி விபரங்கள் ஆணைக்குழுவின் உத்தியோ கத்தர்களிடம் கையளிக்கப்படு கின்றன. அங்கு வந்திருக்கும் பெரும்பாலானவர்கள் காணாமற் போன தமது உறவுகளைத் தேடித்தருமாறு கோரவே வந்திருக்கிறார்கள் என்பது புலனாகியது.

இந்து மத குருவான சிவஸ்ரீ என். பிரபாகர குருக்கள் சாட்சியம் அளிக்கும்போது, “யுத்தம் முடிந்த பின் இளைஞர் யுவதிகள் கைவிடப்பட்ட நிலையில் இருக் கிறார்கள். அவர்கள் தவறான பாதைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. விதவையான பெண்கள் சமூகத்தில் ஒதுக்கப்படாமல் இரு ப்பதற்கு மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்என்று உருக்கமான வேண்டுகோளுடன் தமது சாட் சியத்தை நிறைவு செய்கிறார்.

இராஜரத்தினத்தார் மீண்டும் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்க்கிறார்.

இங்கு அங்கவீனமுற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வர இயலவில்லை. பெண்ணொ ருவர் இரண்டு கால்களையும் இழந்திருக்கிறார். அரச சார்பற்ற நிறுவனங்கள் இங்கு வருவ தில்லை. இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்என்கிறார் இதற்கு ஆணைக்குழுவின் தலைவர் சில்வா பதில் அளிக் கிறார்.

அங்கவீனமுற்றவர்களை எமக்கு எழுதச் சொல்லுங்கள். அப்போது சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நாம் கோரி க்கை விடுக்க முடியும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பாக ஒரு பொறிமுறையைக் கண்டறிவதாக ஜனாதிபதி கூறி யிருக்கிறார். எனவே ரி.ஐ.டியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி சில பரி ந்துரைகளை வழங்கவுள் ளோம்என்று விசா ரணைகளை நிறைவுசெய்தவர் பளையின் பாடசாலை மற்றும் வைத் தியசாலை ஆகியவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறார். தலைவரையும் முந்திக் கொண்டு தயாராகிறார் இராஜரத்தினம்.

தொடரும்....

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com