Contact us at: sooddram@gmail.com

 

இனப் பிரச்சினையின் தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் இணைந்து செல்ல வேண்டும

புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரத்திலாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருந்தால் தமிழ் அரசியல் களம் இவ்வளவு பின்னடைவை அடைந்திருக்காது.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் இரண்டாவது பதவிக் காலம் நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இது வெறுமனே இரண்டாவது பதவிக் காலமாக இல்லை என்றும் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது கட்டத்துக்கான ஆரம்பம் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். சுருக்கமாகக் கூறுவதனால், முதலாவது சமாதான காலகட்டம். இரண்டாவது அபிவிருத்திக் காலகட்டம்.

முதலாவது காலகட்டத்திலும் அபிவிருத்தி இடம்பெறாமலில்லை. முன்னைய ஆட்சிக் காலங்களிலும் பார்க்க மிகக் கூடுதலான அபிவிருத்திச் செயற் பாடுகள் இக் காலகட்டத்தில் இடம் பெற்றன. அதேபோல, இரண்டாவது கட்டமான அபிவிருத்திக் கால கட்டத்தில் சமாதான முயற்சிகளுக்கு இடமில்லை என்று அர்த்தமில்லை. முதலாவது காலகட்டத்தில் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்துச் சமாதானத்துக்கான பலமான அத்திவாரத்தை இடுவதற்கு முன்னுரிமை அளித்த அதேவேளை அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட்டது போல, இரண்டாவது காலகட்டத்தில் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கின்ற அதே வேளை சமாதானத்தை வலுப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படலாம்.

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த பின் னணியிலேயே ஜனாதிபதி தனது முதலாவது பதவிக் காலத்தை ஆரம்பித்தார். அக் காலத்தில் படையினரின் வாகனங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணிவெடிகளில் சிக்கின. ஏராளம் படையினர் பலியாகினர். அப்போதும் ஜனாதிபதி சமாதானத்தையே நாடி நின்றார். சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பைப் பலவீன நிலைப்பாட்டின் வெளிப்பாடு எனக் கருதிய புலிகள் சரியான பிரதி பலிப்பை வெளிப்படுத்தவில்லை. படை நடவடிக்கைக்கான அவசியத்தைப் புலிகளே தோற்றுவித்தார் கள். தாங்களே தோற்றுவித்த படை நடவடிக்கைக்குப் புலிகள் பலியாகியதும் சமாதானத்துக்கான வலுவான அத்திவாரம் இடப்பட்டுவிட்டது. இப்போது அபிவிருத்திக் காலகட்டம் ஆரம்பிக்கவிருக்கின்றது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது பிரதான கேள்வியாக எழுகின்றது. நாட்டின் நீரோட்டத்திலிருந்து தமிழ் அரசியல் தலைமை வெகுவாகப் பின்சென்றுவிட்டது. யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும் நாட்டுக்கு வெளியிலிருந்துரட்சகர்வருவார் என்ற அதீத கற்பனையும் இந்த நிலைமைக்குக் காரணம்.

பிராந்திய சபைகளுக்கூடாக அதிகாரப் பகிர்வு என்ற தீர்வை ஏற்கும் நிலையை நோக்கி வந்து கொண்டிருந்த இத் தலைவர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு அமைக்க முடியும் என்ற புலிகளின் கருத்தை ஏற்றுச் செயற்பட்டதுடன் பின்னடைவு தொடங்கியது. புலிகளுக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போதாவது இத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்க வேண்டும். தனிநாடு அமைவது சாத்தியமில்லை என்பதும் ஆயுதப் போராட்டத்தில் புலிகள் வெற்றியீட்ட முடியாது என்பதும் அப்போது தெளிவாகத் தெரிந்த விடயங்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் அப்போதும் தனிநாடு பற்றிய நம்பிக்கையுடனேயே இருந்தார்கள். நாட்டுக்கு வெளியிலிருந்து யாராவது ஒருரட்சகர்வருவார் என்று கற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.

அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண் டிருக்கும் சிறுபான்மை இனமொன்றின் தலைவர்கள் தீர்க்கதரிசன நோக்கிலோ நடைமுறைத் தந்திரோபாயத்திலோ சிறிதளவேனும் தவறு விடுவார்களேயானால் அந்த இனம் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிவிடும். இதுதான் தமிழ் மக்களுக்கு நடந்தது. புலிகளுடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முன்வந்தமை தீர்க்கதரிசன நோக்கிலும் நடைமுறைத் தந்திரோபாயத்திலும் விட்ட பாரிய தவறு. சமகால யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாததாலேயே இத் தவறை அவர்கள் புரிய நேர்ந்தது.

முன்னைய தலைவர்களும் இதுபோன்ற தவறுகளை விட்டிருக்கின்றனர். அதனாலேயே இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் அவர்களால் சிறிதளவும் முன்னேற முடியவில்லை. ஆனால் முன்னைய தலைவர்களின் தவறுகளால் இனப் பிரச்சினைக்கான தீர்வு பின்தள்ளிப் போனதேயொழியத் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் விட்ட தவறு தமிழ் மக்களுக்கு அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.

புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரத்திலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருந்தால் தமிழ் அரசியல் களம் இவ்வளவு பின்னடைவை அடைந்திருக்காது. தனிநாடு சாத்தியமில்லை என்பதை அந்த நேரத்திலாவது உணர்ந்து அரசியல் தீர்வுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அரசாங்கத்துடன் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பம் உடனடியாகக் கிடைத்திருக்காவிட்டாலும் கூட, தமிழ்த் தலைவர்கள் பிரிவினைவாதிகளல்ல என்ற அபிப்பிராயம் பெரும்பாலான சிங்கள மக்களிடம் ஏற்பட்டிருக்கும். அரசியல் தீர்வைச் சாத்தியமாக்குவதற்கு இந்த அபிப்பிராயம் பெரிதும் உதவக் கூடியது.

இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எல்லோரும் புலி ஆதரவு நிலைப்பாட்டையும் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டையும் தீவிரமாக வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம், இவர்கள் பிரிவினைவாதிகள் என்ற அபிப்பிராயத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தார்கள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் இது ஒரு பிரதான தடைக்கல்.

நியாயமான அரசியல் தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர முடியும். சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் சர்வசன வாக்கெடுப்பில் சாதகமான முடிவு சாத்தியமில்லை. அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினையாகப் பார்க்கும் மனோநிலையைத் தமிழ்த் தலைவர்களே தோற்றுவித்திருக்கின்றார்கள்.

இது அரசியல் தீர்வு முயற்சியைப் பொறுத்த வரையில் மிகவும் பின்னடைவான நிலை.

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்

ஜனாதிபதியின் முதலாவது பதவிக் காலமான சமாதான கட்டத்தில் தலைவர்கள் தவறான நிலைப்பாட்டை மேற்கொண்டதன் காரணமாக தமிழ் அரசியல் நிலை மிகவும் பின்னடைவு கண்டது. இரண்டாவது பதவிக் காலமான அபிவிருத்திக் கட்டத்திலும் நாம் பின்தங்கி நிற்போமானால் அரசியல் தீர்வு முயற்சி மிகவும் பலவீனமடைந்துவிடும். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் இப்போது தமிழ் மக்களுக்கு ஏற் பட்டிருக்கின்றது.

தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கியிருக்கின்றன. அரசாங்கம் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்துகின்ற வேளையில் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் தலைவர்கள் செயற்பட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துகின்ற அதேவேளை இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியையும் முன்னெடுப்பது சிரமமானதல்ல.

நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது நாம் வேகமாகப் பின்னோக்கிச் செல்லக்கூடாது. எங்கள் முன்னுரிமைகளைச் சரியாக முடிவு செய்து செயற்படுவதிலேயே தமிழ் மக்களின் நிம்மதியும் முன்னேற்றமும் தங்கியுள்ளன.

இரண்டு விடயங்களை எங்கள் முன்னுரிமையாகக் கூறலாம். ஒன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு. மற்றது தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் நாங்கள் மிகவும் பின்னுக்குச் சென்றுவிட்டோம். பின்தங்கியிருப்பது வேறு. பின்னுக்குச் செல்வது வேறு. அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் கணிசமாக முன்னேறிய நிலைக்கு வந்து திடீரென வெகுவாகப் பின்னுக்குச் சென்று விட்டோம். இந்த நிலையிலிருந்து படிப்படியாகவே முன்னேற வேண்டும். அரசியல் தீர்வு முயற்சியில் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் நின்ற இடத்துக்கு மீண்டும் வர நீண்ட காலம் எடுக்கலாம். எனவே, அரசியல் தீர்வு முயற்சியில் மாத்திரம் எங்கள் ஈடுபாட்டைச் செலுத்து வோமானால் அபிவிருத்தியில் வெகுவாகப் பின்தங்கிவிடுவோம்.

நாடு பூராவிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியும் ஒன்றுக்காக மற்றது பின்தள்ளப்படாமல் சம காலத்தில் முன்னெடுக்கப்பட வேண் டியவை.

(ஜீவகன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com