Contact us at: sooddram@gmail.com

 

கறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை

விடுதலை அடைந்த இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் வேட் டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டு கள் அடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்து முடிந்த வகையில் எல்லாம் போராடினர். தமிழகத்திலும் ஏராள மான சிகப்பு மலர்கள் கொடிய அடக்கு முறையால் வீழ்த்தப்பட்டன. சேலம் சிறைகூட இந்த இரத்த வேட்டைக்கு தப்பவில்லை. 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையிலும் துப்பாக்கிச் சூடு. இரணி யன், மாரி, மணவாளன், தூக்கு மேடை பாலு, திருப்பூர் பழனிச்சாமி, அன்னை லட்சுமி என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது இக்காலகட்டம்தான். சதி வழக்குகள், கொலை வழக்குகள் என சிறைக்கூடங்களில் கம்யூனிஸ்டு களை பூட்டிக் கொக்கரித்தது ஆளும் வர்க்கம். கட்சி மீது தடையும் நீடித்த காலம்.

பாட்டாளி வர்க்கத்திற்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தபோது பல வார, மாத, தின ஏடுகள் தங்கள் எழுத்தாயுதத்தை அடக்குமுறைக்கு எதிராக உயர்த்தத் தவறின. ஆளும்வர்க்க அடக்கு முறையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஏடுகளே அதிகம்.

இந்த நெருக்கடியான சூழலில்திராவிடர் கழகம் மட்டும் கம்யூ னிஸ்டுகளுக்கு துணை நின்றது. தோள் கொடுத்ததுஎன்கிறார் என். ராம கிருஷ்ணன்.

திராவிடர் கழகத்தின் ஏடானவிடுதலைகம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல் குறித்த விபரங்களை வெளியிட்டது. தாக்குதலைக் கண்டி த்து கட்டுரைகள் வெளியிட்டது. சித்ரவதைகளை, அடக்குமுறையை கண்டித்து ஏஐடியுசி தலைவர் சர்க் கரைச் செட்டியார் விடுத்த அறிக்கை விடுதலையில் வெளியானது.

பெரியார், சேலம் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தலையங்கம் தீட்டினார். 1950 பிப்ரவரி 15ஆம் நாள் விடுதலையில் இது வெளிவந்தது. அந்த நெடிய தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார்:

சேலம் பலி 22 ஆகிவிட்டது. காயம்பட்டவர்களில் எத்தனை பேர் அதிகார வெறிக்குப் பலியானார் களோ தெரியவில்லை. ரயில் விபத் தோ பஸ் விபத்தோ ஏற்பட்டால் விபத்தில் மாண்ட உயிர்களின் பெயர்கள் உடனே வெளிவந்துவிடு கின்றன. ஆனால் சேலம் பலிப் பட்டி யல் மட்டும் வெளிவராத காரணம் தெரியவில்லை

தங்கள் கொள்கைக்காக உயிர் விட்ட ஒப்பற்ற வீரர்களை அதி காரவர்க்கம் மரக் கட்டைகளாகக் கருதி இருக்கிறதா?
அல்லது அவர்க ளும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் உண்டு என்று கருதி இருக் கிறதா? சவங்களைக் கூட இவர்கள் கண்ணில் காட்டியதாகத் தெரிய வில்லை

ஊரெங்கும் 144 தடையும், ஊர் வலத்திற்குத் தடையும் தொழிலாளர் வாய்களில் அடக்குமுறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள்தோறும் கண்டனம் சரமாரியாகக் கொட்டுவதை காண லாம். இன்று மூச்சு பேச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும் தொழிலாளர் உலகைக் கண்டு ஏராளமாகச் சிரிக்கின்றன. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது.”

இப்படி எழுதியதோடு நின்று விடாமல் மார்ச் 5ஆம் நாள் மாநிலம் முழுதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த பெரியார் அறைகூவல் விடுத்தார். எம்.ஆர். ராதா தலைமை யேற்று கண்டன ஊர்வலம் நடத்தி னார். அவர் வெள்ளைக் குதிரையில் வந்தார். பெரியார், குத்தூசி குருசாமி போன்றோர் கம்யூனிஸ்டுகளை ரகசியமாக சந்தித்து ஆதரவும் உத விக்கரமும் நீட்டினர். ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பொள்ளாச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஆர். ராதாரத்தக் கண்ணீர்நாடகத்தையும்; ‘பேப்பர் நியூஸ்’ ‘முருகன்போன்ற நாடகங்க ளையும் நடத்தி நிதி திரட்டி உதவி னார். பல தோழர்கள் சிறையில் இரு ந்து விடுதலை அடைய பெரியாரும், திராவிட இயக்கத் தலைவர்கள் குத்தூசி குருசாமி போன்றோரும் செய்த உதவிகள் நிறையவே உண்டு. இந்த மாபெரும் தோழமைக்காக தோழர் எம். கல்யாண சுந்தரம் நன்றி தெரிவித்து குத்தூசி குருசாமிக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாகும். அதில் அவர் எழுதி னார்:

என்னுடைய விடுதலை திராவி டர் கழகம் - கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கியத்தின் வெற்றியாகும். ஜனநாயக சக்திகளின் வெற்றியாகும்

கம்யூனிஸ்ட் கட்சியும் தொழி லாளி விவசாயி மக்களின் இயக்கங் களும் காங்கிரஸ் பாசிஸ்ட் அடக்கு முறைக்கு பலியானபோது விடு தலைப் பத்திரிகை செய்துள்ள சேவை சரித்திரத்தில் இடம் பெற வேண் டியது

இப்படி அன்று கம்யூனிஸ்டுகள் நெருப்பு வளையத்தில் சிக்கித் தவித்தபோது துணை நின்றவர்கள் திராவிடர் கழகத்தவர்களே. இந்த உறவும் தோழமையும் கம்யூனிஸ்டுக ளிடம் என்றும் பசுமையாகவே இருக்கும். இதன் வெளிப்பாட்டை இன்னொரு செயலில் எதிரொலிக்கக் காண்கிறோம்.

“1965ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் குத்தூசி குருசாமி சென்னையில் காலமானார். அவரது உடல் ஷெனாய் நகரிலிருந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது நடைபெற்ற ஒரு சம்பவத்தினை பிரபல கல்வியாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராக இருந்தவருமான நெ.து. சுந்தர வடிவேலு விவரிக்கிறார்என தனது நூலில் குறிப்பிட்டுள்ள என். ராமகிருஷ்ணன் அந்த விவரங்களை சுந்தர வடிவேல் நூலிலிருந்து அப் படியே தருகிறார்.

நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வரு கிறது.

குத்தூசி குருசாமியாருக்கு இறுதி வணக்கம் செலுத்த பலதரப்பட் டவர்கள், பல கட்சியினர் கூடியிருந் தார்கள். அறிஞர் அண்ணாவும் எம். கல்யாண சுந்தரமும் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்

இறுதி ஊர்வலம் புறப்படுவதற்கு இரண்டொரு மணி இருந்தது.
அவ் வேளை செஞ்சட்டை அணியினர் வந்து சேர்ந்தார்கள். தோழர் ஏ.எஸ். கே.(ஏ.எஸ்.கே. அய்யங்கார் கம் யூனிஸ்ட், தொழிற்சங்கத் தலைவர்) ஏற்பாடு அது! தோழர் குருசாமியார், இல்லத்தின் முன் அணிவகுத்து நின்றார்கள். இறுதிப் பயணத்தில் அயனாவரம் சுடுகாடு வரை இருபுற மும் அணிவகுத்து வந்து தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்...”

எதற்காக நன்றி? தன்னாட்சி இந்தியாவில் நம் ஆட்சிகள் செய்த முதல் பெரிய செயல் பொதுவுடை மைவாதிகளை வேட்டையாடியதே. பொதுவுடைமைக் கட்சிக்குத் தடை விதித்தனர்

சென்னை மாகாணத்தில் ஆயி ரக்கணக்கானவர்களை சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தினார்கள்.
சேலம் கடலூர் மையச் சிறைகளில் கம்யூனிஸ்டுகளை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளினர்.”

அக்கொடுமைகளை எதிர்த்துக் கடுமையாகக் கண்டித்தது பெரியா ரின் திராவிடர் கழகம்; ஆசிரியர் குத்தூசி குருசாமியின் அனல்பொழி யும் கட்டுரைகளும் தலையங்கங்க ளும் தொடர்ந்து கொடுமைகளை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர் களைத் தலை குனியச் செய்தது...”

அக்கால கட்டத்தில் தலை மறைவாக இருந்த சில கம்யூனிஸ்ட் முன்னணியினர் குத்தூசியாரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து தப்பிச் சென்றனர். இவற்றிற்கு நன்றியாக ஏ.எஸ்.கேயின் தோழர்கள் அணிவகுத்தார்கள்

நெ.து.
சுந்தரவடிவேலுவின் மேற் கூறிய வாக்குமூலம் நமக்குப் பல செய் திகளை உறுதி செய்கிறது. அது மட் டுமா?

காலச் சூறாவளியில் என்னென்ன வோ நிகழ்ந்துவிட்டது. தமிழகத்தில் உழைக்கும் வர்க்கம் மீது கடும் அடக்குமுறைகளை திராவிடர் இயக்க வாரிசுகளாய் வந்தவர்கள் ஏவிவிட்டதும்...இன்னும்...தொடர்வதும் நம் அனுபவம்.

மீட்டெடுக்க
வேண்டிய உயர் அரசியல் சமூக பண்பாட்டு வேர் களை இச்சம்பவங்கள் நமக்கு நினை வூட்டவில்லையா?

(தீக்கதிர்)

இலங்கையில் புலிகளின் தலமையில் தனிநாடு அமைந்திருந்தால் இந்தியா சுதந்தரம் அடைந்தபோது கம்யூனிஸ்ட்டுக்களுக்கு நடைபெற்றதைப் போலவே நடைபெற்று இருக்கும் இதற்கான அத்திவாரத்தை புலிகள் 1980 களிலேயே போட்டு நடைமுறைப்படுத்தி வந்தனர். - சமரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com