Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்!

லண்டனில் நேற்று (26-10-2010) நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் (கோபியோ) சர்வதேசமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

லண்டனில் நடைபெறும் கோபியோ வருடாந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்த மேதகு பிரபு டில்ஜித் ரானா அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம் மாநாடு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கும் வெளிநாட்டு இந்தியர்களும் என்ற விடயம் பற்றியும், வெளிநாட்டு இந்தியப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாட உள்ளது. இவ்விரண்டு விடயங்களும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மட்டுமன்றி முழு மனித இனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என நான் கருதுகின்றேன்.

வளர்முக நாடு களுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையே காணப்படும் பெரியள விலான இடைவெளியை அகற்றும் நோக்குடனேயே புதிய பொருளாதார கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கொள்கையானது நாடுகளின் இறைமை, சமத்துவம், சர்வதேச நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு என்பவற்றை அதிகளவில் வலியு றுத்தியது.

இதனால் உலகில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக்கட்டப்பட்டு யாவருக்கும் செல்வம் முறையாகப் பகிரப்படும். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் வளர்முக நாடுகளுக்கு தமது உதவிகளை வழங்க வேண்டும் என்பதும் இக் கட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை பாராளுமன்றத்தில், தலைநகரில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக நான் தெரிவு செய்யப்பட்டவன். இந்த மகாநாட்டில் அம்மக்கள் சார்பாக பங்கேற்கின்றேன்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை அரசும் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் சட்டத்தைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் ஓர் இரவில் நாடற்றவர்களாயினர். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி ஏழு இலட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்தியவம்சாவளி மக்களும் நீண்டகாலமாக நடாத்திய போராட்டங்கள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் என்பவற்றின் காரணமாக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆயினும் ஏறத்தாழ ஐந்து தசாப்த காலத்திற்கு அவர்கள் உரிமையற்றவர்களாக வாழ நேர்ந்ததை அவர்களுடைய சமூக தலைவர்கள் இலங்கை அரசாங்கங்களோடு இணைந்து தேசிய அபிவிருத்திப் பணியில் பங்குபற்றி ஒத்துழைத்ததன் காரணமாக இந்த நாட்டவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிந்தது.

அண்மைக் காலங்களில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாண சபைகளுக்கு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து வருகின்றனர். இலங்கையின் பிரதான கட்சிகள் அரசாங்கம் அமைக்கும் போது இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் அதில் பிரதான பங்கினை வகித்தனர். நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த குடியுரிமைப் பிரச்சினை தீர்க்க்பபட்ட பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையின் பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.

1980 களின் பின்னர் எமது மக் கள் சில துறைகளிலாவது மேம் பாடு கண்டுள்ளனர். காலஞ்சென்ற தலைவர் தொண்டமானின் தலைமைத்துவமும் வழிகாட்டலும் இதற்குக் காரண மாயிருந்தது. அவர் அப்போதிருந்த அரசாங் கத்திற்கு ஆதரவு வழங்கி அரசின் ஒத்துழைப்பைப் பெற்று தனது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்தார்.

பொதுவாகவே இந்திய வம்சாவளி மலையகத் தலைவர்கள் ஐக்கிய இலங்கையை ஏற்படுத்தும் அர சாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந் துள்ளனர். பாராளுமன்ற உறுப் பினர்களாக இருந்த அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான், பெ. சந்திரசேகரன் அமைச்சர்களாக பணியாற்றினார்கள். தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இத்தகைய முறை யில் அமைச்சராகப் பணியாற்றி வருகின்றார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் நிறுவன ரீதியாக ஏற்பட்ட சில முன்னேற்றங்களை குறிப்பிட வேண்டும். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கென இரு ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்ப கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளன. ஜெர்மனி, சுவீடன், நோர்வே போன்ற நாடுகளின் உதவியுடன் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.

ஆரம்பக் கல்வி நிலையில் மாணவர்களின் சேர்வு வீதம் திருப்திகரமாகவுள்ளது. மக்களின் எழுத்தறிவு வீதங்களும் அதிகரித்து வருகின்றது. பெருந்தோட்ட மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எமது சமூகத்துக்கு கல்விச் சேவையாற்றி வருகின்றன. அண்மைக்காலங்களில் 10,000 ஆசிரியர்கள் வரை எமது சமூகத் திலிருந்து ஆசிரியர்களாக தெரிவாகி பணியாற்றி வருகின்றனர்.

மற்றொரு பிரதான முன்னேற்றம் அண்மைக்காலங்களில் இம்மக்கள் தமக்கென ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளமையாகும். அறிவு சார்ந்த சமூகத்தில் தாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக ஏற்றங்காண வேண்டும் என்ற உணர்வுகள் இந்தக் கோரி க்கையில் பொதிந்து காணப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்திய வம்சாவளி மலையகச் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களான பேராசிரியர் சோ. சந்திரசேகரன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி, பேராசிரியர் எஸ். எஸ். மூக்கையா, கல்வியாளர் தை. தனராஜ், கலாநிதி எஸ். சந்திரபோஸ் ஆகியோர் இப் பல்கலைக்கழகத்திற்கான கருத்தாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கம் மலையக ஆசிரியர்களின் தொழிற் தகைமைகளை மேம்படுத்தும் முயற் சியில் செயற்பட்டு வருவதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆங்கில ஆசிரியர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அண்மைக்காலங்களில் இந்திய அரசு, ஆயிரக்கணக்கான இலங்கை வாழ் இந்திய வம்சாவளிகளுக்கு வெளிநாட்டு இந்திய பிரஜை என்ற அந்தஸ்தை வழங்கி வருகின்றது. இந்த நடவடிக் கையானது எமது சமூ கத்திற்கும் அவர்களுடைய பூர்வீகமான இந்திய கிராமங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்த உதவியுள்ளது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவில் தொழில் முயற்சிகளைத் தொடங்கவும் இலங்கை இந்தியத் தொடர்புகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. ஆரம்பக் காலத்தில் லலிதா கந்தசாமி- எஸ். கார்மேகம் உட்பட பலர் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களுக்கும் இந்திய அரசாங்கத் திற்கும் நன்றியைக் கூற நான் விரும்புகின்றேன்.

இலங்கையில் கோபியோ இந்திய வம்சாவளி மக்களின் சகல தரப்பினரதும் ஏகோபித்த அங்கீகாரத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள பல இன சூழலுக்கேற்ப அணுகு முறைகளை கையாண்டு பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்க்க உதவியுள்ளது. சர்வதேச கோபியோ அமைப்பு ஏனைய நாடுகளில் இயங்கும் கோபியோ அமைப்புகளுடன் இணைந்து பரஸ்பரம் செயலாற்றி வருகின்றது.

சில காலத்திற்கு முன்னர் எமது கலாசார மரபுகளை இனங்கண்டு கொள்ள ஒரு கலாசார மரபுரிமை கிராமத்தை ஏற்படுத்தும் எண்ணக் கருவை இலங்கை பத்திரிகைத்துறைத் தலைவர் குமார் நடேசன் முன்வைத்தார். முன்னாள் அமைச்சர் அமரர் பெ. சந்திரசேகரன் இச் செயற்றிட் டத்திற்கு பெரிதும் உதவினார். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை ஏற்படுத்த இந்தச் செயற்றிட்டம் உதவும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது.

இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அர்ஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள்.

அண்மையில் முடிவடைந்த போரின் பின் எமது நாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஆசியாவின் அதிசிறந்த நாடாக உருவாகி வருகின்றது. தற்போது உருவாகியுள்ள அமைதிச் சூழலை பயன்படுத்தி நாட்டின் சகல இன மக்களும் மேம்பாடடையக் கூடிய ஒரு கொள்கைத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார். வட மாகாணத்திலும் விரைவில் தேர்தலை நடாத்தி தமிழ் தலைவர்கள் தலைமையில் ஒரு புதிய மாகாண அரசினை அரசாங்கம் ஏற்படுத்தவுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பல சொல்லொண்ணாத் துயரங்களையும், இடர்களையும் சந்தித்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் தற்போது அமைதியான வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இலங்கையின் முதலீட்டுச் சபையானது அவர்களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டமொன்றை வகுத்துள்ளது என்பதை இங்கு வந்துள்ள பேராளர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் நிலவும் அமைதியான சூழலைக் கண்டுகொள்ள உங்கள் அனைவரையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அன்புடன் அழைப்பு விடுக் கின்றேன்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரவாசி பாரதிய திவாஷ் விழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்க முடியுமென நம்புகின்றேன். இந்த மகாநாடு வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினரின் எதிர்கால மேம்பாட்டுக்கான சிறந்த சிந்தனைகளும், கருத்துக்களும் இந்த மகாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும் என்பதே எனது நம்பிக்கை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com