Contact us at: sooddram@gmail.com

 

அமரர் தொண்டமானின் 11வது சிரார்த்த தினம் இன்று

காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட உன்னத தலைவர்

(கே. மாரிமுத்து)

அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 11 வது சிரார்த்த தினம் இன்றா கும். மலையக மக்களின் மாபெரும் சொத்தாகவும், மலையக அரசியல் தொழிற்சங்க சிருஷ்டி கர்த்தாவாகவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் திகழ்ந்தார் என்று கூறுவது மிகை யாகாது. கடமை, கண்ணியம், அர்ப்பணிப்பு, வேகம், விவேகம் ஆகிய அம்சங்களின் வரைவிலக் கணமாகவும் சாணக்கியத் தலை வராகவும், தன்னை வரலாற்றில் பதிய வைத்துக்கொண்டவராவார். கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரையிலும் இலங்கை யிலிருந்து சர்வதேசம் வரையி லுமான மக்களினதும், அரசியல் பெருந்தகைகளினதும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

இந்த உன்னத தலைவரின் சிரார்த்த தினத்தை நினைவு கூரும் நாம் அவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும், பணிகளையும் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவராக விளங்கிய அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், மலையக வரலாற்றில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களை தினமும் அலைக்கழித்து வந்த பிரச்சினைகளின் விடிவுக்கும், உறுதியான சேவை யாற்றியதன் நிமித்தமே மலையகம் இன்று ஏனைய இன மக்களோடு சரிசமமாக போட்டியிடும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை ஓரம் கட்டிய பிரஜாவுரிமை வாக்குரிமைச் சட்டங்களையும் மற்றும் கைத்தொழில் பிணக்கு, சமூக, பொருளாதார பிரச்சினைகளையும், தீர்க்க தரிசனத்தோடும், சாணக்கியத்தோடும், அணுகி அவ்வவ்போது தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தவர் அவரே.

கம்பளை அன்ரூஸ் கல்லூரியில் தனது கல்வியை முடித்துக்கொண்டு வெளியேறியவுடன் தனக்குள் உதித்த எண்ணத்தின் விளைவாக மலையக மக்களுக்கு சேவை செய்வதை தனது இலட்சியமாக ஏற்படுத்திக் கொண்டு அச்சேவையினை 1939ம் ஆண்டில் இலங்கை- இந்தியன் காங்கிரஸ் மூலமாக மக்களுக்கு பல்வேறு வகையில் சென்றடையும் வகையில் விஸ்தரிக்கத் தொடங்கினார்.

இவரது வேகமான, விவேகமான சேவை காரணமாக இலங்கை- இந்திய காங்கிரஸின் கம்பளை மாநாட்டில் வரவேற்புக்குத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1947ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்திலே அமரர் தொண்டமானுக்கு பிரவேசம் கிடைத்தது. மலையக மக்கள் சார்பாக தானே தலைமைதாங்கி 7 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரைச் சார்ந்ததாகும். அன்றிருந்த அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் பிரஜாவுரி மையையும், வாக்குரிமையையும் பறித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1952ஆம் ஆண்டில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மூன்று மாதம் வரையும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றிகண்டார்.

இ. தொ. காவின் செயற்பாடுகள் 70 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு இன்றுவரையும் மக்களை சென்றடைந்த வண்ணமே உள்ளன. ஆசிய நாட்டிலே மிகப் பெரிய தொழிற்சங்கமாக இ. தொ. கா. வை வளர்த்தெடுத்த பெருமை அமரர் தொண்டமானையே சாரும். சர்வதேச தொழில் ஸ்தாபனம், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியன இ. தொ. காவை அங்கீகரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக மலையக தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரம் அமரர் தொண்டமான் என்றால் மிகையாகாது. காலத்தின் தேவையை உணர்ந்து செயற்படும் வல்லமையும் பேரம் பேசும் தன்மையும் இவரிடம் நிறையவே காணப்பட்டன. அகிம்சை முறையில் மிகச் சாதுரியமாகவும், பிரச்சினைகளை அணுகுவதில் வல்லவர் என்று பல அரசியல்வாதிகளால் போற்றப்பட்டுள்ளார்.

மலையக மக்களுக்கு இழைத்த அநீதிகள், பறிக்கப்பட்ட உரிமைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பல போராட்டங்கள் இவரது காலத்தில் வெற்றிகண்டமை இவரின் அணுகுமுறைக்கும் விவேகத்திற்கும் சான்றாக அமைகின்றன.

அமரர் தொண்டமான் பல தொழிற் சங்கப் போராட்டங்களை நடாத்தியிருந்தார். இதனில் மலையகத்திலேயே முதலாவது வரலாறு கண்ட போராட்டமான உருளை வள்ளிப் போராட்டத்தை நினைவு கூரலாம். இதுபோன்ற முல்லோயா, கந்தஹேன, ஹைபோரஸ்ட், வனராஜா, கலாபொக்க, சென் ஜேம்ஸ், மொன்டிக்கிறிஸ்டோ, கடியன்சேன, சென் கிளயர் இவைகள் அனைத்துமே தொழிலாளர்கள் உரிமைகளைப் பெறுவதற்காகவே நடத்தப்பட்ட போராட்டங்களாகும்.

அன்னாரின் தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியலும் பின்னிப் பிணைந்து இருந்ததினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாறியது. இதன் பயனாய் இவர் அமைச்சராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும், நீண்டகாலம் சேவை செய்ய முடிந்தது. இவரின் விடாமுயற்சியினாலேயேநாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் விசேட சட்டம் 1988 நவம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாற்பது வருடங்களாகநாடற்றவர்களாக கருதப்பட்ட தோட்டத் தொழி லாளர்களும் ஏனைய இந்திய வம்சாவளியினரும் இந்த நாட்டின் பிரஜைகளானார்கள்.

இவர் ஈட்டிய மற்றொரு சாதனை தான் 1989ம் ஆண்டு ஏப்ரல் 26ந் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவாக்குரிமையை வழங்குவதற்கான திருத்தச் சட்டம்’. இந்த சட்ட மூலத்தினால் புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை வாக்காளர்களாக பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.

இதன் பயனாக இன்று இந்திய வம்சாவளி மக்கள் பாராளுமன் றத்திற்கும், மாகாண சபைகளுக்கும்பிரதேச சபைகளுக்கும் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்க வழி பிறந்தது. இன்று நாமும் இந்த நாட்டின் பிரசையாக ஏனைய சமூகத்தவர்கள் போல் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி போன்ற துறைகளில் பங்குகொள்ளவும் பங்களிப்பைச் செய்யவும் முடிகிறது.

அன்னார் தோட்டப்புற மாணவர் களின் கல்வியில் மிக அக்கறை காட்டியதாலேயே தோட்டப் பாடசா லைகளை அரசாங்கம் பொறுப்பேற்க நேர்ந்தது. சிறிபால் கல்வியியல் கல்லூரியில் தோட்டத் தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு 75% வீதம் இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்த காலப் பகுதியில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் கிராமிய கைத்தொழில் உல்லாசத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நான் பணி புரிந்ததை இவ்வேளையில் நினைவு கூருவதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

அன்னாரைத் தொடர்ந்து அவரது பேரனாகும் இ. தொ. கா பொதுச் செயலாளரும், கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான கெளரவ ஆறுமுகன் தொண்டமான் பா.அவர்களின் சேவையும், தலைமைத் துவமும், தொழிற்சங்க ரீதியாகவும, அரசியல் ரீதியாகவும், தோட்டப்புற மக்களுக்கும், இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய அம்சமாகும்.

அன்னார் அரசியலில் ஈடுபட்டு கட்சிகளோடு பேரம் பேசி, அதன் வாயிலாக மலையக மக்களுக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொடுக்கும் யுக்தியை கையாண் டுள்ளார். பதவியில் இருந்த அரசை தக்க வைக்கும் அல்லது அசைய வைக்கும் வல்லமையை கொண் டிருந்தார். மலையகத் தலைவர் களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கிய அமரர் தொண்டமானை இந்நாளில் கெளரவமாக நினைவு கூர்வோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com