Contact us at: sooddram@gmail.com

 

கொழும்பு மாநகரை பாதுகாப்புச் செயலாளர் நவீன மயப்படுத்தியது பாராட்டுக்குரிய ஒரு விடயம்

கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் கொழு ம்பு மாநகரை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சியின ரின் பலத்த கண்டனம் எழுந்துள்ளது. என்றாலும் என்னைப் பெறுத்தமட்டில் எல்லோருக்கும் தெளிவாக விளங்கக்கூடிய நல்ல மாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது கொழும்பு மாநகரம் மிகவும் சுத்தமாக இருக்கிறது. முன்பு இருந்தது போன்று எந்தவித காரணத் திற்காகவும் குப்பைக் கூளங்கள் போடுவதை காண முடியாதிருக்கிறது. கொழும்பு 7, செல்வந்தர்கள் வாழும் இடம் மட்டு மல்ல, பொரளையில் உள்ள வனாத்தமுல்ல பிரதேச மும் மிகவும் சுத்தமாகவே காணப்படுகிறது. கொழும்பு மாநகரில் வாகன நெருக்கடியும் பெருமளவில் குறைந் திருக்கிறது. கொழும்பு மாவட்டத்திற்குள் கொள்கலன் வாகனங்களை இரவு நேரத்தில் மாத்திரம் செயற்பட விட்டால் இந்த வாகன நெரிசல் மேலும் குறைந்து விடும்.

கொழும்பு மாநகரம் படிப்படியாக நவ நாகரீகமான, சகல வசதிகளையும் கொண்ட நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று நடைபாதைகளில் வியா பாரம் செய்பவர்களை காணமுடியாதுள்ளது. அவர் களுக்கு தங்கள் வியாபாரத்தை செய்வதற்காக மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் மாற்று இடங்களில் வியாபாரம் செய்யும் முன்னைய நடை பாதை வியாபாரிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய இடங்களில் வசதிகள் அதிகரித்திருப்பதுடன் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதாக கூறு கின்றனர்.

இப்போது நடைபாதைகளும் சீமேந்து கற்களை பதித்து அலங்காரமாக காணப்படுகிறது. நடைபாதை யில் கற்களை பதிக்கும் கொந்தராத்தும் ஒருவரிடமே கொடுக்கப்பட்டுள்ளதனால் அதில் சில தில்லு முல்லுகள் நடப்பதாக புகார்கள் கிடைக்கப்பெற்று ள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் உண்¨மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், நடைபாதைகள் நன்றாக இருக் கின்றன. கோட்டை, காலி முகத்திடல், பேர ஏரி, சுதந்திரசதுக்கம், தியவன்னா ஏரி ஆகிய பிரதேசங்கள் மாற்றமடைந்து அழகான தோற்றத்தை இன்று பெற்று ள்ளன.

புராதன மற்றும் அழகிய தோற்றத்தையுடைய கட்ட டங்களை சிதைவில் இருந்து காப்பாற்றி, அவற்றை திருத்தியமைத்து இன்று சிறந்த முறையில் காட்சியளி க்கக் கூடியதாக திருத்தப்பட்டுள்ளன. இவ்விதம் திருத்தி அமைக்கப்பட்ட அந்தப் பழைய கட்டடங்கள் கொழும்பு மாநகரத்தின் தோற்றத்திற்கு மேலும் மெரு கூட்டுகின்றன. மொழும்பில் உள்ள ஒல்லாந்தர்களின் ஆஸ்பத்திரி, கொழும்பு மாநகரில் உள்ள மணிக் கூண்டு கோபுரம், சத்தாம் வீதியில் உள்ள பழைய கட்டடங்களும் இதற்கு சான்று பகர்கின்றன.

பேரை ஏரியை அடுத்துள்ள பிரதேசம் அபிவி ருத்தி செய்யப்பட்டு நவீனமயப்படுத்த ஜனாதிபதி பிரேமதாஸ காலத்திலும், மங்கள சமரவீர அமைச்ச ராக இருந்த போதும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டன. ஆயினும் அவை எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இவை அனைத்தையும் பார்க்கும் போது கொழும்பு மாநகரம் முற்றிலும் மாறுபட்ட அழ கிய கவர்ச்சிகரமான மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விமர்சிப்பதற்கான சில காரணங்களும் இருக்கலாம். நான் அவை பற்றியும் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். என் றாலும் பாதுகாப்பு செயலாளரின் முழுமையான நட வடிக்கையை நாம் எடைபோட்டு பார்க்கும் போது கொழும்பு மாநகரம் முன்பிருந்ததை விட இன்று அபி விருத்தி அடைந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் இவ்விதம் தெரிவிக்கும் கருத்து கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரர் என்பதால் அவரின் குடும்ப த்தை மகிழ்ச்சியடைய எழுதப்பட்டது என்று கூறலாம். நான் அவ்விதம் சுயநல நோக்கத்துடன் இந்தக் கரு த்தை தெரிவிக்கவில்லை. ஒரு நல்ல விடயத்தை யார் செய்தாலும் அதனைப் பாராட்டுவது அவசியமாகும். எனக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் எந்த தனிப்பட்ட தொடர்பும் இல்லை. நான் அவரை ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் தான் சந்தித்துள்ளேன். நான் அவருடைய நல்ல பணிகளை வரவேற்கின்ற போதிலும் அவை குறித்து விமர்சனங்களையும் செய்ய வேண்டியுள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அவர் நாட்டு க்காக செய்த பணியை நான் உண்மையிலேயே மதி த்து பாராட்டியுள்ளேன். கோத்தாபய ராஜபக்ஷவை பற்றி பேசும் போது எனக்கு ரஞ்சன் விஜேரட்ண வுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. ரஞ்சன் விஜேரட்ணவும் சிலரால் அதிகமாக விமர்ச்சிக்கப் பட்டு கண்டனத்திற்கு உட்பட்டவராகவும் இருந்தார். அன்று ரஞ்சன் விஜேரட்ண நாட்டின் அவசர தேவைக்காக உயிரையே பணயம் வைத்து சேவை யாற்றிய ஒரு மனிதராகவே பார்க்கிறேன்.

சமூக ரீதியில் பார்க்கும் போது எனக்கு ரஞ்சன் விஜேரட்ணவை விட, ரோஹண விஜேவீரவிடம் அதிக தொடர்பு இருந்தது. நான் ரோஹண விஜேவீர மேற்கொண்ட இரண்டாவது புரட்சியை நீண்டகாலம் நீடிக்க விடமால் தோற்கடிக்க வேண்டும் எனும் புரட்சியைக் கொண்டிருந்தேன். இரண்டாவது புரட்சியை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண் டவர் ரஞ்சன் விஜேரட்ண. ரஞ்சன் விஜேரட்ணவின் சிறந்த தலைமைத்துவம் இல்லாதிருந்தால் விஜே வீரவின் இரண்டாவது புரட்சியை முறியடிப்பது இலகு வாக இருந்திருக்காது.

இந்த இரண்டாவது புரட்சியை முறியடிக்கும் போது ரஞ்சன் விஜேரட்ணவினால் பல அராஜகங்கள் ஏற் பட்டது உண்மைதான். ஆயினும் இந்த இரண்டாவது புரட்சி வெற்றிபெற்றிருந்தால் அதை விட மோசமான அனர்த்தம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும். சமுதாய அடிப்படையில் எனக்கு விஜேவீரவுடன் நல்ல உறவு இருந்தாலும் அவருடைய புரட்சியை முறியடித்தது சமூகத்திற்கு ஒரு நல்ல செயற்பாடாகவே பார்க் கிறேன். அதனால் இந்த சாதனையை ஏற்படுத்திய ரஞ்சன் விஜேரட்ணவை ஒரு செயல்வீரனாக பார்த்து பாராட்டுகிறேன்.

ரஞ்சன் விஜேரட்ண கண்ணிவெடி ஒன்றின் மூலம் மரணித்தபோது ஏதோ ஒரு அலுகோசு மரணித்து விட்டான் என்று பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள். என்றாலும் ரஞ்சன் விஜேரட்ணவின் மரணத்திற்கு பின்னர் அவரது சாதனைகளை வெளிக்கொணர்வது எனது கடமையென நினைத்தேன். பத்திரிகையில் நான் அவ்விதம் எழுதியதற்கு எனக்கு பரவலான பாராட்டு கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நான் அன்றைய சூழ்நிலையில் எழுதியது எனது பொறுப்பு என்று கருதுகிறேன்.

பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை முறியடித்த தும் ஒரு சிறந்த சாதனையென்றே பார்க்கிறேன். பிரபாகரனை ஒழித்தபோது பேரழிவுகள் ஏற்பட்டன. ஆயினும் பிரபாகரனை துவம்சம் செய்யாமல் இருந்திருந்தால் இதைவிட மிகப் பெரிய பேரழிவு நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும். பிரபாகரனை துவம்சம் செய்த சாதனைக்குரிய கெளரவத்தை நான் மூவருக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷ, மற்றது ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய மூவரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து நான் மகிழ்ச்சி யடைந்தாலும், அவரை சிறையில் வைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. கோத்தாபய ராஜபக்ஷ யுத்த முனையில் சாதனை புரிந்தார் என்பது எனக்கு தெரிந்திருந்த போதிலும் அவர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளில் சாதனை படை ப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று அவர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெ டுத்து வெற்றிகரமான முறையில் நிறைவேற்றியிருக்கிறார்.

அனைத்து விடயங்களையும் ஒரு இராணுவ வீரரைப் போன்று நோக்குவது அவருக்கு இருக்கும் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு நகர த்தின் சிறப்பம்சம் அந்த நகரம் சுத்தமாக இருப்ப தாகும். ஆனால், நகரத்தைப் சுத்தமாக வைத்திருக்கும் பணியை மக்களுக்கு அச்சுறுத்தப்படாமலும் மக்களுக்கு இதனை நன்கு தெளிவுபடுத்தி சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும், அச்சுறுத்தல் மூலம் ஒரு விடயத்தை சாதிக்க முடிந்தாலும் அது ஒரு நியாயபூர்வமான நடவடிக்கை அல்ல.

கொழும்பு மாநகரத்தை பாதுகாப்பு செயலாளர் அபிவிருத்தி செய்யும் போது அவருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மக்களை சேரி வீடுகளில் இருந்து அகற்றும் செயற்பாடு என்று கூறப்படுகிறது. நான் எனது கண்ணோக்கில் பார்க்கும் போது பாது காப்பு செயலாளர் எடுக்கும் செயற்பாடு சரியானது. சேரி வீடுகளில் வாழ்பவர்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்கள் தொடர்ந்தும் ஏழ்மை நிலையில் துன்பம் அனுபவிக்க வேண்டு மென்று எவராவது நினைத்தால் அது வரவேற்கத்தக்க செயல் அல்ல. தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி தோட்டங்களில் உள்ள சேரி வீடுகளில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 66 ஆயிரம். ஒரு குடும்பத்தில் 5 பேர் என்று கணக்கெடுத்தால் இப்படியான மக்களின் எண்ணிக்கை 3லட்சத்து 30 ஆயிரம். இவர்கள் அனைவரும் இன்று 142 ஏக்கர் நிலப்பரப்பிலேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இதன் அடிப்படையில் ஒரு பேர்ச் காணியில் 3 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் ஒரு தனிமனிதருக்கு இருக்கும் காணியின் அளவு 18.23 சதுர அடியாகும். ஒரு குடு ம்பம் கழிவறைகள் உட்பட பார்க்குமிடத்தில் 91.16சதுர அடி நிலப்பரப்பிலேயே வாழ்கிறார்கள். இது ஒரு மிகவும் மோசமான நிலை என்பதை நாம் மீண்டும் எடுத்துரைப்பது அவசியமல்ல.

இந்நிலையை நாம் மாற்றுவது அவசியம். நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அல்ல, இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியம். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு மாடி வீடுகளை நிர்மாணிப் பதாகும். என்றாலும் 66ஆயிரம் குடும்பங்களுக்கு மாடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது இலகு வான காரியமல்ல. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிக்கின்ற காணியை விற்பனை செய்வதன் மூலம் தேவையான பணத்தை திரட்ட முடியும்.

இவ்விதம் காணிகளை விற்று பணம் திரட்டுவதற் காக 142 ஏக்கர் காணி இனம் காணப்பட்டுள்ளது. ஒரு பேர்ச்சஸ் காணியை 20லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். 142ஏக்கர் காணியை விற்பதன் மூலம் 45,440மில்லியன் ரூபாவை திரட்ட முடியும். இந்தப் பணத்தை ஒரு குடும்பத்திற்கென்று சராசரியாக பிரித்துப் பார்த்தால் 6.88லட்சம் ரூபா கிடைக்கும்.

இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு குடும்பம் வசதியாக வாழக்கூடிய மாடி வீடுகளை நிர்மாணிப்பது சாத்தியப்படாது. ஆயினும், இந்தக் காணிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் மாடி வீடுகளை கட்டுவதற்கான செலவீனத்தில் 70 சதவீதத்தையாவது ஈடு செய்யும். எஞ்சிய 30சதவீத த்தை அரசாங்கத்தினால் முதலீடு செய்ய முடியு மானால் இந்த மக்களுக்கு வசதியாக வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும். இந்த வீடமைப்புத் திட்டத்தை விரும்பாதவர்கள் இருந்தால் ஏதாவது நட்ட ஈடுகள் வழங்குவது குறித்து நடவடிக்கை எடு க்கலாம்.

இத்தகைய செயற்திட்டத்தின் மூலம் சேரிவீட்டு வாசிகளுக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுக்க முடியும். இதன் மூலம் கொழும்பு நகர சேரிவீட்டு வாசிகளுக்கு சுமுகமான தீர்வை வழங்க முடியும். அத்துடன் அவர்களின் வாழ்க்கையையும் உயர்த்த முடியும். இத்திட்டத்தில் கொழும்பு சேரி வீடுகள் அற்ற கொழும்பு நகரமாக மாற்ற முடியும்.

கொழும்பு நகரில் உள்ள அநாவசியமான கட்டடங் களை அகற்றுவதும் ஒரு கடினமான செயல்தான். அது என்றாவது, எவராவது ஒருவரினால் செய்ய வேண்டிய பணியாக இருந்தது. கடந்த காலத்தில் இந்த அநாவசியமான கட்டடங்களை தகர்த்தெறியாத காரணத்தினால் காளான்களைப் போன்று அதிகாரிக்க ஆரம்பித்தது. இதனால் நகரமே அவலட்சணமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் சட்ட விரோதமான கட்டடங்களை அமைக்கும் ஒரு கலா சாரத்திற்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி கம்யூனிச சமூக அமைப்பிற்காக பாடுபட்ட கால்மாக்ஸ் சித்தாந்தி களும், அவர்கள் கூட முதலாளித்துவக் கொள்கை யின் நல்ல செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். எங்கள் நாட்டு மார்க்ஸியவாதிகள் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பற்றி இந்த நல்லெண்ணம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

(ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் எழுதிய அரசியல் கட்டுரையின் தமிழாக்கம். )

மொழிபெயர்ப்பு - சக்தி

(இவ்விடத்தில் கோதபாய டக்டஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் பற்றியும் 'சரியான' பார்வையைக் கொண்டுள்ளார் என்ற குசுறு செய்தியையும் தெரிவிப்பது பொருத்தமானதாகும்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com