Contact us at: sooddram@gmail.com

 

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் திரிபுராவின் வெற்றி

(கி. இலக்குவன்)

நடைமுறை அறிவும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அரசு நீண்டகாலக் கண்ணோட்டத்துடனும் உறுதி யாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர் வமான விதத்தில் பன்முகப்பட்ட பரிமாணம் கொண்ட நுண்ணோக்குத்திட்டத்தை வகுத் தது. கலகக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளை விடுவிப்பதற்கு உளவி யல் அடிப்படையான செயல்பாடுகள் அரங் கேற்றப்பட்டன. ஆதிவாசி மக்களின் மனங்க ளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்ப குதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பாதுகாப்புப்படைகள் பங்கேற்ற வளர்ச் சித்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ் முறை களும் அத்திட்டத்தில் இணைக்கப்பட்டி ருந்தன.

கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் திரிபுரா மாநிலம் வெற்றி பெற்றது எவ்வாறு என்ற தலைப்பில்இந்துநாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக 2003 முதல் 2009 வரை பொறுப்பு வகித்த டி.என். சகாயா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சில வடகிழக்கு மாநிலங்கள் ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களை சமாளிக்க முடியாமல் திணறிவரும் வேளையில் திரிபுரா மாநிலத் தால் அதனை எவ்வாறு வெற்றிகரமாக சமா ளிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி விட்டு, அதற்கான பதிலையும் அவரே அளிக் கிறார்.

1971ல் திரிபுரா உபஜாதி சமிதி என்ற அமைப்பு உருவானதுடன் கலகத்துக்கான விதை ஊன்றப்பட்டது. 1989ல் திரிபுரா தேசி யத் தொண்டர் படையும் அதன் ராணுவப் பிரிவு 1990லும் துவங்கப்பட்டன. அம்மாநிலத் தில் ஆதிவாசிகள் 33.5 சதமானமும் வங்காளி கள் உள்ளிட்ட மற்றவர்கள் 66.5 சதமான மாகவும் இருந்து வருகின்றனர். வங்காளி களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையே பகைமைப் போக்கை வளர்ப்பதே இடதுசாரி களைத் தவிர்த்த பிற அரசியல் கட்சிகளின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பலமான தளமாக திரிபுரா மாநிலம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. 1978 முதல் 1988 வரை நிருபன் சக்ரவர்த்தியின் தலைமையில் இடது முன் னணியின் ஆட்சி நடைபெற்றது. இடதுமுன் னணியை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கு வதற்காக பிரிவினைக்கோரிக்கையை முன் வைத்து வந்த திரிபுரா உபஜாதி சமிதியுடன் கூட்டணியை அமைத்துக்கொள்வதற்கும் வன்முறை மற்றும் தேர்தல் முறைகேடுகள் மூலமும் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்து வதற்கும் காங்கிரஸ் கட்சி சிறிதும் தயக்கம் காட்டவில்லை. இது தீவிரவாதத்தின் வளர்ச் சிக்கு வழிகோலியது. 1993ல் மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றிய இடதுமுன்னணி தொடர்ந்து நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் நீடித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட் டுதலின் அடிப்படையில் செயல்பட்டுவரும் இடது முன்னணி கடைப்பிடித்துவரும் சரி யான கொள்கைகளே திரிபுரா மாநிலத்தில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு காரணமாக இருந்துவந்துள்ளது.

ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் வெறும் படைபலத்தைப் பயன்படுத்துவதை மட்டும் இடது முன்னணி நம்பியிருக்கவில்லை. சொல்லப்போனால் பிற மாநிலங்கள் இந்திய ராணுவத்தைக் களத்தில் இறக்குவதன் மூலம் தீவிரவாதத் தை நசுக்குவதற்கு முயற்சித்து வந்துள்ள நிலையில், மத்திய துணை ராணுவப்படை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றையே திரிபுரா மாநிலம் பயன்படுத்தியுள்ளது. இதற் காக, சிறப்புக்காவல்படை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஆதிவாசிப்பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். ஆயுதந்தாங்கிய கலகக் காரர்களின் நடவடிக்கை காரணமாக சாதா ரண ஆதிவாசிமக்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என்பது விளக்கப்பட்டது. அதே நேரத்தில் கலகத்தலைவர்கள் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் பெண்களிடம் பாலியல் ரீதி யாக தவறாக நடந்து கொள்ளுதல், ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதும் விளக்கப்பட்டன.

ஆதிவாசிகளுக்கு உதவும் விதத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமைதியான வாழ்க்கைமுறைக்கு திரும்பத் தயாராக உள்ள கலகக்காரர்களுக்கு நிதியுதவி, தொழிற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பகுதி கலகக் காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டால் அங்கே அரசின் நலத்திட் டங்கள் காலதாமதமின்றி அமல்படுத்தப் பட்டன. பொதுசுகாதாரம், மருத்துவ வசதிகள், வருமான அதிகரிப்பு போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாழ்க் கைத்தர மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப் பட்டன. ஆதிவாசிப் பகுதிகளுக்குச் செல்லும் மத்திய-மாநிலப் படைவீரர்கள், நலத்திட் டங்களை நிறைவேற்றுபவர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகமானார்கள். மாணவர்களுக்கு படிப்பதற்கான சாதனங்கள் மற்றும் விளை யாட்டுச் சாதனங்களை வழங்குதல், இடிந்து போன பள்ளிக்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைப் புனரமைத்தல், கணினி தொழில்முறைப் பயிற்சி, தையல் பயிற்சி, வலைப்பின்னல் கலைப்பயிற்சி ஆகியவற் றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் உள்ளுர் மக்களுடன் அவர்கள் நெருங் கிப்பழகுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. பாதுகாப்புப்படையினர் அரசின் மனிதமுக மாக, மக்களின் நண்பர்களாக, வளர்ச்சிப்பணி களில் ஈடுபடுபவர்களாக அறிமுகமாயினர். இதனால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை யும் பாராட்டுணர்வும் நன்றியுணர்வும் ஏற்பட் டிருந்தன. பாதுகாப்புப் படைகளைப் பற்றி மக்கள் மத்தியில் இருந்த அச்ச உணர்வும் சந்தேகங்களும் மறைந்து போயின.

மாணிக் சர்க்காரின் தலைமையில் அமைந்த அரசினால் துவக்கப்பட்ட அரசி யல் நிகழ்வுகள், ஆயுதந்தாங்கிய கலகம் என்ற தீமையை இல்லாமல் செய்வதற்கு பெரிதும் உதவின. கலகக்காரர்களின் கட்டுப் பாட்டில் இருந்த தொலைதூரப் பகுதிகளுக்கு அமைதிப்பேரணிகள் நடத்தப்பட்டன. கிராமப் பஞ்சாயத்துக்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை பலப்படுத்தப்பட்டன. இதனால் அவை உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித் தன. அரசின் வளர்ச்சிப்பாதையானது அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பாக ஆதிவாசி மக்களுக்கு கணிசமான வாய்ப்பு வசதிகளையும் மனநிறைவையும் ஏற்படுத் தும் விதத்தில் அமைந்திருந்தன. இப்படிப் பட்ட ஆக்கபூர்வ செயல்பாடுகள் காரணமாக ஆதிவாசிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருந்த பிளவு காணாமல் போயிற்று. ஆதிவாசிகள் தனிமைப்பட்டிருந்த நிலை மாறி பொது நீரோட்டத்தில் இணைந்தனர். இதனால் வளர்ச்சித் திட்டங்களில் மட்டு மின்றி, கலகக்காரர்களுக்கு எதிரான போராட் டத்திலும் அவர்களை அமைதிவழிக்குத் திரும்பக்கொண்டுவருவதிலும் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழி வகுக்கப்பட்டது.

இவ்வாறுதான் திரிபுரா மாநில அரசு, கலகக்காரர்களை வெற்றிகரமாக சமாளித்தது. அதற்குத் தேவைப்பட்டதெல்லாம், நன்கு வடிவமைக்கப்பட்ட பன்முகத்திட்டம், அசை க்கமுடியாத உறுதி, சரியான பார்வை/ அறிவுக் கூர்மையும் நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைமை, லட்சியத்தில் மனப் பூர்வமான பற்று, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சமூகப்பொருளாதார உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆதி வாசிகளின் கொந்தளிப்பான மனப்போக்கில் மாற்றம் கொண்டுவருவதற்கான உளவியல் ரீதியான செயல்பாடு.

இவையனைத்தும் கொண்டதாக மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா மாநில ஆட்சி இருந்தது என்கிறார் திரிபுரா மாநில முன்னாள் ஆளுநர் டி.என்.சகாயா.

மாணிக்சர்க்கார் மிகச்சிறப்பாக செயல் பட்டு வருகிறார் என்பது உண்மைதான் என்ற போதிலும் திரிபுராவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியது ஒரு தனிமனிதரின் தனிப் பட்ட சாதனை அல்ல என்பதை நாம் அறி வோம். திரிபுராவின் புகழ்மிக்க முன்னாள் முதல்வர்களான நிருபன் சக்ரவர்த்தி, தசரத் தேவ் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் வழி காட்டுதலின் கீழ் கடைப்பிடித்து வந்துள்ள அதே கொள்கைகளைத்தான் மாணிக்சர்க்கா ரின் ஆட்சியும் கடைப்பிடித்து வருகிறது. எனவே திரிபுரா மாநிலம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பெற்றுள்ள வெற்றியா னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரி யான வழிகாட்டுதலுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதன் உண்மையான பிரதிநிதியான மாணிக்சர்க்காரின் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிடலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com