Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பாரதவை நிரந்தரமாக அமைதியாக்கிய அரசியல் கலாசாரம்

1982ம் ஆண்டு ஜனாதி பதித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா கட்சிக்கு அசுப காலம் ஆரம்பமாகியது. இது இக்கட்சியின் அழிவுக்கான ஆரம்பமாகவும் அன்று கருதப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதி பதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்தவர்கள் நக்சலைட் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கும் செயற்பாட்டில் அன்றைய ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் ஈடுபட்டது. விஜய குமாரதுங்க, ஒஸி அபேகுண சேகர, பீலிக்ஸ் பெரேரா, ரேனுகா பெரேரா ஆகியோர் நக்சலைட் குற்றச்சாட்டின் பேரில் சிறை வைக்கப்பட்டனர். நக்சலைட் என்ற பிரதான குற்றச்சாட்டு விஜயகுமாரதுங்க மீதே சுமத்தப்பட்டது. அனுர பண்டாரநாயக்க விடுத்த அறிக்கை காரணமாகவே இவர்கள் சிறை வைக்கப்பட்டதாக அன்று அறிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒரு இளைஞனிடம் நீ விஜயகுமாரதுங்கவிற்கு எதிராக ஒரு வாக்குமூலம் அளித்தால் உன்னை விடுவிப்போம் என்று அன்றைய ஆட்சியாளர்கள் பயமுறுத்தினார்கள். என்றாலும் அந்த இளைஞன் அந்தப் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் எவ்வளவு காலமாவது சிறையில் இருக்க தான் தயார் என்று அறிவித்தார்.

அந்த இளைஞன் தான் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவாகும். இறுதியில் அனைவருமே எவ்வித குற்றச்சாட்டு களுமின்றி விடுவிக்கப்பட்டனர். அன்றிலிருந்து பாரத, ரேனுகா உட்பட மேலும் பலர் விஜய மற்றும் சந்திரிகா குமாரதுங்கவின் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் அரசியலில் ஈடுபட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பில் செயல் இழந்திருந்தது. அவ்வமைப்பின் காரியாலயம் மரண வீட்டைப் போன்று சோபை இழந்து காணப்பட்டது. இப்போது இருப்பது போன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நல்ல தலைமைத்துவம் அன்று இருக்கவில்லை. அன்று மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பற்றி பேசவும் அஞ்சினார்கள்.

நிலைமை இவ்விதம் இருக்கும் போது மக்கள் எவ்விதம் அக்கட்சியை எதிர்த்திருக்க முடியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திரை மறைவில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களுடன் நல்லுறவை வைத்திருந்தார்கள்.

அன்று வீரசிங்க மல்லிமாராச்சி என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் வாதியின் ஆக்கிரமிப்பில் கொலன்னாவ பிரதேசம் இருந்ததனால் எவரும் நீலக்கொடியொன்றை கட்டவும் தயங்கினார்கள். இத்தகைய அக்கிரமங்களுக்கு எதிராக ஏ. எச். எம். பெளசி மற்றும் அலீம் இசாக் போன்ற தலைவர்கள் தைரியமாக எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் இளைஞரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தைரியமாக இந்த சவால்களை எதிர்நோக்கினார். அதையடுத்து, பாரதவைப் போன்று பெளசி, அலவி மெளலான மற்றும் சுமதிபால போன்றோர் நீலக்கொடியை கம்பீரமாக பறக்கவிட்டனர். பாரத லக்ஷ்மன் கொலன்னாவையில் உள்ள ஒரு இடதுசாரி குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை சிறிலங்கா கொமினியூஸ்ட் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். பாரத தன்னுடைய தந்தையின் இடதுசாரி அரசியல் அடிதளத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலில் யதார்த்ததை நிலை நாட்டுவதற்கு முயற்சித்தார். பாரத கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபையின் அங்கத்தவராக முதலிலும் பின்னர் மேல் மாகாண சபையின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டு தனது வாழ்க்கையை அரசியலுக்கு முழுமையாக அர்ப்பணித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் தங்களுக்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாக மாகாண சபைகளை பகிஷ்கரித்த போது, பாரத அச்சமின்றி தைரியத்துடன் சிறிலங்கா மகஜன கட்சியின் மூலம் இந்த அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு துப்பாக்கி மனிதன் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன்னை சுட்டுக்கொல்ல எத்தனித்த போது பாரத அவனுடன் போராடி தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார். இந்த நிகழ்வு நடந்தது முதல் 1994ம் ஆண்டு வரையில் பாரத கொழும்பின் ஒரு முக்கிய அரசியல்வாதியாக விளங்கி சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பினார்.

அதற்கு பின்னர் பாரத, தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். சிலர் சுயநலம் காரணமாக மஹிந்தவுக்கு உதவி செய்ய முன்வராத போது பாரத அஞ்சா நெஞ்சத்துடன் மஹிந்தவின் சார்பில் அரசியலில் ஈடுபட்டார். இவ்விதம் பாரத போன்றவர்கள் அரசியலில் சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரத தமக்கு செய்த உதவிகளை மறக்கவில்லை. தனக்கும் தனது கட்சிக்கும் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்க விவகாரங்கள் பற்றிய ஜனாதிபதி ஊடகத்தின் பணிப்பாளர் நாயகமாக பாரதவை நியமித்தார். ஜனாதிபதியின் உதவியினால்தான் பாரத மரணிக்கும் வரை அவருக்கு சகல சலுகைகளும், உதவியும், பாதுகாப்பும் கிடைத்தது.

தற்போது அமுலில் இருக்கும் விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கொடுமை காரணமாக பாரத போன்றவர்களுக்கு எவ்வளவுதான் திறமையும், கட்சிக்கான உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான் பாரத, ஒரே ஒரு தடவை மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் தலையில் எதுவுமற்றவர்களே ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று பதவிகளை பெறுகிறார்கள்.

தொகுதிவாரியாக கட்சி அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் தேர்தல் முறை நாட்டில் அமுலில் இருந்தால் பாரத போன்றவர்கள் இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். காலியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 53ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி கலந்து இதைத்தான் சொன்னார்.

தற்போதைய விருப்பு வாக்கு தேர்தல் முறை இருந்து வருவதனால் இன்று பாராளுமன்றம் வலுவிழந்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தின் கீழ் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி வலுவிழந்துள்ளது. விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றுவதற்கான பொறுப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இப்போது அதற்கான நேரம் ஏற்பட்டிருக்கிறதுஎன்று ஜனாதிபதி ஆற்றிய உரை 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதியன்று லங்காதீப பத்திரிகையில் வெளிவந்தது.

இன்றும் இந்த விருப்பு வாக்கு முறை மாற்றப்படாது இருப்பதனால் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் தோன்றியுள்ள போட்டா போட்டி கொலை செய்யும் கலாசாரம் நாட்டில் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

இனிமேலும் ஜே.ஆர். ஜயவர்தனவைப் பார்த்து கல்லெறிந்து, கண்டனம் தெரிவிப்பதில் பயனில்லை. ஜே.ஆர். ஜயவர்தன அறிமுகம் செய்த இந்தவிருப்பு வாக்கு முறையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கிறது என்பது எந்தவொரு அறிவற்றவனுக்கும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். அரசாங்கம் இனிமேலும் இது விடயத்தில் மெளனம் சாதிப்பது நல்லதல்ல. அப்படி இருந்தால் பாரத போன்ற மேலும் பலர் இந்த கொலை கலாசாரத்திற்கு பலியாகிவிடுவார்கள்.

இனிமேல் மக்களிடம் இந்த அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு எதுவுமில்லை. வாக்குகளைப் பொறுத்தமட்டில் மக்கள் அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை நல்கியிருக்கிறார்கள். மேலும் எதனை நாம் அரசாங்கத்திற்கு மக்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமை மேலும் நீடித்தால் கெளரவமான முறையில் வாழ்க்கையை நடத்தும் முக்கியஸ்தர்கள் அரசியலில் ஈடுபட தயக்கம் காட்டுவார்கள்.

ஜனாதிபதி அவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் பக்கவிளைவுகளினால் அவர் மீதும் சிலர் குற்றம் சாட்டுவார்கள். லலித் அத்துலத் முதலியின் கொலை இதற்கு நல்ல உதாரணம். லலித் அத்துலத் முதலியின் கொலைக்கும் ஜனாதிபதி பிரேமதாஸவிற்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.

என்றாலும் மக்கள் ஜனாதிபதி பிரேமதாஸவே இந்த கொலையை செய்தார் என்ற தப்பபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இதனால் பிரேமதாஸ, தனது சுச்சரித்த இல்லத்திற்கு சந்திக்க வந்தவர்களிடம் எனது கைகளில் இரத்தக்கறை இல்லையென்று வேதனைப்பட்டார். இறுதியில் அவர் கிருலப்பனையில் நடந்த ஒரு கூட்டத்தில் எனது நற்பெயரை களங்கப்படுத்திவிடாதீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

லலித் அத்துலத் முதலி, பிரேமதாஸ ஆகியோரின் இரண்டு கொலைகளும் எல்.ரி.ரி.ஈயினால் செய்யப்பட்டது என்பது பகிரங்கப்பட்டாலும் அக்கொலைகள் குறித்தும் இன்றும் கேள்விக்குறி இருக்கின்றது. எனவே, தங்களுக்கு நன்கு அறிந்தவர்களுக்கு கூட ஆயுதங்களை வைத்திருப்பதற்கு இடமளிப்பது ஆபத்தாக அமையும்.

இது எவ்வாறு முடிவுற்றாலும் அத்துலத் முதலியின் கொலை இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது. இத்தகைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்பட்ட மிகவும் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகாரமுடைய பதவியில் இருப்பவரினாலும் எதுவும் செய்ய முடியாமல் போனது.

எமது நாட்டு மக்கள் காலையில் எதை சாப்பிட்டோம் என்பதை பகல் பொழுதில் மறந்து விடுவார்கள் என்ற கூற்று இருக்கிறது. நம் நாட்டவர்கள் எதையும் இலகுவில் மறந்துவிடுவார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. சிலர் பாரதவின் மறைவும் இவ்விதமே காலப்போக்கில் மறந்துவிடும் ஒரு சம்பவமாக இருக்குமென்று கருதுகிறார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இவை அனைத்தும் நன்கு தெரியும். ஜனாதிபதி தனது ஆலோசகர்களை கேட்காமல் எடுக்கும் முடிவுகள் சரியானவையாக வும், பெறுமதி மிக்க முடிவுகளாகவும் இருக்கின்றன. இன்று அரசியலில் மதிநுட்பமான தீர்மானங்களை எடுப்பதற்கான ஒரு காலம் உதயமாகி யிருக்கின்றது.

பாரத அல்லது துமிந்த என்று சிந்திக்காமல் தற்போதைய பாராளுமன்ற நடைமுறைக்கு தேவையான மாற்றங்களை செய்வது அவசியம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இருக்கும் அரசியல் அனுபவமும், அரசியல் ஞானமுமே அவரை சரியாக சிந்தித்து செயலாற்ற வைக்கிறது. அவருக்கு இருக்கும் ஞாபக சக்தியை நாம் மறந்துவிடலாகாது.

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் சக்தி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com