Contact us at: sooddram@gmail.com

 

ஐக்கிய தேசிய கட்சி அகங்காரத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

டந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளை நாம் அமை தியாக இருந்து பகுப்பாய்வு செய்தால் எங்களுக்கு கடலாமையும், வீட்டுக்கோழியும் ஞாபகத்திற்கு வரும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் கடலாமையாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு வீட்டுக் கோழியாகவும் தான் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஆயிரம் முட்டைகளை இடும் கடலாமை அமைதியாக இருக்கும் போது, ஒரே யொரு முட்டையிட்ட கோழி கொக்கரிப்பதைப் போன்று ஐக்கிய தேசி யக் கட்சி இன்று நடந்து கொள்வது அக்கட்சிக்கே அவமானத்தை தேடிக் கொடுக்கிறது. முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் 22 உள்ளூராட்சி மன்றங்க ளில் படுதோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு உள் ளூராட்சி மன்றத்தில் மாத்திரம் வெற்றியடைந்ததை வைத்துக் கொண்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாட்டையே கைப்பற்றி தாங்கள் அர சாங்கத்தை அமைத்து விட்டோம் என்றது போன்ற மமதையில் இன்று அரசாங்கத்தின் பலத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருக்கி றார். அரசாங்கத்தின் அழிவு கொழும்பில் ஆரம்பமாகி விட்டது என்று அவர் கொக்கரிக்க ஆரம்பித்து விட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவும் தனது கட்சி பொதுச் செயலாளருக்கு ஆதரவாக பொதுமேடைகளில் பேசி மக்களை ஏமாற்றும் படலத்தை இப்போது ஆரம்பித்துள்ளார். இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்பதை நாம் மறு க்கவில்லை. தன்னுடைய கட்சியின் தலைமைப் பதவியை பறிப்பதற்கு சகல விதமான தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வந்த சஜித் பிரேமதாஸவு க்கு அம்பாந்தோட்டையில் அரசாங்க கட்சி படுதோல்வியைப் பெற்றுக் கொடுத்தமையினால் தான், ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று தலை மைத்துவத்திற்கு சஜித் பிரேமதாஸ மூலம் தோற்றியிருந்த அச்சுறுத்தல் நீங்கிவிட்டது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

சஜித் பிரேமதாஸவை படுதோல்வியடையச் செய்ததன் மூலம் ரணில் விக் கிரமசிங்கவுக்கு உதவி செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கு பதில், ரணில் விக்கிரமசிங்க இவ்விதம் அரசாங்கத்தை கண்டித்து பேசுவதைப் பார்க்கும்போது, எம க்கு விந்தையாக இருக்கிறது.

பல்லாண்டு காலம் தனது கோட்டைகளாக ஐக்கிய தேசிய கட்சி வைத்திரு ந்த நுவரெலியா மாநகர சபை கண்டி மாநகர சபை, தெஹிவளை, கல் கிசை மாநகர சபை மற்றும் கொலன்னாவ பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிவாகை சூடியிருப்பது பற்றி எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் கொழும்பு மாநகர சபை வெற்றி யைப் பற்றி மாத்திரம் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சியின் பொதுச் செயலாளரும் இன்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விசயத்தை நாம் ஞாகப்படுத்துவது அவசியமாகும்.

2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக் கிய தேசிய கட்சிக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளுடன் 32 ஆசனங்களை வெற்றியீட்ட முடிந்தது. அன்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பில் 8 ஆசனங்களையே வெற்றியீட்டியது. சமீபத் தில் நடந்து முடிந்த தேர்தலில் கொழும்பு மாநகரில் ஐக்கிய தேசிய கட் சிக்கு அதைவிட மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளையே பெற முடிந்தது.

ஐக்கிய தேசிய கட்சி 2002 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 32 ஆசனங்க ளுக்கு பதில், இந்த தடவை 24 ஆசனங்களையே வெற்றியீட்டியது. அதுபோன்று 2002 இல் 8 ஆசனங்களை மாத்திரம் வெற்றியீட்டிய ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணி, நடந்து முடிந்த தேர்தலில் 16 ஆச னங்களை வென்றெடுத்தது.

இந்த தேர்தல் முடிவுகள் இரண்டையும், நாம் அவதானிக்கும் போது இந்த தடவை ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றி ஒரு பெரிய வெற்றி என்று எவராலும் கூற முடியாது. தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு கூடுதலாக இருந்தது என்பதை புரிந்துகொண்டு இனிமேலாவது ஐக்கிய தேசியக் கட்சி தனது அகங்காரப் போக்கை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஐக்கிய தேசிய கட்சி இன்று கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஓட்ட வில்லை என்பது போன்று, மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொண்டு வரும் போலி நாடகத்தைப் பார்த்து, மக்கள் அக்கட்சியை ஏளனம் செய்யுமளவுக்கு கட்சி இன்று மக்களின் நம்பிக்கையை இழந்து வருகி றது.

தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரசிங்க உண்மையிலேயே ஒரு ஜனநாயகவாதியா என்ற கேள்விக் குறி இன்று எழுந்துள்ளது. கொழும்பு மாநகரில் கட்சி அடைந்த வெற் றியை தனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றியாகவும், பலமாகவும் பயன் படுத்தி வரும் ரணில் விக்கிரமசிங்க கட்சிக்குள் தன்னுடைய ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளை இன்று முடுக்கிவிட்டுள்ளார்.

அவர் தென்னிலங்கையிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கட்சி உறுப்பினரான புத்திக பத்திரன தன்னை சில காலமாக கண்டித்து பேசி தனது தலைமைத்துவத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தார் என்ற காரணத்தினால் இப்போது அவருக்கு எதிராக போலி குற்றச்சாட் டுகளை சுமத்தி ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதுபோன்று, தன்னை எதிர்த்த மேல் மாகாண சபை உறுப்பினர் சிராஜ் லக்திலக்கவுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்தை நிலையாக வைத்திருப்பதற்கு சகல முயற்சி களையும் எடுத்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அனாவசிய மாக அரசாங்கத்தைப் பார்த்து, கிண்டல் செய்யும் தனது போக்கை மாற் றிக்கொள்வது அவசியமாகும். இல்லையேல் அவர் நிச்சயம் பொது மக்களின் ஆத்திரத்திற்கு இலக்காவதை தவிர்க்க முடியாது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com