Contact us at: sooddram@gmail.com

 

பரவுகிறது அமெ. மக்களின் போராட்டம்

(எஸ்.ஏ.பெருமாள்)

கடந்த ஒரு மாத காலமாக ஆயிரக் கணக்கான அமெரிக்க மக்கள் வால் தெருவைக் கைப்பற்றுவோம் என்ற முழக் கத்துடன் அந்தத் தெருவை ஆக்கிர மித்துப் போராடி வருகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்கா வின் ஆளும் வர்க்கமாய் திகழும் முத லாளிகளின் தலைமையகமாய் திக ழுவதே வால்தெருவாகும். உலகையே நிரந்தரப் போர்க்களமாக்கிவரும் பதி னான்கு ஆயுத உற்பத்தி முதலாளிகள் குடியிருப்பது இந்தத் தெருவில்தான். இவர்கள்தான் அமெரிக்க அரசை ஆட்டிப்படைப்பவர்கள். 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளா தார நெருக்கடியின் போது அமெரிக்க வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங் களுக்கும் பல லட்சம் கோடி டாலர்களை அள்ளி வழங்கி அவர்களது நஷ்டத்தை ஒபாமா அரசு ஈடுகட்டியது. ஏழை, நடுத் தர, உயர் நடுத்தர மக்களுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார் கள். பொறுமையிழந்து தற்போது போராட் டத்தில் குதித்திருக்கிறார்கள். உலகைக் கொள்ளையடித்து, உலகமக்களை ஓட் டாண்டிகளாக்கும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு எதிராக அவர்கள் போர்க்குரல் கொடுக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுனிஷியாவில் துவங்கியமல்லிகைப் புரட்சிடுவிட்டர் மூலம் அரபு நாடு களுக்கும் வட ஆப்பிரிக்காவுக்கும் பர வியது. அங்கு ஆட்சி மாற்றங்களுக்கான போர் தொடர்கிறது. அங்கு நடைபெறும் புரட்சியானது நீண்ட நாள் ராணுவ சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரானதா கும். இப்போது வால் தெருவில் தோன்றி வளர்ந்து வரும் புரட்சி, கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்ததாகும்.

வால்தெருவைக் கைப்பற்றுவோம் என்று அமெரிக்கர்கள் அந்தத் தெரு வையே ஆக்கிரமித்துப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். இது அமெரிக்கா முழு வதும் பரவி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ் திரேலியாக் கண்டங்களில் பரவுகிறது. தற்போது 82 நாடுகளில் 951 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். லண்டன், பிரஸ்ஸல்ஸ், பிராங்க்பர்ட், ஏதென்ஸ், ரோம், ஆம்ஸ் டர்டாம், லிஸ்பன், மாட்ரீட், ஜெனிவா, பாரிஸ், வியன்னா, ஜூரிச், செர்பியா, டோக்கியோ, சிட்னி போன்ற நகரங்களில் இந்தத் தீ பரவியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகத் தொழிலாளிகளின் வயிற்றில் ஓங்கி மிதிக்கின்றன. இதை எதிர்த்து மக்கள் பேரெழுச்சியுடன் எழுந்து நிற்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை உலகம் முழு வதும் பரப்புவதற்காக டுவிட்டரில் றறற.15டிஉவடிநெச.நேவ துவக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன், கேப்ட வுன், ஜோகன்னஸ்பர்க் முதல் தைவா னின் தாய்பெய்-தென்கொரியாவின் சியோல் வரை கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா விலும் புனே, மும்பை, கொல்கத்தா, தில்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்படப்போவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஆர்ப்பாட்டத்தில் விக்கி லீக்ஸின் தலை வர் அசாஞ்சே கலந்து கொண்டுள்ளார்.

உலகமயப் பொருளாதார முறை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைப் பேராசை, மக்களுக்கான உதவிகளையும், நலத்திட்டங்களையும் அரசுகள் வெட்டு வது, இவைகளுக்கு எதிராகவேவால் தெருவைக் கைப்பற்றுஎன்ற முழக்கம் உருவானது. இந்தப்போராட்டம் கால வரையற்றது என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்திலும், பரபரப் பான மன்ஹாட்டன் தெருக்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தி 88 பேரை கைது செய் தது. இந்தத் தாக்குதலை குதிரைப் படைப் போலீஸ் நடத்தியது. ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதால் போலீசாரைப் பார்த்துநாங்கள் அமைதி யாக எதிர்ப்பைக் காட்டுகிறோம். உலகம் முழுவதும் இதைக் கவனித்துக் கொண் டிருக்கிறதுஎன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

சிகாகோ நகரில் போலீஸ் 175 பேரை கைது செய்தது. வாஷிங்டன் நகரில் கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி, சுட்டுக் கொல்லப்பட்ட மார்ட் டின் லூதர் கிங்கின் மகன் ஜூனியர் மார்ட் டின் லூதர் கிங் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போதுஎனது தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் அவரும் இன்று நம் மோடு இணைந்து நிற்பார்என்று கூறினார்.

லண்டனில் செயிண்ட் பால் கதிட்ரல் சர்ச்சுக்கு எதிரிலும், லண்டன் பங்கு மார்க்கெட் அருகிலும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதர ஐரோப் பிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்காகப் பல லட்சம் கோடி டாலர்களை கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு வாரிக்கொடுத்து விட்டுப் பொது மக்களை அரசு வயிற்றிலடிப்பதாக ஆர்ப் பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

மெக்சிகோ, பெரு, சிலி ஆகிய நாடு களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட் டம் செய்தனர். அநீதியான பொருளாதார அமைப்பையும், வேலையின்மையையும் கண்டித்து கோஷமிட்டனர். உலக மக்களின் பொருளாதார வாழ்வைச் சூறை யாடி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை யும், சமூகப் பொருளாதார சமத்துவமின் மையையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் லஞ்சப்பணத்தைப் பெறும் அரசு களையும் எதிர்த்தே இந்த எழுச்சிமிகு போராட்டங்கள் 82 நாடுகளில் பரவி யுள்ளன. இந்தப் போராட்டக்காரர்கள் சதுக்கங்களில் டெண்ட் அடித்துத் தங்கி யுள்ளனர். போராட்டத்திற்கு பொதுமக்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். உதார ணமாக, வால்தெரு போராட்டக்காரர்க ளுக்கு இதுவரை மூன்று லட்சம் டாலர் களை அமெரிக்க மக்கள் நிதியாக வழங்கி யுள்ளனர். நியூயார்க்கில் நடைபெறும் இந்த இயக்கத்தில் 39 அமைப்புகள் இணைந்து நிற்கின்றன. இதில் நகரின் பெரிய தொழிலாளர் சங்கங்களும் இணைந்துள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை, அராஜகவாதிகளின் போராட்டம் என்று அவதூறு செய் கின்றன. ஆர்ப்பாட்டச் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. ஆனாலும் போராட்டம் உலகம் முழுவதும் வேகமாய் பரவுகிறது. பொருளாதாரம் உலகமய மாகும் போது போராட்டங்களும் உலகமய மாகிறது.

கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு மீட்சிக்காக என்ற பெயரில் கோடி கோடியாக அள்ளிக்கொடுத்த அரசுகள், அவர்களுக்குப் பெருமளவு வரிக்குறைப் பும் செய்துள்ளன. அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சலு கைகளைப் பறித்து வருகின்றன. இது வும் முக்கியக் காரணமாகும்.

இந்தியாவில் எந்தப்பாதிப்பும் இல்லா விட்டாலும் மத்திய அரசு 2008ம் ஆண்டு 4 லட்சம்கோடியும், 2009ல் 3.75 லட்சம் கோடியும் 2010ல் 76 ஆயிரம் கோடியும் பெருமுதலாளிகளுக்கு மீட்சிக்காக என்ற பெயரில் வழங்கியது. இடதுசாரிக் கட்சி கள் மட்டுமே மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளைக் கண்டித்தன. இவ்வாறு இந்திய அரசு 8.5 லட்சம் கோடி ரூபாய் களை வழங்கியதோடு, பெருமளவு வரிக் குறைப்பும் செய்துள்ளது. இவற்றில் பெரு மளவு ஆட்சியாளர்கள் கமிஷன் பெறுவ தாக தற்போதைய ஆர்ப்பாட்டங்களில் முழங்கப்படுகிறது. இந்திய அரசும் எதிர்ப் பலைகளிலிருந்து தப்ப முடியாது. இந்தி யாவிலும் போராட்டத்தைத் துவக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

உலகைச் சீரழித்துவரும் அமெரிக் காவின் திமிர்பிடித்த தலையில் பேரிடி யாய் இறங்கியுள்ளது வால்தெரு போராட் டம். பெரும் முதலாளிகளும் அவர்களது அரசுகளும் அழுது புலம்பி அதிர்வுகள் தாளாமல் கூக்குரலிடத் தொடங்கிவிட் டார்கள். இதிலிருந்து இந்திய பெரும் முதலாளிகளும் மத்திய அரசும் தப்ப முடியாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com