Contact us at: sooddram@gmail.com

 

அணிசேரா நாடுகளின் வலுவான அடித்தளமாக விளங்கிய

லிபிய தலைவரின் மறைவு மனித சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

அணிசேரா நாடுகளின் அமைப்பின் பலம்வாய்ந்த அடித்தளமாக விளங்கிய லிபியாவின் தலைவர் கேணல் முஅம்மர் கடாபி நேற்றுமுன்தினம் கொல்லப்பட்டார். சதாம் சர்வாதிகாரப் போக்கில் ஈராக்கில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் என்றும், அவரிடம் உலகை அழிக்கவல்ல இரசாயண ஆயுதங்கள் இருந்தன என்றும் போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சதாம் உசைனின் அரசாங்கத்தை பதவியிறக்கிய சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் இறுதியில் அந்த மனிதனை தூக்கிலுமிட்டு தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டனர். அதேபோன்று கடாபியை அழித்தால் தங்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தோன்றிவரும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்திய வாதசக்திகள் லிபியாவிலும் தலையிட்டு எவருக்கும் அச்சமின்றி இருந்துவந்த கேணல் கடாபியையும் இறுதியில் தங்கள் மோசடி வலையில் வீழ்த்தி அவரின் உயிரைப் பறித்துவிட்டனர்.

எண்ணெய்வளம் மிக்க லிபியாவை சவுதி அரேபியாவைப் போன்று தங்களால் ஆட்டிவைக்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தினால் தான் ஏகாதிபத்தியவாத சக்திகள், லிபியாவில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி சிவில் யுத்தம் என்ற பேரில் தங்கள் கூலிப்படைகளை அனுப்பி இறுதியில் கேணல் கடாபியை துவசம் செய்துவிட்டார்கள்.

சதாம் உசைன் ஈராக்கில் மரண மடைந்து சில வருடங்களாகிய பின் னரும் அங்கு உள்நாட்டுக் கலவரங் களும், குண்டுவெடிப்புக்களின் மூலம் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றது. சதாம் உசைனை பதவியிறக்கி நாட்டை விடுவித்துவிட்டோம் என்று ஆடம்பரமாக கூறிக்கொள்ளும் ஏகாதிபத்தியவாத சக்திகளினால் ஈராக்கில் இன்றும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தமுடியா திருக்கிறது. இதிலிருந்து அரபுநாடுகளை அழித்து, எண்ணெய் வளத்தை தங்களின் கைப்பொம்மைகளின் மூலம் சூறையாடுவதே ஏகாதிபத்தி யவாத சக்திகளின் குறிக்கோளாகும்.

இன்று கடாபி மறைந்துவிட்டார். அடுத்தடுத்து ஏனைய இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளில் இவ்விதம் அரசாங்கங்களைக் கவிழ்த்து தங்கள் அடியாட்களை அதிகாரபீடத்தில் அமர்த்தும் முயற்சிகளில் ஏகாதி பத்தியவாத சக்திகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

லிபியத் தலைவர் கேணல் கடாபி, இலங்கை போன்ற சிறியநாடுகளினதும், வறுமை நிலையிலுள்ள நாடுகளினதும் நண்பனாக விளங்கினார். அவர் இந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலும், நீண்டகாலக் கடன் அடிப்படையிலும் மசகு எண்ணெய்யை வேண்டியளவுக்கு விற்பனை செய்தும் உதவியளித்தும் இருக்கிறார். 1976ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட லிபியத் தலைவர் கடாபி, அந்த உச்சிமாநாடு மகத்தான வெற்றியீட்டுவதற்கு அன்றைய யூகோஸ்லேவியாவின் தலைவர் மார்ஷல் ரிட்டோவுடன் இணைந்து அம்மாநாட்டை நடத்துவதற்கான நிதியுதவியையும் தாராளமாக வழங்கினார். லிபியத் தலைவர் கடாபியின் மறைவு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இன்றி சுதந்திரமாக இருக்கவிரும்பும் லிபியா போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது.

லிபியா முன்னாள் அதிபர் கடாபி, அவரது சொந்த ஊரில் ஒரு பதுங்கு குழிக்குள் பதுங்கி இருந்தார். அந்த நகரை புரட்சிப்படை நேற்றுக் கைப்பற்றியது. அப்போது அவரை புரட்சிப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

42 ஆண்டுகளாக அதிபர்

69, வயதான முகம்மது கடாபி ஆபிரிக்காவில் உள்ள லிபிய நாட்டின் அதிபராகக் கடந்த 42 ஆண்டுகளாக இருந்தார். அவர் பதவி விலகக் கோரி அவருக்கு புரட்சி ஏற்பட்டது.

புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் களத்தில் குதித்தன.

இந்த நாடுகள் விமானத் தாக்குதல் நடத்தி புரட்சிப்படை வெற்றிபெற உதவின. இந்த நிலையில் இராணுவத்தில் இருந்த தளபதிகளும், வீரர்களும் கூட கடாபிக்கு எதிராகத்திரும்பினார்கள்.

முதலில் புரட்சிப்படை பெங்காசி நகரைக் கைப்பற்றியது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் படை முன்னேறியது. கடைசியில் கடாபி இருந்த தலைநகர் திரிபொலியையும் புரட்சிப்படை படித்தது.

இதைத் தொடர்ந்து கடாபி தலைமறைவானார். அவர் இதுநாள் வரை வசித்த வந்த வீட்டை புரட்சிப்படை கைப்பற்றியது. அதை புரட்சிப்படை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது.

சொந்த ஊரில் நடந்த சண்டை. கடைசியாக கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டே, பாணி வாலித் ஆகிய 2 இடங்கள் மட்டும் புரட்சிப்படையிடம் பிடிபடாமல் இருந்தன. அந்த 2 இடங்களையும் பிடிப்பதற்காக புரட்சிப்படை அந்த இடங்களுக்குள் புகுந்தன. முதலில் பானி வாலித் பிடிபட்டது. அதன்பிறகு நேற்று சில மணிநேர சண்டைக்குப் பிறகு சிர்ட்டே பிடிபட்டது.

சிர்ட்டேயில் நடந்த சண்டை சில மணி நேரங்களுக்கு நீடித்தது. அதன்பிறகு அது புரட்சிப்படையிடம் விழுந்தது. இந்த சண்டையின் போது கடாபியின் மந்திரி சபையில் இராணுவ மந்திரியாக இருந்த அபுபக்கர் யூனிஸ் இறந்தார். பின்னர் புரட்சிப்படை அந்த நகரை சுற்றி வந்த போது ஒரு பதுங்கு குழியில் கடாபி பதுங்கி இருந்ததை கண்டறிந்து சுட்டுக்கொன்றனர்.

2 கால்களிலும் காயத்துடன் பதுங்கு குழிக்குள் இருந்த அவரை பார்த்ததும் புரட்சிப்படை வீரர்கள் துப்பாக்கியை அவரை நோக்கிப் பிடித்தனர். பதறிப்போன கடாபி, "என்னை சுட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சினார். அது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை ஆகும்.

அவர் கோரிக்கையை ஏற்காமல் புரட்சிப்படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அவரது உடல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடாபியின் உடல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அதுபற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்றும் புரட்சிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, புரட்சிப்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த கடாபியை வாகனத்தில் அங்கிருந்து வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றதாகவும், வழியில் அவரது உயிர் பிரிந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

கொண்டாட்டம்

சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் புகைப்படங்களையும் புரட்சிப்படையினர் வெளியிட்டனர். அவர் கொல்லப்பட்டதை புரட்சிப்படையினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

கடாபியின் மகன்களில் 2 பேர் ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் பலியானார்கள். ஒருவர் திரிபொலி நகரில் உள்ள தன் வீட்டில் தங்கி இருந்த போது அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகினார். நேற்று நடந்த சண்டையின் போது சிர்ட்டே நகரில் கடாபியின் மகன்களில் ஒருவரான முட்டாசி பிடிபட்டதாக புரட்சிப்படை அதிகாரி தெரி வித்தார். கடாபியின் இன்னொரு மகன் சமீபத்தில் நைஜர் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

கடாபி வாழ்க்கை குறிப்பு

கடாபி 1942ம் ஆண்டு ஜூன் மாதம் 7ந் திகதி பிறந்தார். அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது 1969ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளரை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு அவர் 2011ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். மன்னராக இல்லாமல் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த 4வது அதிபர் ஆவார்.

இவருடைய தாத்தா இத்தாலி நாடு லிபியாவை கைப்பற்றிய போது அதை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் பங்கு கொண்டவர். அந்த கிளர்ச்சியில் அவர் உயிர்த்தியாகம் செய்தவர். இது நடந்தது. 1911ம் ஆண்டு ஆகும். கடாபி 1961ம் ஆண்டு இராணுவ அகாடமியில் சேர்ந்தார். 1966ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதன்பிறகு ஐரோப்பாவில் மேற்பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதிகாரியாக இராணுவத்தில் சேர்ந்தார்.

அப்போது மன்னர் இத்ரிஸ் ஆட்சி நடந்தது. மன்னர் சிகிச்சைக்காக துருக்கி நாட்டுக்கு சென்று இருந்த போது அவருக்கு எதிராக கடாபி புரட்சி நடத்தினார். ரத்தம் சிந்தாமல் புரட்சியை நடத்தி அவர் ஆட்சியைக் கைப்பற்றினார்.

அது முதல் அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சியை நடத்தினார். அவர் 42 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

கடாபிக்கு 2 மனைவிகள். அவர்கள் மூலம் ஒரு மகளும் 7 மகன்களும் பிறந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து போய் விட்டனர். இப்போது கடாபி இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.

லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கர்ணல் முவம்மர் கடாபி தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல ரி!வி காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக் கோரிவருகிறது.

கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த இராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு, முன் 'என்னைக் சுடாதே' என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com