Contact us at: sooddram@gmail.com

 

ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு!

(சமஸ்)

ட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு! உள்ளூர்க் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், பழங் குடிகளுக்கு எதிராக அரச வன்முறையில் ஈடுபட்ட 269 அரசு அலுவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வர மிக முக்கியக் காரணம் சி.பி.ஐ-யின் விசாரணை. இதற்காக நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்க உத்தரவிட்டது. ஒரு வழக்கு விசாரணைக்காக இப்படி வெகுமதியைப் பெறுவது சி.பி.ஐ. வரலாற்றில் அநேகமாக இதுவே முதல் முறை. ஆச்சர்யமான இன்னொரு செய்தி, 19 ஆண்டுகளுக்கு இழுத்த இந்த வழக்கில், சி.பி.ஐ. தன்னுடைய விசாரணையை வெறும் 13 மாதங் களுக்குள் முடித்தது. அதுவும் இந்த வழக்கின் பெரும் பகுதி விசாரணையை மேற்கொண்டது ஒரே ஒருவர்தான். எஸ்.ஜெகந்நாதன். ஓய்வு பெற்றுவிட்ட இந்த அதிகாரிக்கு இப்போது வயது 68. ஆனால், நம்ப முடியாத உற்சாகத்துடன் பேசினார்!

''வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பு சந்தோஷம் அளிக்கிறதா?''

''நிச்சயமாக! வாச்சாத்தி வழக்கு சி.பி.ஐ-க் கும்கூட சவாலானதுதான். பொதுவாக, ஒரு வழக்கில் அதிகம் எங்களுக்கு உதவி கிடைக்கும் இடம் அரசுத் துறை வட்டாரம். வாச்சாத்தியிலோ நேர் எதிர். உதவிக்கு ஆள் கிடையாது. இன்றைக்கு போல் செல்பேசி மாதிரியான வசதி களும் அப்போது கிடையாது. மலையி லும் காட்டிலுமாக அலைந்தேன். 'வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப் பாறைஎன்பார்கள். இந்த வழக்குக்கு அது ரொம்பப் பொருந்தும்!''

''இப்படி ஒரு வன்முறைக்கு எது அடிப்படைக் காரணமாக இருந்தது?''

''முதலில் வனத் துறையைச் சேர்ந்த ஒருவர் வாச்சாத்திக்கு சந்தன மரக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கச் சென்று இருக்கிறார். அவரை ஊர்க்காரர்கள் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். இதற்குப் பதிலடி... அதாவது, அரசு அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று உணர்த்தவே, திட்டமிட்டு இந்த வன்முறை நடத்தப்பட்டது!''

''விசாரணையின்போது அரசு அலுவலர்கள் தரப்பில் ஒரு சிலராவது நேர்மையாக வாக்குமூலம் அளித்தார்களா?''

''நீங்க வேற... நீதிபதியே 'எனக்குப் பாதுகாப்பு வேண்டும்என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவர்கள் நடவடிக்கைகள். ஓர் உதாரணம் சொல்கிறேன். குற்றவாளிகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று முறை அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தும் ரகளை செய்து அணிவகுப்பை நடத்தவிடாமல் செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள். பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவது, பணம் கொடுத்துப் பேரம் பேசுவது என ஏகப்பட்ட இடைஞ்சல்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே அடையாள அணிவகுப்புக்கு வேட்டி, சட்டை, முண்டாசோடு ஆண் வேஷத்தில்தான் அழைத்துச் சென்றேன். 'விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது, முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள்என்று சொன்ன அதிகாரிகள் ஏராளம்!''

''பொதுமக்கள் மத்தியில் சி.பி.ஐ. விசாரணைக்கு என்றால் தனி மதிப்பு இருக்கிறது. அப்படி என்ன விசேஷம் உங்கள் விசாரணையில்?''

''மாற்றி யோசிக்கக் கொடுக்கப்படும் பயிற்சிதான். உங்களுக் குத் தெரியுமா? சி.பி.ஐ-யில் உள்ள மொத்த போலீஸ் படையும்  4,024 பேர்தான். பெரும்பாலான வழக்குகளைத் தனி ஆளாகவே விசாரிக்க வேண்டி இருக்கும். நான் விசாரித்த ஒரு வழக்கு இது. ஒரு வி.ஐ.பி. தம்பதி. வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சின்னதாக ஒரு சத்தம். கணவன் தலையில் ரத்தம். அப்படியே சரிகிறார். யாரோ சுட்டு இருக்கிறார்கள். ஆனால், வேறு எந்தத் துப்பும் கிடையாது. என் விசாரணைக்கு வந்தது. வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது சுவரில் ஓட்டை தெரிந்தது. அதற்கு நேராக இருந்த மரத்தைப் பார்த்தபோது அதில் குண்டு பாய்ந்து இருந்தது. அது ஒரு பெல்லட். மும்பை தாதாக்களிடம் மாறுவேஷத்தில் சென்று விசாரித்தபோது, அந்த வகை பெல்லட் துபாயில்தான் கிடைக்கும் என்று தெரிந்தது. உள்ளூர் விமான நிலையத்தில் விசாரித்தபோது, கொலை நடந்த அன்று துபாயில் இருந்து இருவர் அந்த ஊருக்கு வந்து அடுத்த விமானத்திலேயே திரும்பி இருப்பது தெரிய வந்தது.  வெளிநாட்டுக் கூலிப் படையை அமர்த்தி, வேலை முடிக்கப் பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தேன். எங்கள் விசாரணைக்கு என்று நாங்கள் எல்லை வைத்துகொள்வது இல்லை. இதுதான் சி.பி.ஐ-யின் தனித்துவம்!''

''அரசியல் பின்னணி உள்ள வழக்குகளில், குற்றவாளிகள் தப்பிக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் எல்லையில்லா அவகாசத்தைக் கொடுத்துவிட்டு சோதனை, விசாரணை என்று ஆரம்பிப்பதுகூட சி.பி.ஐ-யின் தனித்துவம்தானா?''

''அப்படி நினைக்காதீர்கள். பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகுதான் நாங்கள் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் விசாரணை கிட்டத்தட்ட அப்போது முடியும் கட்டத்துக்கு வந்து இருக்கும். ஒரு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு வரலாம் என்று தெரிந்ததுமே, நாங்கள் விசாரணையைத் தொடங்கிவிடுவோம். இதை நாங்கள் ரகசிய விசாரணை என்று சொல்வோம்.

சி.பி.ஐ-க்கு என்று தனி அதிகாரம் இருக்கிறது. சி.பி.ஐ. நினைத்தால், எந்த ஒரு துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்தும் எவரைப் பற்றிய தரவுகளையும் பெற முடியும். உதாரணமாக, நீங்கள் சி.பி.ஐ. பார்வைக்குள் வந்துவிட்டால், நீங்கள் யார்? உங்கள் பின்னணி என்ன? அலுவலகம் முடிந்ததும் நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கெல்லாம் உங்களுக்குச் சொத்துகள் இருக்கின்றன? எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு பணம் இருக்கிறது?... இப்படி எல்லா விவரங்களையும் சேகரித்துவிட்டுத்தான் உங்களிடம் விசாரணைக்கே வருவோம். முக்கியமாக, உங்கள் எதிரிகள்தான் எங்கள் விசாரணைக்கு மிக முக்கியமான நண்பர்களாக இருப்பார்கள். உங்கள் கார் டிரைவரும் வீட்டு வேலைக்காரியும்கூட உங்களுக்கு முன்பாகவே எங்கள் புலனாய்வின் கீழ் வந்திருப்பார்கள். பிறகு, நீங்கள் குறிப்பிட்டதுபோல, 'எல்லாம் முடிந்த பின்உங்களிடம் விசாரணைக்கு வரும்போது, நீங்கள் எங்கள் கேள்விகளுக்கு வரிசையாகப் பொய் சொல்லத் தொடங்கு வீர்கள். நீங்கள் குற்றவாளியா, இல்லையா என்ற உண்மையை உங்கள் பொய்கள் எங்களுக்குச் சொல்லிவிடும். ஆகையால், சி.பி.ஐ. விசாரணை என்பது விளையாட்டு அல்ல. ஒரு வழக்கில் சி.பி.ஐ. எப்போது விசாரணையைத் தொடங்கும் என்பது யாருக்குமே தெரியாது!''

''அலைக்கற்றை ஊழல் உட்பட நாட்டின் முக்கியமான பல ஊழல்களின் எதிர்காலம் இப்போது சி.பி.ஐ. கையில் இருக்கிறது. முடிவு எப்படி இருக்கும்?

''உலகிலேயே சிறந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சி.பி.ஐ. நிச்சயமாக இந்த வழக்குகளிலும் நம்முடைய அதிகாரிகள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகிறேன். அதே சமயம், சி.பி.ஐ. மேலும் வலுப்பட இரு நடவடிக்கைகள் அவசியம். கூடுதல் ஊழியர்கள் நியமனம், அரசியல் குறுக்கீடுகளில் இருந்து விடுதலை. இவை இரண்டும் நடக்கும்பட்சத்தில், இது போன்ற கேள்விகளுக்கே தேவை இருக்காது!''

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com