Contact us at: sooddram@gmail.com

 

எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா, எழுதப்படுவதா?

தமிழ் மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் பட எழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து, ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது. தொல்காப்பியத்தின் காலத்தை சற்று ஆராய்வோம்.

இன்று இருக்கும் தமிழ் நூல்களிலே காலத்தால் பழமையானது தொல்காப்பியம். இது உலக மொழிகளில் கிடைக்கக் கூடிய இலக்கண நூல்களிலே பழமையானதுமாகும். தொல்காப்பியர் இடைச்சங்க காலப் புலவர், இவருடன் படித்த பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தைப் (முகவுரையை) பாடியுள்ளார்.

அதில் தமிழ் மொழி பேசப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறித்துள்ளார். 'வடவேங்கடம் தென்குமாரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்' இதில் பனம்பாரனார் தமிழ்மொழி பேசப்படும் நாடு என்று கூறாமல் தமிழ்மொழி பேசப்படும் உலகம் என்றும் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாடு உலகம் ஆகாது. பல நாடுகள் சேர்ந்ததே உலகம். எனவே பனம்பாரனார் சொல்லிய நில எல்லைக்குள் தமிழ்மொழி பேசப்பட்ட பல நாடுகள் இருந்திருக்கின்றன.

அவரின் கருத்திற்கு துணைசேர்ப்பது போல் தொல்காப்பியரும் 'இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி' அதாவது இயற்சொல் செந்தமிழ் பேசப்படும் நிலத்தில் வழங்கும் சொல்லாய் இருப்பதே ஆகும். இதில் செந்தமிழ் நிலத்து என்று சொன்னவர் திசைச்சொல்லை கூறுமிடத்தில் 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' எனப் பிரித்துக் காட்டுகின்றார், 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினாலே திசைச்சொற் கிளவி அதாவது தமிழ்கூறும் உலகை சூழ்ந்துள்ள செந்தமிழ் கலந்த வேற்றுமொழிகள் பேசப்படும் நாட்டுச் சொற்கள் தமிழிலே வந்து வழங்கும், போது அவை திசைச்சொற்கள் எனப்படும்.

இதனால் தொல்காப்பியர் காலத்தில் செந்தமிழ் நிலமும் அதைச்சூழ செந்தமிழ் சேர்ந்த பன்னிரெண்டு நிலமும் இருந்தது தெரியவருகின்றது. ஓர் இடத்திற்கு எல்லை கூறும் போது நான்கு திசைகளில் எல்லை கூறுவார்கள். ஆனால் பனம்பாரனாரோ தமிழ்கூறும் நல்லுலகிற்கு வடவேங்கடம் தென்குமரி என இரண்டு எல்லைகளையே கூறியுள்ளார். அது ஏன்?

தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் 'கடல் கொள்வதன் முன்பு பிறநாடு உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின என இதற்கு விளக்கம் தந்துள்ளார்' வட வேங்கடத்திற்கு வடக்கே பிறநாடு இருப்பது போல கடல் கோளின் முன்னர் குமரிக்குத் தெற்கேயும் பிறநாடு இருந்ததால் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் கடலாதலால் எல்லை கூறவில்லை. இவர் கருத்தின்படி பனம்பாரனாரும் தொல்காப்பியரும் குமரி கடல்கோளால் அழியுமுன் வாழ்ந்தவர்கள் ஆகின்றனர்.

தொல்காப்பியத்தின் இன்னொரு உரையாசியரான பேராசிரியரும் தமது தொல்காப்பிய உரையில் 'பனம்பாரனார்', 'வட வேங்கடம்', தென்குமரி எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறி பாயிரம் செய்தமை கடல்லகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது' எனக் கூறியுள்ளார்.

பனம்பாரனார் தென்குமரி என்றதை பேராசிரியர் குமரியாறு என தெளிவுபடுத்தியுள்ளார். அந்நாளில் குமரியாறு இருந்த உண்மையை குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி' எறு புறநானூற்றில் பி. சிராந்தையார் சொல்லி இருப்பதால் நாமறியலாம்.

அயிரை என்பது ஒருவகை மீன் இந்த அயிரை மீன் ஆற்று நீரிலே வாழும் கடல் நீரில் வாழாது. எனவே இப்பாடலில் சிராந்தையார் சொன்ன குமரியம் பெருந்துறை இன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அல்ல. இன்றைய குமரிமுனை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. ஆதலால் குமரியம் பெருந்துறை குமாரியாற்றங் கரையில் இருந்திருக்கின்றது. பெருந்துறை என்பதால் அது ஒரு துறைமுகமாகும். தமிழரின் போக்குவரத்து குமரியாறில் நடந்தது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகின்றது.

இந்த குமரிப்பெருந்துறையை பின்னாளில் வந்த பெளத்த பாளி நூல்கள் மகாதித்த என்கின்றன. அதனை நாம் மாதோட்டம் என்கிறோம். மனித நாகரீகமே ஆற்றங்கரைகளிலே தான் வளர்ந்தது. பழந்தமிழர் நாகரீகமும் குமரியாற்றங்கரையில் உருவானது என்பதை இது காட்டுகின்றது.

தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாரே குறுந்தொகையில் 'ஆரவாரித்து எழுந்த கடல் ஏறி மிதித்ததால் நீரினிடையே மலையின் உச்சி அசைந்ததை', 'ஆர்கவி மிதித்த நீருதிகழ் சிலம்பில் கூரசைந் தனையை' எனக் கூறியுள்ளார். ஆதலால் அவர் காலத்தில் கடல்கோள் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதைப் பார்த்த பின் அந்த உண்மையை இவ்வரிகளில் அவர் பதிவு செய்திருக்கலாம்.

தெற்கே குமுரி கடல்கோளால் அழிந்ததை மார்க்கண்டேயர் புராணமும் கூறுகின்றது- 'அயம்பது நவம்ஸ்தேஷாம் த்விபசாகர ஸம்வருத குமாராக்யா பாரிக்யாதோ த்விபோயம் தஷிணோத்ர' பல நாடுகளை அழித்த மாபெரும் கடல்கோள் சொலமன் அரசனின் காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன் நடந்தது The Anchor Bible Dictionary அது நடந்த காலத்தை கி. மு. 1250 இந்த கடல்கோள் நடந்த காலத்திற்கு தொல்காப்பியர் காலம் சரிவருமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

தொல்காப்பிய பனம்பாரனார் தொல்பாக்கிய பாயிரத்தில் 'ஐந்திரம் நிறைந்த தொல்பாக்கியன்' எனப் புகழ்ந்துள்ளார். ஐந்திரம் என்பது தொல்காப்பியர் படித்த பழந்தமிழ் இலக்கண நூல் அந்த ஐந்திரத்தை மயன் எழுதினான். ஐந்திரம் பாணினீயம் எனும் வடமொழி இலக்கணத்திற்கு முந்தியது. பாணினீயத்தை எழுதிய பாணினியின் காலம் கி. மு. 4 ஆம் நூற்றாண்டாகும். சிலர் இந்திரனால் எழுதப்பட்டது ஐந்திரம் என்பர். அது பிழையான கருத்தாகும். இந்திரன் எழுதிய வடமொழி இலக்கண நூல் இந்திரம்.

சமணம், பெளத்தம் எனும் இரு மதக் கொள்கைகளும் தமிழ் நிலத்தில் பரவியதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்களும் நூல்களும் கி. மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியத்தில் சமண, பெளத்த மதக் கொள்கைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே இவ்விரு சமயமும் தமிழ் நிலத்தில் பரவ முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டது. எனக்கொள்ளலே பொருந்தும். மேற்கூறிய ஆதாரங்கள் யாவும் தொல்காப்பியர் காலத்தை கி. மு. 4 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கொண்டு செல்கின்றன.

அடுத்து பட எழுத்து, கருத்கெழுது, அசையெழுத்து என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம் மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களைப் படமாகக் கீறினான். அதனை உருவ எழுத்து என்றும் பட எழுத்தென்றும் கூறுவர். பட எழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைக் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லின் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது 'புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது (No Smoking) என்பதற்கு நாம் பாவிக்கும் அடையாளத்தை போன்றதே சுருக்கெழுத்து. இந்த எழுத்துக்களுக்கு ஒலி இல்லை.

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க் + அ எனும் இரு எழுத்துக்கள் கூட்டாகச் சேர்ந்துஎனும் எழுத்தை உருவாக்கும். அதுபோன்றதே அசையெழுத்து தமிழிலிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும்.

எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? எழுத்தை நாம் உச்சரிக்கும் போது எழுப்பப்படுவதாகவும் அதை எழுதும் பொழுது எழுதப்படுவதாகவும் அமைந்துள்ளது. எழுத்தின் ஓசை எழுப்பப்படும் பொழுது ஒலிவடிவத்தையும் அது எழுதப்படும் பொழுது வரி வடிவத்தையும் எழுத்து பெறுகின்றது. எனவே ஒலி வடிவம், வரி வடிவம் இரண்டையும் பெற்று விளங்குவதே எழுத்தாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவத்தை பெற்றுவிட்டன. அவரது காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ் புலவர்கள் எழுத்தின் ஒலிக்கு கால வரையறையும் செய்திருந்தனர். தொல்காப்பியர் அதனை 'அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளவு இசைக்குங் குற்றெழுத்து என்ப 'நீட்டம் வேண்டின் அவ்வள புடையகூட்டி எழுதுதல் என்மனார் புலவர்' எனக் கூறுவதால் அறியலாம்.

அ இ உ எ ஒ என்ற ஐந்தையும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குற்றெழுத்துக்கள் என்று சொல்வர் எனவும் (இசைக்கும் ஒலிக்கும்) நீண்ட ஒலி வேண்டுமானால் அந்த அளவுக்கு எழுத்துக்களை கூட்டி அவ்வொலியை உண்டாக்குக என்று புலவர் கூறுவரெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வரிவடிவத்தையும் பெற்றுவிட்டதால் ஒரு சில எழுத்துக்களுக்கு மட்டுமே வரிவடிவு கூறியுள்ளார். அதனாலேயே போன இதழில் வரியெழுத்து வடிவாக இருந்த தமிழ் மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் என எழுதினேன்.

தமிழ் எழுத்துப் பற்றிக் கூறும் இந்நிலையில் 'எலு' மொழி பற்றி தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றேன். இதனை எமது வருங்கால தலைமுறையினர்க்காகவே கூறுகின்றேன்.

அறிஞர்கள் சிலர் கி. மு. 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும் வாழ்ந்தார்கள் 'எலு' மொழி இயக்கர்களால் பேசப்பட்டது. நாகர்களால் தமிழ் மொழி பேசப்பட்டது என்கின்றார்கள். மிகச் சிலரோ இயக்கர்களால் பேசப்பட்ட 'எலு' மொழி கொடுந்தமிழாக இருந்தது. அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விஜயனின் 'லாலா' நாட்டு மொழியுடன் இயக்கர்களின் 'எலு' மொழியும் சேர்ந்து 'சீகளம்' என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கிறார்கள்.

இதில் யார் சொல்வது சரி? எதனைக்கொண்டு இந்த முடிவுகளுக்கு வந்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் யாரும் கொடுப்பதில்லை. அத்துடன் இன்றைய வரலாற்றாளிணிவார்களில் சிலர் 'எலு' மொழியை 'எழு மொழி' என எழுதி வருகின்றார்கள். அவர்கள் ஆங்கில நூல்களை வாசித்து 'எலு' (Elu)  ொழியை 'எழு' (Eluமொழி என எழுதுகின்றார்கள் போதும். அது அவர்களின் தவறல்ல என்பது புரிகின்றது.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் 'வலு' என்பதை 'வழு' என எழுதலாமா? (வலு - வலிமை, வழு - தவறு). அதுவே வழுவாகிவிடாதா? மொழியியலாளர்களால் 'ழ' 'ள' 'ற' 'ன' என்ற நான்கு தமிழ் எழுத்துக்களும் தமிழ் மொழியின் சிறப்பெழுத்துக்களாக கொள்ளப் படுகின்றன. அவற்றுள்ளும் தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பெழுத்தான 'ழகரத்தை' இன்னொரு மொழிக்குச் சேர்த்துச் சொல்வதும் சரியா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com