Contact us at: sooddram@gmail.com

 

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்தசர்வ திகாரம!

 

'நான் சர்வதேசத் தலைவன்
அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்
ஆப்பிரிக்காவின் அரசன்
முஸ்லிம்களின் இமாம்!''

- புதைசாக்கடைக் குழாய்க்குள் பதுங்கி இருந்தபோது புரட்சிப் படைகளால் பிடிக்கப்பட்டு, ஒரு தெரு நாயைப் போல இழுத்துச் செல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் சடலத்தைப் பார்த்தபோது, அவர் தன்னைப் பற்றி பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த வார்த்தைகள்தான் ஞாபகத் துக்கு வருகின்றன!

உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக் கண்டு இருக்கிறது. எனினும், கடாஃபி விசித்திரமானவர். அவருடைய தங்கக் காதல், வித்தியாசமான தோற்றம், பெண் மெய்க்காவலர்கள், விருந்தினர்களைச் சந்திக்க அவர் பயன்படுத்தும் கொட்டகைகள், சர்ச்சைக் கருத்துகள்... லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கடாஃபி இந்தத் தலைமுறைக்கு ஒரு கோமாளி சர்வாதிகாரியாகத் தெரியலாம். ஆனால், அவர் கொண்டாடப்பட்ட நாட்களும் உண்டு.

செப்.1, 1969-ல் ஒரு சின்ன ராணுவக் குழுவின் உதவியுடன் அரண்மனையை முற்றுகையிட்டு, ரத்தம் இல்லாப் புரட்சியின் மூலம், மன்னர் இத்ரியாஸின் கொடுமையான ஆட்சியில் இருந்து லிபியாவை விடுவித்தபோது, லிபிய மக்கள் தங்கள் மீட்பராக கடாஃபியைப் பார்த்தார்கள். உலகின் 2 சதவிகித எண்ணெய் வளத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேசிய எண்ணெய்க் கழகத்தின் கீழ் லிபிய எண்ணெய் வர்த்தகத்தைக் கொண்டுவந்தபோது, முதலாளித்துவ நாடுகள் சிம்ம சொப்பனமாக கடாஃபியைப் பார்த்தார்கள். பாலஸ்தீன விடுதலைக் குழுக்களில் தொடங்கி, அயர்லாந்து விடுதலைக் குழுக்கள் வரை உலகின் பல ஆயுதக் குழுக்களுக்கும் வெளிப்படையாக அவர் ஆதரவு அளித்தபோது, போராளிகள் ஆப்பிரிக்காவின் சே குவாராவாக கடாஃபியைப் பார்த்தார்கள்.

நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் கடாஃபிக்கு என்று ஒரு பார்வை இருந்தது. கல்வியையும் சுகாதாரத்தையும் அரசின் முக்கியக் கடமைகளாக அவர் பார்த்தார். ஆப்பிரிக்காவிலேயே கல்வி கற்றவர்கள் விகிதத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக லிபியாவை மாற்றினார். தன்னுடைய முதல் 15 ஆண்டு ஆட்சிக் காலத்துக்குள் லிபியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு லிபியனுக்கும் சொந்த வீடு என்ற அவருடைய கனவு, மண் குடிசைகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான லிபியர்களை சகல வசதிகளுடன் கூடிய வீடு களில் அமர்த்தியது.

சின்ன தொழில்கள் தனியார் வசமும் பெரிய தொழில்கள் அரசின் வசமும் இருக்க வேண்டும் என்பது அவருடைய முக்கிய மான பொருளாதார வியூகம். அது அவருக்கு வெற்றியைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், 2010-ல்கூட லிபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவிகித வளர்ச்சியை அவரால் உருவாக்க முடிந்தது!

ஆனால், கடைசி வரை ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளாததால், தூக்கி எறியப்பட்டு இருக்கிறார் கடாஃபி. தன் மீதான விமர்சனங்களுக்கு அல்ல; மாற்றுக் கருத்துகளுக்கே இடம் அளிக்காதவராக அவர் இருந்தார். லிபியாவில் பொது இடங்களில் அரசைப் பற்றிப் பேசினாலே, அது கடுங்காவல் தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்பட்டது. எதிர்க் கருத்துகளை முன்வைத்தவர்கள் குரூர மாகக் கொல்லப்பட்டார்கள்.  வெளிநாடுகளிலும் கூட லிபிய அரசுக்கு எதிராகப் பேசுபவர்களைக் கொல்வதற்கு என்றே அவர் பிரத்யேகக் கொலைக் குழுக்களை உருவாக்கி இருந்தார். போராட்டங்கள் கொடூரமாக நசுக்கப்பட்டன. ஊடகங்கள் முழுக்க முழுக்க கடாஃபியின் கட்டுப்பாட்டில் இருந்தன. லிபியாவில் ஊடகச் சுதந்திரம் எப்படி இருந்தது என்பதற்கு, 'எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் கள்அமைப்பு 2010-ல் வெளியிட்ட பட்டியலில் லிபியா 160-வது இடத்தில் இருந்தது ஒரு சான்று!

அரபு உலகத்தில் ஏற்பட்ட ஜனநாயகப் புயல் கடாஃபியின் சிம்மாசனத்தையும் நிர்மூலமாக்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், லிபியப் புரட்சியின் பின்னணி, வரலாற்றில் மோசமான முன் உதாரணமாக மாறி இருக்கிறது. லிபியாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பின் நின்ற இந்தப் புரட்சி யில், முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. பிரிட்டிஷ் நிறுவனமான 'வீடோல்இங்கிலாந்து அமைச்சர் ஆலன் டன்கன் மூலம் 5,000 கோடியை லிபிய ஆயுதக் குழுக் களுக்கு அளித்து, லிபிய எண்ணெய்ச் சந்தையைக் கூறுபோட்டுக் கொண்டது ஓர் உதாரணம்.

ஜனநாயகத்துக்காக சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஏகாதிபத்தியத்திடம் சரண் அடைந்து இருக்கிறார்கள் லிபிய மக்கள். வேறு என்ன சொல்ல?

(சமஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com