Contact us at: sooddram@gmail.com

 

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!

(குள.சண்முகசுந்தரம )

மிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு உண்மை யிலேயே முடிவுரை சொல்வதற்கான முன்னுரையை எழுதி இருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்!

பொதுப் பிரச்னைகளுக்காக நீதிமன்றப் படிகள் ஏறிப் போராடி வரும் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவச் செயலர், கடலோரக் காவல் படைத் துணை இயக்குநர், வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலர், தமிழகத் தலைமைச் செயலர் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனு. நீதிபதிகள் பாஷா, வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் அக்டோபர் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ''இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும் அதைத் தாண்டிய சர்வதேச கடல் பிராந்தியத்திலும் அச்சமின்றிப் பாதுகாப்புடன் மீன் பிடிக்கக் கடலோர காவல் படையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்திய கப்பற்படை அதிகாரிகள் அதைக் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மனுதாரரின் பிற கோரிக்கைகள் குறித்து, நவம்பர் 16-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும்!'' என்று  ீர்ப்பு வழங்கினார்கள். தனது மனுவில் ஸ்டாலின் கோரியிருக்கும் மற்ற விஷயங்களுக்கும் விடிவு கிடைத்தால்தான் தமிழக மீனவர்கள், நிம்மதியாகத் தொழில் பார்க்க முடியும்.

ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். ''1882-ல் மன்னர் சேதுபதி காலத்தில் இலங்கையும் இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்திருக்கு. அதற்கான ஆதாரங்கள் இருக்கு. பிற்பாடு இலங்கை தனி நாடாகப் பிரிந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையை வரையறுக்கவில்லை. 1974-ல் இலங்கையுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகுதான் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுத்தார்கள். அதில் இருந்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழன் என்றாலே கடுப்பு. அந்த ஆத்திரத்தில், 1974-ல் இருந்து இது வரை நூற்றுக்கணக்கான முறை தமிழக மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதுவரை 547 மீனவர்கள் இறந்ததாக இந்திய அரசு சொல்கிறது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போனது கணக்கில் வரவில்லை!

மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னை யில் ஓரவஞ்சனையாகவே நடக்கிறது. மார்ச் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் சோமாலியா கடல் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டபோது, கடற்படையை அனுப்பி மீட்டார்கள். 2008-ம் வருடம் வட இந்தியர்கள் சிலர் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியபோதும், இந்திய அரசு கப்பலை அனுப்பி மீட்டது. வட இந்தியர்கள் பாதிக்கப்பட்டால், பதறித் துடிக்கும் இந்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் மட்டும் கண்ணைக் கட்டிக்கொள்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றுதான் பொது நல வழக்குப் போட்டேன். இந்திய மற்றும் சர்வதேசக் கடல் பிராந்தியத்திலும் கச்சத் தீவு பகுதியிலும் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கப்பற்படையும் விமானப் படையும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படையினரும் படகில் சென்று பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்திய - இலங்கை கடற்படையினர் இணைந்து கடலில் ரோந்து செல்ல வேண்டும். 1974-ல் இருந்து இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு இன்னொரு முக்கியமான கோரிக்கையும் வைத்திருக்கிறோம்.

நாடாளுமன்றத்திலோ, தமிழக சட்டமன்றத் திலோ, தீர்மானம் நிறைவேற்றாமல்... கச்சத் தீவை தன்னிச்சையாக இலங்கைக்குத் தாரை வார்த்தது, மத்திய அரசு. இது செல்லவே செல்லாது. இந்த ஷரத்தைக் காரணம் காட்டி, அண்மையில் நதி நீர்ப் பிரச்னை ஒன்றில் வங்க தேசத்துக்கும் இந்திய அரசுக்கும் இடையில் போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அது போலவே கச்சத் தீவு ஒப்பந்தத் தையும் ரத்து செய்து, தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியக் கோரிக்கை. எங்களது மனுவுக்குப் பதில் சொன்ன மத்திய அரசு வழக்கறிஞர், 'தமிழக மீனவர்களுக்கு இப்போது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாக’ச் சொன்னதில் முழுத் திருப்தி அடையாத நீதிபதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இது தொடக்கம்தான்... வழக்கின் இறுதி விசாரணைக்குப் பிறகு, எங்களின் நியாயமான மற்ற கோரிக்கைகளுக்கும் இதே போல் திருப்புமுனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்!'' என்றார் நம்பிக்கையாக.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com