Contact us at: sooddram@gmail.com

 

இரு வேறு இந்தியா!

(எஸ். கோபாலகிருஷ்ணன்)

பிரிக்என்கிற ஆங்கிலச் சொல்லை, உலக அரங்கில் 2001-ம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் ஜிம் ஓ’ நீல். இவர்ஸ்டேண்டர்டு அண்டு பூர்என்கிற சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சுருக்கம்தான்பிரிக்”. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்வளம் மிக்க, செல்வம் கொழிக்கும் நாடுகளாகத் திகழ்ந்தன. இவற்றை ‘ஜி-7' நாடுகள் என்று அழைத்தார்கள். நாளடைவில் இவற்றில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. அந்த காலகட்டத்தில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் 2027 ஆம் ஆண்டுக்குள் ‘ஜி-7' நாடுகளை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’ நீல் அறி வித்தார். பிரிக்என்ற சொல் உருவானது இப் படித்தான்.

கடந்த 10 ஆண்டுகளாக, இந்தியா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதில் வியப்பில்லை. அதேபோல், கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 8 சதவிகிதமாக இருந்து வந்தது. வளர்ச்சி வேகத்தில் சீனா முதலிடத் திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.

2008 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளா தாரச் சரிவைச் சந்தித்தது. அதைத்தொடர்ந்து, ஐரோப்பியப் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந் தது. அந்நாடுகள் சரிவிலிருந்து இன்னமும் மீட்சி அடையவில்லை. இந்த சர்வதேசத் தேக்கநிலை, இந்தியா வையும் பாதிக்கத்தான் செய்தது. எனினும், மற்ற நாடுகளைவிட இந்தியா விரைவிலேயே சமாளித்துக்கொண் டது. இந்தியாவில் பொரு ளாதார வளர்ச்சியின் பயன் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பது கண்கூடு. முக்கியமாக, மனித மேம்பாட்டுக் குறியீடு களில், இந்தியா ஒரு பின்தங்கிய நாடாகவே இருந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி உள்ளிட்ட பல அமைப்பு களின் ஆய்வுகள் தரும் தகவல்களைக் கூர்ந்து கவனித்தால், ஒரு சராசரி இந்தியனின் தலை சுற்றாமல் இருக்காது. ஊட்ட உணவு, சிசு மரணம், கல்வி, மருத்துவம் போன்ற மனித மேம்பாடு தொடர்பான பல அம்சங்களில் இந்தியா கடைநிலையில்தான் இன்றுவரை இருக்கிறது.

உதாரணமாக, பசியாறுவதற்கான உணவு கிடைப்பதுகூட பல கோடி மக்களுக்கு குதி ரைக் கொம்பாக இருக்கிறது. குழந்தைகளுக் கான ஊட்ட உணவு, நாட்டில் உள்ள 43 சத விகித சிறுவர், சிறுமிகளுக்குக் கிடைப்பதில் லை. இதனால் அவர்களது உடல் வளர்ச்சி ஏதேனும் ஒரு வகையில் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. அவர்களது உடல் எடையும் சராசரியைவிட மிகக் குறைவாக உள்ளது. இந்தக் குறியீட்டில், இந்தியாவுக்கு இணை யாக, அதல பாதாளத்தில் இருக்கும் நாடுகள் எவை தெரியுமா? அங்கோலா, கேமரூன், காங் கோ மற்றும் யேமன் போன்ற பத்து ஆப்பிரிக்க நாடுகள்தான். ஆப்பிரிக்காவில் உள்ள மொத்த 54 நாடுகளில் மீதம் உள்ள நாடுகள் இந்தி யாவைவிட மேல்!

வங்கதேசம், நேபாளம், எத்தியோப்பியா, சோமாலியா, லாவோஸ், சூடான், கம்போடியா போன்ற சிறிய நாடுகளில் உள்ள குழந்தை களுக்குக்கூட, இந்தியக் குழந்தைகளைவிட நல்ல ஊட்ட உணவு கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இந்த விஷயத்தில், உலக நாடுகளின் வரி சையில் இந்தியா 67-வது இடத்தில் உள்ளது.

நாம்கிள்ளுக்கீரை’யாக நினைக்கும் பாகிஸ்தான் 59-வது இடத்தில், நம்மை முந்திக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, உள்நாட்டுப் போரைச் சந்தித்த இலங்கை 36-வது இடத்தைப் பிடித்துள்ளது!

தொடர்ந்து பல ஆண்டுகள் 8 சதவிகித வளர்ச்சியை அடைந்தது இந்தியா. அந்த அபரிமிதமான வளர்ச்சி, இந்தப் பிரச்சனை யின் விளிம்பைக்கூடத் தொடவில்லை என் பதுதான் சோகம்.

சரி, சிறுவர் - சிறுமியரின் நிலைதான் அப் படி. சிசுக்களின் கதி என்ன? ஐக்கிய நாடு களின் மக்கள்தொகை அமைப்பு சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. 194 நாடு களைக் கொண்ட அந்தப் பட்டியலில், சிசு மர ணத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நாடுகளை வரி சைப்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில், இந்தியா 150-வது இடத்தில் தாழ்ந்து காணப் படுகிறது. அதாவது 149 நாடுகள் நம்மைவிடச் சிறப்பாக உள்ளன.

குறிப்பாக, இலங்கை 70-வது இடத்திலும், நேபாளம் 138-வது இடத்திலும், பூடான் 139-வது இடத்திலும், வங்கதேசம் 148-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்நிலையில், மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த ஆய்வுகள் இந்தியாவுக்கு நியாயம் வழங்கவில்லை எனக் குறை கூறியுள்ளது. இதைப் பார்த்து அழு வதா? சிரிப்பதா?

கல்வியில் சிறந்த நாடு நம் நாடுஎன் கிறோம். நமது மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த பிரகாசமான மாணவர்கள்கூட, ஹார் வர்டு, பிரின்ஸ்டன், ஆக்ஸ்போர்டு, கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில் கிறார்கள் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறோம். ஆனால், நம் நாட்டில் எழுத் தறிவு பெற்ற ஆண்கள் 82 சதவிகிதமே; பெண் கள் 65 சதவிகிதமே. ஆக, இதிலும் எண் ணற்ற நாடுகள் இந்தியாவை முந்திக் கொண் டுள்ளன.

கல்வியைப் பற்றிய உலக ஆய்வில், நமது பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தில் இல் லை என்கிற கசப்பான உண்மை வெளியாகி யுள்ளது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இந்திய பல்கலைக்கழகமோ, இந்திய ஐ.ஐ.டி.யோ இல்லை என்றால் நம்புவீர்களா?

ஆசியாவைச் சேர்ந்த இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒன்று, ஹாங்காங் பல்கலைக்கழகம். இரண்டாவது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.

இதில் வேடிக்கை என்னவெனில், “பிரிக்நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) இந்தியாவுக்கு மட்டும்தான் அந்தப் பெருமை கிடைக்கவில்லை.

அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) முத லிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு சிறந்த பல்கலைக் கழக மாக இருந்த இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது எம்.ஐ.டி.! சரியான போட்டி!

ஒரு காலத்தில், உலகுக்கே வழிகாட்டியநாளந்தாபல்கலைக்கழகம் தோன்றியது நம் நாட்டில்தான்! 20-ம் நூற்றாண்டில் சென்னை பல்கலைக்கழகம் நாட்டுக்கே எடுத்துக்காட் டாகத் திகழ்ந்தது. ஆனால், காலப்போக்கில், கல்விதான் வியாபாரம் ஆகிவிட்டதே!

சில தினங்களுக்கு முன்பு, கரக்பூர் ஐ.ஐ.டி. யின் 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியது கவனிக்கத்தக்கது.

சிலர் இந்த ஆய்வுகளையே குறை கூற லாம்; எனினும் பொருளாதாரத்தில் சூப்பர் பவ ராக உயர விரும்பும் நாம், கல்வியில் ஏன் 10-வது நாடாகவோ, 50-வது நாடாகவோ அல் லது 100-வது நாடாகவோ உயர்வதற்கு இயல வில்லை?’’ என்கிற கேள்வியை எழுப்பினார் பிரணாப் முகர்ஜி.

புதிய, புதிய சோத னைகள் தேவை. கல்வி என்பது வேலை தேடிக்கொள்வதற்காக மட்டுமே என்ற சிந்தனையை இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் முற்றிலுமாக அகற்றிவிட முடியாது.

எனினும், நமது மாணவர்களின் மனத்தில், அறிவியல் தாகத்தை உருவாக்கிடவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை ஊட்டுவதற் கும், அனுபவமும், ஆற்றலும் மிக்க நமது பேரா சிரியர்கள் முன்வர வேண்டும்.

மருத்துவத் துறையை எடுத்துக் கொண் டோ மானால் இன்று உலகின் பல நாடுகளி லிருந்து நம் நாட்டுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். காரணம், இந்திய டாக்டர்கள் திறமைசாலிகள். அது மட்டுமல்ல, வெளிநாடு களைவிட இங்கு கட்டணங்கள் குறைவு.

இந்தியாவில், பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளும், நவீன சாதனங்களும் உள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் நவீன சாதனங்களுக்குக் குறைவில்லை. அதேநேரம், ஏழை - எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் அரசு மருத்துவமனைகளில் திருப்திகரமான சேவை கிடைப்பதில்லையே?

இப்படி எதை எடுத்தாலும், இரண்டு முகங்களைக் கொண்ட, இரு வேறு நாடாகத் தோற்றம் அளிக்கும் நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டும் போதாது. அந்த வளர்ச்சி அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருத்தல் வேண்டும்.

11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்து, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாம் இருக் கிறோம். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பொருளாதாரச் சீர் திருத்தங்களை மேற்கொண்டு 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் எத்தனை காலத் துக்கு, இந்தியாவில் ஒருபுறம் ஏழ்மை, வறுமை, மறுபுறம் அம்பானிகள், மிட்டல்கள், டாடாக்கள் என உலகப் பெரும் செல்வந்தர்களைக் கொண்டஒளிரும் இந்தியாஎன இருப்பது என்பதே கேள்வி?

நன்றி : தினமணி (27.9.2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com