Contact us at: sooddram@gmail.com

 

நீருக்காக ஓர் உலகப்போர்!

தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம். ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை.

2100இல் உலக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் எனக் கனவு காணும் நாம் 2100 க்கு பின்னர் நீர் இருக்குமா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. பதிலாக நீரை சிந்தவிட்டுக்கொண்டிருக்கின்றோம். 2100ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக விலைமிக்க பொருளாக நீர் அமைந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு குடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்கவோ மறைக்வோ முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் மனிதன் இருக்கிறான் என நாம் தற்பெருமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கையின் கண்டுபிடிப்புக்களுடன் எமது கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் ஒருபோதும் உயர்ந்து விட வில்லை என்ற உண்மையை மானிடக் கண்டுபிடிப்புக்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் கண்டுபிடிப்புக்கள் அவசியமில்லை என ஒரு போதும் கூறிவிட முடியாது. இயற்கைக்கு சவால் விடும் கண்டுபிடிப்புக்களே அவசியமில்லை. ஆனால் மனித வர்க்கத்தின் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஏனெனில் இது வரையில் இல்லாத அளவுக்கு தற்போது இயற்கை மனித குலத்துக்கு மாறு செய்கின்றது. காரணம் நாம் இயற்கைக்கு எதிராக விதைத்தது தினைகளை அல்ல வினைகளைத்தான் என்பது எண்ணிப் பார்க்கும் போதே புரிகிறது.

நாம் செய்த வினைகளின் விளைவில் ஒன்றுதான் பூமியில் மனிதன் வாழ மிக முக்கிய காரணிகளில் ஒன்றான நீர் எம்மை விட்டு செல்ல முனைகிறது. புவி எனும் கிரகத்தைத் தவிர்த்து உயிரினங்கள் வாழ இதுவரையில் மனித குலம் வேறு எந்தக் கிரகத்தினையும் கண்டு பிடிக்கவில்லை.

எனவே ஜீவராசிகள் பயன்படுத்தத்தக்க நீர் இந்தப் பூமியில் இல்லாது போனால் ஜீவராசிகளின் நிலை என்ன? தக்கன பிழைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் உயிரினங்களின் ஆதாரமே நீர் தான்.
நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.

என்ற வள்ளுவரின் வரிகளும் எமக்கு எடுத்தியம்புவது உயிர்களின் அடிப்படை நீர் என்பதனையே.

உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது. பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது வாழும் சனத்தொகையில  ிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.

இதனை உணர்த்துவதற்காக 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தில் உலக நீர் தினத்தினை உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டம் வகுத்தது.

நீரின் தேவை அதிகரிக்கின்ற போதி லும் அதன் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதற்கு காரணம் இயற்கை அல்ல மனிதர்களாகிய நாமே என்பதில்தான் வருத்தம்.

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் வல்லவர்கள் நாம். எமது நிலைகளை உயர்த்த தொழிற்சாலைகள், குடியிருப்புக்கள் மற்றும் பல தேவைகளுக்கென ஓங்கி வளர்ந்த மழை தரு காடுகளை அழித்து மழை நீருக்கு முட்டுக்கட்டை போட்டது யார் குற்றம்?

தண்ணீருக்கு மாற்றுப்பொருள் இதுவரையிலும் இல்லை; இனியும் வரப்போவதில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும் மனிதனின் மழைக்கும் நீருக்கும் எதிரான செயற்பாடுகளை குறைத்ததாகத  ெரியவில்லை. எனவே மனிதனின் தற்போதைய கண்டுபிடிப்புக்கள் மின்சாரம் இல்லாத ஊருக்கு மின்குமிழ் விற்கப்போனவன் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மென்பானங்கள் தயாரிப்புக்கு என நிறுவப்படும் தொழிற்சாலைகளில் நிலத்தடியிலிருந்து குழாய் மூலம் உறிஞ்சப்படும் நீரினால் தொழிற்சாலை அமைந்திருக்கும் குறித்த பிரதேசத்தில் வறட்சி ஏற்படும் என்பது திண்ணம் .இருந்தாலும் மென்பானங்களினால் ஈட்டும் வருமானத்தை நிறுத்த மனிதனுக்கு மனம் இடம் கொடுக்காதது ஏனோ?

இவ்வாறான தொழிற்சாலைகள் உறுஞ்சுவது நீரினை அல்ல மனித இரத்தத்தையும் அடுத்த சந்ததியின் கருமூலங்களையும் என்பதை உணர்ந்தும் இவ்வாறான தொழிற்சாலைகளை தவிர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதே போன்று வேறு சில தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளை ஆறுகள், குளங்களில் வெளியேற்றுவதனால் இரசாயன மாற்றங்களினால் நீரின் தன்மை மாற்றடைகின்றது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கிறது.

இப்போதுதான் காற்றிலிருந்து நீரினைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், அசுத்தமான, கடல் நீரிலிருந்து பருகும் நீரினைப் பெற்றுக்கொள்ள இயந்திரம் என எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைப் பாதுகாக்கும். எனவே எப்படியெல்லாம் நீரினை அசுத்தப்படுத்தினாலும் எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைக் காப்பாற்றும் என நிச்சயம் எண்ண வேண்டாம்.

பயன்படுத்தத்தக்க நீரினைக் குறைக்குமளவுக்கு பயன்படுத்த முடியாத நீரினை அதிகரிக்கவும் காரணமாக நாம் அமைந்துவிட்டோமே. இதனால் ஏற்படப்போகும் ஆபத்து மிகப்பெரியது. 

உலக வெப்பமயமாதலினால் துருவப்பனிப்பாறைகள் ஒரு நாளல்ல ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருப்பதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதனால் அடுத்த 90 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 1 தொடக்கம் 2 நூற்றாண்டுகளில் 6 அடி வரை நீர  உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடல் நீர் மட்ட உயர்ச்சியின் காரணமாக உலகின் பல தீவுகள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.

எனவே கால ஓட்டத்தில் வெப்பமயமாதலினால் பனிப்பாறைகளின் உருகுதல் அதிகரித்து மொத்தப் பனிப்பாறைகளும் உருகினால் உலகில் மனிதன் வாழ நிலப்பரப்புக்களே காணப்படாமல் போய்விடும் சாத்தியம் உண்டென்பதால் எமது கண்டுபிடிப்புக்களை எங்கே சுமந்து செல்வது.

செல்வதற்குத் திக்கற்று நிற்கும் எமக்கு எதற்காக இந்த வீணான வீராப்புக்கள். நீரின் மகத்துவங்களை உணர்ந்த நாம் அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இனி ஓர் உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள் .உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.

முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக. இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளன. ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.

இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வரக் காரணமாக இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.  மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகின்றன

சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகின்றன.அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களைக் கூறு போட்ட நாம் நீரினைக் கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றன.

தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் இன்ற  வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயிகளினால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 காரணங்களை அறிந்த பின்பும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே.

உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று. உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.

இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காகப் பாதுக்காக்க வேண்டியது பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுச்செல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாகச் சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.

இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்.

(அமானுல்லா .எம். றிஷாத்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com