Contact us at: sooddram@gmail.com

 

அக்.3 சர்வதேச போராட்ட நாள்!

(ஏ.கே.பத்மநாபன்)

உலக அளவில் அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்கமும் ஒன்றி ணைந்து, உழைக்கும் வர்க்கத்தின் அடிப் படை வாழ்வாதார உரிமைகளை வலி யுறுத்தி அக்டோபர் 3ம்தேதி சர்வதேச போராட்டத் தினத்தை கடைப்பிடிக் கின்றன. இதற்கான அழைப்பை, உலக தொழிலாளி வர்க்கத்தை சர்வதேச அளவில் ஒன்றிணைத்து வரும் உலக தொழிற்சங்க சம்மேளனம் (டபிள்யூஎஃப்டியு) விடுத்துள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு நிறுவப்பட்ட அதே நாளில் உலகளாவிய இந்த மகத்தானப் போராட்டம், உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உடனே செய்து கொடு என்ற கோரிக்கையை உரத்து முழங்கும் விதத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல; உலகெங்கிலும் துன்ப துயரத்தில் ஆழ்ந்திருக்கிற அனைத்து ஏழை -எளிய மக்களின் அடிப்படை கோரிக்கைகளாகும்.

ஏழை-எளிய மக்களின் வாழ்வாதா ரத்தில் நவீன தாராளமயக் கொள்கைகள் நாளுக்குநாள் தனது தாக்குதலை தீவிரப் படுத்திவரும் நிலையில், பல்வேறு நாடுக ளில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாக பொதுச்சொத்துக்களும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங் களால் கொள்ளையடிக்கப்பட்டுவரும் நிலையில், இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது தொழிற்சங்க இயக்கத்தின் கடமையாக மாறியிருக்கிறது. நவீன தாராளமயத்தின் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இத்த கைய கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டிய அரசின் தலையீடுகளும் தடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையை அம்பலப்படுத்தி, அதற்கு எதிராக உழைக்கும் வர்க்க மக்களை அணிதிரட்டவும், கவுரவமான வாழ்வா தாரத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதிப்படுத்தும் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லவும் உலக தொழிற் சங்க மையத்தின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

உணவு

சர்வதேச அளவிலும், தேசிய அள விலும் இன்றைக்கு உணவுப்பாதுகாப்பு என்பது ஒரு மிக முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கிறது.
உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் உணவுதானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் கடுமையாக உயர்ந் திருக்கின்றன. எனவேஅனைத்து மக்க ளுக்கும் உணவுஎன்பது இன்றைக்கு மிக முக்கியமான முழக்கமாக மாறி யிருக்கிறது.

2007ம் ஆண்டிலிருந்து 2011 ஜனவரி வரையிலான கணக்கின்படி உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதை உறுதிப்படுத்துகிறது. 2008ம் ஆண்டு உலகவங்கியே கூட உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக மேலும் 50மில்லியன் மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்தது.

உலகவங்கியின் கணக்கீட்டின்படி, சர்வதேச சர்க்கரை விலை கடந்த 30 ஆண்டுகளில் பார்க்கும்போது தற்போது கடுமையாக அதிகரித்துள்ளது. உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் உணவாக திகழ்கிற கோதுமை விலை 2010 ஜுனுக் கும் 2011 ஜனவரிக்கும் இடையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந் துள்ளது.

இந்த விலை உயர்வுகள் ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை யை கடுமையான துயரத்திற்குள் தள்ளி யிருக்கிறது; மறுபுறத்தில் பெரும் பன் னாட்டு நிறுவனங்கள் கொழுத்த லாபத் தை சம்பாதித்திருக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பன் னாட்டு நிறுவனங்கள் வளம்கொழித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகிறது என உலக தொழிற்சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. நெஸ்லே, கார்கில், க்ராஃப்ட், ஜெனரல் மில்ஸ், பெப்சிகோ, கோக கோலா ஆகி யவை மேற்குறிப்பிட்ட பெரும் நிறு வனங்களில் சில.

இந்தக் கம்பெனிகளின் இடைவிடாத கொள்ளையால் 85 கோடிக்கும் அதிக மான மக்கள் வருமானம் இழந்து வறுமை யின் விளிம்பில் தள்ளப்பட்டிருக் கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் என்று கூறப்படுகிற நாடுகள் கூட இதி லிருந்து தப்பவில்லை. சுமார் 1.1 கோடி அமெரிக்கர்கள் உணவின்றி தவிக்கிறார் கள். மேலும் 2.2 கோடி அமெரிக்கர்கள் தங்களது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடிக் கொண் டிருக்கிறார்கள். உலகிலேயே அமெரிக்கா மிக அதிகமாக விவசாயப் பொருட்களை உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்துகொண் டிருக்கிற இந்த தருணத்தில்தான் இவை அனைத்தும் நடந்துகொண்டிருக் கின்றன.

பெருவாரியான உணவுப்பொருட்கள் கையிருப்பு என்ற பெயரில் கிடங்குகளில் மக்கிக் கொண்டிருக்கிற வேளையில் மிகப்பெருவாரியான மக்கள் உணவுப் பொருள் வாங்குவதற்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். இதுதான் முதலாளித் துவ உற்பத்தி முறையின் முரண்பாடு என்பதை உலக தொழிற்சங்க சம் மேளனம் சுட்டிக்காட்டுகிறது.

மிகப்பெருவாரியான உணவு தானியங்கள் உயிரி எரிபொருள் தயாரிப் புக்கென்று மாற்றிவிடப்படுகின்றன. இதன் பொருட்டு மூன்றாம் உலக நாடு களில் பெருமளவிலான நிலங்கள், கார்ப் பரேட் கம்பெனிகளால் வாங்கப்படுகின் றன. இதன் விளைவாக அந்த நிலங் களை நம்பி காலம் காலமாக விவசாயத் தில் ஈடுபட்டிருக்கிற விவசாயிகளின் வாழ்வுரிமையே மறுக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் மக்கள் நலன் காக்கும் விதத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என உலக தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்துகிறது.

குடிநீர்

சுத்தமான குடிநீர் பெறுவதற்கான உரி மை ஒரு அடிப்படை உரிமை; உலகளா விய உரிமை.
ஆனால் இன்றைக்கு அது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் சீல் வைத்து மூடி விற்கப்படுகிற ஒரு பண்ட மாகிவிட்டது. மிகச்சிறிய எண்ணிக்கை யிலான பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மகத்தான இயற்கை கொடையை தங் களது வியாபாரப் பொருளாக கைப்பற்றிக் கொள்கின்றன. உலகின் பல நாடுகளில் கொள்ளை லாபம் சம்பாதிக்கிற மிகப் பெரும் தொழிலாக இது மாற்றப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இன்றைக்கு 46 கோடிக்கும் அதிகமான மக்கள் தனியார் கம்பெனிகள் விற்கிற தண்ணீரை நம் பியே வாழ்கிறார்கள். 1990ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 5.1 கோடி யாக இருந்தது. வெறும் 10 நிறுவனங்களே இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்து கின்றன.

வர்த்தக ஒப்பந்தங்களும் நிபந்தனை களும் மூன்றாம் உலக நாடுகள் தங்களது குடிநீர் ஆதாரங்களையெல்லாம் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத் தை ஏற்றுச் செயல்படக் காரணமாகி யுள்ளன. இந்தியா, பொலிவியா, சிலி, அர் ஜெண்டினா, நைஜீரியா, மெக்சிகோ, மலே சியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் குடிநீர் துறையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு இரையான தேசங்களாகும்.

குடிநீர் என்பது ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு பொதுப் பண்டமாக கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மனிதப் பயன்பாட்டுக்கான நீராதாரம் ஒருபோதும் வர்த்தகப் பண்டகமாக கரு தப்படக்கூடாது என உலக தொழிற்சங்க சம்மேளனம் வற்புறுத்துகிறது.

கல்வி

எழுத்தறிவும் கல்வியும் இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சனைகளாக மாறியிருக்கின்றன; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் நிகழ்த்தப் பட்டுள்ள மிகப்பெரும் சாதனைகளும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளும் இன் னும் இந்த உலகிலிருந்து எழுத்தறிவின் மையை விரட்டியடித்துவிடவில்லை. உலகில் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்றைக்கும் ஆரம்பப்பள்ளிக் குக் கூட செல்லாத நிலையே நீடிக்கிறது. வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் 7.5 கோடிக்கும் அதிகமானோர் எழுத்தறி வற்றவர்களாக இருக்கிறார்கள். இவர் களில் 55 சதவீதம் பேர் பெண் குழந்தை கள் என்பதை கவனிக்க வேண்டும். வேலையின்மையும் பசியும் மிகத்தீவிர மாக பரவி வரும் நிலையில், பள்ளிகளில் இடையிலேயே நின்றுவிடுகிற குழந்தை களின் எண்ணிக்கை வேகமாக அதி கரித்து வருகிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூட கல்வியும், அதுதொடர்பான பல்வேறு துறைகளும் மிகக்கடுமையான பிரச் சனைகளாக மாறியிருக்கின்றன. இவை மாணவர்களின் மிகப்பெரும் போராட் டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. உல கின் ஒவ்வொரு பகுதியிலும் பொதுக் கல்விமுறை என்பது திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

எனவே இலவசமான, தரமான பொதுக்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத் திலும் தொழிற்சங்கங்கள் முன்னணியில் நிற்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.

சுகாதாரம்

சுகாதாரம் என்பது வியாபாரம் செய் வதற்கான ஒரு பண்டமல்ல. ஒரு தொழி லாளியின் உயிரோ எந்தவொரு நபரின் உயிரோ லாபத்தை பெருக்குவதற்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர் முக நாடுகள் சிலவற்றிலும் சமூகப் பாதுகாப்பு என்பது தொழிற்சங்க இயக் கம் சாதித்த மிக முக்கியமான அம்சங் களில் ஒன்று. ஆனால் இன்றைக்கு இந்தத் துறையில் கடுமையான தாக்கு தல்களை மக்கள் எதிர் கொண்டிருக் கிறார்கள். சுகாதாரம் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்களின் அப்பட்டமான தொழிலாக மாறிவிட்டது. அனைத்து பகுதிகளிலும் சமூகப்பாதுகாப்பு திட்டங் களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

வீட்டுவசதி

உலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீட்டுவசதிக்கான உரிமை உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.
இதன்பொருள் பாதுகாப்பான, பொருத்தமான, வசதி யான இல்லம் என்பது ஒவ்வொரு வருக்கும் கிடைக்க வேண்டும்; அமைதி யான, கவுரவமான, வெளியேற்றப்படு வோம் என்ற அச்சம் இல்லாத வாழ்க்கை கிடைக்கப்பெற வேண்டும் என உலக தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்து கிறது.

உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முக்கிய மான பிரச்சனையாக இது நம்முன் எழுந்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி இன்றைய உலகில் 160 கோடி மக்கள் குடிசைப்பகுதிகளில் எவ்வித வசதியும் தரமும் இல்லாத நிலையில், வாழ்க்கை யை ஓட்டிவருகிறார்கள்; 10 கோடி மக்கள் வீடே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவிலும்

முன்னெடுத்துச் செல்வோம்

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு அம்ச மும் இந்தியாவின் ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் அனுதினமும் எதிர்கொண்டு துயரத்தில் ஆழ்ந்திருக் கும் அடிப்படையான பிரச்சனை களாகும்.

எனவே அக்டோபர் 3ம்தேதி உலக ளாவிய முறையில் நடைபெற உள்ள இந் தப் போராட்டத் தினத்தை இந்தியா விலும் உலக தொழிற்சங்க சம்மேளனத் துடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதர நட்பு அமைப்புகளும் பெருவாரி யான தொழிலாளர்களின் பங்கேற்போடு நடத்திட முடிவு செய்துள்ளன. கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என தொழிற்சாலைப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளி லும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன.

சர்வதேச போராட்டத் தினத்தின் செய்தியை ஒவ்வொரு தொழிலாளியிட மும் எடுத்துச் செல்வோம்.

இதர பல நாடுகளைப்போலவே இந்திய அரசும், நவீன தாராளமயக் கொள்கையை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்குவதில் பிடிவாதமாக இருக் கிறது. இந்தப் பின்னணியில் சர்வதேசப் பார்வையோடு இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். இந்த
மகத் தான இயக்கம், காட்டுமிராண்டித்தன மான முதலாளித்துவ கட்டமைப்புக்கு எதிரான நமது மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com