Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வது அவசியம்

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை ஒழித்துக்கட்டி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்கள் அனைவரதும் வேதனை வடுக்களை நீக்கி, அவர் களுக்கு மீண்டும் நிரந்தரமான நல்வாழ்வை பெற்றுக் கொடுக்கும் பெரு முயற்சியில் இன்று இறங்கியிருக்கிறார். யுத்தம் முடிவடைந்த பின்னர் அரச படைகள் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களை கொடுமைப்படுத்தியதாகவும், அப்பாவி இளை ஞர்களை மட்டுமன்றி வயது வந்தவர்களை கூட ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுத்தள்ளியதாகவும் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் அரசாங்க தலைவர்களுக்கும் எதிராக போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு சில சர்வ தேச அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யும் இலங்கையை குற்றவாளி கூண்டில் அமர்த்தி கண்டனக் குரல் எழுப்பி, தண்டிப்பதற்கு எடுத்த முயற்சிகளும் குற்றம் இழைக்காத ஒரு நாட்டையோ அல்லது அந்நாட்டுத் தலைவர்களையோ தண்டி க்க முடியாது என்ற இயற்கை நீதி இலங்கையின் சார்பில் இருந்த காரணத்தினால் நம்நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் பய னளிக்காமல் பிசுபிசுத்து போய்விட்டன.

இதனால் தான் சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமான பிரேரணை நிறை வேற்றப்பட்ட போதிலும் அதனால் எங்கள் நாட்டுக்கு எவ்வித அழுத்தங்களோ, பாதிப்போ ஏற்படவில்லை.

விரைவில் மீண்டும் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் மகாநாட்டில் இலங்கையில் யுத்த காலத்தில் நடைபெற்ற தனது நிலையை ஆதாரபூர்வமாக விளக்கிக் கூறி, நாம் மனித உரிமை மீறல்களிலோ, யுத்தக் குற்றச் செயல்களிலோ ஈடுபடவில்லை என் பதை நிரூபிக்கக்கூடிய நிலையில் இருக்கிறதென்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்திருக்கிறார்.

இன்று எங்கள் நாட்டு மக்களும் அரசியல்கட்சிகளும் அரசியல்வாதி களும் குறிப்பாக ஊடகவியலாளர்களும் நாட்டை மீண்டும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதா? அல்லது கடந்த கால துன்ப துயரங் களை மறந்து, புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான நல்ல தோர் பாதையில் மக்களை அழைத்துச் செல்வதா என்ற அதி முக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாட்டினை கொண்டி ருப்பது இங்கு அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண் டிய விடயமாகும்.

எந்நேரமும் ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது குற்றங்களை சுமத்திய வண்ணம் அரசியல் இலாபம் திரட்டும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற தேசப்பற்று உணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

இந்த நல்ல தோர் முடிவை எடுப்பதற்கு அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூகத்தலைவர்களுக்கும் சிறந்த முன்னோடிகளாக ஊடகவியலாளர்கள் விளங்கி அவர்களுக்கு உண்மையை எடுத்து ரைத்து தங்கள் தவறான சுயநலப் போக்கை கைவிடச் செய்வதற்கு தங்களாலான சகல முயற்சிகளையும் எடுப்பது அவசியமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் இந்நாட்டுத் தமிழர்களின் பேராதரவு தங்களு க்கே இருக்கிறது என்ற மனப்பான்மையுடன் தாங்கள் செய்வதெல் லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்ட மைப்பினரும் இன்றைய நிலையில் எது அவசியம் என்பதை புரிந்து கொண்டு நல்லதோர் முடிவை எடுப்பது அவசியமாகும்.

எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு, பகிஷ்கரிப்பு, நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுத்தாக்கல் செய்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொண்டு இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப் பினர் மதி நுட்பத்துடனும் தீர்க்க தரிசனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இந்நாட்டில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் யுத்தத்தையோ, சண்டை சச்சரவுகளையோ, இனப்பூசல்களையோ மனப்பூர்வமாக எதிர்த்து வெறுக்கிறார்கள். தமிழ் மக்களின் ஒரே விருப்பம் சமாதானமும் நிம்மதியான வாழ்க்கையுமேயாகும்.

எனவே, மக்களின் உணர்வு களை புரிந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளு மன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் நிலைப் பாட்டை எடுத்துரைத்து தங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும்.

இதுவே ஜனநாயக பாராளுமன்றத்தின் சிறப்பம்சமாகும். இவ்விதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழு கூட் டத்தில் கலந்து கொண்டால் தமிழர் பிரச்சினைக்கு கூடிய விரை வில் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் இருக்கும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் நிறை வேற்ற தயக்கம் காட்ட மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்த உறுதி மொழியை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஹெல உறுமய போன்ற ஒருதலைப் பட்ச கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகளும் ஜே.வி.பியும் நம்பி பாராளு மன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விதம் நாட்டின் நன்மை க்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டால் நிச்சயம் எங்களுக்கு இனப்பிரச்சினை மட்டுமல்ல, மேலும் தீர்க்க முடியாத பல பிரச்சினை களை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com