Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்பின் கோரிக்கையும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென நிராகரித்துவிட்ட சீனாவும்

ஒரு தேசம் தொடர்பான பிரச்சினைக்கும் தேசியம் தொடர்பான பிரச்சினைக்கும் அதன் நோக்கெல்லை களுக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதை சகலரும் அறிவர். தேசம் என வருகின்ற போது சேதம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதையே தேசத் தலைமைகள் முக்கியத்துவப்படுத்திக் கொள்கின்றன. தேசியம் எனும் போது உள்நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்கின்ற கோரிக்கைகள், போராட்டங்கள், உரிமைக்கிளர்ச்சிகள் என்றடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ளலாம்.

எத்தகைய அடிப்படையில் பொருள்படுத்திக் கொண்டாலும், மேலெழுந்தவாரியாக அழுத்தங்கள் இருந்து கொண்டிருப்பினும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற பொதுவான கொள்கைக் கோட்பாடுகள் சர்வதேச நாடுகளிடையே இருக்கலாம். சிற்சில நாடுகளின் மீது சர்வதேச ஸ்தாபன ரீதியான கட்டமைப்புகளின் தலையீடுகள் காணப்படுகின்ற போதிலும் தனித்து பிரத்தியேகமான முறையில் அமையக்கூடிய தலையீடுகள் அரிதானவையே. அழுத்தங்களையும், தலையீடுகளையும் வயப்படுத்திக்கொள்ளவும், நியாயப்படுத்திக் கொள்ளவுமே சர்வதேச - அமைப்புகள் ரீதியான தலையீடுகள் பிரயோகிக்கப்படுவதாக இருக்கலாம்.

புலிகள் அமைப்பைப் போன்று எத்தகைய வலிமைகள் போரியல் திறமைகள் இருந்திருப்பினும் சர்வதேச ரீதியில், நாடுகள் அத்தகைய வலிமைகளை உள்ளக ரீதியான வலிமை மிக்க இயக்கமாகவன்றி அதற்கு துணைபுரிந்து காப்பாற்றுகின்றளவுக்கு, சர்வதேசம் இறங்கிச் செல்லும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

இந்தப் பின்னணியில் அரசாங்கங்களுக்கு தக்கசமயத்தில் சர்வதேசம் பணம், பொருள், படை, ஆயுதங்களை கொடுத்து கைகொடுப்பதைப் போன்று உள்நாட்டில் எத்தகைய பலம் பொருந்திய இயக்கங்களை ஊக்குவிக்கவும், கைகொடுக்கவும் முன்வருவதில்லை. அந்தடிப்படையில் தக்கசமயத்தில் கழுத்தறுபட்ட இயக்கமே புலிகள் இயக்கமாகும். இருந்த போதிலும் தனிப்பட்ட முறையிலும் சர்வதேசத்தின் சில நாடுகள் அவ்வப்போது நேசக்கரம் நீட்டி விடுவதை அறியமுடியாமலில்லை. அவ்வாறான சூழ்நிலைகளுக்கு குறித்த நாடுகள் மீது அல்லது இயக்கங்கள் மீது பிரத்தியேக அக்கறை, நலன் போன்றன இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனிப்பட்ட நலன் பிரத்தியேக அக்கறை இருந்ததாலும், புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதனாலுமே இந்தியா இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது. உணவுப் பொட்டலங்களைப் போட்டது, படையெடுத்தது. அக்காலம் இலங்கை மீதான தலையீட்டை கச்சிதமாகச் செய்து முடித்த இந்தியா, எந்தப் புலிகளைக் காப்பாற்ற 1987 இல் களமிறங்கியதோ, அதே புலிகளை அழித் தொழிப்பதற்கு, 2009 இல் இலங்கை அரசாங் கத்துக்கு வழங்க வேண்டியதை வழங்கி, அல்லது மெளனமாக இருந்து கைகொடுத்துதவியது. அந்த நடவடிக்கை தமது தலைவனைக் கொன்றொழித்த இயக்கத்தையும், தலைவரையும் இல்லாதொழிக்க வேண்டுமா என்ற பழிவாங்கும் இந்தியாவின் நடவடிக்கையாகக் கூட இருந்தி ருக்கலாம்.

ஆனால் அதே இந்தியா இன்று ஒருவகை அழுத்தத்தைக் கொடுக்கிறது. தமிழ் கூட்டமைப் பினரை அழைத்து விளக்கங்களை கேட்டறிந்து கொள்கிறது. இலங்கை அரசாங்கம் சிந்திப் பதற்கு மறுதலையாக சிந்திக்கிறது. அரசியல் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தையை ஆரம்பிக் குமாறு கோரிக்கை விடுக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தி செய்தது போன்று பிரத்தியேக அக்கறையை வெளிப்படுத்துவதாக அல்லது உள்நோக்கங் கொண்டிருப்பதாக புரியமுடியவில்லை. தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற எதிரும் புதிருமான நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமாக, ஒரு வகை சிலேடைச் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் பாதுகாப்புச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தம் பற்றிய செயலரின் கூற்று மற்றும் வடமாகாண படைத்தள ஸ்தாபிப்பு போன்றன பற்றி பேசப்படலாம் என்று ஊகிக்க முடியும்.

இத்தகைய பின்னணிகளின் அடிப்படையில் இந்தியா செல்வதற்கு முன்பு கிடைக்கப்பெற்ற அழைப்புக்கு இந்தியாவிலிருந்து திரும்பிவந்த பின்பு சீன அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை TNA  ிற்கு ஏற்பட்டது. இந்தியா, சீனா என்ற வகையில் உற்று நோக்குகையில் சீனாவுடன் இலங்கைக்குள்ள உறவு ஒருவகையானது, அதிகம் நட்புறவுமிக்கது. அந்தடிப்படையில் இலங்கை அரசுடனான பேச்சுக்கள் அதிகார பகிர்வு தொடர்பான விஷயங்களை முன்னிலைப்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு நல்லெண்ண அல்லது நட்புறவுரீதியான அழுத்தத்தை கொடுக்குமாறு சீனாவைக் கோரும் எண்ணப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுந்திருக்கலாம்.

இனப்பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில் இலங்கையை இயலச்செய்யும் முகமாக, சீன அரசாங்கம் அதன் ஆலோசனைகளை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றவகையில் TNA யினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பிலுள்ள பீஜிங் பிரதிநிதியால் மறுதலிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

TNA பாராளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட குழு சீனத்தூதுவரை சந்தித்தபோது மேற்காணும் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பிற விடயங்கள் சகிதம் சமீபத்திய இந்தியத் தலைவர்களுடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் சந்தித்தபோது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் சீனா இலங்கைக்கு துணைபுரிவதன் பெறாக, இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சீனா அதன் அறிவுரைகளை வழங்கவேண்டும் என சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதற்கும், அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் எமக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துள்ளன. அந்த வகையில் இத்தகைய முன்னெடுப்பில் சீனாவும் துணைபுரிய வேண்டும் எனக் கேட்டமைக்கு பதிலளித்த சீனத்தூதுவர் பீஜிங்கின் கொள்கையானது பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லையாதலால் அதனைச் செய்ய முடியாது எனக் கூறியதாக அறியமுடிகிறது.

இலங்கையில் அபிவிருத்தி வேலைகளுக்காக மில்லியன் கணக்கான டொலர்களை அள்ளிக்கொட்டிக்கொண்டிருக்கும் சீனா கூட கடந்த காலத்தில் விலகிநின்றது. ஆனால் சமகாலத்தில் இந்த நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் முன்னேற்றங்களை அறிந்துகொள்வதில் அதிக சிரத்தையுடனும், ஒளிவு மறைவு இன்றிய அக்கறையுடனும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவைப் போன்று பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உதவி ஒத்தாசைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துதவியதாக பேசப்படுகின்ற சீனாவுக்கும், இலங்கை மீது பற்றும் பாசமும் உண்டு. எப்படியும் இவையெல்லாம் பிராந்திய நலன்களையும் மேலாதிக்கத்தையும் கட்டுக்கோப்புக்குள் பேணுவதையும் அடிப்படைக்குறிக்கோளாகக் கொண்ட காட்சிகளாகுமெனில் குறை காண்பதற்கில்லை.

இந்தியாவின் பங்கும் TNA  ும்

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் இந்தியாவின் ஈடுபாடு ஒன்றும் புதியதல்ல. ஆனால் காலஞ்சென்ற அமர்தலிங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான அதன் உள்ளக தொடர்பூடாக தமிழ் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா ஆரம்பப் பிரவேசம் செய்தது. எவ்வாறெனினும் சமகாலத்தில் வரலாற்றுப் பின்னணிக்குப் புறம்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாக TNA  இருந்துகொண்டிருக்கிறது.

சகல அரசியல் கட்சிகளையும், போராளிக்குழுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு அன்றைய இந்திய அரசாங்கம் முயற்சித்தபோது, ‘விடுதலைப்புலிகள் - விஷேடமாக நாட்டின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவின் ஒன்றிணைந்த முயற்சி தொடர்பில் செவிசாய்க்க ஆயத்தமாக இருக்கவில்லை. இத்தகைய பின்னணியில், தற்போது கூட்டிணைந்து பணியாற்றுகின்ற கட்சிகள், புலிகளை ஒரு பொதுவான எதிரியாகவெ பார்த்தனர். இலங்கை அரசாங்கத்தை விடவும் ஒரு அச்சுறுத்தலாக நோக்கினர்.

2002 எல் நோர்வேயினால் அனுசரணை வழங்கப்பட்ட சமாதான முன்னெடுப்பில் ஈடுபடும் முஸ்தீபு மேற்கொள்ளப்பட்டபோது, புலிகளின் அரசியல் அங்கம் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட TNA  ின் உருவாக்கம் வரை, கூட்டமைப்பின் கட்சிகள் ஆயுதக்குழுவின் கடும்போக்கான மனப்பாங்கை கண்டனம் செய்திருந்தன. ஆர். சம்பந்தன், வி. ஆனந்தசங்கரி போன்ற தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னிலை அரசியல்வாதிகள் புலிகளுடன் அரசியல் ரீதியாக முரண்பட்டிருந்தனர். இத்தகைய முரண்பாட்டினையும், வெறுப்பினையும் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற TULF பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வத்தின் மரணச்சடங்கு உரையின் போது கருத்து வெளியிட்ட சம்பந்தனின் கூற்றுக்களைக் கொண்டு துக்கங் கொண்டாடியோர் உணர்ந்திருப்பர். பின்னர் TNA தாபிக்கப்பட்ட போது இதே சம்பந்தன், காலஞ்சென்ற புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பி.தமிழ்ச்செல்வன் முன்பாக நின்று அவரால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு செவிமடுத்ததாக கூறப்படுகிறது.

TNA யின் இந்திய விஜயம்

இந்தியாவுக்குச் சென்று அங்கு இந்தியத் தலைமைகளுடன் ஈடுபட்ட சமயம் விளக்கங்களை கேட்டறிந்த இந்தியா பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையவேண்டுமென்றோ, வேறு ஏதேனும் அழுத்தங்களையோ கொடுக்கவில்லை எனக்கூறுகின்ற TNA  ினரை இலங்கை அரசுடன் பேச்சு நடத்துமாறு இந்தியா கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைதல் தொடர்பான தமது நிலமை மாறவில்லை என TNA  ினரால் தெரிவிக்கப்படுகிறது. தெரிவுக்குழுவில் இணைதல் ஒரு தீர்வை அடிப்படையாகக் கொண்ட உடன்பாட்டினை முற்படுத்தியதாக இருக்க வேண்டும் எனக்கூறியதைத் தொடர்ந்து பேச்சு ஸ்தம்பித்துப் போனமை தெரிந்ததே. உத்தேச தெரிவுக்குழுவில் இடம்பெறக்கூடிய பல கட்சிகளின் பெரும்பான்மை காரணமாக தாங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பின்னடையச் செய்யப்பட்டு விடுவோம் என்ற ஆதங்கம் TNA  ்குண்டு. ஒரு பரஸ்பர அடிப்படை உடன்பாட்டோடு தெரிவுக்குழுவோடு இணைந்து ஏனைய கட்சிகளின் ஆதவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற TNA இதனையே இந்தியப் பிரதமரிடமும் எடுத்துக்கூறியதாக தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளதாக TNA கூறுகிறது. இடைநடுவே நாம் கைவிடப்பட்டு விடுவோம் எனக்கூறும் இவர்கள் தொடர்பில் கருத்துக்கூறிய அவதானி ஒருவர் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரையும் நம்பினால் ஒரு கோப்பை தேனீரோடு உலகில் காணப்படுகின்ற சகல பிரச்சினைகளும் களையப்பட்டுப்போய் விடும் என்றார். இதன் காரணமாகவே சம்பந்தப்பட்டவர்கள் கலந்துரையாடல் - பேச்சுவார்த்தை - விட்டுக்கொடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே யதார்த்தங்களை வெளிக்கொணரக்கூடிய ஒரு தர்க்கித்தல் பிரதிநிதியாக தெரிவுக்குழுவை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. விளைவு அல்லது பிரதிபலன் பற்றிய தர்க்கங்களுடன் தெரிவுக்குழு தனது பயணத்தை ஆரம்பிக்க முடியாது. முன்னெடுப்பு என்பதே முக்கிய பதமாக இருத்தல் வேண்டும். முன் நிபந்தனைகள் இல்லாமலிருக்கையிலேயே அந்த கலந்துரையாடல் அர்த்தமுள்ளவையாக அமையலாம் எனக் கூறுவோர், பரந்த அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடன்படிக்கையை ஏற்படுத்துக்கொள்வதில் தென்னிபிரிக்கா, வட அயர்லாந்து போன்ற நாடுகள் வெற்றி கண்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

(சட்டத்தரணி இஸ்மாயில், தலைவர் - சுயாதீனதேசிய முன்னணி (ஐ.நா))

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com