Contact us at: sooddram@gmail.com

 

22 வருடங்கள் மெளனித்திருக்கும் முஸ்லிம்களின் வெளியேற்றம்

விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்காக நடத்திய விடுத லைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முழுமையாக மழுங்கடிக் கப்படுவதற்கு அவர்கள் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறுகள் பல காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக இற்றைக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் மற்றுமொரு சகோதர இனமான முஸ்லிம் மக்கள் அங்கி ருந்து விரட்டியடிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.

பெரும்பான்மையின அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களில் அநீதியாகச் செயற்படுகிறது என்று கூறி தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப் பட்ட அஹிம்சை வழிப் போராட்டம் பின்னர் அதே தமிழ் தலைவர் களால் தமிழ் இளைஞர்களுக்கு உசுப்பேற்றப்பட்டு ஆயுதப் போராட்டமாக மாறி பின்னர் அது திசைமாறிச் சென்றதனால் அது இன்று முற்றாகவே அழித்தொழிக்கப்பட்டமை வரலாறாகிவிட்டது. இந்த உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தனர். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேச முஸ்லிம்கள் தமிழ் இயக்க ஆயுதப் போராட்டம் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத வேளையில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இப்போராட்டத்தில் தமது பங்களிப்பைச் செலுத்தினர்.

போராட்ட கால ஆரம்பத்தில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இயக்கங்களில், தமிழ் இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர் களும் தம்மை இணைத்து உண்மையான அன்றைய போராட்டத் திற்கு ஆதரவு வழங்கிவந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். அந்தளவிற்கு வடக்கு, கிழக்கு தமிழர்களுடன் முஸ்லிம் களும் இணைந்து மிகவும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். வடக்கு கிழக்கில் இன்று தமிழருக்கு நடக்கும் அநீநி நாளைக்கு தமக்கும் இழைக்கப்படலாம் என அன்று வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் எண்ணிப் பயப்பட்டதனாலும், சகோதரர்கள் போன்று வாழ்ந்து வரும் தமிழரது பிரச்சினைக்கு வழிகாணத் தாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதாலுமே அவர்கள் அன்று தமிழரது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்தனர்.

ஆனால் புலிகளுக்கு திடீரென்று என்ன நடந்ததோ தெரியாது. முதலில் சகோதர தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த சகலரையும் சரணடையுமாறு கட்டளையிட்டனர். சரணடையாதோரைச் சுட்டுத் தள்ளினர். ஒரே இலட்சியத்திற்காகப் பேராடிய சக தமிழ் இளைஞர்கள் பலரை இவ்வாறு துடிதுடிக்கக் கொன்றனர்.

அடுத்தததாக அவர்கள் அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை இருபத்து நான்கு மணிநேர கால அவகாசத்திற்குள் வடமாணத்தி லிருந்து உடுத்த உடுப்புடன் விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாக வடக்கில் தமிழ் மக்களுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது உடைமைகள், சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு துப்பாக்கி முனையில் வடக்கின் எல்லை வரை விரட்டி வந்து விடப்பட்டனர். ஏன், எதற்கு, என்ன தவறு செய்தார்கள் என எவருமே கேட்கமுடியாத நிலையே அன்று காணப்பட்டது. கேட் கச் சென்ற சில தமிழ் பிரமுகர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி முனையை நீட்டினார்கள். அதனால் இன்று வரை வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஏன் விரட்டப்பட்டார்கள் எனும் மர்மம் தொடர்கிறது.

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த மக்களை புத்தளமே வரவேற்றது. அன்றிலிருந்து இன்றுவரை சுமார் இருபத்து இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு முஸ்லிம்கள்அகதிகள்’, ‘இடம்பெயர்ந்தமக்கள் எனும் சொற்பதங் களுடன் குடிசைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கமோ அல்லது வெளிநாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் என்னதான் உதவிகளை வழங்கி இந்த முஸ்லிம்களை ஆற்றுப்படுத்தி வாழவைத்தாலும் அந்த மக்களின் மனங்களில் அன்றைய அச்சம்பவம் மாறாத, நீக்க முடியாத வடுவாகவே இருந்து வருகிறது. தமிழ் மக்களது போராட்டத்தில் இந்தத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் இணைத்துச் சென்றி ருந்தால் போராட்டம் வலுப்பெற்றதாக அமைந்திருக்கும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் தலை வர்களும் தமிழர் உரிமைகள வழங்க அன்றைய அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பர். இது புலிகள் விட்ட வரலாற்றுத் தவறுகளுள் மாபெரும் தவறாக அமைந்துவிட்டது.

புலிகளுடன் முன்னைய அரசாங்கங்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முஸ்லிம் தலைவர்களை அவர்கள் சந் தித்த போதும் கூட விரட்டியடித்து வெளியேற்றப்பட்டமை குறித்துப் பெரிதாக வருத்தம் தெரிவிக்காமை அவர்களது கடும்போக்கை எடுத்துக்காட்டியது. இருந்தும் இறுதி யுத்தத்தில் அரச படைகள் ஒவ்வொரு அங்குலமாகமுன்னேறி வன்னியைக் கைப்பற்றி மனிதாபி மான முறையில் மக்களை மீட்ட போதும், புலிகளைச் சரணடைய வைத்தபோதும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் என்பவற்றை வழங்கி அரசின் சார்பில் முன்னின்று உதவி செய்தவர், முன்னர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து புத்தளத் திற்கு வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை சரணடைந்த புலிகள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். பலர் நன்றி கூறியும், இருக்கிறார்கள்.

இடப்பெயர்வின் வலி என்ன என்பதை அவர் உணர்ந்திருந்த தனால் அம்மக்களுக்கும் சரணடைந்த புலிகளுக்கும் அரசின் சார்பாக பல உதவிகளைச் செய்தார். காரணம் எதுவும் கூறப்படாது கலைத்து விடப்பட்டவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்திருந்தால் புலிகளுக்கு இந்நிலை நிச்சயம் வந்திருக்காது. அன்று வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் புலிகள் தவறிழைத்த போது மெளனமாக இருந்த தமிழ்த் தலைமைகள் இன்று புலிகள் இல்லாத போதும் அது பற்றி பெரிதாக வருத்தம் தெரிவிக்கவில்லை. இருபத்து இரண்டு வருடங்கள் கழித்து அம்மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதும் அதற்குப் பெரிதாக வரவேற்பும் தெரிவித்தாகத் தெரியவில்லை. வடக்கில் குடியேறும் முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளை உரியமுறையில் வழங்குவதற்குக் கூடச்சில அதிகாரிகள் மனமில்லாது காணப்படு கின்றனர்.

காரணம் கேட்டால் உங்களுக்குப் புத்தளத்தில் காணி வழங் கப்பட்டுள்ளது. வீடு கட்ட நிதி கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கூறி தட்டிக்கழிக்கும் செயலை மேற்கொள்கின்றனர். இனிமேலும் இரு சமூகங்களும் வடக்குக் கிழக்கில் பிரிந்து செயற்படுவது இரு சமூகங்களுக்குமே ஆரோக்கியமானதல்ல என்பதை இரு சமூகங் களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரில் ஒருவர் குளிர்காய் வதை விடுத்து இனியாவது ஒற்றுமையுடன் செயற்பட்டு உரிமை களையும், சலுகைகளையும் பெற்று உயர்வாக வாழ்வதே சிறந்தது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com