Contact us at: sooddram@gmail.com

 

பட்ட வலிகள் போதும், இனியாவது நடப்பவை நல்லதாக அமையட்டும்

வடமாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டார். என்னுடைய பதவியின் செயல் பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது சத்தியப்பிரமாணத்தின்போது ஜனாதிபதியின் முன்பாக உறுதியளித்துள்ளார். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல. இது சத்தியப்பிரமாணம். அதிலும் நாட்டின் தலைவருக்கு முன்பாகச் செய்து கொண்ட சத்திய வாக்குறுதி. இதற்குக் கட்டுப்பட்டு நடத்தல் அவசியம். விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை, உயர் நீதிமன்ற நீதவானாக இருந்தவர். அவருக்கு இவை பற்றியோ சட்டம் பற்றியோ எவரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அரசுடன் இணங்கிச் செல்லும் அவரது பண்பையும், தூரநோக்கிய சிந்தனையையும் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. இந்த ஒன்றிலிருந்தே அவரது எதிர்காலச் செயற்பாடுகள் நிதானமாகவும், நாட்டின் இறைமையை மதித்து நடப்பதாகவும் அமையவுள்ளமை நன்கு புலனாகிறது. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர் அல்ல. கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கூட்டுக் கட்சியிலும் இதுவரை அவர் அங்கத்துவம் பெறவில்லை. தேர்தலில் அவர் பொது வேட்பாளராகவே கூட்டுக் கட்சிகளால் நிறுத்தப்பட்டார்.

இதன் காரணமாக விக்னேஸ்வரனை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கட்சியும் இவர் எமது கட்சி அங்கத்தவர் என உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் மீது விக்னேஸ்வரன் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது உண்மை. இரா. சம்பந்தனின் சொல்லை விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. அதனால்தான் இரா. சம்பந்தனின் கூற் றுக்கு மதிப்பளித்து விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தி யப்பிரமாணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாணக்கியம் மிக்க இரா. சம்பந்தனும் கற்றறிந்த பேராசான் விக்னேஸ்வரனும் இணைந்து தமிழ் மக்களுக்கான அரசியலில் ஈடுபட முன்வந்தமையை அம்மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதிலும் இவ்விரு வரினதும் முதலாவது முடிவான ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யும் முடிவை தமிழ் மக்கள் பெரிதும் வர வேற்றிருக்கிறார்கள். இதுவொரு நல்ல ஆரம்பம் எனத் தமிழ் புத்தி ஜீவிகள், தமிழ்க் கல்விமான்கள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் அனுபவம் சிறிதும் இல்லாது தமதும், தமது குடும்ப உறவுகளினதும் சொகுசு வாழ்விற்காகத் தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள உதிரிக் கட்சிகள் தமது விதண்டாவாத எதிர்ப்பைத் தெரிவித்திருந்தபோதும் மக்களுக்காகத் துணிந்து செயற்பட்ட இரா. சம்பந்தனையும் அதற்கு இணங்கிச் சென்ற விக்னேஸ்வரனையும் உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ் மக்கள் பட்ட வலிகள் போதும். இனியாவது நடப்பவை அம்மக்களுக்கு நன்மையளிப்பதாக அமையட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு நல்லதொரு அடித்தளம் இடப்பட்டுள்ளது. பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உறுதுணையாகச் செயற்படும் எனத் தெரிவித்திருந்தார். உண்மையில் ஜனாதிபதியே முழு நாட்டிற்கும் தலைவர். மத்திய அரசாங்கம் அவரது தலைமையிலேயே இயங்குகிறது.

கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து கடந்த நான்கு வருடங்களாக வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் வாழ்வுமுறை மேலோங்கிச் செழிப்புற ஜனாதிபதியே பிரதான காரணமாக இருந்துள்ளார். அவர் நினைத்தால் மக்களது நன்மை கருதி இப்போதும் எதுவும் செய்யலாம் எனும் அளவிற்கு அவரிடம் அதிகாரம் உள்ளது.

ஆனாலும் அவர் ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வழிவிட்டு, வடக்கின் அபிவிருத்திக்கு கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று மத்திய அரசாங்கம் பக்கபலமாக இருக்கும் எனத் தெரிவித்திருப்பதானது அவரது நற்குணத்தையும், அரசியல் தலைமைத்துப் பண்பையும் காட்டி நிற்கின்றது. ஆனால் கடந்த நான்கு வருட காலமும் இத்தகைய பண்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நாம் காணவில்லை. அவர்களிடம் இல்லாதவொரு பண்பாகவே இது காணப்படுகிறது. அரசாங்கம் என்னதான் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்ட போதும் அரசாங்கத்தை தமிழ்க் கூட்டமைப்பு வசை பாடியே வந்துள்ளது.

எனவே ஜனாதிபதியின் இந்த நல்ல சமிக்ஞையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நடந்தவை பற்றியே இனியும் பேசிக் கொண்டிராது இனி நடப்பவை நன்றாக அமைய வேண்டும் எனச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதற்கு, முதலாவதாகத் தமிழ்க் கூட்டமைப்பு தமக்குள்ளே இருந்துவரும் புல்லுருவிகளைக் களையெடுக்க வேண்டும். எந்நேரமும் விரோதமான விதண்டாவாதக் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டும் பழைய புலிக்கதையைக் கதைத்துக் கொண்டும் இருப்பவர்களை ஓரங்கட்டிவிட்டு புதிய சிந்தனையுள்ள இளைஞர்களைத் தன்னுடன் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com