Contact us at: sooddram@gmail.com

 

4 1/2 தசாப்த காலத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க அதி நவீன பாதை

இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்புக்கும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கும் இடையே இலகு பயணத்தைக் குறைந்த நேரத்தில் மேற்கொள்ளக் கூடிய கடுகதிப் பாதையொன்றை அமைக்க வேண்டும் என்ற கனவும் எதிர்பார்ப்பும் நீண்டகாலமாக இருந்து வந்த ஒன்று. திடமற்ற அரசியல் போக்கும் வளக்குறைபாடுகளும் பாதை அமைப்பைப் பிற்போட வைத்தன. பாதை அமைப்புக்குத் தேவையான காணிகளை எடுக்கும்போது பாதிக்கப்படும் தனியாருடைய எதிர்பார்ப்புக்களும் பொருளாதார ரீதியான சிக்கல்களும் சூழல் சார்ந்த காரணிகளும் கூட பாதை அமைப்புக்குத் தடையாக அமைந்தன. எனினும் 45 ஆண்டுகளின் பின்னர் இலங்கையரின் கனவு நனவாகியுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் நவீன பாதை அமைக்கப்பட்டு விட்டது.

1968இல் இப்பாதைக்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. நீண்ட கால தொடர் முயற்சியின் பயனாக எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி இப்பாதையின் மங்களகரமான திறப்பு வைபவம் நடைபெற இருக்கின்றது. கொழும்பிலிருந்து கட்டுநாயக்கவை 20 நிமிடத்தில் அடையச் செய்ய இலகுவான நவீன பாதையாக இது அமைந்துள்ளது. இலங்கை அரசு அமைத்துள்ள இரண்டாவது கடுகதிப் பாதை இதுவாகும். அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் உலகத் தலைவர்களை வரவேற்று குறுகிய நேரத்தில் கொழும்புக்கு அழைத்துவர இப்பாதை பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திப் பணிகளில் ஒன்றான சாலை அமைப்பில் இப்பாதை இன்னும் ஒரு மைல்கள். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திப் பயணிகளில் ஒன்றான சாலை அமைப்பில் இப்பாதை முக்கிய இடம் பெறுவதுடன் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும் இப்பாதை அமைப்புப் பயன்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணிச்சலும் சவால்களை மேற்கொள்ளும் திறமையும் காரணமாகவே இப்பாதை அமைப்பு வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டின் தலைவரும் சாலைகள் அமைப்புக்கு பொறுப்பான அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதியின் ஒப்பற்ற சாதனை இதுவாகும். நாட்டின் இன்றியமையாத தேவைகளுக்கு கடுகதிப் பாதையை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்கியவரும் துரிதமாக செயல்திட்டத்தை அமுல்படுத்த ஊக்குவித்தவரும் ஜனாதிபதி அவர்களே எனத் துறைமுக சாலை அமைக்கும் பணிக்குப் பொறுப்பான அமைச்சருமான நிர்மலா கொத்தலாவல தெரிவித்தார்.

கடுகதிப்பாதை அமைப்புக்கான யோசனைகள் 1968இல் முன்வைக்கப்பட்ட பின் பல்வேறு முட்டுக் கட்டைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்கப்பட்ட நிலையைப் பதிவுகள் காட்டி நிற்கின்றன. சட்ட அடிப்படையிலான முட்டுக் கட்டைகளும் சூழல் பாதிப்பு மற்றும் மக்கள் இடப்பெயர்வு தொடர்பான எதிர்ப்புக்கள் எனப்பல சவால்கள் உருவாகின. இருந்தபோதும் எண்ணியதைச் செய்து முடிக்கும் சிறப்பாற்றல் மிக்க ஜனாதிபதியின் திட்டமிட்ட செயற்பாடுகள் சவால்களை முறியடிக்கவும் செயல்திட்டத்தை அமுல்படுத்தவும் பயன்பட்டு ஆக்கம் பெற்றன. ஆரம்பத்திலே களனி ஆற்று மண்ணைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட போதும் இறுதியிலே கடலில் பெறப்பட்ட மணலே பயன்படுத்தப்பட்டது. இலங்கை அரசின் வேண்டு கோளுக்கமைய 1968, 1982களில் ஜப்பான் பூர்வாங்க வேலைத்திட்ட அறிக்கையை உருவாக்கியது. ஜப்பானிய முகவர்நிலையம் ஒன்று இதை மேற்கொண்டது. முகவர் நிலையத்தின் அறிக்கை 1984இல் வெளியானதுடன் கொழும்புக்கும் நீர்கொழும்புக்கும் கிழக்கில் இப்பாதையை அமைக்க அந்த முகவர் நிலையம் விதந்துரைத்தது.

இருந்தபோதும் சாலை அபிவிருத்தி அதிகாரசபை மேற்குறிப்பிட்ட செயல்திட்டத்தை மாற்றி கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் போக்குவரத்தை நீர்கொழும்பு ஏ3 வீதியூடாக அமைக்க 1981-1991களில் கருமமாற்றியது. ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த வேளையில் கொழும்புத் துறைமுகத்தையும் சர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் செயல்திட்டத்தை நகர அபிவிருத்தித் திட்டமாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய 1991 மே 3ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் ஜப்பானிய பாலம் அமைக்கும் முகவர் நிலையத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முன்னைய பூர்வாங்க அறிக்கையையும் சூழல் சார்ந்த தடைகளையும் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனினும் இது நடைமுறைக்கு வரவில்லை.

இறுதியாக 1995இல் ஆகஸ்ட் மாதம் கொழும்பு - சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான கடுகதிப் பயணத்துக்குரிய தனியான பாதை அமைப்பு இலங்கை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. தேவையான நிதிக்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

பாதைக்குரிய இடம் அடையாளப்படுத்தப்பட்ட போது அது முத்துராஜவெல சதுப்பு நிலம், நீர்கொழும்பு கடல்நீர் ஏரியை உள்ளடக்கியதாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் கொரியக் கொம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. செயல்திட்ட வேலைகளின் ஒரு பகுதி செய்து முடித்த நிலையில் பெருங்கொண்ட நிதி தேவை காரணமாக ஒப்பந்த வேலை கைவிடப்பட்டது. 12 பில்லியன் ரூபா இத்திட்ட வேலைக்காகத் தேவைப்பட்டது.

முதல் முயற்சி கைவிடப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டில் சீனாவின் ரிகீயிணி வங்கியின் நிதியில் பாதை வேலையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகரித்தது. 20 வருடக்கடனில் நிதி பெறவும் 292.4 மில்லியன் செலவாகுமெனவும் மதிப்பிடப்பட்டது. சீனாவின் மெற்றலொஜிகள் குறூப் கம்பனிக்கு வேலைக்கான ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது. செயல்திட்ட ஒப்பந்தம் 2008இல் கைச்சாத்திடப்பட்டபோது 2009 ஆகஸ்டில் 3 ஆண்டுகளில் முடிக்கக் கூடியதாக இவ்வேலை ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஆணையாளர் புஷ்பா குணரட்ன அவர்களின் கூற்றுப்படி நிரந்தரமாக 1000 உள்ளூர் தொழிலாளர் இதில் வேலை செய்தனர்.

 50,000 பேரின் சமயா சமய வேலையும் ஒத்துழைப்பும் கிடைத்தது. 500 சீன அதிகாரிகள் வேலையில் பங்கு கொண்டனர். பாதுகாப்புக் காரணங்களால் திட்டமிட்ட செலவுத் தொகையை விட மேலதிக நிதி செயல்திட்டத்துக்கு செலவானது. இக்கடுகதிப் பாதையில் 100 மதகுகள்  கட்டப்பட்டுள்ளன. 40 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புதிய களனிப்பாலம், பேலியகொட, ஜாஎல, கட்டுநாயக்க ஆகிய இடங்களில் இந்த அதிவேகப் பாதை இருந்த பாதையைக் குறுக்கறுத்துச் செல்கின்றது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படாத வகையில் தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு திறமையாகப் பாதையின் வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. கொழும்பு - நீர்கொழும்பு வீதி, மாபொல, கட்டுநாயக்க விமான நிலையச் சந்திகளில் அதிகரித்த பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் செயல்திட்ட வேலைகள் செய்து முடிக்கப்பட்டன.

இலங்கையின் தென் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கடுகதிப்பாதையிலும் பார்க்க வித்தியாசமான பல நவீன அம்சங்கள் இப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளன. பாதை ஓரத்திலும் நடுப்பகுதியிலும் இயற்கை எழில் நிறைந்த மலர்கள் கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு இனிமையும் தருகின்றன. வேறுபட்ட செய்திகளைப் பரிவர்த்தனை செய்யும் நவீன வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. தெற்கில் அமைக்கப்பட்ட கடுகதிப்பாதையில் உள்ளதை விட வித்தியாசமானதும் இலத்திரனியல் பொறிமுறையில் அமைந்ததுமான பயணச் சீட்டை வழங்கும் முறை கருமத்தைச் சுலபமாக்குகிறது. பிரதான கட்டுப்பாட்டு நிலையம் சீதுவையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தே கமெரா மூலமாக கடுகதிப்பாதையில் நடைபெறும் விஷயங்களையும் ஏனைய விஷயங்களையும் அவதானிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சீதுவைக் கட்டுப்பாட்டு நிலையம், தீயணைக்கும் படை, பொலிஸ் நிலையம் போன்றவற்றை  கமெரா மூலம் நெறிப்படுத்தும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நிரப்பி மாற்றம் செய்தும் சூழலில் ஏற்பட்ட தடைகளையகற்றியுமே கடுகதிப்பாதை அமைக்கும் செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சுற்றாடலில் வெள்ளத்தால் ஏற்பட்ட கஷ்டங்களைத் தவிர்க்கவும் பாதைக்குப் பாதகம் ஏற்படாத நெறிமுறைகளையும் கையாண்டுள்ளோம். வெள்ளத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும். வெள்ளத்தை வெளியேற்றவும் 42 புதிய பாலங்களை இப்பிரதேசத்தில் அமைத்துள்ளோம். சதுப்பு நில நீரை இலகுவாக வெளிப்போக்க 102 மதகு  களையும் அமைத்துள்ளோம். முத்துராஜவெலவில் இருந்த டச் கால்வாயைத் திருத்தி அமைத்துள்ளோம். இக்கால்வாய் 40 மீற்றர் அகலத்துக்கு வெட்டப்பட்டுள்ளது. இந்தக்கால்வாயின் நீளம் 8 கிலோமீற்றர் ஆகும். நீண்ட காலம் கவனிக்கப்படாமல் கிடந்த கால்வாய் தற்போது நல்ல பயன்தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடுகதிப்பாதை அமைப்பால் இப்பிரதேசம் அழகாகவும் பொலிவாகவும் காட்சியளிக்கிறது. இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதை அமைப்பால் இடம்பெயராமல் இருக்கவே முத்துராஜவெலப் பிரதேசம் ஓடுபாதைக்குத் தெரிவு செய்யப்பட்டது.

700 குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர்ந்தனர். இவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நஷ்ட ஈட்டுக்கு 3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த செயல்திட்டம் 292 மில்லியன் 45 டொலருக்குரியதாக மதிப்பிடப்பட்டிருந்த போதும் எதிர்பாராத செலவுகளால் 335 மில்லியன் யு.எஸ்.டொலர் செலவிடப்பட்டுள்ளது. பேலியகொடைச் சந்தியில் ஏற்படும் பிரயாண நெருக்கடியைத் தவிர்க்கக் களனி கங்கைக்கு மேலாக ஒரு பாலம் முடிவடையும். இப்பால அமைப்பால் பயணிகளின் நெருக்கடி அதிகளவில் குறைவடையும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பாலம் முடிவடைந்த பின்னர் இப்பாதையை பேலியகொடையில் இருந்து செல்லும் பாதையுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பின் பிரயாணத் தடைகள் பெருமளவு நீங்கும் என்பதுடன் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கலாம்.

இம்மாதம் 27ஆம் நாள் மங்களகரமாகத் திறந்து வைக்கப்படும் கடுகதிப்பாதையால் தினமும் 10,000 வாகனங்கள் பயணம் பண்ணமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி இப்பாதையைத் திறந்து வைக்கும் வைபவத்தைச் சிறப்பிப்பதற்கான ஒழுங்குகளை மனநிறைவுடன் மேற்கொண்டு வருகிறோம்.

சுஐப் எம். காசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com