Contact us at: sooddram@gmail.com

 

முதலமைச்சராக விக்னேஸ்வரன்

இணங்கிச் செல்லும் அரசியல் மூலம் வெற்றி காணலின் முதற்படி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், முதலமைச்சர் பதவியேற்பு, அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு வாரகாலம் பிடித்திருந்தது. தமது வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விவகாரங்களில் நீடித்த இழுபறியும் சிக்கல்களும், வடக்கு மாகாணசபையை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதில் உள்ள சவால்களை வெளிப் படுத்தியுள்ளன. முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்ற விவகாரத்திலும், அமைச்சர்கள் நியமனம் குறித்தும் எழுந்த இழுபறிகள், வெற்றிக்குப் பிந்திய சூழலை, கவலைக்குரிய விவகாரமாக்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தமையை பாராட்டவே வேண்டும்.

வடக்கு மாகாண முதல்வராக யாரை நிறுத்துவது என்று, மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், கிட்டத்தட்ட இதேபோன்றதொரு இழுபறி நிலை கூட்டமைப்புக்குள் தோன்றியிருந்தது. ஆனால், கடைசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிறுத்திய, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனே முதன்மை வேட்பாளர் என்ற ஒருமித்த முடிவுக்கு இணங்கும் நிலை ஏற்பட்டது.

விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்தாமல் போயிருந்தால், இத்தகைய வெற்றியை தமிழ் மக்கள் கொடுத்திருப்பார்களா? வேறொரு முதன்மை வேட்பாளரால், இந்தளவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்க முடியுமா? என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள் தான்.

தேர்தலில் வெற்றி பெற்றதும், யார் முன் பதவியேற்பது, யார் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்ற விடயத்திலும் இழுபறிகள் தோன்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர்களை அறிவித்த போது, அவர்களில் அரசியல்வாதிகளல்லாத துறைசார்ந்த விற்பன்னர்கள் பலரும், உள்ளடக்கப்பட்டிருந்ததால், தேர்தலில் வெற்றி பெற்றால், அமைச்சர்கள் நியமனத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தப் பிரச்சினை தான் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெடித்தது.

முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தியே போட்டியிட்டதால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அதுகுறித்த முரண்பாடுகள் ஏற்படவில்லை. ஆனால், முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்ற விடயத்தில், கிட்டத்தட்ட ஒரு தேவையற்ற சர்ச்சையே தோன்றியதாகத் தெரிகிறது. சட்டவிதிகளையும், மரபுகளையும் மட்டுமன்றி, காலச் சூழலையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது தான் வெற்றிகரமான அரசியல் தலைமைகளின் பண்பாக இருக்க முடியும்.

இந்த விடயத்தில் இரா. சம்பந்தனும் சி.வி.விக்னேஸ்வரனும் எடுத்த முடிவுகள், ஒரு தரப்பினருக்கு ஜீரணிக்க முடியாததாக இருந்தாலும், தற்போதைய அரசியல் நடைமுறைக்கு அதைவிடப் பொருத்தமான அணுகுமுறை வேறேதும் இருந்திருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், கடும்போக்காளர்களும் மென்போக்காளர்களும் மட்டுமன்றி, இரண்டுக்கும் இடைப்பட்டவர்களும் உள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதன் மூலம், அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, சர்வதேச சமூகத்துக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதிலும் தான் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள ஒரு தரப்பினர் பிரசாரத்தில் இறங்கியது தான் வேடிக்கையான விடயம்.

தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு வேட்பாளரும் எந்தவொரு கட்சியும் தாம், இலங்கை அரசாங் கத்தின் உதவிகளைப் பெறாமல் ஆட்சியை நடத்துவோம் என்றோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்பாக பதவியேற்க மாட்டோம் என்றோ வாக்குறுதி கொடுத்திருக்கவில்லை.

அப்படி வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றிருந்தால், அது வடக்கு மாகாண மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்ற முடிவுக்கு வர முடியும். மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மாகாணசபையில், வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றினால் ஆட்சியை நடத்துவது எத்தனை சிரமமான காரியம் என்பதை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே வெளிப்படுத்தியிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே நம்பியிருக்க வேண்டியதொரு சூழலில், தமக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமானால், வடக்கு மாகாணசபை, அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் தான் சாத்தியமாகும். தேசியப் பிரச்சினை விடயத்தில் கடைப்பிடிக்கப்படுவது போன்று, மாகாணசபை நிர்வாகத்தையும், முரண் அரசியல் போக்கில் அணுக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்குமேயானால், அடுத்த தேர்தலின் போதும் அரசாங்கம் எதையும் தரவில்லை, எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றே வாக்குக் கேட்கும் நிலை ஏற்படும்.

மத்திய அரசாங்கத்திடம் உதவியைப் பெறாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், மாகாண நிர்வாகம் ஒன்றை இயக்குவதால், யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

இதனால், அடுத்த தேர்தலில் இத்தகையதொரு நிர்வாகம் எதற்கு என்று சிந்திக்கும் நிலைக்கு வடக்கிலுள்ள மக்கள் தள்ளப்படுவார்கள். அதற்காக, இணக்கப்போக்குடன் செயற்பட்டால், மாகாணசபைக்கான எல்லா உதவிகளையும் மத்திய அரசாங்கம் செய்யும் என்று முழுமையாக கருதிவிட முடியாது.

ஆனால், அத்தகையதொரு நிலைக்கு ஒருபோதும், மாகாண நிர்வாகம் பொறுப்பல்ல என்ற உண்மையை, மக்களால் மட்டுமன்றி, சர்வதேச சமூகத்தினாலும் விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அனைவருமே, இலங்கையை துண்டாடுவதற்குத் துணைபோக மாட்டோம் என்ற சத்தியக்கடதாசியை கொடுத்துள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் நியமன விடயத்திலும் எழுந்த சிக்கல் சற்று வேறுபட்டது. நான்கு கட்சிகள், ஐந்து மாவட்டங்கள், துறைசார் நிபுணத்துவம் என்று பல்வேறு சிக்கல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்க நேரிட்டது.

ஒரு பக்கத்தில் மத்திய அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் போக்காளர்கள், மற்றொரு பக்கத்தில் சர்வதேச சமூகம், என்று மும்முனை அழுத்தங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், வடக்கு மாகாண நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது மிகவும் சவாலுக்குரிய விடயம் தான்.

ஆனால் முதலமைச்சர் பதவியேற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. எக்காரணம் கொண்டும் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு இடையூறாக இருக்காது என அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த நான்கு வருட கால அபிவிருத்திப் பணிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துச் செயற்படும் பட்சத்தில் எல்லாமே நன்றாக அமையும் என்பதே உண்மையும், யதார்த்தமும் ஆகும்.

*******************************************************************************

மாகாண சபைகளுடன் இணைந்து அரசு நல்லாட்சியை மேற்கொள்ளும்

தேசத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் நிர்வாக இயந்திரத்தை சீராக செயற்படுத்தி மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைக்கும் அதி உன்னத நோக்கத்துடன் மத்திய அரசாங்கமும், மாகாண நிர்வாகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

வடமாகாணத்தின் முதலமைச்சராக தனது முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைப வத்திலேயே ஜனாதிபதி இந்தத்திட்டம் பற்றி தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டங்களின் போது மாதந்தோறும் கலந்து கொள்ளுமாறு 9 மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கும் அழைப்புவிடுக்க இருப்பதாகவும் இதன் மூலம் மாகாண முதலமைச்சர்கள் தத்தமது மாகா ணங்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொள்வது இலகுவாக இருக்குமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த யோசனை மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண நிர்வாகங்க ளுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் ஏற்படுவதை தவிர்ப்பதுடன் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு பேருதவியாக அமையுமென்று அரசியல் அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத் தியிருக்கும் ஜனாதிபதி அவர்கள், தேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதே வேளையில் நாடெங்கிலும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்தும் அதே வேகத்தில் செயற்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணம் சரியான முறையில் நடை முறைப்படுத்துவதற்கு நாட்டில் நல்லிணக்கப்பாடும் இனங் களிடையே ஒற்றுமையும் ஏற்படுவது அவசியம்.

 ******************************************************************************

வடக்கின் முதலாவது முதலமைச்சர் குறித்த சில குறிப்புக்கள்

வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றார். கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குக ளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி.விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள்.

* கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ஆம் நாள் பிறந்தார்.

* இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.

* இரண்டு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன். இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.

* இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.

* ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.

* தனது 11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.

* லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.

* கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.

* 1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

* 1979 மே 7ஆம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

* 1987இல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ஆம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

* வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல் நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

* 1995ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

* உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ் மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

* 2004ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்டெ ம்பர், 21ஆம் நாள் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார்.  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com