Contact us at: sooddram@gmail.com

 

வியப்பூட்டும் இந்திய - சீன பாரம்பரியம்

(டி.ஞானையா)

சீன மக்களின் நீண்ட பாரம்பரிய கலாச் சாரத்திலும் நாகரீகத்திலும் இந்தியாவின் ஆழமான தாக்கம் இன்றும் பசுமையாக தைத்து நிற்கின்றது. இத்தகைய தாக்கம் சீனா பற்றி இந்திய மக்களிடம் இடம்பெற்றிருக்க வில்லை. 20ம் நூற்றாண்டில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வெடித்த கட்டத்தில் சீனாவிலும் வெடித்ததால் சீனா மீது நல்லு ணர்வும் நட்பும் இயல்பாகவே உருவானது. ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருநாடுகளும் கை கோர்த்தன. நேரு மற்றும் சூ - என் - லாய் 1954ல் வெளியிட்ட பஞ்சசீல கோட்பாடு உலகப்பிரசித்தி பெற்றது. ஆனால் இந்திய பிற் போக்கு சக்திகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத் தியத்திற்கும் வேப்பங்காயாய் கசந்தது.

ஆனால் 1959ல் தலாய்லாமா சோசலிச மாற்றத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கி இந்தியாவிற்கு ஓடிவந்த பொழுது அவரை இந்திய அரசாங்கமே வரவேற்றது. அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து எழில்மிகு இமயமலைச் சாரலில் திபெத்திற்கு அரு காமையில் உள்ள நகரமான தரம்சாலாவை தமது சொந்த செலவிலேயே தலைமை நகரமாகக் கட்டிக் கொடுத்தனர். ஒருவகையானபோட்டி திபெத் அரசுஎனவும் தரம் சாலாவைகுட்டி லாகாஎனவும் அமைத்துக் கொண்டனர். இவை நட்புறவை கடுமையாக பாதித்தது. காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியவைகளில் விடு தலைகோரும் ஒரு தலைவருக்கு இது போன்று ரத்தினக் கம்பள வரவேற்பளித்து இதே வசதிகளை சீனா செய்து கொடுத்தால் அதை இந்தியாவிற்கு எதிரான சதி வேலை என்று நாம் சொல்லமாட்டோமா? ஆதலின் இது 1962ல் எல்லை மோதல்களுக்கு இட்டுச் சென்று, இருநாட்டு உறவுகளையும் சீரழித்தது. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் எடுத்து வந்த நன்முயற்சிகளால் உறவுகள் படிப்படியாக சீரடைந்து எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியையும் உருவாக்கியுள்ளது.

ஆயினும் இந்தியாவின் பிற்போக்காளர் களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்றும் பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக்கொண்டு தான் உள்ளனர். இப்பின்னணியில் அண்மை யில் பிரபல பெண் எழுத்தாளர் பூனம்சூரி எழு தியசீனா - அதன் ஆன்மாவைத் தேடுதல் - பெய்ஜிங் டைரியிலிருந்து சில பத்திகள்என்ற நூலில் இருநாடுகளின் நீண்ட பாரம் பரிய உறவு பற்றி வியப்பூட்டும் தகவல்கள் கொடுத்துள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சீனாவில் தங்கி தொலைதூரப் பகுதிகளுக்குக் கூட சுற்றுப் பயணம் மேற் கொண்டு தகவல்களை மிகச் சிரமப்பட்டு சேகரித்து வெளியிட்டுள்ளார்.

கி.பி. 5ம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் ஹூனான் மாகாணத்தில் சமஸ்கிருத சூராக் கள் பதியப்பட்டு இன்றுவரை பாதுகாப்பாக உள்ளன. சீனர்கள் சமஸ்கிருத மொழியை ஃபான்யு என்றழைக்கின்றனர். இதனுடைய அர்த்தம் பிரம்மதேவனின் மொழி. தெய்வமொழி, பிராமணமொழி. ஆன்ஷிகாவ் என்ற சீன இளவரசன் பவுத்த மதத்தைத் தழுவி பவுத்த துறவியாக மாறி 176 சமஸ்கிருத கிரந்தங்களை மிகத் துல்லியமான சீனமொழியில் மொழியாக்கம் செய்தார். நூல் அச்சடிப்பது சீனாவில்தான் துவங் கியதாம். கி.பி. 757லேயே சமஸ்கிருத மந்திரங் கள் சீனாவில்தான் முதன் முதலில் அச்சடிக் கப்பட்டதாம். வால்மீகி இராமாயணத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட ஜடகா எண் 461 என்றதசரத ஜடகாபாலிமொழியிலிருந்து சீனத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதாம்.

ஹான் வம்ச பேரரசன் கி.பி. 65ல் ஒரு தெய்வீக உருவம் பளிச்சென்று பொன்னிறத் தில் ஒளிவீசிக்கொண்டு அரண்மனையைச் சுற்றிச்சுற்றி பறந்து கொண்டிருந்ததாக கனவுகண்டு வியப்படைந்தாராம். தனது அமைச்சரிடம் இதைப் பற்றி கூறிய பொழுது, அந்த அமைச்சர்மேற்கே உள்ள ஒரு தொலை தூர பூமியில் பறக்கத் தெரிந்த துறவியான புத்தர் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக் கிறேன்என்றாராம். உடனே மன்னன் தனது அறிவாளிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைத்து அவர்கள் 42 சமஸ்கிருத சூத்திரப் பிரதிகளை கொண்டு வந்தனராம்.

வடக்கு திபெத்தை ஒட்டியுள்ள பிராந்தியங் களில் ஒரு புதுமையான மதம் இருந்து வந் துள்ளதாம். இதை யுன் ஷெங் தர்மா என்ற ழைக்கின்றனர். இதன் அர்த்தம்இரகசிய மதம்பவுத்தமும் பிராமண மதமும் ஒன்றி ணைக்கப்பட்ட மதமாம். ஃபாடெங்சுன் ஷெங் என்று அழைக்கப்பட்ட புத்தபிரான் இங்கு பிரதான துறவியானாராம்.

ஒரு மிகப்பெரிய வினோதம், சீனாவின் பல பிராந்தியங்களில் சரஸ்வதி என்ற தெய்வம் வழிபடப்படுகின்றாள். கல்வி, ஞானம், போரில் வெற்றி, இயற்கை சீற்றங்களிலிருந்து பாது காப்பு ஆகியவை இந்த சரஸ்வதி தேவதை யின் மகத்துவம் என்று மக்கள் நம்பி வந்தனராம்.  யானைமுகம் தெய்வமான விநாயகர் சில பகுதிகளில் வணங்கப்படுவது உண்டு. கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து புனித யாத்திரை தலங்களில் விநாயகர் உருவ பொம்மைகள் விற்கப்பட்டு வருகின்றனவாம். ஷான்க்ஸி மாகாணத்தில் சிவலிங்கம் போன்ற வடிவில் ஒரு பகோடா (பவுத்த ஆலயம்) காட்சி யளிக்கின்றது. அதை ஒட்டியுள்ள குகை களில் சிவன், இந்திரன், விஷ்ணு ஆகியோ ரின் விக்கிரகங்கள் காணலாம். சிவபெருமான் மூன்று தலைகள், எட்டுகால்களுடன் ஜம் மென்று தனது வாகனமான காளை மாட்டின் மீது சவாரி செய்கிறார்!

காவல் தெய்வமாகக் கருதப்படும் குரங்கு உருவ அனுமானும் திராவிட மன்னர்களான வாலியும், சுக்ரீவனும் கூட காணப்படுகின் றனர்! கி.மு. 5ம் நூற்றாண்டில் (புத்தர் காலம்) ஒரு பிரம்மாண்ட நூலகத்தில் சீன தத்துவ ஞானிகளான கன்ஃபூசியஸ், லாவோட்சே மற்றும் பாரசீகத்தின் ஜொராஸ்டர், ஹோமர், ப்ளாட்டோ, சாக்ரடீஸ(கிரீஸ்) பாலஸ்தீன எலிஜா, கிரேக்க விஞ்ஞானிகளான துசை டிஸ், ஆர்கிமிடிஸ் ஆகியோரின் நூல்களுடன் பவுத்த நூல்களும், சமஸ்கிருத ஏடுகளும் உள்ளன. இந்தியாவில் வெளிநாட்டு தத்துவ ஞானிகளின் தத்துவ இயல் நுழைய இப்படி அனுமதிக்கப்பட்டதில்லை.

வடமேற்கில் வெகு தொலைதூரத்திலுள்ள பிசாக்லிக் என்ற ஊரில் பிரமிக்கத்தக்க ஆயிரம் புத்தர் உருவங்கள் இயற்கையான குகை பூங்காவில் இன்றும் காணலாம். மற் றொரு பிரம்மாண்டமான குகையில் ஆயிரக் கணக்கான ஆவணங்கள், கைப்பிரதிகள், பழங்கால சுவட்டு சுருள்கள், பட்டுத்துணி ஓவியங்கள், ஜரிகை வேலைப்பாடுகளுடைய ஆடைகள் உள்ளனவாம். அத்துடன் ஆயிரக் கணக்கான சூத்திரங்களின் பதாகைகள், நூல்கள், சமஸ்கிருதம், பிரகிரிதம், பாலி மொழி களில் காணலாம். தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் அகழ்வாராய்ச்சி தோண்டலின் போது தற்செயலாக வண்ணம் பூசப்பட்ட ஒரு கதவு தென்பட்டு அதை உடைத்து குகைக் குள் சென்ற பொழுது இவைகள் காணப்பட்டன.

பூனம் சூரி சென்றிருந்த ஒரு மேற்கு கடை கோடி நகரமான ஜியோஹாவில் (பழங்கால ஷெஷ்ஷி மாகாண தலைநகரம்) இந்தி திரைப்பட பாடலை தற்செயலாக காதில் விழக் கேட்டு விசாரித்த பொழுது இந்தி திரைப்படங் களை மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என் றனராம். ஒரு கடையின் நுழைவாயிலில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ராணி முகர்ஜி படம் ஒட்டப்பட் டிருந்த தாம்! தமிழ் திரைப்படங்கள் கூட சீனா வில் திரையிடப்படுவதாக பூனம் கூறுகிறார். அதனால்தான் சீனர்களுக்கு இந்தியர்கள் மேல் துவேஷ உணர்வு ஏற்படுவதில்லை. துவேஷ உணர்வை, பகைமை உணர்வை தூண்டிவிடுபவர்களும் அங்கில்லை.

இந்தியாவில் வேறுநிலைமை. இந்தியா வின் முதல் எதிரி சீனாதான் என்ற கருத்து பர வலாக நம்பப்படுகின்றது. சீனாவின் ஆபத்தை சமாளிக்க இந்தியாவும் அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த ஆர்எஸ்எஸ் சங்சாலக் குரு கோல்வால்கரின் சிஷ்யர் வாஜ்பாய் 1998ல் ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரு சில வாரங்களில் பொக்ரானில் அணு குண்டு வெடித்துவிட்டு அன்றே அவர்களின்இயற்கைநண்பரான அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கு சீன ஆபத்தை எதிர்கொள் ளவே இது தேவைப்பட்டது என்று விளக்கக் கடிதம் எழுதினார். அவர் மட்டுமல்ல, இன்றும் இந்தியா அணுகுண்டு ஏந்தி 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பாய்ந்து தாக்கும் ஏவு கணைகளையும் நியூக்கிளியர் நீர் மூழ்கிக் கப்பல்களையும் தயாரிக்க தீவிரமாக முனைந்து வருவது யாரை இலக்காகக் கொண்டது? 5000 கி.மீ. தூர ஏவுகணை மற்றும் நீர் மூழ்கி பாகிஸ்தானைத் தாக்க தேவை இல்லை அல்லவா?

அமெரிக்க அணுகுண்டு இந்துமகா கடலில் திகோ காரிசியாவில் இந்தியாவையும் இலக்காக்கி அமெரிக்கா அமைத்திருப்பது நமது நாட்டிற்கு ஆபத்தில்லையாம். அது போன்றே சீனாவை நமது இயற்கையான நண்பனாக பரம்பரை நல்லெண்ணத்துடன், “இந்தி - சீனி பாய்பாய்என்ற உறவை மீண் டும் உயிர்ப்பித்துக் கொண்டுவிட்டால் சீனா நமக்கு ஆபத்தில்லை என்றாகிவிடும் அல்லவா? எல்லைத் தகராறையும் நிச்சயமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். காஷ்மீர் பிரச்சனையையும் தீர்த்துக் கொண்டு பாகிஸ்தான் உடனும் சகோ தர உறவு கொள்வது சாத்தியமே. இயற்கை அமைத்துள்ள இரண்டு மிகப்பெரிய அண்டை நாடுகளுடனும் இயல்பான நட்புறவு, நல்லுற வானது 15,000 கி.மீ. தொலைவில் உள்ள ஏகாதிபத்திய, ஆக்கிரமிப்பு, பயங்கரவாத சுயநல அமெரிக்காவுடன் அமைத்துக் கொள் ளும் நட்பைவிட நமக்கு பேராறுதலும், பாது காப்பு உணர்வும், நிம்மதியையும் கோடானு கோடி பணச்செலவு சிக்கனமும் கிடைக்கும் அல்லவா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com