Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் சினிமா

பண்பாட்டை அழிக்கும் பாதை

(இ.டி. ஹேமாமாலினி)

குதிரையின் கண்களின் ஓரங்களில் சேணம் கட்டப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த சேணம் இல்லையென்றால் என்னாகும்? நாலாபுறமும், குதிரை தன் பார்வையைத் திருப்பி, சவாரி செய்பவரை, சாக்கடையில் தள்ளிவிடும். குதிரைக்குச் சேணம் போன்றது தான் திரைத் துறைக்குத் தணிக்கைத் துறை, ஆனால் இந்த தணிக்கை என்ற சேணம், கண்ணாடியாக மாற்றப்பட்டு விட்டதோ என்றுதான் அண்மைக் காலத் திரைப்படங்களை பார்க்கிற போது நினைக்கத் தோன்றுகிறது. ஆபாச, வன்முறைக் காட்சிகள் கற்பனைக்கும் எட்டாத அளவில் கொடிகட்டிப் பறப்பதைப் பார்த்தால், வேறு என்ன எண்ணுவது? ஒரு கலையின் வடிவம் என்பது பார்க்கும் மனிதரின் மனங்களில் மாறுதல் ஏற்படுத்தும் அதி அற்புத சக்தி வாய்ந்தது. சிறு வயதில், ‘அரிச்சந்திராநாடகம் பார்த்த, ‘மோகன்தாஸ்பின்னாளில், ‘மகாத்மாவாக மாறிய வரலாற்றின் பின்னணியில், ‘அரிச்சந்திராஅங்கம் வகிக்கிறது.

ஒரு கலையின் வலிமைக்கு இதவிட வேறு சான்று ஏதும் தேவையில்லை. கலை என்பது ஒரு விதை. அந்த விதை ஒரு விஷச் செடியை விளைவிக்கும் என்று தெரிந்தால், அதை அழித்து விடுவதா? வளரட்டும் என்று மண்ணில் விதைத்து விடுவதா? 80, 90 வரை வீரிய விதையாகச் செயல்பட்ட திரைப்படங்கள், இப்போது விஷ விதைகளாக மாறிப் போக யார் காரணம்?பல கோடிகள் போட்டு, படம் எடுக்கும் எங்களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்றால், ஆபாசம், வன்முறைக் காட்சிகளும் தான், எங்கள் கையில் கிடைத்த ஆயுதம்...’ என்று சம்பந்தப்பட்ட பலர் கூறுகின்றனர்.

அவர்களின் கருத்தை ஒதுக்க முடியாது தான். முதலீடு திரும்பக் கிடைக்க, விலை என்றால், மூலையில் முக்காடு போட்டு முடங்க வேண்டியது தான் சரி... சமுதாயம்? அது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?’ என்று, இதன்மூலம் அவர்கள் சொல்லும் மறைமுக பதிலை, அப்படியே வரவு வைத்துக்கொள்ளலாமா? வர்த்தகம் என்பது என்ன? விற்கப்படும் பொருள், விற்பவருக்கு லாபத்தையும், வாங்குவோருக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். அதன் பெயர்தான் வணிகம்! விற்பவர் வானாகட்டும்; ஏற்பவர் வீணாகட்டும்என்றால் அது வியாபாரம் அல்ல.

திரைப்படங்கள் தோன்றிய ஆரம்பக் காலங்களில் வரலாறு, ஆன்மிகம், புராணம் உள்ளிட்ட சம்பவங்களின் கதைகள் தான், மூலாதாரமாக விளங்கின. அவைகள் பொய்யோ, கற்பனையோ... ஆனால் மனித குலத்தின் ஆணிவேர்களான சத்தியம், தர்மம் உள்ளிட்ட கொள்கைகளை அவைகள், ஆராய்ச்சி மணி போல் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன என்பதை மட்டும், எவராலும் மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது. பழம் பஞ்சாங்கம்என்று கூறி, சமுதாயக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் தி¨ப்படங்கள், அதன் பின் உலா வரத் தொடங்கிற்று.

அப்படி வெளியான சமுதாயக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், பல வியத்தகு விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் தோற்றுவித்ததையும், ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்...’ என்று சொல்வது போல, அதே சமூகக் கதைக் களங்கள், இப்போது மக்களை எங்கே இழுத்துக் கொண்டு பயணிக்கின்றன? திரைப்படத் தொடர்புடையோர் நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.

தாய், தந்தையருக்கு அடங்கி நடந்த இளைஞர்கள், யுவதிகள், இப்போது கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். பெரியோர்களை மதிக்கும் பண்பு, இருபாலாரிடமும் இல்லை. இப்போதெல்லாம் பாச உணர்ச்சிகள் மங்கிப் போய், பாலுணர்ச்சிகள் மேலோங்கி விட்டன. இதற்குப் பெரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான், திரைப்படங்கள் இருக்கின்றன.

காரணம், மனிதரோடு இரண்டறக் கலந்துவிட்ட சாதனமாக சினிமாவைத் தவிர வேறு எதையும் இங்கே கோடிட்டு காட்ட முடியாதே! பந்தம், பாசம், வீரம், விவேகம், அன்பு, பண்பு போன்ற அம்சங்கள், கடலில் கரைத்து விடப்பட்ட பெருங்காயம் போலத்தான். அதுவும் சில படங்களில் தான், ஊறுகாய் போல் பயன்படுத்தப்படுகின்றன. உப்புக் கடலில் ஒரு சொட்டு, நல்ல தண்ணீர் விட்டால் கடலின் உவர்ப்பு மாறி விடுமா? திரைப்படம் சார்ந்த அனைவருக்கும், இது தெரியாமல் இல்லை என்றாலும், அவர்கள் மாறத்தான் தயார் இல்லை.

சமுதாயம் நாறட்டும்என்ற எண்ணம் இருந்தால், அவர்களாக மாறட்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். காரணம் கடிவாளம் இல்லாமல் விடிகாலம் மலரப் போவது இல்லை.

சட்டம் என்பது, எழுத்து வடிவில் மட்டுமே இருந்தால், அதை சட்டம் போட்டு வீட்டில் மாட்ட வேண்டிய நிலை தான் ஏற்படுமே தவிர, மாற்றம் வரும் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. அதுபோல்தான் சினிமா விஷயத்திலும் சிந்தனையாளர்கள் ஒரு தீவிர முடிவெடுக்க வேண்டும். இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இனி வெளிவரும் திரைப்படங்களுக்குத் தான், கறுப்புத் திரை கண்டிப்பாகத் தொங்கவிட வேண்டும்.

அந்த திரைப்படத்தில் மட்டும் இப்படி ஒரு காட்சி அனுமதிக்கப்பட்டிருக்கிறதே. அதை முன்மாதிரியாகக் கொண்டு தான் நாங்கள், எங்கள் படத்தில் இப்படி ஒரு காட்சியை அமைத்தோம். எங்களுக்கு மட்டும் என்ன பாரபட்சம்?’ என்று புதிதாக வரும் யாரும் வாதிட்டு, தங்களின் குறையை நியாயப்படுத்தி வெற்றிபெறும் வண்ணம் இருக்க முடியாத அளவிற்கு தணிக்கைத் துறையில் கடும் சட்டங்களை அமுல்படுத்தியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எமது பண்பாடும் அழிவுப் பாதையை நோக்கியே பயணிக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com