Contact us at: sooddram@gmail.com

 

மாவோயிஸ்டுகள் சாதித்தது என்ன?

(நிர்மலன்சு முகர்ஜி)

இதுநாள் வரையிலும் மத்திய இந்தியாவி லுள்ள தண்டகாரண்யா பகுதியில் மாவோ யிஸ்டுகளின் செயல்பாடுகளும், அணுகு முறையும் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப் போது அவர்களின் இரண்டு மூத்த தலைவர் கள் மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் எழுதி யுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளது. இந்த நான்கின் அடிப்படையில் கடந்த கால் நூற் றாண்டு காலத்தில் மாவோயிஸ்டுகள் இப்பகு தியில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. அரசு கடந்த காலத்தில் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவர்கள் ஆதிவாசி களின் நலனுக்காக ஏதேனும் செய்திருக் கிறார்கள் என்பதைவிட ஆதிவாசிகளை தங் களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என் பதே உண்மை.
ஆவணம்
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள மேலே குறிப்பிட்ட நான்கு ஆவணங்களில் இரண்டு, மாவோ யிஸ்டுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இரண்டு அறிவு ஜீவி களுடையது. இந்த இருவருமே மாவோயிஸ் டுகள் செயல்படும் பகுதியின் உள்ளே சென்று அவர்களிடம் கிடைத்த தகவல்களை சேக ரித்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆவ ணங்களும் 2010ல் வெளியானது. ஒருவர் அருந்ததி ராய், மற்றொருவர் நவ்லக்கா. மற்ற இரண்டு ஆவணங்களை பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் கணபதி மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் ஆசாத் ஆகிய இருவரின் பேட்டி. அறிவு ஜீவிகள் எழுதியுள்ள இரண்டு நீண்ட கட்டுரைகளிலும் மாவோயிஸ்டு களின் அடிப்படையான நோக்கங்களை அவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. 2009ல் அருந்ததி ராய் விமர்சனப்பூர்வமான சில குறிப்புகளை எழுதியிருந்தார். இப்போது அது இல்லை. மேலும் இந்த இரண்டு பேரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவர்களின் அரசியல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை நேரிடையாக மாவோயிஸ்டுகளின் நோக்கங்களையும் நடைமுறையையும் ஆத ரிப்பவையாக இருக்கின்றன. இந்திய அரசின் மாவோயிஸ்டுகள் மீதான விமர்சனத்திற்கு அப்பால் இந்த கட்டுரையானது மாவோயிஸ் டுகள் மற்றும் மாவோயிஸ்டு ஆதரவாளர்க ளின் ஆவணங்களை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட் செய்தித் தொடர் பாளர் ஆசாத்மக்களின் நலன்தான் மாவோ யிஸ்டு போராளிகளின் முன்னுரிமை கட மைஎன்று தெரிவித்திருக்கிறார். கிஷன்ஜி என்கிற கோடீஸ்வர ராவ் தன்னுடைய கட்சிபொதுமக்களின் பொது நன்மைக்காகபணி செய்வதாக தெரிவித்திருக்கிறார். இவை இரண்டையும் பார்க்கிற போது மாவோயிஸ்டு கள் பஸ்தார் காடுகளுக்குள் உள்ள ஆதிவாசி மக்களின் பொது நன்மைக்காக செயல்படுவ தாக தோன்றும். மாவோயிஸ்டுகள் இந்த காடு களுக்குள் 25 ஆண்டுகளுக்கு முன்பாக தளம் அமைத்துக்கொண்டனர். 2005ம் ஆண்டில் தான் அவர்கள் மீது அரசின் தாக்குதல் தொடங்கியது. முந்தைய 25 ஆண்டுகளில் இந்த பகுதியில் அவர்கள் கால் ஊன்றிய தோடு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த கால் நூற்றாண்டு காலத்தில் அவர்கள் ஆதிவாசிகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள்.
கூலியும் விவசாயமும்
பழங்குடியினரின் வாழ்வாதாரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் விளையும் வெற்றிலை மற்றும் மூங்கில் கழிகளை சேகரிப்பதையே சார்ந்திருக்கிறது. 70 வெற்றிலைகளை பறித் துக் கட்டினால் 1 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பாதிக்க வேண்டு மென்றால் அவர்கள் 2000 வெற்றிலைகளை பறித்து 30 கட்டுகளாக்கி கொடுத்தால் இந்த பழங்குடியினருக்கு 30 ரூபாய் கிடைக்கும். அருந்ததிராய் சொல்வது போல், 1981ஆம் ஆண்டு ஒரு கட்டுக்கு கிடைத்த 3 பைசா வோடு ஒப்பிடும்போது இந்த உயர்வு பெரியது தான். அதேபோல 20 மூங்கில் கழிகளை கொண்ட ஒரு கட்டுக்கு 1981ல் 10 பைசாவாக இருந்தது. இப்போது 7 ரூபாயாக இருக்கிறது. ஒரு பழங்குடியினர் ஒரு நாளைக்கு 100 மூங்கில் கழிகளை வெட்டி 5 கட்டுகளாக கட் டிக்கொடுத்தால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 35 ரூபாய் கிடைக்கும். இதற்கு மேல் மூங்கில் கழிகளையோ வெற்றிலையையோ ஒரு நபரால் பறிக்க முடியாது. இந்த எண்ணிக்கை யும் தொகையும் கிட்டத்தட்ட 2008ம் ஆண் டில் கோபட் காந்தியின் குறிப்பிலும் இருக் கிறது. என்னை பொறுத்தமட்டில் ஒரு நாளைக்கு 2000 வெற்றிலைகளையும், 100 மூங்கில் கழிகளையும் பறிப்பது சாத்தியமல்ல என்றே நினைக்கிறேன்.

இந்த கூலிகளை அப்படியே ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனெனில் வேலையின் தன்மை, சாதி, பால் ஆகியவற்றின் அடிப்ப டையில் கூலி வேறுபடுகிறது. ஆதிவாசிகள், சமூக அடுக்கில் கீழே உள்ளவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அருந்ததி ராய் சொல்வது போல கடந்த காலத்தில் அரசாங்க மும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் மிகக்குறை வான கூலிகளை வழங்கி சுரண்டிய அட்டூழி யத்தோடு ஒப்பிடும்போது இது ஆதிவாசி மக்களுக்குமிகப்பெரிய சாதனையாகும்

மாநில அரசாங்கத்தால், பேராசை பிடித்த தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட கூலியைவிட அதிகமாக கிடைக்கிறது என்று சொல்வது மட்டும் போதுமா? மாவோயிஸ்டுகள்தாங்கள் மாற்று வளர்ச்சி மாதிரியை பின்பற்றுவதாகசொல் கிறார்கள். நேரிடையாக ஒப்பீடு கடினம் என் றாலும் இந்த கூலி தேசத்தின் பிற பகுதி களில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச கூலியைவிட மிக மிகக்குறைவாகும். இப்ப குதியிலுள்ள ஆதிவாசிகள் பெறும் கூலியைஅடுத்த உழைப்புக்கான காலம் வரும் வரையிலும் வாழ்வதற்கு போதுமானதுஎன்ற அருந்ததிராய் குறிப்பிடுகிறார். விவசாய கூலி தொழிலாளிக்கு குறைந்தபட்சம் கூலி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்கிறது. கேரளா போன்றமிக அதிகமானகூலி தரும் மாநிலம் தான் மாவோயிஸ்டுகளின் மாற்று மாதிரிக்கு ஒப்பிடுவதற்கான சம்பளமாக இருக்க முடியும். கேரளாவில் கிராமப்புற வேலை உறுதியளிப்புச்சட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 150 ரூபாய் தரப்படுகிறது. (இது தற்போது 250 ரூபாய் - மொழி பெயர்ப்பாளர்)

விவசாயத்தைப் பொறுத்தமட்டில் கடந்த காலத்தில் உரிமையற்று பயன்படுத்தி வந்த 3 லட்சம் ஏக்கர் வன நிலத்தில் அவர்களுக்கு உரிமை இருப்பதாக சொல்கிறார்கள். சில இடங்களில் குளங்களையும், கிணறுகளை யும் வெட்டுவதற்கு ஆதிவாசிகளை ஊக்கப் படுத்தியிருப்பதாகவும், முறையான விவசாய நுட்பங்களை கற்றுக்கொடுப்பதாகவும் கூறு கிறார்கள். அதேபோன்று ஊடுபயிர் மற்றும் மாற்றுப்பயிர் விவசாயத்தையும் அறிமுகப் படுத்தியிருப்பதாக நவ்லக்கா குறிப்பிடுகிறார். சில பகுதிகளில் பயிரிடப்படும் தானியங்கள், காய்கறிகள், விளைபொருட்களின் அளவு ஆகியவை பற்றியும் நவ்லக்கா குறிப்பிடுகி றார். இதேபோன்று உழவுக்கு டிராக்டர்களை யும் எருமை மாடுகளையும் பயன்படுத்துவதை பற்றியும் குறிப்பிடுகிறார். இவை எதுவும் வழக் கமானவற்றிலிருந்து மாறுபட்டவையல்ல.

இந்த விவரங்களிலிருந்து ஆதிவாசிக ளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாகஇரண்டு சதவீத நிலங்கள் மட்டுமே பாசன வசதி கொண்டவை. அபுஜ்மத் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உழவு என்பதே கேள்விப்படாத ஒன்று. கட்சிரோலி பகுதியில் வீரிய விதைகள் மற்றும் ரசாயன பூச்சிகொல் லிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றனஎன்று அருந்ததி ராய் குறிப்பிடுகிறார். “எங்க ளுக்கு விவசாயத்துறையின் உதவி உடனடி யாக தேவைப்படுகிறது. விதைகளை பற்றி தெரிந்தவர்களும், இயற்கை பூச்சிக்கொல்லி கள் பற்றி தெரிந்தவர்களும் தேவைப்படுகிறார் கள்என்று வினோத் என்கிற மாவோயிஸ்டு குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையான விஷ யங்களை வினோத் இப்போது ஏன் கேட் கிறார்? கடந்த கால் நூற்றாண்டுகளில் இந்த துறையில் மாவோயிஸ்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.
போர் ஒன்றே நோக்கம்
மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் கணபதி, அவரை பேட்டி கண்டவரிடம் சொல்லியிருப்பது போல்மக்கள் சட்டப்படி யான நடவடிக்கைகளுக்குள்ளும் பொருளா தார வாதத்திற்குள்ளும் முடங்கிப்போவதை தடுக்க வேண்டும். மக்களை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தயார்ப்படுத்துவதற்கு மறந்துவிடக்கூடாது”. இதை கவனித்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்கள் இந்த காடுகளுக்குள் சென்றது ஆதிவாசிகளின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பது விளங் கும். இந்த ஆவணங்களை படித்தால் கீழ்க் கண்டவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆந்திராவில் ஆயுதம் ஏந்திய போராட்டத் திற்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து மாவோயிஸ்டுகள் 1980ல் இப்பகுதிக்குள் ஊடுருவினார்கள். அவர்களுடைய அடிப்படையான நோக்கம்ஒரு நிலையான ராணுவத்தை உருவாக்குவ தற்கான ஒரு தளம் தேவைப்பட்டது என்றும் தண்டகாரண்யா அதற்கு வாய்ப்பாக இருந்தது என்றும்அருந்ததி ராய் கூறியிருக்கிறார்.
நிதி ஒதுக்கீடு
இந்த ஆவணங்கள், அவர்களுடைய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரிவிக் கின்றன. ஒரு பகுதி, காவல் நிலையங்களிலி ருந்தும் ஆயுதக்கிடங்குகளிலிருந்தும் கொள் ளையடிக்கப்பட்டது. மற்றொரு பகுதி கொலை செய்யப்பட்ட பாதுகாப்புப் படையினரிடமி ருந்து எடுக்கப்பட்டது. ஆனால், இவை மட் டுமே இந்த அளவிற்கான ராணுவத்திற்கு போதுமானதாக இருக்க முடியாது. நவ்லக்கா பொதுவாக கட்சி உறுப்பினர் சந்தா, லெவி, மக் களிடமிருந்து பெறப்படும் நிதி, எதிரிகளிடமி ருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், வரி ஆகியவை அவர்களின் வருமானமாக இருப் பதாக குறிப்பிடுகிறார்.

உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பசியால் வாடும் ஏழை ஆதிவாசி என்பதை கணக்கில் கொண்டால், கட்சி உறுப்பினர்கள், சந்தா, லெவி அவர்களிடமிருந்தும் பெறும் நிதி ஆகியவை மிகக்குறைவாகவே இருக்கும் என்பதை உணர முடியும். நவ்லக்கா தனது கட்டுரையின் ஓர் இடத்தில் இப்படி குறிப்பிடு கிறார். “வங்கிகளை கொள்ளையடிப்பதன் மூலமாகவும், எதிரிகளின் சொத்துக்களை கைப்பற்றுவதன் மூலமும் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவு. மாறாக ஈட்டுத் தொகை மூலமாகவும் வனப்பொருட்களின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியின் மூல மாகவும், ஒப்பந்தக்காரர்கள் மீது விதிக்கப்ப டும் வரிகளின் மூலமாகவும், கம்பெனிகளிட மிருந்து பெறப்படும் வரிகளின் மூலமாகவும் கிடைக்கும் நிதியே மிக அதிகமானதுஎன்று குறிப்பிடுகிறார்.

கட்டுரையாளர், தில்லி பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் பணிபுரிபவர்.

ஜூன் 19, 2010, ‘எக்கனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்கிலி’யில் வெளியானதன் சுருக்கம்

(தமிழில் : க.கனகராஜ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com