Contact us at: sooddram@gmail.com

 

தஞ்சை பெரிய கோயிலின் பின்னணி!

(வெ.ஜீவக்குமார்)

10ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பெரிய கோயிலின் 1000ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் படுகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறி வியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக 1987ல் பெரியகோயில் அறிவிக்கப்பட்டது. பண்டைய தமிழக வரலாற்றில் ராஜராஜன் என்ற மன்னனுக்குப் பெரும் பாத்திரம் உண்டு. கடல் கடந்து இலங்கையிலும், இந்தோனேசியாவிலும் வெற்றிக்கொடி பறக்க விட்டவன். மாமன்னன் என்றும் பேரரசன் என்றும் அழைக்கப் படும் முதலாம் ராஜராஜனைப் பற்றிய செப்பேடுகள் ஐரோப்பாவில் லீடன் அருங்காட்சியகத்தில் உள்ளன. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் என்று ராஜராஜன் ஆட்சி பற்றிச் செய்திகள் ஏராளம் கிடைக்கின்றன.

ராஜராஜனின் பெருமைகளின் கம்பீரமான சாட்சியமாக விளங்குவது தஞ்சை பெரிய கோயில்தான். தொடக்கத்தில் ராஜராஜேஸ்வரம் என்றும், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்டபோது பெருவுடையார் கோயில் என்றும் இது அழைக்கப் பட்டது. பின்னால் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் பிருகதீசுவரம் என்றும் பெரியகோயில் அழைக் கப்பட்டது.

1006ஆம் ஆண்டு துவங்கி 1010ஆம் ஆண்டுவரை கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ புயல், மழை, சூறாவளி, வறட்சியைச் சந்தித்துப் பெரிய கோயில் செம்மாந்து நிற்கிறது. பெரிய கோயில் கோபுர விமானத்தில் உள்ள ஒரே கல்லின் எடை 8 டன் ஆகும். பிரமீடுகளின் உச்சியில் உள்ள கடைசி கல்லின் எடை மிக அதிகம். இதைச்சாதிக்கக் காரணம் தமிழர் கட்டிடக்கலை நுட்பம் என்பது பெருமை கொள்ளத்தக்கது. 200 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உழைப்பாளிகள் அளப்பரிய உழைப்பால் பெரிய கோயில் உருவானது. 35 கிராமங்களில் நிலம் முழுவதும் இக்கோவில் வருமானத்திற்கு ஒதுக்கப்பட்டது. 5 கிராமங்கள் 1000 ஏக்கருக்கு மேலேயும் மற்ற பல கிராமங்களில் நூற்றுக்கணக் கான ஏக்கர் நிலமும் பெரிய கோயில் வரு மானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராஜராஜன்தான் ஜனநாயகச் சிற்பி என்றும் தேர்தல் முறையை முதலில் கொண்டு வந்தவன் என்றும் கருத்துக் கள் முன் வைக்கப்படுகின்றன. தேர்தல் முறை அறியப்படாதிருந்த அல்லது பரவலாகாதிருந்த காலத்தில் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது நல்ல அம்சம்தான். நிர்வாகம் செய்யும் நபர்களின் பெயர்களை ஓலையில் எழுதிக் குடத்தில் போட்டுத் தேர்தல் நடத்தப்பட்ட முறை குடவோலை முறை என்று அழைக்கப்பட்டது. குடவோலை முறை மூலம் மகாசபை தேர்தல் நடந்தது. அவர்கள் கோயிலை நிர்வகித்தனர்.

ஆனால் இந்த வகை தேர்தல் முறை பெரும்பாலும் பிராமணர் குடியிருப்பு பகுதிகளில்தாம் நடந்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இந்தத் தேர்தல் சாதாரண ஏழை, எளிய மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல என்பதை உணர்த்துகின்றன.

இதே காலத்தில் இருந்த ஏனைய தேர்வு முறைக்கும் இந்த நிபந்தனைகள் இருந்தன. வேட்பாளர்களுக்கு தகுதிகளாக, கால் வேலி நிலம் இருக்க வேண் டும், சொந்த வீட்டு மனை இருக்க வேண்டும், வயது வரம்பு 33-70, அவருக்கு வேதத்துடன் தொடர்பு இருக்க வேண்டும், மந்திரப் பிரமாணமாவது தெரிந்திருக்க வேண்டும், ஒரு வேதமும் கற்காதவர் எனில் ஒரு வேலி நிலமும் சொந்த வீடும் உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்துள்ளன.

அரசாங்கத்தின் கொள்கைக் குறிப்பில் சாதனை விளக்கத்தில் கல்வி இடம் பெறாத காலத்தில் மக்களுக்குக் கல்வி கொடுத்தது முற்போக்கானதுதான். எனினும் கல்வி யாருக்கு எந்த மொழியில் என்ன விதமாக கொடுக்கப்பட்டது என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

முதலாம் ராஜராஜன் காலத்தில் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ராஜராஜ சதுர்வேதி மங்கலம் பற்றிச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. இங்கு வேத மீமாமிசப்பள்ளி இருந்துள்ளது. 340 பிராமண மாணவர்கள் பயின்றுள்ளனர். 14 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். ஒரு நாளைக்கு 1 கலம் 4 மரக்கால் நெல் ஆசிரி யர்களுக்கு கூலியாக வழங்கப்பட்டுள் ளது. கல்வி உயர் சாதியினருக்கு மட்டு ம்தான் கிடைத்துள்ளது.

ஆனால் கோயில்களின் கருவறை யில் வடமொழி புகுந்த காரணம் தமிழ்நாட் டில் அலை அலையாக வடக்கிலிருந்து வந்து புகுந்த வடமொழி அந்தணர் கூட்டம்தான் ஆகும். சங்க கால பிராமணர்கள் தமிழர்கள் என்றும் அவர்களுக்குப் போதிய அங்கீகாரம் இல்லை என்றும் வடநாட்டி லிருந்து புதிதாக மன்னரால் தருவிக்கப் பட்டவர்கள்தான் பிற்காலத்தில் மொழி உட்பட அனைத்திலும் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிதாக வந்து நுழைந்த பிராமணர்களுக்குத்தாம் மன்னன் ராஜராஜன் உட்பட அனைத்து வேந்தர்களும் சலுகைகளையும் வாரி வழங்கி உள்ளனர். காவிரிக்கரை ஓரம் இருந்த வளமான 1000 கிராமங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட் டன. அகரம், அக்கிரகாரம், பட்டவிருத்தி நிலம், சதுர்வேதி மங்கலம், தேவதானம், பிரமதேயம், பிராமண குடியிருப்புகள் என்று நிலத்தின் பெரும்பகுதி அவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவதானத்தில் பிராமணர்களுக்குப் பாக்கிவைப் போர் சிவதுரோகி. பிராமண துரோகி என்று அழைக்கப்பட்டனர். ராஜராஜன் பட்டம் பெறுமுன் இருந்த வெள்ளான் வகை நில உடைமை முறை தேவதானமாக மாற்றப் பட்டது. அக்காலத்தில் சமூகத்தில் ஏற்பட்ட இரு பிரிவுகளில் ஒரு பிரிவினரான இடங்கையினர் பிராமணர்களுக்குக் குடை பிடித்தனர். பிராமணர்களின் செருப்புக்களைக் கைகளில் ஏந்தி சென்றனர். வடமொழி எல்லா சபைகளையும் பீடித்துக் கொண்டது. எனவே தமிழின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

ராஜராஜன் உள்ளிட்ட சோழர்கள் ஆட்சியில் அனைத்து விதமான ஆண்டான் அடிமைத்தனமும் இருந்துள்ளது. பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டமைக்கும் ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. அக்காலத்தில் ஒரு பெண் விதவையானால் சந்திக்க நேரிடும் கொடுமைகளுக்கு அஞ்சி உடன் கட்டை ஏற்றச்சொல்லி தன் உடலை கயிற்றில் கட்டி தானே கேட்டுக்கொண்ட கல்வெட் டுச் செய்தி கிடைக்கிறது. அரச குடும்பத் துப்பெண்கள் மட்டுமே மெல்லிய மேலாடை அணியலாம் மற்ற பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. முதலாம் ராஜராஜ னுக்கு 12 மனைவிகள் இருந்துள்ளனர்.

ராஜராஜன் காலத்தில்தான் தேவதாசி முறை வேரூன்றி உள்ளது. ஆண்டுக்கு 12406 கலம்நெல். வீட்டு மானியம் கூலி யாக வழங்கப்பட்டுப் பெரிய கோயிலில் இருந்த 400 தேவதாசிப் பெண்கள் பற்றிய விவரங்கள் கல்வெட்டுக்களில் காணப் படுகின்றன. எல்லாக் கோயில்களிலும் தேவரடியார்கள் இருந்துள்ளனர்.

முதலாம் ராஜராஜன் காலத்தில் துவங்கிய தேவதாசி முறை மீது இன்று வரை விவாதம் நடக்கிறது. அப்போது அரசாங்க கஜானாவில் பொன் நிரம்ப அரசு முதலில் மதுக்கடைகளை அனுமதித்தது. அரசு கஜானா நிரம்பி வழிய வழிய ஜனங்களை கள் குடிக்க வைத்தது போல கோயில்களும் வருவாயை ஈர்க்கும் வகையில் மாற்றப்பட்டன.

மேலும் கோயில்களில் பிராமணர் நுழைந்து வழிபடும் அளவிற்கு கோயில்கள் புனிதமாக போற்றப்படவில்லை. கோயிலில் நுழைந்த பிராமணர்கள் சாதி பிரஷ்டம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய பிராமணர்களை உற்சாகப்படுத்த அடிமைப்பெண்கள், தாசிகள், சங்கீதம், வேலை ஆட்கள் உருவாக்கப்பட்டதாக ஜே.சி.கோஷ் குறிப்பிடுகிறார்.

இதற்காக வேசிய தர்சனம் புண்ணியம் பாபநாசம் என்ற சுலோகம் உரு வாக்கப்பட்டதாக கூறுகின்றனர். வேசியை தரிசித்தால் பாவம் போய் புண்ணியம் ஏற்படும் என்ற பொருளில் இது வழங்கப் பட்டதாக ஆபிடூபாய் குறிப்பிடுகிறார்.

நில உடைமை முறையில் கோயில்களுக்கு நிலம் கிடைக்க அரசர்கள் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். சரியான மகசூல் வராத பயிர்களைத் தரம் குறைந்த மண்ணில் சாகுபடி செய்யும் சூழலை உருவாக்கி விளைச்சல் கட்டுப் படியாகாத சூழ்நிலையில் உழவர்கள் நிலத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. ராஜராஜப் பெருவிலை என்ற பெயரில் இந்நிலங்கள் அரசால் ஏலம் எடுக்கப்பட்டு மீண்டும் கோயில்களுக்கே விடப்பட்டுள்ளன. வருமானம் அரசுக்கே கிடைத்தது.

பெரிய கோவிலில் இரண்டு புத்தர் சிலைகளும் கிருஷ்ணன் கோயிலும் இருப்பது ராஜராஜனின் சமய சகிப்புத் தன்மையை காட்டுவதாகக் கூறுகிறார் கள். அதேசமயம் அதற்குச் சற்று முந்தைய காலத்தில் ஆதிக்கமாக இருந்த மதங்கள் புத்தமும், சமணமுமாகும்.

புத்தமதக்கோயில் பின்பற்றி இந்து கோயில்களும் புத்த விகாரம் பின்பற்றி இந்து மடங்களும் பிற ஸ்தாபனங்களும் எழுந்ததாக ஜஸ்தஸ் சதாசிவ ஐயர் கூறுகிறார். திருவிதாங்கூர் மக்கள் தொகை குறிப்பேடுபடி இன்றைய விழாக் கள் புத்த மதத்திலிருந்து கடன் வாங்கப் பட்டன. இந்த இந்து கோயில்கள் ஆதி யில் பௌத்தக்கோயில்களாக இருந்தவை.

மறுபுறம் கோயிலுக்கு வெளியில் மக்கள் அல்லல்பட்டு வாழ்ந்தனர். குடிசை கள் மத்தியில் கலக உணர்வு கொந்த ளிப்பு குமுறல் வெளிப்பட்டுக் கொண்டி ருந்தது. மக்கள் சுகபோகத்தில் ஒன்றும் திளைக்கவில்லை.

நிலப்படி வரி, நீர்வரி, பாய்ச்சல்வரி, புரவு, இரவு, குடிமை, கடமை, திருமண வரி, போர் வரி, தச்சுவரி, தறிவரி, பசுவரி, ஆட்டுவரி, தரிசு நிலம் போட்டால் அபரா தம், அபராதம் கொடுக்க முடியாவிட்டால் நிலம் பறிமுதல் என 400க்கு மேற்பட்ட வரிகள் மக்களை கசக்கிப்பிழிந்துள்ளன.

கிளர்ச்சிகள் கலகங்கள் வலுத்தன. நிறுவன ஏற்பாடுகள் இல்லாத உணர்ச்சி மயமான திடீர் கிளர்ச்சிகள் வெடித்தன. கோயில்களின் மதில் சுவர்களில் அவ்வப்போது வரி அறிவிப்பு குறித்த அரச கட்டளைகள் பொறிக்கப்பட்டிருந்தன. சட்ட எரிப்புப்போராட்டம் போல் பாதிக் கப்பட்ட குடிமக்கள் அரசின் அறிவிப்பு தாங்கிய கோவில் மதிற்சுவர்களை இடித் துத் தரைமட்டமாக்கினர். கோயில் சிலை கள் சூறையாடப்பட்டன. கிராமங்கள் எரிக்கப்பட்டன.

நிலவரி உயர்த்தப்பட்டபோது எந்த வரியும் தரமாட்டோம் என்று உழவர்கள் அறிவித்தனர். வேலை நிறுத்த அறிவிப்பு போன்ற இந்தக் கிளர்ச்சிக்குப் பிறகு வரிகள் குறைக்கப்பட்டன.

சுற்றுப்பட்டு, பாகனேரி உள்ளிட்ட 24கிராமங்களில் பலர் கூலிக்காகக் குருதி சிந்தி போராட்டம் நடத்தினர். சபை கோயில் பணியாளர் ஊதியம் தரா மைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர்கள் தீக்குளித்தனர். நாடக கணிகையருக்கு ஜீவிதம் அளிக்கப்பட்டது. ஜீவித உரிமை யை நிர்ணயம் செய்ய சதுரி மாணிக்கம் என்ற நாடக கணிகை உச்சி கோபுரத்தி லிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேவதான நிலம் கோயிலுக்கே உரி மையானவை என்பதை உறுதி செய்ய திரி சூல வேலைக்காரர்கள் நால்வர் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்ட தாகத் தஞ்சை புஞ்சை கல்வெட்டு கூறுகிறது.

பிராமணர், வேளாளர், வலங்கையின ருக்கு மன்னரின் ஏராளமான சலுகைகள் கண்டு இடங்கையின் பொருமினர். சுங்க வரியும் அவர்களை வாட்டியது. கலகங் கள் பெருகின. சுங்கவரி நீக்கிய முதலாம் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படும் வரை போராட்டம் தொடர்ந்தது. வரிச்சுமையை எதிர்த்த உழவர் களால் வீர ராசேந்திரன் சோழன் மகன் அதிராஜேந்திரன் 1070ல் கொல்லப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.

சோழர் காலம் முழுவதும் கிளர்ச்சிகள் தொடர்ந்தன. பிராமணர் வேளாளர் எதிர்ப் புக்கலவரங்களில் பிராமணர் வேளாளரை எதிர்த்துக்கலகம் செய்தால் 20 ஆயிரம் காசு தண்டம் என்று 3ம் குலோத்துங்கன் தனி ஆணை பிறப்பித்தான். முதலாம் குலோத்துங்கனை எதிர்த்தும் வரிப்பளு வை எதிர்த்தும் மக்கள் தாமாகவே போரா டினர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தஞ்சை பெரிய கோவில் நிமிர்ந்து நிற்பது பெருமைதான்.
இந்த சூழலில் தமிழர் களின் கலை பொறியியல் நுட்பம் குறித்து சோழர்கால ஆட்சிமுறை குறித்து ஆய் வுகள் வெளிவருவதும் பலன் தரும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com