Contact us at: sooddram@gmail.com

 

9/11 விட அதிகமாக மிரட்டும் 1/6...!!

சன்னி என்பவர் இரவில் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக தங்குவதற்கு அவர் வசம் இடமிருந்தது சுமார் 12 மாதங்களுக்கு முன்புதான். ஆனால் அமெரிக்காவின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி பார்த்தால் சன்னி என்ற தனிநபர் மட்டும் இந்த துயரமான நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஏராளமான நபர்கள் அவரைப் போலவே நெருக்கடியில் உள்ளனர். இரவில் தங்குவதற்கு இடமில்லாதவர்கள் என்ற பெயர் இவர்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், பகலில் வேலைக்குச் சென்று விடுவார்கள் என்பதல்ல. பகலில் எங்கேயாவது சுற்றிக் கொள்ளலாம் என்று அரசே சொல்கிறது. இவர்களில் கணிசமான பகுதியினரின் வசம் வீடு இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதை இழந்தவர்களாவர்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்ததன் நினைவ(
9/11)  அண்மையில் அனுசரித்தனர். பயங்கரவாதத்தின் கோரக்கரங்களிலிருந்து அமெரிக்கா இன்னும் விடுபடவில்லை என்று அந்நாட்டின் அதிபர்களும், அமைச்சர்களும், அரசு வட்டாரமும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சமூக ரீதியான நோக்கில் பார்த்தால் இந்த பயங்கரவாத ஆபத்தைவிட, வறுமையில் வாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதுதான் பெரிய ஆபத்தாக உள்ளது என்கிறார்கள் அமெரிக்க மனிதவளத்துறை வல்லுநர்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அரசு சார்பாக மேற்கொண்ட ஆய்வு தரும் அதிர்ச்சிகரமான தகவலாகும்.

ஆறில் ஒருவர(1/6) வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கணிசமான எண்ணிக்கையில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

பொருளாதார நெருக்கடி சாதாரண மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 14.3 விழுக்காடாக இருந்தது. அதாவது, 4 கோடியே 36 லட்சம் பேர் இதில் அடங்குவர். 2010 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடியே 62 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது 15.1 விழுக்காடாக இந்த எண்ணிக்கை உள்ளது.

“2010 ஆம் ஆண்டுக்கான வருவாய், வறுமை மற்றும் மருத்துவக்காப்பீடுஎன்ற தலைப்பின் கீழ் அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2009 ஆம் ஆண்டில் மருத்துவக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சமாக இருந்தது. ஒரு ஆண்டில் மேலும் ஒன்பது லட்சம் பேர் இந்த மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு காப்பீடு செய்யப்படாத நிலை அதிகரித்துள்ளது. வரும் காலத்தில் இது பெரிய பிரச்சனையாக உருவாகும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

வறுமைக்கோட்டில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களுக்கு இணையான திகில் காட்சிகளைக் கொண்டதாக அமைகிறது. 18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களில் 22 விழுக்காட்டினர் வறுமையில் வாடுகின்றனர். 2009 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 விழுக்காடாக இருந்தது. 2010 ஆம் ஆண்டில் 1 கோடியே 64 லட்சம் பேர் (18 வயதிற்குக் கீழுள்ளவர்கள்) வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சமாக இருந்தது. பொருளாதார நெருக்கடிதான் மக்களைப் பெரிதும் பாதித்தது என்பதைத் தனது அதிகாரபூர்வமான அறிக்கையிலேயே ஒப்புக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால், வறுமை அதிகரிக்கும் என்பதுதான் தற்போதுள்ள நிலைமையாகும்.

1960கள் மற்றும் 1970 களோடு அமெரிக்க அரசு ஒப்பிட்டுக் கொண்டு திருப்திப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எகிறியிருக்கிறது. வேலையில் உள்ளவர்களின் மருத்துவக்காப்பீடு வசதியும் சிறிது, சிறிதாகப் பறிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி இந்த வசதியை ஊழியர்களுக்குத் தர முடியாது என்று அந்நாட்டு முதலாளிகள் மறுத்து வருகிறார்கள். மேலும் பல்வேறு சலுகைகளை வெட்டியதன் மூலம் அவர்களின் வருமானம் குறைந்திருக்கிறது. வேலை பார்ப்பவர்களே வறுமைக் கோட்டிற்குக்கீழ் செல்லும் அபாயம் உருவாகி வருகிறது என்று எச்சரிக்கிறார்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுநர்கள்.

 

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com