Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையில் இஸ்லாமிய அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன !

இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக இலங்கை அரசின் உள்நாட்டுக் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான திரு. பஷீர் சேகுதாவுத , சோனகர்.காம் உடனான பிரத்யேக தொலைபேசி நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ளார். ஒருங்கமைப்பும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலும் இன்றித் தத்தளிக்கும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் வங்குரோத்தை அனுபவித்து வருவதையும் ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர், குறிப்பிட்ட விடயங்கள் தமக்கு ஆழ்ந்த கவலையையும் அதே நேரம் சமூகத்தில் காணப்படும் வெற்றிடத்தை வெளிக்காட்டுவதையும் ஏற்றுக்கொள்வதோடு, இன்றைய நிலையில் அரசியல் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகம் தம் அரசியல் வங்குரோத்தினை மேலும் வளர்த்துக்கொள்கிறது எனும் உண்மையையும் வெளிப்படையாகக் குறிப்பிடத் தவறவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுர நகரில் புத்த பிக்குகள் மற்றும் ஒரு சில பெளத்த இயக்கங்களினால் திட்டமிட்டுத் தரைமட்டமாக்கப்பட்டசியாரம்தொடர்பாகப் பிரதியமைச்சரை நாம் தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அநுராதபுரம் சியாரம் உடைப்பு சம்பந்தமான முரணான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பிரதியமைச்சர், இலங்கையில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் விரோத இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் இன்றைய தேதியில் இஸ்லாமிய சமூகம் ஒடுக்கப்பட்டுக்கொண்டு வருவதையும் சிரத்தையுடன் சுட்டிக்காட்டியமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அரச இயந்திரத்தின் உயர் மட்டத்திற்கு இச்செய்தி கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும் பிரதியமைச்சர், நமது சமூகம் பயத்தினால் அல்ல சரியான வழிகாட்டலின்றித் தத்தளிப்பதாகவும், நாளைய வரலாறு இந்நாட்டின் இஸ்லாமிய அடையாளங்களை முற்றாக இழக்கக்கூடிய சாத்தியமும் இருப்பதாகவும் தெரிவிப்பதோடு, நேற்றைய தினம் (19 செப்டம்பர்) தான் கிழக்கிலங்கை, காத்தான் குடி நகரில் வைத்துத் தெரிவித்தது போன்று, வராற்றுச் சிறப்பும், சமூகச் சிறப்பும் கொண்ட ஜெய்லானி திருத்தளத்தினை நோக்கிய ஆரம்பமாகவே இது இருக்கக்கூடும் எனும் தமது வலுவான சந்தேகத்தினையும் முன் வைத்தார்.

இஸ்லாமிய நியதிகளுக்குள் எந்த வகையிலும் அவசியமாகாத சியாரங்களை சமூக அடையாளங்களின் சிறப்பு நிமித்தம் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பும் நம் சமூகத்திடமிருப்பதாக மேலும் தெரிவித்த பிரதியமைச்சர், அநுராதபுர சம்பவத்தினால் அந்நகரில் வாழும் இஸ்லாமிய மக்கள் பெரிதும் மன உளைச்சலுக்குள்ளாகியும், பெரும் கவலையுடனும் காணப்படுவதாக, தமது கட்சியின் ஒருங்கமைப்பாளர் ராவுத்தர் மூலம் தாம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அநுராதபுர சம்பவம் ஏதோ ஒன்றுக்கான ஆரம்பமாக இருக்க முடியுமா? எனும் எமது கேள்வியுடன் உடன்படும் பிரதியமைச்சர், இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் மேலும் மேலும் அரசியல் வங்குரோத்தை நோக்கிப் பயணிப்பதற்கான முழுக்காரணம், நமது சமூகத்திற்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளும், அனைவரையும் ஒன்றிணைத்துச் செயற்பட வைக்கக்கூடிய ஒரு கூட்டணியும், குறிக்கோளும், உடன்பாடுமற்ற வெற்று நிலை என்பதையும் ஏற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை அமைச்சகமோ அமைச்சரோ இது தொடர்பில் என்ன செய்தார்கள்? எனும் கேள்வியைத் தவிர்க்க விரும்பிய பிரதியமைச்சர், தான் நேற்றைய தினம் குறிப்பிட்ட அமைச்சருடன் உரையாடியதாகவும்,  ுழுமையான நம்பிக்கை தரக்கூடிய அல்லது ஆரோக்யமான சம்பாஷனையாக அது அமையவில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இது தொடர்பில் சமூக அக்கறையுடன் பணியாற்றும் அரசியல்வாதிகளை அடையாளங்காட்ட முடியுமா? எனும் கேள்விக்கும் விடையளிக்க முடியாத நிலையில் இருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

சுமார் 400 ஆண்டுகள் பழமை மிக்க சியாரம் அமைந்த இடம் பெளத்தர்களுக்குச் சொந்தமானது என்றும்,அதனை அப்புறப்படுத்த உதவுமாறு மதவிவகார அமைச்சுக்குத் தாம் முறையிட்டிருந்ததாகவும், எனினும் அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க முன்னதாகத் தாம் தமது ஆதரவாளர்களுடன் சியாரத்தை உடைத்துவிட்டதாகவும், குறிப்பிட்ட சியார உடைப்பிற்குத் தலைமை தாங்கிய பெளத்த துறவி பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கியிருந்த தகவல் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, சட்டத்தினைக் கையில் எடுக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, அப்படியானால் நீதி எங்கே? நீதிபதி எங்கே? எல்லாம் அவர்கள் தானா? என்று விசனப்பட்ட பிரதியமைச்சர், இச்செயலை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் என்றும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

எனினும், தாமறிந்த வகையில் இப்படி எந்த வொரு சட்ட நடவடிக்கையும் குறிப்பிட்ட நிலம் தொடர்பில் இது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் உறுதியாகக் கருத்து வெளியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி உட்பட சில ஊடகங்களில் வெளியான பாதுகாப்புச் செயலர் கோட்டபயவின் கருத்துக்கள் தொடர்பான முரணான செய்திகள் தொடர்பில் வேறு கோணத்தைக் கொண்டுள்ள பிரதியமைச்சர், இவ்விடயம் சரியான முறையில் அணுகப்பட்டால் பாதுகாப்புச் செயலர் இதறகான தக்க நடவடிக்கையை எடுத்திருப்பார் என்றும் கருத்து வெளியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக விடயங்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட்டு, அதன் மூலம் நமது சமூகத்தின் அடையாளங்களையும், அரசியல் உரிமைகளையும் பேணிப்பாதுகாக்கும் தேவை இன்று இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தார் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்பது ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர், இது தொடர்பில் தமது கட்சியிலிருந்தும் தெளிவான உதாரணங்களை வெளிக்காட்டும் தயார் நிலையில் இல்லாமையை நாம் கூர்ந்து அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு இது தொடர்பில் என்ன விபரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது அல்லது அச்சமூகத்தாருக்கு எவ்விதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன போன்ற விடயங்களை பிரதியமைச்சர் மூலமாக நமக்கு அறிந்து கொள்ள முடியவில்லையாகினும், இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அரசியல், கலாச்சார நிலை மற்றும் எதிர்காலம் தொடர்பில் விரிவான நேர்காணலினை விரைவில் மேற்கொள்ள இருக்கிறோம்.

நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று அநுராதபுரம் சம்பவமானது எதற்கான ஆரம்பம்? எனும் விழிப்புணர்வு நமது சமூகத்தாரிடம் மேலோங்கும் தேவையிருக்கிறது, வரலாற்று விழுமியங்களையும் அடையாளங்களையும் தொலைத்து மீண்டும் போர்த்துக்கீயர் இலகுவாகத் தகர்த்தெறிந்தசோனகர்சமூகத்தாரின் நிலைக்கு நாளைய சமுதாயம் தள்ளப்படுவது தவிர்க்கப்படுவது அவசியம் எனின், இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம் கட்சி பேதங்களை மறந்து, ஒன்றிணைந்து தம் சமூக உரிமைகளை, ஜனநாயக ரீதியில் முன் வைத்து, அவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

- ஆசிரியர் குழு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com