Contact us at: sooddram@gmail.com

 

மோடியின் நயவஞ்சக நாடகம்

உண்ணாவிரதம் குறித்து இதுநாள் வரை இருந்து வந்த அனைத்து மரியாதை களையும் முழுமையாக நகைப்புக்குள் ளாக்கும் விதத்தில் குஜராத் முதல்வர் மூன்று நாட்கள் படாடோபமாக உண் ணாவிரதம் இருந்து, மாபெரும் சாதனை செய்துவிட்டதாகக் கூறி உண்ணாவிர தத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். இந்த உண்ணாவிரதம் தொடர்பாக நாட் டின் அனைத்துத் தேசிய நாளிதழ் களிலும் தொலைக்காட்சி அலைவரிசை களிலும் பலகோடி ரூபாய்கள் செலவில் முழுப் பக்க வண்ண விளம்பரங்க ளுக்குச் செலவழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மோடிக்கு சாதகமாக செய்திகள் வெளியிடக்கூடிய வகையில் செய்யப்பட்டன.

ஆயினும், இதன் பின்னணியில் உள்ள பித்தலாட்டம் எவர் கண்ணுக்கும் தெரியாமல் தப்பித்துவிடாது. ஒரு காரியம் கைகூட வேண்டும் என்பதற்காக உண் ணாவிரதம் மேற்கொள்வது என்பதை அனைத்து மதங்களும் அனைத்துக் கலாச்சாரங்களும் அங்கீகரித்து வந்துள் ளன. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள் என அனைத்து மதத்தினருமே உண் ணாவிரதம் அனுசரிக்கின்றனர். முஸ்லிம் கள் இதனை ரமலான் மாதத்தில் மேற் கொள்கிறார்கள். “உண்ணாவிரதம் இருத் தல் என்பது உங்களுக்கு நல்லது, ஆனால் இதனை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று குர்ஆன் சொல்கிறது. அதேபோன்று உள்ளத்தையும் உடi லயும் பரிசுத்தமாக்குவதற்கும் செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்கும் இந்துமதமும், சமண மதமும் உண்ணா விரதத்தை ஒரு வழியாக அங்கீகரிக்கின் றன. காந்திஜி, சில சமயங்களில் மக் களின் கோபாவேசம் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு எதிராக சௌரிசௌரா நிகழ்வு போன்று கொளுந்துவிட்டு எரிந்த சமயத்தில் அதனை அணைப்பதற்காக உண்ணாவிரதத்தை துரதிர்ஷ்டவசமாக மேற்கொண்ட போதிலும், உண்ணாவிரத வழியை சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் ஓர் உயரிய நிலைக்குக் கொண்டு சென்றார்.

ஆயினும் மோடியின் உண்ணாவிரதம் என்பது இவ்வனைத்து மாண்புகளையும் உதறித்தள்ளிக் கேலிக்கூத்தாக்கி விட்டது. இவ்வுண்ணாவிரதத்தை இவர் நல்லெண்ணத் தூது (ளுயனbாயஎயயே அளைளiடிn) என்றும் இது ‘வாக்கு வங்கி அரசியலை’ முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அழைக்கிறார். நாட்டிலேயே மிகவும் மட்டரகமான முறையில் ‘வாக்கு வங்கி அரசியலை’ நடைமுறைப்படுத் திய, முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய, பல்லாயிரக்கணக்கான முஸ் லிம் மக்களின் ரத்தக்கறை படிந்த கை களால் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற ஒரு நபர்தான் இவ்வாறு கூறுகிறார். என்னே நயவஞ்சகம்.

மோடி, தன்னுடைய ஆட்சியில் குஜ ராத் எப்போதும் அரசியலமைப்புச் சட் டத்திற்குட்பட்டே நடந்து வந்துள்ளது என்று கூறிக்கொள்கிறார். 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம் மக்க ளுக்கு எதிரான இனப்படுகொலைகளை நாட்டில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட எண் ணற்றவை குறைகூறி இருக்கின்றன.

உண்மையில், தேசிய மனித உரிமை கள் ஆணையம் தன்னுடைய அறிக்கை யில், 2002 கலவரங்களுக்குப்பின், “பாதிக்கப்பட்டவர்களிடையே நிலவிய அச்ச உணர்வு என்பது அநேகமாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பரவி இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறது. உதவி கோரி அபயக்குரல் எழுப்பியவர்களுக்குக் காவல்துறையினர் வேண்டுமென்றே உதவாததன் காரணமாக, எப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஈசான் ஜாப்ரி, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்பதையும் ஆணையம் குறிப்பிட்டிருக் கிறது. அதேபோன்று குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியின் வேண்டுகோளைக் கூட காவல்துறையினர் மறுத்திருப்பதை மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட் டிருக்கிறது. “உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்புக் குறித்த வேண்டுகோள்களே மறுக்கப்படுமானால், மற்றவர்கள் நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என் பதை ஊகிக்க முடிகிறது” என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக் கிறது. “ரோம் நகரம் எரிந்து கொண்டி ருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல” குஜராத் நிலைமை இருந்தது என்று ஆணையம் தன் அறிக் கையின் இறுதியில் முடித்திருக்கிறது. 2002இல் மோடி நிர்வாகத்தை இடித் துரைத்து மிகவும் விரிவாகவும் அழுத்த மாகவும் ஆவணப்படுத்தப்பட்டிருக் கின்றன.

குஜராத்தில் நடைபெறும் ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பயன டைந்திருக்கிறார்கள் என்று ஒரு பிரச் சாரம் கட்டவிழ்த்து விடப்படுவது குறித் துப் பரிசீலிப்போம். குஜராத்தில் மதக் கலவரங்கள் ஏற்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்தபின்னரும்கூட, 21,448 பேர் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் இடம்பெயர்ந்து, 11 மாவட்டங்களில் உள்ள 45 முகாம் களில்தான் இன்றும் கூட இருந்து வரு கிறார்கள். இது தொடர்பாக எவ்வித வருத்தமும் தெரிவிக்காது, மோடி, “வளர்ச்சிக்கான மந்திரத்தை கொடுத் திருப்பதாகவும், அது ஏற்பட்ட புண்களை ஆற்றிவிடும்” என்றும் கூறிக் கொண்டி ருக்கிறார்.

இத்தகைய ஆட்சிகள் குறித்து ஏரா ளமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. இது, இன்றைய தினம் சாலைப் போக் குவரத்தில் சாதனைகள் படைத்து வரும் நெடுஞ்சாலை மற்றும் அதிவேக (எக்ஸ் பிரஸ்) சாலைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இட்லர் கட்டிய மோட்டார் போக் குவரத்தை (யரவடியொளே)த்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது. இட்லர், இரண் டாம் உலகப் போருக்குப் பின் உலகையே, தன் ஆளுகைக்குள் கொண்டுவர வேண் டும் என்ற வெறியோடு தன் ராணுவத்தை மிகவும் வேகமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இத்தகைய சாலைகளைக் கட்டுவித் தான். இதனைக் கட்டுகையில் மனித குலத்திற்கு எதிராக மிகவும் கொடூரமான குற்றங்களை அவன் புரிந்திட்டான். அதேபோன்று, பாசிஸ்ட் சர்வாதிகாரி யான முசோலினியும் தன் ஆட்சிக் காலத் தில் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு ரயில்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பீற்றிக் கொண்டான். இதே போன்றே நம் நாட்டிலும் இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலைக் காலத்தின் போது ‘அதிகாரிகள்’ அனைவரும் சரி யான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விடுகிறார்கள் என்றும், கோப்புகளை எல்லாம் விரைவாக பைசல் செய்துவிடு கிறார்கள் என்றும் இவ்வாறு சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாக அளக்கப் பட்டதைப் பார்த்தோம். பாசிஸ்ட் மற்றும் எதேச்சதிகார சர்வாதிகாரிகள், ஜனநா யக உரிமைகளையும் சிவில் உரிமை களையும் வெட்டிக் குறைப்பதையும், மக் கள் மீது கொடூரமான முறையில் இனப் படுகொலைகள் புரிவதையும் நியாயப் படுத்துவதற்காக இத்தகைய ஒழுங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததாக கதை விடுவது என்பது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்தகைய ‘முன்மாதிரியான’ அர சாங்கத்தைத்தான் ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்கள் போற்றிப் புகழ்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முன்னேறிக் கொண்டிருப்பதாக அளந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் போலவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் பாராட்டி, தன்னுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவர்களை மோடியின் உண்ணாவிரதப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து அனுப்பி வைத் திருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், பீகார் முதல்வரான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார், உண் ணாவிரதத்தில் பங்கேற்ப தற்கு மறுப்பு தெரிவித்து, தேசிய ஜனநாய கக் கூட்டணியில் உள்ள உள் பிளவுக ளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

உண்மையிலேயே குஜராத்தில் பொருளாதார நிலைமை எப்படி இருக்கி றது? 2010 மே மாதத்தில் குஜராத் முதல் வருக்கு திட்டக் கமிஷன் துணைத் தலை வர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் குஜராத் இருப்பதாகவும், தேசிய சராசரியான 7.1 விழுக்காட்டைவிட மிகவும் கீழ்நிலை யில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 2009-10ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யில் மாநிலத்தின் வரி வருவாய்கள் 6.4 விழுக் காடாக இருக்கிறது என்றும், இது தேசிய சராசரியான 10 விழுக்காட்டைவிட மிக வும் குறைவு என்றும் குறிப்பிட்டிருக் கிறார்.

அடுத்து, குஜராத்தில் மோடி ஆட்சி யின் கீழ் அனைத்துத் தரப்பு மக்களும் பய னடைந்து வருகிறார்கள் என்கிற பிரச் சாரம் உண்மையா என்று பார்ப்போம். திட்டக் கமிஷன் தன்னுடைய குறிப்பில், குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்ட (ளுரb-ஞடயn) ஒதுக்கீடுகள், மாநிலத்தில் உள்ள அவர்களது மக்கள்தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப இல்லை என்று கூறி யிருக்கிறது. போதுமான சத்துணவின்றி அவதிப்படும் குழந்தைகள், தேசிய சரா சரியைவிட குஜராத் மாநிலத்தில் அதிகம். 56 விழுக்காட்டிற்கும் மேல் குழந்தைகள் போதுமான சத்துணவு இன்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்தத் தில் மோடியின் ஆட்சியில் மனித வளர்ச்சி அட்டவணை (ழரஅயn னுநஎநடடியீஅநவே ஐனேநஒ) மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந் திருக்கிறது. இதுதான் குஜராத் மாநில வளர்ச்சியின் முன்மாதிரி போலும்.

இவ்வாறு இந்த உண்ணாவிரதம் தொடர்பாக பலவாறு அளக்கப்பட்டாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதுதான் இதன் உண்மையான நோக் கமாகும். மோடி மீது நீதிமன்றம் அமைத் திட்ட குழுவும் (ஹஅiஉரள ஊரசயைந), சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அளித்திட்ட அறிக் கைகள் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் விசாரணையைத் தொடர்ந்திட வேண் டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளை யிட்டுள்ளது. மேலும் ஆளுநரால் அமைக் கப்பட்டுள்ள லோக் அயுக்தாவும் ஏராள மான ஊழல்களை வெளிக்கொணரக் கூடும் என்ற அச்ச உணர்வின் காரண மாகவும் அதிலிருந்தும் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பட்டது.

மேலும் இந்த உண்ணாவிரதத்தின் மூலமாக, ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரத் தில், மோடி எதிர்காலத்தில் பாஜக சார் பில் பிரதமர் பதவிக்கு ஒரு வலுவான வேட்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டும் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட் டது. வரவிருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் முயன்று வெற்றி பெற்று, அதிலிருந்து 2014இல் நடைபெறவுள்ள பிரதமர் பதவிக்குத் தாவவும், இவ்வுண் ணாவிரதத்தை மோடி பயன்படுத்திக் கொண்டதுபோல் தோன்றுகிறது. பாஜக அவ்வாறு வருவதற்கான சாத்தியக்கூறு கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத நிலையிலேயே இவ்வளவும் நடந்து கொண்டிருக்கின்றன.

உண்ணாவிரதம் மேற்கொண்டதன் மூலம் விளைவு என்னவாக இருந்த போதிலும், விரக்தியின் விளிம்பு நிலை யில் உள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக கூடாரம் மத்தியில் மீண்டும் அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக் கத்துடன் அனைத்து மட்டங்களிலும் மதவெறித் தீயைத் தூண்டி அதன் மூலம் மிகவும் மட்டரகமான முறையில் வாக்கு வங்கியை அறுவடை செய்திட வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கம் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூரில் நடை பெறும் மதக் கலவரங்கள் இதைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன.

90களில் திருவாளர் அத்வானி நடத் திய ரத யாத்திரை பாபர் மசூதி இடிப் புக்கும் அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களையும் கொண்டு வந்ததையும், 2002இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படுகொலை களையும் மறந்துவிட முடியாது. இது போன்று இன்னொருமுறை நாட்டில் நடைபெற நாம் அனுமதித்திடக் கூடாது. நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளங்களை அழித்திட முயலும் மதவெறியர்களின் இழி நட வடிக்கைகளை முறியடித்திட வேண்டி யது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

தமிழில்: ச.வீரமணி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com