Contact us at: sooddram@gmail.com

 

இரண்டு தீர்ப்புகள்;  படிப்பினை ஒன்றுதான்!

ஆகஸ்ட் 30ம் தேதி செய்தித்தாள் களில் இரண்டு விதத் தீர்ப்புகள் இருவேறு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டது செய்தி களாக வெளிவந்துள்ளன. இந்த இரண்டு வித வழக்குகளும் சாராம்சத்தில் மதவெறி சேர்ந்த இனவெறி சம்பந்தமானதுதான். ஆனால் தீர்ப்புகள் இரண்டுமே இந்திய மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய, நம் பிக்கையளிக்கக்கூடிய தீர்ப்புகள்தான். ஒரு வழக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின்-மதவெறியர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். மற்றொன்று நம் சொந்த நாட்டி லேயே குஜராத் மாநிலத்திலேயே கோத்ரா வில் ரயில் எரிப்பையொட்டி நடந்த கொலை வெறித் தாக்குதல்கள். ஒன்று, பாகிஸ்தான் மதவெறியர்களான முஸ்லிம்கள் - பயங்கர வாதிகள் நடத்திய கொலைவெறி. மற் றொன்று முஸ்லிம் மக்கள் மீது இந்து மத வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்கு தல். இரண்டு நிகழ்ச்சிகளும் இந்தியாவை அதிர வைத்துவிட்டன.

பாகிஸ்தான் பயங்கரவாதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் - அஜ் மல் காசப் என்பவன். அவனுக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் சி.கே. பிரசாத், அல்டாப்ஃ ஆலம் தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கி யுள்ளார்கள். இது ஒரு சரித்திரப்பூர்வமான தீர்ப்பு. இவனோடு வந்த மற்ற தீவிரவாதிகள் சுடப்பட்டார்கள். இவன் ஒருவன் மட்டும் துக்காராம் ஓம்பலே என்ற போலீஸ்காரரால் உயிரோடு பிடிக்கப்பட்டான். ஆகவே தாக்கு தல்களின் விவரங்கள் தெரிய வந்தன. பாகிஸ்தான் பயங்கரவாதி என்று தெரிந்தது. அல்லாது போயிருந்தால் உச்சநீதிமன்றம் சொன்னதுபோல் இந்திய முஸ்லிம் மக்கள் தான் இந்தக் கொலைவெறிக்கு சம்பந்தப் பட்டவர்கள் என்று பிரச்சாரமாகி திசை திருப்பப்பட்டிருக்கும். இந்தக் கொடியவன் அஜ்மல் காசப், தான் செய்த தவறுக்கு கடைசி வரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இதில் நமக்கு வியப்பில்லை.

ஆனால் குஜராத் மாநில முதலமைச்சர், நரோடா பாட்டியா இனவெறி கொலையில் ஈடுபட்ட இந்துமதவெறியர்களுக்கு குஜராத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள தற்குப் பிறகாவது, அந்தக் கொடியோர் களால் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப் பட்டதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மறுத்துவிட்டார். கொலைகள் நடந்த நரோடா வில் 97 பேர் அதில் பெரும்பாலும் இஸ்லா மியப் பெண்கள், குழந்தைகள் பதைக்கப் பதைக்க கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் வீசியெறியப்பட்டார்கள். இதுவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள்தான். நான் குற்றவாளியே அல்ல. ஆகவேதான் நான் விடுவிக்கப்பட்டேன். நான் மன்னிப் புக் கோரவோ, வருத்தம் தெரிவிக்கவோ அவ சியம் இல்லை என்கிறார். வருங்கால பிரதம மந்திரியாக வர, அந்தப் பதவியின் மீது கண் வைத்திருக்கும் நபரின் லட்சணம் இது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முன் னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமை யில் சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுதான், அது இந்தக் கொலை வெறி தாக்குதல்களை விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் இந்த விரிவான விவரங் களைத் தந்தது. காரணம், குஜராத் போலீஸ் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு நடந்த இனவெறிப் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக சரியாக ஆய்வு நடத்தவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணைக்குழு செவ் வனே செயல்பட்டது. ஆனாலும், முதல மைச்சர் மோடி இந்த மதவெறி படுகொலை யில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று அவரை குற்றப் பத்திரிகையிலிருந்து விடுவித்துவிட்டது. இது ஒரு சோகம். அதனால்தான் மோடி, தான் குற்றம் ஏதும் செய்யாதவன். எனவே நான் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று சொன்னதோடு, படுகொலைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவும் மறுத்துவிட்டார். எனினும் அவர் சிறப்பு புலன் விசாரணைக் குழுவால் விடுவிக்கப் பட்டது இன்னமும் சர்ச்சைக்கு உரியதாகத்தான் உள்ளது.

குஜராத் சிறப்பு நீதிமன்றம் 29 பேரை போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத் தால் விடுதலை செய்துவிட்டது. ஆனாலும், அவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றம் சொல்லவில்லை.

சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாயாபென் கோத்னானி யும் தண்டிக்கப்பட்டுள்ளதால் முதலமைச் சர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வந்தபோது, படுகொலைகள் நடந்த நேரத்தில் கோட்னானி அமைச்சர் பதவியில் இல்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அவர் அமைச்சராக இல்லை என்றாலும், கொலை குற்றப்பத்திரிகையில் உள்ள அவர் - விசாரணையில் உள்ள அவர் எப்படி அமைச்சராக ஆக்கப்பட்டார் என்ற கேள் விக்கு பதில் இல்லை. இந்தப் பெண், மோடிக்கு மிக நெருக்கமானவர் என்பதை யாரே மறுக்கவல்லார்?

சிவசேனா தலைவர், மகிழ்வோடு காலம் தாழ்த்தாது உடனடியாக காசப் தூக்கில் போடப்படவேண்டும் என்கிறார். பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் காசப் பிற்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை வரவேற்றதோடு, அவன் உடனடியாக தூக் கில் போடப்பட வேண்டும் என்கிறார். ஆனால், குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தக் கும்பலை வாய் அடைக்க வைத்துவிட்டது.

கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பிறகு குஜ ராத்தில் அரசின் ஆதரவோடு நடந்த இன வெறி - மதவெறிப் படுகொலைகளில் பலி யானவர்கள் பல நூறு பேர். எரிந்த வீடுகள், உயிரோடு எரிக்கப்பட்டோர் ஏராளம். அதி லும் அந்த மாநிலத்தில் நரோடாவில் இஸ் லாமிய பெண்கள் 97 பேர் கொல்லப்பட்டதும் (குழந்தைகள் உட்பட) எரிக்கப்பட்டதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், மிகக் கொடுமையானது, அதீதமானது. இந்தக் கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஜனநாயகவாதிகளும், மனிதநேய வல்லுநர்களும், மத நல்லிணக் கம் வேண்டுவோரும், மதச்சார்பற்ற கொள் கையாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்கள். ஓரளவு அவர்களின் வேண்டு கோள் இந்தத் தீர்ப்பின் மூலம் நிறைவேறி யுள்ளது.

ஒரே நாளில் இரண்டு தீர்ப்புகள் வந் துள்ளதன் பாடம், சிறுபான்மை பயங்கரவாத மானாலும், பெரும்பான்மை பயங்கரவாத மானாலும் இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டிய கொடுமைகள். ஒதுக்கப்பட வேண்டிய ஆபத்து.

(தே.
லட்சுமணன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com