Contact us at: sooddram@gmail.com

 

சகலரதும் கவனத்தையும் ஈர்த்துள்ள கிழக்குத் தேர்தல்

இன்று சகலரது பார்வை யும் நீந்திச் செல்லும் வகையில் கிழக்கின் மாகாண சபையின் தேர்தல் நிலவரம் மாறியுள்ளது. நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டதன் பிற்பாடு இடம்பெறும் முக்கியமான தேர்தல் இந்த தேர்தலாகும். கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கட்சிகளை சார்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இருந்த போதும் சில கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் பேசும் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளியிடும் வார்த்தைப் பிரயோகங்களும் நவீன அரசியல் கலாசாரங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. கட்சிகள் என்பது மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது இலக்கை தேசிய ரீதியில் அடைந்துகொள்வதற்கான ஒரு வழியாகவே மக்கள் பார்த்து வந்தனர். ஆனால் துரதிஷ்டம் இன்று அந்த நிலை தலைகீழாக மாறி வெறும் இனப் பிளவுகளுக்கான சண்டைகளாகவே மாறியுள்ளன.

கட்சிகள் எதை மக்களுக்கு செய்கின்றன. தேர்தல் காலங்களில் எதனை செய்ய வேண்டும் என்பது பற்றி எவ்வளவு தான் பாடங்களை சொல்லிக் கொடுத்தாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்கு எப்படியானதோ அதேபோன்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய சூழ்நிலை இலங்கை தேசத்தின் அபிவிருத்தியும், மக்களின் நல்வாழ்வும் பற்றி சிந்திக்க, பார்க்க, ஆராய வேண்டிய தார்மீக பொறுப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தான் யதார்த்தமாகும். தமது அரசியல் கட்சியின் பிரபல்யத்துக்காக ஒரு பிச்சைக்காரன் தனது காலில் உள்ள புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பது போன்ற நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம், தமிழ் தேசிய கூட்டமைப்பும் வலிந்து சென்றுள்ளன.

கிழக்குத் தேர்தல் மேடையில் இனவாத கருத்தை பகிரங்கமாக தெரிவித்து மீண்டும் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை சீண்டி, அதன் மூலம் வேண்டத்தகாத பிரச்சினைகளுக்கு தளம் அமைக்கும் அந்த செயற்பாட்டை புத்திஜீவிகளும், பொது அமைப்புக்களும் வன்மையாக கண்டித்துள்ளன. இது இவ்வாறு இருக்க இந் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடன் ஆணையை கேட்டு நிற்கின்றனர். அதேபோல் முஸ்லிம்களை அவமானப்படுத்தும் இந்த அரசு என்று கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை அமைக்க அனுமதி தருமாறு கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் விடுக்கும் அறைகூவல் பெரும் பாதக சூழ்நிலையினை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவாத அரசியலுக்காக சமூகத்தை காட்டி கொடுத்து, சமூக உணர்வுகளை மழுங்கடித்து கண்மூடித்தனமான அரசியல் காய் நகர்த்தல்களை செய்யும் இந்த கட்சிகளின் பின்னணியில் நோர்வே ஒளிந்திருப்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும். வங்குரோத்து அரசியல் கட்சிகள் இந்த நோர்வேயை ஒரு கொழுகொம்பாக பிடித்து மீண்டும் மக்களின் உணர்வுகளில் கலந்து விடலாம் என நப்பாசை கொண்டு பணியாற்றுவதும் தெரியாத விடயமல்ல.

இதனை உணர்ந்துகொண்ட அரசாங்கம் இனவாத கருத்துக்களை மேடைகளில் பேசுவதை தவிர்த்து தமது மக்கள் நலன் குறித்து கருத்துக்களை கூறுமாறு பகிரங்கமாக இக்கட்சிகளின் தலைமைகளிடம் வேண்டுகோளொன்றைவிடுத்துள்ளதை காணலாம். குறிப்பாக கிழக்கை பொறுத்த வரையில் இனவாத அரசியலுக்கு இடமில்லையென்பதற்கான கள ஆய்வுகள் புடம் போட்டு காட்டுகின்றன. மக்களுக்கு எவரால் நன்மைகள் நடக்கின்றதோ அவர்களை தான் ஆதரிக்க வேண்டும் என்பதை அம்மக்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். திருமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் அப்பகுதி மக்களின் பல்வேறு தேவைகளை தேர்தல் காலம் வருவதற்கு முன்னரே அங்கு சென்று பெற்றுக் கொடுத்த பெயரை பெற்ற கட்சியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை தேசிய தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காணப்படுகின்றது. அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களின் பல்வேறு தேவைகளை அரசுடனும், ஏனைய நிறுவனங்களுடனும் பேசி பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த தேர்தலில் தமது கட்சி சார்பில் வெற்றிலை சின்னத்தில் இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில் ஒருவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு கிண்ணியா நகர முதல்வராக தெரிவாகியுள்ள டாக்டர் ஹில்மி மஹ்ரூப், மற்றையவர் பிரபல தொழிலதிபரும், சிறந்த சன்மார்க்க பாசறையில் வளர்க்கப்பட்ட, பல்வேறுபட்ட சமூக நலன் அமைப்புக்களை உருவாக்கப்பட்டுவரும் தோப்பூர் அப்துல் ரஸாக் (நZமி) அவர்கள், இவர்களின் வெற்றியினை திருமலை மாவட்ட மக்கள் உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் றிசாத் தலைமையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் களத்தில் நின்று உண்மையினை சொல்லி வாக்குகளை பெறும் முயற்சியினை மேற்கொண்டுவருகின்றனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், பொறியியலாளர் சிப்லி பாருக் ஆகியோரும், அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.நிஜாமுதீனும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அபூ அஸ்ஜத்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com