Contact us at: sooddram@gmail.com

 

பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறும் கூட்டமைப்பு ஐ.தே.கவுக்கு முண்டு கொடுப்பது ஏன்

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமல், இம்முறை இத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறித்து உங்களின் கருத்து என்ன? கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் மறைமுகமாக போட்டியிட்டனர். இந்த விடயம் எமது தமிழ் மக்களுக்கு பெரிதாக தெரியாமல் மறைந்து விட்டது. இன்று இவர்கள் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்கின்றனர். அன்று 2008 பேரினவாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்தது மட்டுமன்றி அக்கட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தெரிவான அ. பரசுராமன் ஐயாவை ஞாபகப்படுத்துகின்றேன். இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பானவர்.

இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் தனித்து போட்டியிடுவதானது முதலமைச்சர் பதவியை தமிழர் ஒருவர் பெறவேண்டும் என்பதற்காகவல்ல. முதலமைச்சர் பதவியை பெற முடியாதென்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இருந்தும் ஏன் போட்டியிடுகின்றார்கள். என்றால் பிள்ளையான் என்பவர் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காகவேதான். இதுவே அவர்களின் குறிக்கோள். தமிழ் மக்களின் நலன் அல்ல. இதன் விளைவுகள் எமது கிழக்கு மாகாண தமிழ் மக்களை எதிர்காலத்தில் பாதிக்கும். கடந்த 30 ஆண்டு கால போராட்டத்தின் விளைவுகள் நாம் எங்கிருந்து ஆரம்பித்தோமோ மீண்டும் அதே இடத்தில் சுழன்று வந்து நிற்கின்றோம். இவ்வாறு வந்து திரும்பிப் பார்க்கும் போது.

* வளமுள்ள கல்விச் சமுதாயத்தை நாம் இழந்துள்ளோம்.

* தமிழர்களின் பூர்வீக நிலங்களை இழந்துள்ளோம்.

* விலை மதிக்க முடியாத எதிர்கால சந்ததியை உருவாக்குகின்ற இளைஞர் யுவதிகளை இழந்துள்ளோம்.

* இந்த கோர யுத்தத்தில் சிக்குண்டு கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காத பல மாற்றத் திறனாளர்களை

உருவாக்கியிருக்கின்றோம்.

* எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பல வளங்களை இழந்துள்ளோம்.

இவற்றையெல்லாம் இழந்து விட்டு எமது சமூகம் பின்நோக்கிச் செல்வதை விட்டு விட்டு, ஆளும் அரசுடன் இணைந்து பேரம் பேசி தீர்வு காணும் வல்லமையை பெற வேண்டும். அதற்கான மக்கள் ஆணையை வேண்டி நிற்கின்றோம். இந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதானது.

* கல்லைக் கட்டி கடலில் இறக்குவதற்கு சமம் என் கருதுகின்றேன். காரணம் த.தே.கூ. பிரசாரம் செய்வது சிங்கள அரசாங்கம் தமிழர்களை கொன்று விட்டார்கள். கொன்று விட்டார்கள் என்று ஓலம் இடுவது வேடிக்கையானது. இந்த கொலைகளைச் செய்வதற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இவர் இரண்டு அரசாங்கத்திலும் முக்கிய பங்கு வகித்தவர்.

இப்போது தனிக்கட்சி அமைத்து சரத்பொன்சேகா அரசியலுக்கு வந்தாலும் இவர்தான் நடந்த துன்பவியலான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். ஆனால் நடந்தது என்ன? த.தே. கூட்டமைப்பினர் செய்தது என்னவென்பதை மீட்டுப் பார்க்க வேண்டும்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட எம் உறவுகளின் காயங்கள் குணமடைவதற்கு முன்னர் அதுவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இன்று தமிழ்த் தேசியம் பேசும் த.தே. கூட்டமைப்பினர் அந்த இராணுவ தளபதியை கூட்டி வந்து இவருக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்குங்கள் என்று கூறியதை மானமுள்ள எந்த தமிழ் மகனும் ஏற்கமாட்டான்.

* ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இத் தேர்லில் வெற்றி பெற வாய்ப்புண்டா?

ஆம், இவர்களை வெற்றி பெறவைக்கும் வாய்ப்பு அரசின்கையில் உள்ளது. கடந்த கால இழப்புக்கள் குறிப்பாக கல்வி, கலாசார, பொருளாதார அம்சங்களை கட்டி எழுப்ப வேண்டிய தேவைப்பாட்டை அரசாங்கம் படிப்படியாக செய்து வருவதால் வெற்றி வாய்ப்பு என்பது அரசின் கையில் உள்ளதென்பேன். எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் எமது மக்கள் இழந்துவற்றை மீளப் பெற வேண்டுமாயின். எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இணக்கப்பாட்டு அரசியல் மூலமே எமது மக்களின் உரிமையையும் அபிவிருத்தியையும் முன்னெடுக்க முடியும். இந்த வாய்ப்பை உணர்ந்து எமது மக்கள் வாக்களித்தால் வெற்றி என்பது உறுதி.

* மாகாண சபையில் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து எதையும் சாதிக்க முடியுமா?

மாகாண சபையின் நிர்வாக அதிகாரம் ஆளுனரின் கையில் உள்ளது. எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாதென்பதை கடந்த நான்கு வருட கால அனுபவரீதியாக கண்டுள்ளோம். எனவேதான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசுடன் இணைந்து கடந்த கால கறைபடிந்த வரலாற்று பதிவுகளை மீட்டுப் பார்த்து எதிர்கால சந்ததிக்கு அவ்வாறு ஏதும் நிகழாமல் ஐக்கிய இலங்¨க்குள் அதிகார பரவலாக்கத்தைப் பெற்று வாழவே மக்கள் விரும்புகின்றனர். ஆகவே எதிர்க்கட்சியாக இருந்து எதையும் சாதிக்க முடியாது.

* மீண்டும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை - சந்திரகாந்தன் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?

ஆம், இன்று கிழக்கு மாகாணத்தை நேசிக்கின்ற அனைத்து மக்களும் அவரின் பின்னால் அணி திரண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு காலத்திலும் இந்த மண்ணில் எந்தவிதமான இன மோதலும் ஏற்படவில்லை. காரணம் முதலமைச்சரின் பாகுபாடற்ற நிர்வாகம் எனலாம். இன்னுமொரு விடயம் த.தே. கூட்டமைப்பின் கோட்டையாகவிருந்த பல கிராமங்கள் இன்று பிள்ளையானின் கோட்டையாகி விட்டதால் அதிகளவான வாக்குப் பலத்துடன் அவர் தெரிவாகிமுதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.

செல்லையா பேரின்பராசா

துறை நீலாவணை

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com